பரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...

Wednesday, March 31, 2010

இன்று CNN சானலில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். ஐரோப்பிய நாடுகளின் கத்தோலிக்க தேவாலயங்களில் பரவலாக நடைபெரும், சிறுவர்கள் மேல் பாதிரிகளால் நிகழ்த்தப்படும் பாலில் வன்முறை தான் இன்றைய அவர்களின் தலைப்பு. பாதிக்கப்பட்ட சிலரின் பேட்டிகளும் காட்டப்பட்டன.

அந்த நிகழ்ச்சியில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட விஷயம், '200 காதுகேளாத சிறுவர்களிடம் பாலியல் வன்முறை செய்தும், அந்த பாதிரிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத போப்பை என்ன செய்யலாம்?' என்பதே. அயர்லாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளிலும் இப்படி தான் நடந்துள்ளது. உயர் பதவியில் இருப்பவர்களும் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுபவர்களும் இந்த பாலியல் கொடுமைகளை மூடிமறைக்கப்பார்த்துள்ளனர். லண்டனில் இந்த வன்கொடுமையை எதிர்த்து மக்கள் பேரணி நடக்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

சரி இதற்கும் நித்யானந்தருக்கும் என்ன சம்பந்தம்? இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சானல் நமது சன் டிவியை விடவும் நக்கீரனை விடவும் பல மடங்கு புகழ் பெற்றதும், அதிகாரம் உள்ளதுமாகும். அவர்கள் நினைத்திருந்தால் சுட சுட வீடியோ பதிவோ, கிளுகிளுப்பான படங்களையோ ஆள் வைத்து செட் செய்து படம் பிடித்து காட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் நடந்த உண்மையை பாதிக்கப்பட்டவர்கள் மூலமாவே பேசவைத்து அந்த கொடுமையின் தாக்கத்தை உணர வைத்தார்கள். அதுவும் இதைப்போன்ற ஆன்மிக விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று, ப்ரா ஜட்டியோடு கடற்கரையில் கூச்சமே இல்லாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக படுத்திருக்கும் கலாச்சாரம் கொண்ட அவனுக்கு தெரிகிறது; நம் மக்களுக்கு கேவலமான விளம்பரம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.

அதே போல் இங்கே நித்யானந்தரும் அந்த பெண்ணும் ஒருவருக்கொருவர் இயைந்து செய்த செயலை இங்கே ஹிந்து மதத்தை சேர்ந்த பல பெரியவர்களும் எதிர்த்தார்கள். ஆனால் அங்கே நடக்கும் பாலியல் கொடுமைகளை போப் மூடி மறைக்கப்பார்க்கிறார். எல்லாவற்றையும் துறந்த போப்பிற்கு, பாவம் பதவி ஆசையை மட்டும் துறக்க மனம் வரவில்லை போலும். இத நாம கேட்டோம்னா, "மனிதர்கள் ஆசை படக்கூடாதுன்னு புத்தரே ஆசைப்பட்டார்ல, தள்ளாத வயதில் ஒரு சிறுபான்மை முதியவரை இப்படி துன்புறுத்தலாமா?" அப்படி இப்படின்னு எதாவது கவிதை எழுதி காலையில் முரசில் ஒலி எழுப்பி விடுவார்கள்.

நல்ல வேலை, ஐரோப்பா இந்தியாவிலோ, தமிழகத்திலோ இல்லை. பரமஹம்சனோ பாதிரியோ, கடவுளை நம்பாமல் இந்த மாதிரி போலி தூதுவர்களை நம்பினால் நம் மதத்துக்கும் கடவுளுக்கும் தான் அசிங்கம்.

அந்நியன் படம் ஏன் ஓடவில்லை?

Wednesday, March 24, 2010

இயக்குனர் ஷங்கரின் மற்ற "கருத்து கந்தசாமி" படங்கள் அளவிற்கு அந்நியன் ஏன் ஓடவில்லை என்று நான் பல முறை நினைத்திருக்கிறேன். ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. 'அடுத்தவன் டவுசர் கிழிஞ்சுருக்குன்னு' சொன்ன கிண்டலடிச்சு கை தட்டி சிரிக்கும் நாம் (நானும் தான்) 'உன் டவுசரும் கிழிஞ்சு தான் மக்கா இருக்கு' என்று யாரவது சொன்னால் அதை மூடி மறைத்துக்கொண்டு அடுத்தவன் டவுசரை பற்றி மட்டுமே பேசுவோமே, அந்த கதை தான் இந்த படத்திற்கு நிகழ்ந்தது.

அவர் 'ஜென்டில்மேன்' என்று ஒரு திருடன் போலீஸ் கதை எடுத்து, நாட்டில் நடக்கிற எல்லா அக்கிரமத்துக்கும் அரசியல்வாதி தான் காரணம்னு மதுபாலா தொப்புள அர்ஜுன் நோன்டுற கேப்புல சொல்லிருப்பாரு. அத நாம ஆஹா ஓஹோ னு கை தட்டி ஹிட் ஆக்குனோம்; ஏன்னா அரசியல்வாத்திய பத்தி கரக்ட்டா காட்டிருக்கர்னு சொல்லிட்டோம்.

காதலன் படத்த விட்ருவோம், பொழச்சு போட்டும். மூனாவதா 'இந்தியன்' அப்டின்னு ஒரு படம் எடுத்தார். கொள்கைக்காக மகனையே கொல்ற அப்பான்னு ரொம்ப புதுசான தங்கப்பதக்கம் கால லைன். அதுல வர்மம், சுதந்திரப்போராட்டம், லஞ்ச ஒழிப்புன்னு அழகா திரைக்கதை 'பின்னிருப்பார்'. "அரசு ஊழியன் லஞ்சம் வாங்குறனால தான் நம்ம நாடு சின்ன சின்ன நாடு குட்டி குட்டி தீவெல்லாம் விட பின்தங்கி இருக்குன்னு" சொன்னார். நம்ம தமிழகத்தின் உலக நாயகன் அதுக்காக தேசிய விருதுல்லாம் வாங்குனாரே?! அந்த படத்தையும் வசூல் சாதனை ஆக்குனோம். ஏன்னா ஒரு அரசு அலுவலகம் எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு காமிச்சாரே அதனால தான். 'ச்சே இந்த அரசு ஊழுயர் எல்லாம் எவ்வளவு மோசமானவங்க?'

கொஞ்ச நாள் கழிச்சு ஜீன்ஸலாம் கழட்டி வச்சுட்டு 'முதல்வன்' னு ஒரு படம் எடுத்தார். ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒழுங்காக இருந்தால், அவருக்கு கீழுள்ள அமைச்சர், ஊழியன், என்று எல்லோரும் உருப்படியாக மாறி ஒரு நாடே விளங்கிடும் என்று தில்லாக சொல்லி மதுரையில் மட்டும் அண்ணனிடம் மாட்டிக்கொண்டார். சரி, அது வேற கதை. நம்ம மேட்டருக்கு வருவோம். 'இப்போ தான் த நம்ம நாடு ஏன் முன்னேரலன்னு தெரியுது. காமராஜருக்கு அப்பறம் ஒரு பயலும் உருப்படியா வரல அதான். இல்லேனா, நம்ம நாடு எப்பவோ சிங்கப்பூர் அளவுக்கு போயிருக்கும்' என்று தினமலர் (சந்திரபாபு நாயுடு ஷங்கர கூப்பிட்டு விருந்து வச்சத அவங்க தான பப்ளிக்குட்டி பண்ணுனாங்க?) படித்துக்கொண்டு தெளிவாக பேசினோம்.

இந்த வரிசைல அடுத்து யாரடா குத்தம் சொல்லலாமுன்னு அவர் யோசிச்சு ஒரு தப்பான முடிவெடுத்துட்டார். ஆமா, படம் பாக்க வரவனையே, 'டாய் உன் மேல தான் தப்பு' அப்படின்னு சொன்ன எவன் கேப்பான்? அதிலும் பெரிய தவறு காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக் தொறந்தது தப்புன்னு அவர் சொன்னத கேட்டு, இத்தன நாள் தண்ணியடிச்சுட்டு, கை தட்டிட்டு, இருந்தவனை கடுப்பாக்கிடுச்சு. 'கோவிலுக்கு போகாம போனத்தையா தூக்கிட்டு போறது புது வண்டில? என்னடா ராம் குமாரு கொடுமையா இருக்கு?' என்று என் அம்மா என்னிடம் கேட்டார்.

மொகரையில அடிக்குற மாதிரி 'நே தாண்டா நாடு முன்னேறாததுக்கு காரணம்' என்று ஒரு குடிமகனிடம் சொன்ன உடன் அவன் கோபத்தைப்பார்த்தீர்களா? அவரின் மற்ற சமூகப்படங்களுக்கு நிகராக அந்நியன் ஓடவில்லை.

நம்மால் நம் தவறை அடுத்தவர் சுட்டிக்காட்டுவதை ஏற்க முடியவில்லை. பிறர் மீதே குற்றம் சுமத்தப்பழகிவிட்டோம். சிறு வயதில் கடைக்கு போகச்சொல்லும் அம்மாவிடம் "அப்போ எனக்கு அம்பது காசு குடு" என்று கேட்கும் போதே லஞ்சம் ஆரம்பித்து விடுகிறதே? சில வீடுகளில் அம்மாவே லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை கடைக்கு அனுப்புவார்கள். இப்போது அரசுத்துறை மட்டும் அல்ல, எங்கும் லஞ்சம் தான். நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்; அப்போது கொத்தனார் ஒரு கடையை குறிப்பிட்டு அங்கு தான் சிமென்ட், செங்கல், கம்பி எல்லாம் வாங்க சொல்லுவார். அதே போல் ஆசாரி ஒரு குறிப்பிட்ட கடையில் தான் மரம் வாங்க சொல்லுவார். ஏன் இப்படி? இந்த கடைகளில் இருந்தெல்லாம் கொத்தனாருக்கும், ஆசாரிக்கும் கமிஷன் வரும் அதனால் தான். சம்பளத்த விட்டு இப்படி சம்பாதிக்க நெனச்சா அப்பறம் எப்படி வேலைய ஒழுங்கா பாக்குறது?

இது சும்மா ஒரு எடுத்துக்காட்டு தான். இப்படி தான் எல்லோரும் அவர் அவர் தொழிலில் இருக்கிறோம். இதை ஒருவர் குற்றம் என்று சொல்லி மிக பிரம்மாண்டமாக படமாக எடுக்கும் போதும் நமக்கு குற்ற உணர்வு வராமல் கோபமே வருகிறது. இப்போது புரிகிறதா அந்நியன் ஏன் ஓடவில்லை என்று?

அமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்!!!!


ஒரு துறையின் அமைச்சர் சொல்வதை அந்த துறையின் கடைநிலை ஊழியன் வரை கேட்காமல் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். அந்த அமைச்சர் சொல்வதை இவர்கள் மதிப்பதேயில்லை. அவரும் பாவம், எவ்வளவு முறை தான் மக்களிடம் சமாதானம் சொல்ல முடியும்? இப்போது சென்ற வாரம் கூட மக்கள் சந்தோஷப்படுவார்களே என்று மீண்டும் நம் காதில் தேன் பாய விட்டார். ஆனால் இந்த ஊழியர்களின் மெத்தனப்போக்கால் அமைச்சர் முதல் இந்த அரசுக்கே கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று எனக்கு மிகுந்த பயம் வருகிறது.

அந்த அமைச்சர் வேறுயாரும் அல்ல. நம் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு.ஆற்காடு வீராஸ்வாமி தான் அவர்கள். வயதில் எவ்வளவு மூத்தவர்? இவருக்கு இருக்கும் அரசியல் ஞானமும் (அடேங்கப்பா) நிர்வாக திறமையும் (அடங்கொக்காமக்கா) வெகு சிலருக்கே உண்டு (சொல்லிக்கிட்டாங்க). அப்படிப்பட்ட இவர் சொல்வதையே ஒரு அரசு ஊழியர் கேட்கா விட்டால்?

அப்படி அவர் என்ன தான் சொன்னாருன்னு கேக்குறிங்களா?

"தமிழகத்தில் எங்கும் இரண்டு மணிநேரத்துக்கு மேல் மின்சாரம் தடை படாது. அதுவும் பகல் நேரத்தில் மட்டும் தான் தடைபடும். சென்னையில் மின்வெட்டா? இல்லவே இல்லை; ஒன்றிரண்டு சிறு தவறுகளை ஊதிப்பெரிதாக்குவது கூடாது" என்று, அன்றொரு பேச்சு இன்றொரு பேச்சு என்றில்லாமல், பல வருடங்களாக ஒரே மாதிரி பேசிக்கொண்டிருக்கும் அவர் கூற்றை இந்த மின்ஊழியர்கள் மீறிவிட்டார்கள்.

இந்த பதிவை நான் ஆரம்பிக்கும் போதே மின்வெட்டு (மணி இரவு பத்து). அறிவித்தது போக தினமும் இரண்டு மணிநேரம் அதிகமாக இந்த ஊழியர்கள் மின்சார ஊழல் செய்தால் இந்த அரசுக்கு தானே கேட்ட பெயர்? யாரவது இந்த மின்ஊழியர்களின் அயோக்கியத்தனத்தை அரசுக்கு வெளிச்சமிட்டுக்காட்டுங்கப்பா..

நானும் ஆளுங்கட்சி சப்போர்ட்டு தான்....

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Monday, March 15, 2010

எங்கள் ஊர் வெயிலின் கொடுமை தாளாமல் இன்று மதியம் முழுதும் வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருக்கும்போது விஜய் டிவியில் நம்ம கோபிநாத் தெரிஞ்சார். பய இன்னைக்கு நம்மள எப்பிடி கடுப்படிக்குரான்னு பாக்கலாமேனு அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். அதன் பெயர் நிஜமா, குற்றமா என்று தெரியவில்லை. பெயர் தெரியாதது நிஜம்; ஆனால் அது ஒன்றும் குற்றமில்லையே?! மறு ஒளிபரப்பு என்று நினைக்கிறேன்.

வழக்கம்போல நித்யானந்தர் பற்றிய ஒரு கேவலமான வணிகரீதியான நிகழ்ச்சி. ஐந்து நிமிடங்கள் மட்டுமே என்னால் பொறுமையாக பார்க்க முடிந்தது. நித்யானந்தர் செய்தது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், எல்லாரும் சுற்றி சுற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லும் ஒரு விஷயம் 'ஹிந்து மதம் ஏமாற்றுக்காரர்களின் கூடாரம்' என்பதை தான். மதம் என்பதே ஏமாற்றுக்காரர்களின் கண்டுபிடிப்பு தான். அதில் ஹிந்து மதத்தை மட்டும் இணைத்து கிறித்துவமும் இஸ்லாமும் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்கிறது என்று தெரியவில்லை.

அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் சொன்ன ஒரு வாசகம், "ஏசுநாதரும் புத்தரும் மக்களை வழி நடத்தி சென்றார்கள்; ஆனால் அவர்கள் ஆன்மிகத்தை வைத்து யாரையும் ஏமாற்றவில்லை" என்று. என்ன ஒரு ஒப்பீடு பாருங்கள்? இப்போது உள்ள சாமியார்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாமியார்களை இணைக்கிறார்கள்! அதுவும் பிற மத ஆட்களை தான் இணைக்கிறார்கள்; அப்போது இவர்களுக்கு ஹிந்து மதம் கண்ணுக்கு தெரியவில்லை போலும். ஏன் அதே காலகட்டத்தில் தானே தன் மன்னன் பதவியை துறந்து ஆன்மிகத்துக்கு வந்தார் இளங்கோ? புட்டபர்த்தி சாய்பாபாவை கண்கட்டி வித்தைக்காரர் என்று சொல்கிறார்கள்; அவர் செய்ததை போல தானே அன்று ஒரு தட்டு மீனையும் அப்பத்தையும் ஒரு ஊரே உபயோகப்படுத்த தானும் கண்கட்டி வித்தை செய்தார்? அப்படியென்றால் அவரும் ஒரு சாமியார் தானே?

கோபிநாத்தின் அடுத்த வாக்கியம் :"நீதிபதிகள் போல ஆன்மிகவாதிகளின் சொத்து கணக்கையும் கேட்க வேண்டும்". அது ஹிந்து ஆன்மிகவாதிகளுக்கு மட்டும் தானா, இல்லை தினகரன் குடும்பத்தார், மோகன்.சி.லாசரஸ் போன்றோர்களுக்குமா? அவர்கள் சொத்துக்கணக்கை கேட்டால் அது மைனாரிட்டி மக்களின் உரிமைகளில் தலையிடுவது போலாகாதா? ஐயோ, அப்போ நமது மத்திய மாநில அரசுகளின் இறையாண்மை என்னவாவது?

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஊழலைப்பற்றி எந்த டிவியிலாவது இப்படி வாய் கிழிய பேசினார்களா? இதே மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கல்லூரியில் நடந்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும்? ம்ம்ம் சொல்ல மறந்துவிட்டேனே, விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பெயர் அந்தோனியாம். ஏதோ தான் ஒரு நடுநிலைவாதி மாதிரி காட்டிக்கொள்கிறார். சென்ற மாதம் நாடார் (அவர் சார்ந்த ஜாதி) மக்கள் நடத்திய கூட்டத்திற்கு சென்று ஜாதி முன்னேற்றத்திற்கு உரை நிகழ்த்தியுள்ளார். ஏன் இந்த வெளி வேஷம்?

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசும் கலைஞர்களுக்கு தமிழ் மதம் என்று ஏதும் கிடைக்கவில்லையோ? ஆமாம், தமிழனின் வாழ்கை முறையே தெரியாமல் இங்கு ஒருவர் புத்தாண்டை தை மாதத்தில் கொண்டாட வழியுறுத்தும் போது நான் என்ன செய்ய? அறுவடை நேரத்தை பொங்கலிட்டு கொண்டாடியும், பயிர் செய்து தொழிலை ஆரம்பிக்கும் போது அதை புது ஆண்டாக கொண்டாடுவதும் தான் தமிழனின் வாழ்க்கை முறை. அதுவே தெரியாமல் இங்கு இருக்கிறார் ஒரு தமிழின தலைவர்.

எனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன:
ஏன் நிஜம், குற்றம் போன்ற நிகழ்ச்சிகளில் ஊழல் செய்யும் பிற மதத்தலைவர்களையும், வீடு வேலைக்காரி முதல் கர்த்தருக்கும் ஊழியம் செய்யும் பெண் வரை கற்பழிக்கும் பாதரியையும் பற்றி செய்திகள் போடுவதில்லை?
பல ஹிந்து மத கோவில்களை (வருமானம் அதிகம் என்பதற்காக) அரசுடைமையாக்கியவர்கள், ஏன் புகழ் பெற்ற பிற மத புனிதத்தலங்களை அரசுடைமையாக்கவில்லை?
மூட நம்பிக்கை (ஹிந்து மதத்தில் உள்ளவை மட்டும்) பற்றி இவளவு பேசும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் தங்கள் சேனலில் தினமும் ஜோசியக்காரனையும், சாமியார்களையும் காலையில் அழைத்து பேச வைக்கிறார்கள்? (நித்யானந்தா சிக்கியதே இந்த மாதிரி ஒரு பிரச்சனையால் தான் என்பது கேள்வி!)

பின்குறிப்பு:
என்னை ஹிந்து மத அனுதாபியாக நீங்கள் நினைத்தால் அது ஓரளவிற்கு சரி, அதே நேரத்தில் நான் சாமியார்களுக்கு வக்காலத்து வாங்குபவன் அல்ல. தவறு என்பது எல்லா இடங்களிலும் உண்டு, அதையும் சுட்டிக்காட்டுங்கள் என்பதே என் வாதம்.


விண்ணை தாண்டி வருவாயா? - ஓர் சைக்காலஜிக் அலசல்..

Sunday, March 7, 2010


பிடித்த கௌதமும் மிகப்பிடித்த ஏ.ஆர்.ரகுமானும், பிடிக்காத சிம்புவையும் திரிஷாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார்களே, போகலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலே இவ்வளவு நாட்கள் கடந்து இன்று ஒரு வழியாக படம் பார்த்து விட்டேன்.

ஒரு சாதாரண ஒரு வரி கதையை இரண்டு மனங்களின் ஊடே சென்று இவ்வளவு தெளிவாக அழகாக மிகை இல்லாமல் சொன்னதற்காக கௌதமை பாராட்டியே ஆகா வேண்டும். சமீப காலங்களில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு (குஷி, அ.ஆ) அடுத்த படியாக இரண்டு மனங்களின் குழப்பங்களையும் பிரச்சனைகளையும் இந்த அளவிற்கு ஆழமாக சொன்ன படம் இது தான். ஆனால் எஸ்.ஜே.சூர்யா பட கிளைமாக்ஸ் போல் இது சினிமா தனமாக இருக்காது.

"உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும் பொது நான் ஏன் ஜெஸ்ஸிய பாத்தேன்? நான்னா கார்த்திக்.." என்று ஒரு சுஜாதா கதையில் வருவது போல் பேசி சிம்பு கதையை ஆரம்பிக்கிறார்.

இப்போது நாம் பேச போவது கதையை பற்றியோ தொழில்நுட்பத்தை பற்றியோ அல்ல. படம் நிறைய நிரம்பி இருக்கும் சைக்காலஜி பற்றி தான்.

"ஒரு ஆண் தனக்கு எதுவுமே இல்லாத போதும், எல்லாம் இருக்கும் போதும் எதை பற்றியும் கவலை பட மாட்டான். ஆனால் ஏதாவது முக்கியமான ஒன்று அமையும் போதும், கிடைக்கும் போதும் மிக யோசித்து தான் ஒவ்வொரு செயலிலும் இறங்குவான்" என்பதை சிம்பு பாத்திரம் மூலமும் (அந்த கோவா சூட்டிங் சீனில் திரிஷாவின் கேள்விக்கு பதில் சொல்லும் காட்சி); "அதே ஒரு பெண் தான் எந்த நிலையில் இருந்தாலும், பிறரை அண்டி வாழ வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தாலும், இந்த சமுதாயத்திற்காக தன் விருப்பு வெறுப்புகளை அமைத்துக்கொள்வாள்" என்பதை திரிஷாவின் பாத்திரம் மூலமும் மிக அழகாக செதுக்கியுள்ளார் இயக்குனர்.

பெண்கள் எப்போதுமே ஏன் பிறருக்காக வாழ்கிறார்கள்? ஒரு வேலை சினிமா தான் அவர்களை அப்படி சித்தரிக்கிறதா? "யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்..."; "அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்..." என்பன போன்ற பாடல்கள் பெண்கள் பாடுவதாகவே ஏன் அமைக்கப்பட்டுள்ளன? 'இந்த உலகத்துல நம்மள சுத்தி யாருமே இல்லேனா உன்ன லவ் பண்ணுவேன் டா..' என்பதன் அர்த்தம்?

"சரி வா போலாம்" என்று கார்த்திக்கை அழைத்துக்கொண்டு செல்லும் ஜெஸ்ஸி அவனோடு செல்லாமல், மறைவிடத்தில் ஒருசில காதல் வசனங்களை மட்டும் பேசி விட்டு அவனை மட்டும் அனுப்பி விடுகிறாள். பிறருக்கெல்லாம் சரியான பொருளையோ, ஆளையோ தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாகவும் சரியாகவும் இருக்கும் பெண்கள், தங்கள் வாழ்கை என்று வரும் போது ஏன் பின்வாங்கி பயப்பட வேண்டும்? அதுவும் காதல் விஷயத்தில் ஆணும் பெண்ணும் நிஜத்தில் மிக அவசரத்தில் முடிவெடுக்கிறார்கள். அவசர முடிவு என்றாலும், அதை 'சரியான முடிவு தான் என்று நிரூபிக்க' ஆண் தெளிவாகவும் தைரியமாகவும் இருக்கிறான்; ஆனால் பெண் 'நாம் தவறு செய்து விட்டோம்' என்றெண்ணி அவளும் நிம்மதியாக இல்லாமல் அவனுக்கும் இம்சை கொடுக்கிறாள். திருந்துங்க போம்பளைகளா...

பின்குறிப்பு:
1. இந்த படம் பார்த்த பின்பு சிம்புவை மிகவும் பிடித்துப்போய் விட்டது எனக்கு. என்னது திரிஷாவா? க்ளோசப் ஷாட்லலாம் கமலா காமேஷயும் உமா ரியாஸ்கானையும் பார்ப்பது போல் இருக்குப்பா.
2. கெளதம், நீங்க என் வாழ்க்கைல, முக்கியமான நேரங்கள்ல கூடவே இருந்தீங்களா? இந்த படம் எனக்கு என்னென்னவோ ஞாபகப்படுத்துது...

நித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா?

Friday, March 5, 2010

கடந்த சில நாட்களாக வலையுலகில் நித்யானந்தாவை தாக்கித்தான் பெரும்பாலான பதிவுகள் வருகின்றன. எதற்கு இவர் மேல் இவ்வளவு காண்டு? ஒரு வேலை இப்படிப்பட்ட கீழ்த்தரமான செய்திகளை ஊதி பெரிதாக்கி புகழ்ச்சி அடைய விரும்புகிறார்களா என்று தெரியவில்லை. என்றால், இவர்களுக்கும், சன் டிவி, நக்கீரனுக்கும் என்ன வித்தியாசம்?
எனக்கு சில சந்தேகங்கள்.

*வாழ்வின் மூன்று அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறையுள் இப்போது செக்ஸ் என்ற நான்காவதையும் தங்களோடு இணைத்துக்கொண்டன. அதனால் செக்ஸ் இல்லாமல் ஒரு மனிதன் இன்றைய சூழ்நிலையில் வாழ்வது மிகவும் கடினம். பரஸ்பர புரிதலோடு இருவர் இணைந்து செய்வது எப்படி குற்றம் ஆகும்?

*நித்யானந்தா சாமியார் வேஷம் போட்டு இப்படி அசிங்கமாக நடந்து கொண்டாரே என்று கேட்கிறார்கள். அவர் வேஷ காரராகவே இருக்கட்டும். அவரை நம்பியவர்கள் அவர் மேல் கோபப்படலாம். நமக்கு எதற்கு வீண் வேலை?

*நம் கெட்ட பழக்கமே இது தான். பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் எவளை எவள் புருஷன் வைத்திருந்தான், அந்த நடிகை இப்போது எந்த நடிகனுடன் ஊர் சுற்றி கொண்டிருக்கிறாள் என்பதை தான் நாம் கூர்ந்து கவனித்து, முதல் ஆளாக அந்த செய்தியை நம் நண்பர்களிடம் சொல்ல போட்டி போட்டு துடிக்கிறோம்.

*இந்த நடிகனோ நடிகையோ பல பேர்களுடன் ஊர் சுற்றுகிறார் என்று எந்த நடிகனையோ நடிகையையோ கேவலமாக பேசுகிறோமா? கண்ணதாசனின் வனவாசத்தை படித்து கோபப்பட்டிருந்தால் இன்று ஒரு திராவிட கட்சிக்காரர் கூட இருக்க முடியாது.

*நித்யானந்தா புத்தகத்தை ஒரு ஊடகமாக பயன் படுத்தி தன்னை ஒரு நல்லவன் போல் காட்டிக்கொண்டார். அதே போல் நடிகர்கள் சினிமாவில் உலகிற்கே உபதேசம் செய்து அந்த ஊடகத்தின் மூலம் தங்களையும் நல்லவர்களாக காட்ட முற்படுகிறார்கள்.

*'நித்யானந்தா செய்த செயல் பல இடங்களிலும் பரவலாக நடப்பது தான். அவர் இருக்கும் இடமும் தன்னை சுற்றி அமைத்துக்கொண்ட பிம்பமும் தான் அவருக்கு எதிராக இப்போது திரும்பி உள்ளது.

*'வீட்டு வேலைக்காரியை கற்பழித்த பாதரியார்', 'மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்', 'பதவி உயர்வுக்கு படுக்கைக்கு அழைத்த மேலாளர்' என்று தினமும் இதே போன்ற சமுதாயத்தில் பொறுப்பும் மதிப்பும் உள்ள பலரை பற்றியும் இப்படி செய்தி வருகிறதே?

*அதை எல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். 'எது டிவி தலைப்பு செய்திகளில் முதலாவதாக வருகிறதோ, எது பத்திரிக்கையின் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்கிறதோ அதை தான் நாமும் வழி மொழிய வேண்டும்; அப்போது தான் நமக்கும் ஒரு பாப்புலாரிட்டி கிடைக்கும்' என்ற எண்ணம் தான் இது போன்ற கேவலமான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க சொல்கிறது.

*நினைவிருக்கிறதா, செரீனா பானு, சிவகாசி ஜெயலட்சுமி இவர்களை எல்லாம்? இவர்களுக்கு எதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது? ஒரு காரணமும் இல்லை. 'நம்மால் முடியவில்லை, இவனக்கு (இவளுக்கு) மட்டும் எங்கிருந்து இப்படி அதிர்ஷ்டம் கொட்டுகிறதோ' என்ற பொறாமையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்.

*சில வருடங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவின் குளியல் டிவிடி வெளி வந்த போது அதை பார்க்க முடியாதவர்கள் தான் அப்போது பல பேர் இருந்திருப்பார்கள். ஆனால் நெற்றிக்கண் வெளியிட்ட புகைப்படங்கள் சாதாரண பாமரன் கையிலும் இருந்தது. அந்த குளியல் காட்சியை படம் பிடித்தவனை விட நெற்றிக்கண் பத்திரிகை தான் மிகவும் காவாளித்தனமாக செயல் பட்டது.

*இன்று அதைத்தான் நமது சன் டிவியும் நக்கீரனும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்துமணி மேட்டருக்கு குடுமிப்பிடி சண்டை போட்ட தினகரனும் தினமலரும் இப்போது கை கோர்த்து செல்கிறார்கள்.

*அந்த சாமியார் எங்கே கை வைக்கிறான், எப்படி துள்ளிக்குதிக்கிறான் என்பதை எல்லாம் ஒரு நீலப்படத்தை காண்பிப்பது போல் விலாவாரியாக காட்டவேண்டுமா?

*ஒருவன் இருபது வயதுகளிலேயே சாமியாராக போவது என்பது இன்றைய சூழலில் எப்படி சாத்தியப்படும் என்று யோசித்திருந்தால் அன்று அவர் பின்னாடி இவ்வளவு கூட்டமும் சென்றிருக்காது, இன்று இந்த விஷயம் நம் வீட்டு பெட்டிக்குள்ளும், காலையில் நம் முகத்தில் முதலாவதாக முழிக்கும் நாளிதழிலும் வந்திருக்காது.

*சாமியார்களால் பல பிரச்சனைகள் தீர்கிறது என்றால் இவர்களையே ஏன் நாம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும், முதல்வராகவும் தேர்ந்தெடுக்க கூடாது? அவர்கள் தான் தம் ஞான திருஷ்டியால் இந்த உலகையும் நாட்டையும் அழிவில் இருந்து காப்பாற்றி செழிப்பாக வைத்திருக்கலாமே?

*நமது கஷ்ட காலங்களில் நம்பிகைக்கு ஒரு துணையாகவும், மகிழ்ச்சி தருணங்களில் தலைக்கனம் ஏறாமல் இருக்க ஒரு கைப்பிடியாகவும் நாம் அமைத்துக்கொண்ட ஒரு நம்பிக்கை தான் கடவுள். நமக்கும் கடவுளுக்கும் நடுவில் புரோக்கர் எதற்கு?

*நித்யானந்தா மட்டும் அல்ல, இந்த சம்பவம் மூலமாக பலன் அடைய நினைக்கும் ஒவ்வொருவரும் கெட்டவர் தான் (நான் உட்பட).

*கடவுளை மற; மனிதனை நினை - இது பெரியார்.
சாமியாரை மற; சாமியை மட்டும் நினை - இது அடியேன்.

நீங்களே சொல்லுங்க....

Thursday, March 4, 2010


அது ஒரு கல்லூரி. அந்த கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு காலத்தில் அந்த ஊருக்கே மாதிரியாக விளங்கினார்கள். நான் சொல்வது ஒரு நாற்பது நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு. அது பணக்கார மாணவர்கள் படிக்கும் கல்லூரி அல்ல. ஆனால் பண்பான மாணவர்களும் ஒழுக்கமான மாணவத்தலைவனும் இருந்த கல்லூரி. இன்று அந்த கல்லூரியில் பலர் வசதி படைத்தவர்களாய் இருந்தாலும், ஒழுக்கம் என்பது மேலிருந்து கீழ்வரை யாரிடமும் இல்லை. இந்த அளவுக்கு அந்த கல்லூரி சீரழிந்து போய்க்கொண்டு இருக்கிறது. மாணவத்தலைவராக ஒரு பஞ்சாபி மாணவன் சும்மா டம்மி பீசாக இருக்கிறான். அவனை ஆட்டுவிப்பது அந்த கல்லூரி நிர்வாகத்தினர் தான். கல்லூரி நிறுவனரின் மனைவி தான் நிர்வாக தலைவி. அவர் மகன் இதே கல்லூரியில் ஒரு மாணவன். இவர்கள் இருவரும் நினைத்தது தான் கல்லூரியில் நடக்கும்; அந்த பஞ்சாபி மாணவத்தலைவன் மூலமாக. நாம் இப்போது அந்த கல்லூரியின் தமிழ் துறை நாசமாய் போய் விட்டது. ஏன் என்று கேட்கிறீர்களா?

மிகப்பெரிய அறிஞர்களும் மேதைகளும் வகுப்புத்தலைவனாக இருந்த தமிழ் துறையை இப்போது ஒரு அங்கிள் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் (சச்சின் பட அய்யாசாமி மாதிரி இவர் பல வருடம் தன் பதவியையும் விடாமல் ஓய்வும் எடுக்காமல் இருப்பதால் இவர் அங்கிள் என்று மக்களால் வாய் நிறைய அழைக்கப்படுகிறார்). இவருடைய அக்கப்போர் கொஞ்சநஞ்சமல்ல.

*இவர் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்த கல்லூரியில் தான் படிக்கிறார்கள். அனைவருக்கும் எதாவது பதவி வாங்கி கொடுத்து விட்டார்.

*'மாணவர்களின் நலன் கருதி தான் அத்யாவசிய பொருளான புத்தகத்தின் விலை கூட்டப்பட்டது' என்று நிர்வாகம் சொன்னால், கல்லூரி மாணவத்தலைவருக்கு எஸ்எம்எஸ் க்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்புவார்(ஒரு மிஸ்டு கால் கூட குடுக்க மாட்டார்). அதை பெருமையாக நோட்டிஸ் போர்டிலும் ஓட்டிவிடுவார். ஆனால் சென்ற முறை தன் தூரத்து உறவினர் ஒருவருக்கு வகுப்பில் பதவி தரவில்லை என்றவுடன் கோபமாக மாணவத்தலைவரை சந்தித்து ('என் தயவு இல்லாம நீ எப்படி பதவியில் இருக்குற னு பாப்போம்' என்று) தன் உரிமையை பெற்று வெற்றியோடு வந்தவர் தான் இந்த தமிழ் துறை மாணவ தலைவர்.

*தன் வகுப்பையே இரண்டாகப்பிரித்து தன் இரண்டு தம்பிகளுக்கும் அதை பங்கிட்டுக்கொடுத்த வள்ளல் இவர்.

*அதே நேரத்தில் தன் தமிழ் துறை மாணவர்கள் உயர் கல்விக்காக வேறு ஒரு கல்லூரியில் சேர்ந்து இன ரீதியாக ஒடுக்கப்பட்டு அனைவரும் அரியர்ஸ் வைத்து கிட்டத்தட்ட வாழ்வையே இழந்த போது அதை கண்டுகொள்ளாதது போல் இருந்தார். கேட்டால், "என் மௌன அழுகை உனக்கு புரியாது மச்சி" என்று உணர்ச்சி பூர்வமாக கவிதை எழுதினார்.

*தன்னை இந்த தமிழ் துறையின் காவலாளியாகவே நினைத்துக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்வதே இவர் வேலை.

*இப்போது கூட தமிழ் துறையின் பெருமையையும் புகழையும் உயர்த்துகிறேன் பேர்வழி என்று தமிழ் வரலாறு தெரியாதவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு "தமிழ்த்துறை விழா" நடத்த ஏற்ப்பாடு செய்தார். துறையின் ஒத்துழைப்பு இல்லை என்றவுடன் "தமிழ் விழா" என்று பெயர் மாற்றி அதே விழாவை நடத்த ஏற்பாடு செய்கிறார்.

*இவரை எதிர்த்து ஒரு பெண் தான் அடிக்கடி பேசுவாள்; வகுப்புத்தலைவர் தேர்தலிலும் நிற்ப்பாள். ஆனால் அவளை பற்றி மற்ற மாணவர்களிடம் அசிகமாக கமென்ட் செய்வது, அவள் அந்தரங்க வாழ்கையை அசிங்கமாக பேசுவது என்று பலவிதங்களில் தன் கலையை வெளிப்படுத்தி தன்னை ஒரு கலைஞராக காட்டிக்கொள்வார்.

*அதுவும் கல்லூரியில் தேர்தல் வந்துவிட்டால் போதும் இவருக்கும் இவர் தம்பி இருவருக்கும். சக மாணவர்களுக்கு சரக்கு வாங்கி கொடுப்பது, காண்டீனில் இருக்கும் பஜ்ஜி, டீ அகௌன்ட் எல்லாவற்றையும் தாங்களே கட்டிவிடுவது என்று அலப்பறை செய்துவிடுவார்கள். அனைவருக்கும் மறக்காமல் பரிசும் வந்து விடும்.

*நம் தலைவரும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார். 'நான் வெற்றி பெற்று வந்தால் மாணவர்கள் அனைவருக்கும் பிட் சி.டி. தருவேன்' என்று பகிரங்கமாக அறிவிப்பார். 'என்ன இவ்ளோ கேவலமா இருக்கு?' என்று யாரவது கேட்டால் இவரே ஒரு கேள்வி பதிலை தயாரித்து "என் வீட்டில் நான் மறைவாக சந்தோசமாக பிட் படம் பார்த்த போது 'நம் சக வகுப்புத்தோழர்கள் அனைவராலும் பிட்டு படம் பார்க்க முடியவில்லையே?' என்று நான் வருந்தியதன் விளைவு தான் இந்த திட்டம்" ஒரு போடு போட்டார். தேர்தலில் ஓட்டும் பெற்றார். 'பிட்டு படம் தரிங்க, டிவிடி யார் தருவது?' என்று கேட்டால் கோபத்தில் உள்ளம் குமுறி ஒரு கவிதை பாடி விடுவார்.

*வகுப்பில் எப்போதும் அடிதடி தான். தங்களுக்கு பிடிக்காதவர்களின் கை கால்களை வாங்குவது சர்வ சாதாரணம். அதுவும் இவரின் மூத்த தம்பி அதில் கில்லாடி.

*'நீ லீடராக இருக்கும் போது தான் பா கிளாஸ் ல பிரச்சனையை வருது' என்று யாரவது நாக்கில் பல் போட்டு பேசி விட்டால், கடந்த முறை லீடராக வேறொருவர் இருந்த போது நடந்த ஒன்றிரண்டு சாதாரண பிரச்னையை மிகை படுத்தி சொல்வது, அல்லது மற்ற வகுப்பில் நடக்கும் சோதா பிரச்சனைகளை பேசி சமாளிப்பது இந்த அய்யாசாமி என்ற அர்னால்டுக்கு கை வந்த கலை.

*சொல்லுங்க மத சக மாணவர்களை மிக கேவலமாக பேசுவார்; காட்டு மிராண்டிப்பய கூட்டம் என்று சாடுவார். அவர் குடும்பத்திலும் அந்த காட்டுமிராண்டி வழக்கம் உண்டு என்றும் அதை முதலில் நிறுத்தவேண்டும் என்றும் இவருக்கு தோணவே தோணாது. அதே நேரத்தில் கிறிஸ்த்துவ முகமதிய மாணவர்களிடம் 'நான் உங்களில் ஒருவன்' என்று காடும் விதமாக எதாவது செய்து கொண்டிருப்பார் (அவர்கள் மத விழாக்களில் தான் அசைவ உணவு உண்டு என்பதால் தானோ என்னவோ!).

*இவருக்கு பல துதி பாடிகள் உண்டு. தலைவர் 'இன்றும் பிட் அடித்து மாட்டிக்கிட்டார்' என்று பெருமையாக சொல்லி அதற்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை எல்லாம் ஏற்ப்பாடு செய்து ஜமாய்த்து விடுவார்கள். தல்கைவரும் சிரித்துக்கொண்டே அரைகுறை ஆடை அழகிகளை பார்த்துக்கொண்டிருப்பார்.

*ஆடல் பாடல் என்றால் என்னவென்றே தெரியாதவரை அழைத்து வந்து "எங்களலாம் மெரட்டுராங்க தல" என்று பேச வைத்து சரமாரியாக பஞ்சர் வாங்குவார். ஆனாலும் அனைவரையும் பாசத்தோடு அரவணைத்து செல்லும் ஒரு பாசத்தலைவனாக தன்னை காட்டிக்கொள்வார்.

வகுப்பை, மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்று ஒரு லீடர் யோசிக்காமல் இப்படி கேளிக்கைகளிலும் அடாவடித்தனத்திலும் ஈடு பட்டால் அந்த தமிழ் துறை எப்படி உருப்படும்?
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One