தலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...

Tuesday, June 10, 2014

பதிவுலகிலும், ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி போன்றவைகள் எல்லாம்.. இதெல்லாம் அவர்கள் பாஷையில் எதிர்வினை.. அதாவது இப்போது அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும், அல்லது என்றோ அவர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பழி தீர்ப்பதற்குப் பெயர் தான் எதிரிவினை.. அதாவது என்னை இத்தனை ஆண்டுகளாக மட்டமாக, கீழ் நிலையில் பலரும் வைத்திருந்ததால் இன்று நான் அவர்களுக்கு எதிராக தான் செய்யும் வன்முறைக்குப் பெயர் தான் எதிர்வினை..

சரி இந்த எதிர்வினையால் என்ன தான் பிரயோஜனம் என்று கேட்டால், ஒன்றும் கிடையாது.. இவர்களின் எதிர்வினைக்கு அந்தப்பக்கம் இருந்து இன்னொரு எதிர்வினை வரும்.. அந்த எதிர்வினைக்கான எதிர்வினைக்கு இவர்களிடமிருந்து மற்றொரு எதிர்வினை வரும்.. இப்படியே மாறி மாறி வெட்டிக்கொண்டும், தூண்டிவிட்டுக்கொண்டுமே இருக்க வேண்டியது தான்.. முடிவு? இதனால் இவர்கள் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா என்றால் நிச்சயம் இல்லை.. இது போன்ற விசயங்கள், படிப்பு, சமூக மதிப்பு என்னும் ஏணியில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருக்கும் தலித்துக்களை இன்னும் பின்னிழுக்கும் என்பது தான் உண்மை.. வன்முறையாலும், துவேசத்தாலும் எங்கும் எப்போதும் முன்னேற்றம் வராது என்பது உலக நியதி..

இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. தாங்கள் உயர வேண்டுமானால் உயர் சாதி என்று கருதப்படும் பெண்களை காதலித்து, இழுத்துக்கொண்டு ஓடுவது தான் ஒரே வழி என்பது இவர்கள் மனதில் சிலரால் விதைக்கப்பட்டிருக்கும் எண்ணம். ஆனால் அப்படி ஓடிப்போகும் பலவும் பிரச்சனைகளை இன்னும் தான் பெரிதாக்கியிருக்கிறதே தவிர பிரச்சனையை குறைத்தோ, தலித்துகளின் நிலையை மாற்றியதாகவோ எங்கும் கேள்வி இல்லை.. உண்மையில் தலித் முன்னேற்றம் என்கிற பெயரில் அடங்க மறுத்து, அத்துமீறி, திருப்பி அடித்து, எதிர்வினை புரிந்து, இழுத்துக்கொண்டு ஓடி என இவ்வளவையும் செய்தாலும், தலித்துகளின் நிலை என்னவோ நம் நாட்டில் இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதே கூட அவ்வளவு கஷ்டம் என அண்ணன் சதீஷ் கூட அடிக்கடி புலம்புவார். தங்களின் வாழ்வில் மாற்றத்தை கொடுக்கும் என அவர்கள் நம்பி செய்யும் இவ்வளவுஎதிர்வினைகளாலும் ஏன் அவர்களை சமூக அளவில் முன்னேற்ற முடியவில்லை? இன்னும் ஏன் அவர்கள்சரி சமமாக அங்கீகரிக்கப்படவில்லை? ரொம்ப சிம்பிள், அவர்கள் செல்லும் பாதை... ஆம், அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை அவர்களை இன்னமும் மக்கள் மத்தியில் மோசமாக சித்தரிக்கும் என்பது தான் உண்மை.

சரி இதற்கு என்ன தான் தீர்வு? ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் தன் முன்னேற்றத்திற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறது, எப்படி முன்னேறியிருக்கிறது என சில தமிழக வரலாற்று சம்பவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தலித்துகளின் நிலையை ஒத்திருந்த நாடார் சாதியை இதற்கு தகுந்த உதாரணமாகக் கொள்ளலாம்

ஆரம்ப காலத்தில் நாடார்கள் திருநெல்வேலிக்கு தெற்கே தான் மிகுந்து காணப்பட்டார்கள். ”அவர்கள் வாழும் நிலம் பாலைவனத்தைக்காட்டிலும் சிறிது மேம்பட்டும், வெப்பமானதும், வெறுமையானதும், விரும்பத்தகாததாகவும் காணப்பட்டதுஎன்கிறார் கால்டுவெல். அதாவது விவசாயத்திற்கு சிறிது கூட உபயோகப்படாத தேரி என்று அழைக்கப்படும் செம்மண் பூமியை சுற்றி அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்

மேலும் கால்டுவெல் தனது 1857ம் ஆண்டு எழுதிய கட்டுரை தொகுப்பான, “Lectures on the Tinnevelly Mission"ல் அன்றைய நாடார்களின் நிலை பற்றிச் சொல்கிறார். “நாடார்கள் ஆலயங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் ஆலயங்களில் வெளியில் நின்று தான் தெய்வங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். அவர்கள் நீதிமன்றங்களில் கூட அனுமதிக்கப்படுவதில்லை. நீதிபதிகளிடம், நீதி மன்றத்தின் வெளியே நின்று தான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். நாடார் பெண்கள் இடுப்புக்கு மேல் சேலை அணியலாகாது என்று வற்புறுத்தப்பட்டனர். பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்க அவர்களுக்கு அனுமதி இல்லை. நாவிதரையோ, வண்ணார்களையோ பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இம்மாதிரியான சூழ்நிலையிலுள்ள நாடார்களின் பழக்க வழக்கங்கள், அவர்களைச் சூத்திரர்களை விடவும் தாழந்த சாதியினரின் நிலையுடன் இணைக்கிறதுஎன்கிறார்.. தமிழகத்தில் இன்றைய தலித்துக்களின் நிலையை விட அன்றைய நாடார்களின் நிலை மோசமாகத்தான் இருந்திருக்கிறது என்பது கால்டுவெல்லின் இந்த வார்த்தைகள் மூலம் தெரிய வருகிறது.

முழுக்க முழுக்க பனை மரத்தையும், கள்ளையும், பனை பொருட்களையும் நம்பியிருந்த நாடார்கள், எப்போதும் வறுமையில் தான் உழன்றார்கள். அவர்களது வறுமை, “நெல் பயிராகும் மாவட்டங்களில் அடிமைகளாக வேலை செய்யும் பள்ளர், பறையர்களுக்கிருந்த வறுமையின் தன்மையை ஒத்திருந்ததுஎன தனது இன்னொரு நூலான “திருநெல்வேலி சாணார்கள்”ல் கால்டுவெல் குறிப்பிடுகிறார்

சாமுவேல் மட்டீர் என்னும் ஆங்கிலேயரும் தனது “The Land of Charity" என்னும் நூலில் நாடார்களின் அன்றைய நிலையை விளக்குகிறார். “நாடார் ஒருவர் நம்பூதிரி பிராமணரிடம் பேசும் போது 36 அடி தூரம் தள்ளி நின்று தான் பேச வேண்டும். நாயர்களிடம் 12 அடிகளுக்கு மேல் நெருங்கி வரக்கூடாது. நாடார்கள், தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்கிற முறையில் குடை எடுத்துச் செல்லுதல், காலணிகள் அணிதல், தங்க ஆபரணங்கள் அணிதல், ஆகியவற்றிற்கு தடை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் வீடுகள் ஒரு அடுக்குக்கு மேல் இருக்கக் கூடாது; பசுக்களில் பால் கறப்பத்தற்கு அனுமதிக்கப்படவில்லை; உயர் சாதி பெண்களைப்போல் நாடார்ப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது; தலையில் தான் சுமக்க வேண்டும்; மேலாடைகள் போர்த்திக்கொள்ளக் கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை”..

தங்கள் குடும்ப பெண்கள் சாலையில், பொது இடங்களில் திறந்த மார்புடன் வருவதை எத்தனை நாள் தான் ஒருவனால் சகித்துக்கொள்ள முடியும்? சட்டம் மூலம் தீர்வு கிடைக்குமெனெ நம்பி, மாராப்பு அணிவதற்காக கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் கூட கிறிஸ்தவத்திற்கு மாறிய நாடார் பெண்கள் தாராளமாக தங்கள் மார்பை மறைத்துக்கொள்ளலாம் என்றும், இந்துவாக இருக்கும் பெண்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய முறைப்படி தான் இருக்க வேண்டும் என்றும் அதில் தாங்கள் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.  இந்த சூழலில் தான் தோள் சீலை போராட்டம் வெடித்தது.. சட்டத்தை நம்பி பிரயோஜனம் இல்லை, என முடிவு செய்த நாடார் குலப் பெண்கள் தங்கள் மார்பை மறைத்து ஆடை உடுத்த ஆரம்பித்தனர். இது ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நாகர்கோயிலில், கடைத்தெருவில் மார்பை மறைத்து ஆடை உடுத்தியிருந்த நாடார் குலப்பெண்களை தாக்கி அவர்களின் மேலாடைகளை கிழித்து எறிந்தனர். இதைத்தொடர்ந்து 1858ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நன்னாளில் கலவரம் மூண்டது.. கடைசியில் அன்றைய அரசு, 1859 ஜனவரி 27ம் தேதிதோள் சீலை பயன்படுத்துவதை தடை செய்வது தற்காலத்திற்கு ஒவ்வாததுஎன்று நாடார்களுக்கு ஆதராவக ஒரு அரசாணையை வெளியிட்டது ஓரளவு உதவியாக இருந்தது.

சக மனிதர்களிடம் மரியாதை கிடையாது, அடிமை போன்ற வாழ்க்கை, பெண்களின் மாராப்பை மறைக்கவே கலவரம் செய்து தான் உரிமை பெற வேண்டிய சூழல். இப்படி ஒவ்வொன்றுக்கும் கலவரமும் போராட்டமும் செய்து தான் உரிமையை பெற வேண்டும் என்றால் கடைசி வரை கலவரமும், போராட்டமும் மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டியது தான், முன்னேறவே முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர்.. சமூகத்தில் எப்படி முன்னேறலாம் என்கிற தகிப்பு ஒவ்வொரு நாடாருக்குள்ளும் இருந்தது. பனங்காட்டில் கூலி வேலை செய்து கொண்டு திருநெல்வேலிக்கு தெற்கில் இருந்த நாடார்கள் வியாபாரத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். விருதுநகர், அருப்புக்கோட்டை, கமுதி, பாலையம்பட்டி, சாத்தங்குடி, சிவகாசி போன்ற நகரங்களை சார்ந்து தங்கள் வியாபாரத்தை ஆரம்பித்தனர்.

பொருளாதார முன்னேற்றம் இல்லாமல் தங்களால் சமுதாயத்தில் ஒரு நிலையை அடைய முடியாது, பொருளாதார முன்னேற்றமே ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை தெளிவாக அறிந்திருந்த நாடார்கள் தங்களில் பொருளாதார முன்னேற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடி தான் வியாபாரம்.. மாட்டு வண்டியில் ஊர் ஊராக சென்று கருப்பட்டி, கருவாடு, பருத்தி போன்ற பொருட்களைவிற்கத் தொடங்கினர். ஒவ்வொரு ஊரிலும் கீழ் ஜாதிக்காரன் இப்படி வந்து வியாபாரம் செய்வதா என பிரச்சனைகள் வந்தன. அவர்களின் வண்டிகள், பொருட்கள் களவு போயின.. அவர்களுக்கு திருப்பி அடிக்கவெல்லாம் நேரம் இல்லை. தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்பதை உணர்ந்த அவர்கள், தங்கள் வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக சிறிய நிலம் ஒன்றை ஒவ்வொரு ஊரிலும் வாங்கி அதற்குபேட்டைஎன்று பெயரிட்டனர். (சிவகாசியில் இப்போதும் கூட திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கத்தின் கருவாட்டுப்பேட்டை இன்றும் உள்ளது). அந்த பேட்டையை நிர்வகிக்க அவர்களுக்குப் பணம் தேவைப்பட்டது.. அப்போது தான் இந்திய வரி வரலாற்றில் புரட்சி ஏற்படுத்திய sales taxற்கு அச்சாரமான ஒரு விசயம் நடந்தேறியது..

நாடார்கள் தங்கள் பேட்டையை நிர்வகிக்கநாடார் மகமை பண்டுஎன ஒன்றை ஆரம்பித்தனர். ஒவ்வொரு ஊரிலும் பேட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு வியாபாரியும் தனது வருமானத்தின் ஒரு பகுதியை மகமை பண்டிற்கு கொடுத்து விட வேண்டும். அந்தப்பகுதியை கடந்து செல்லும் ஒவ்வொரு மாட்டு வண்டியும் குறிப்பிட்ட அளவு மகமை நிதி கொடுத்தாக வேண்டும் என்னும் விதியும் இருந்தது. இந்த மகமை நிதியைக் கொண்டு அந்த பேட்டையில் தங்களுக்கும், தங்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பை உருவாக்கிக்கொண்டனர்.. ஆனால் நாளாக நாளாக அந்த மகமை நிதி அவர்களே கற்பனை செய்யாத அளவிற்கு வளர்ந்தது.. ஒவ்வொரு ஊரிலும் உறவின்முறை மகமை பண்டு சந்திப்புக்களை மாதாமாதாம் நடத்தி அந்த நிதிகளை எப்படி முறையாக செலவிடுவது என யோசித்தனர்.. தான் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவும் எந்த அளவுக்கு தன் நிலையை உயர்த்தப்போகிறது என்பது நாடார்களுக்கு அன்றே தெரிந்திருக்குமா என தெரியவில்லை.. 

அந்த மகமைப் பண்டில் ஒவ்வொரு வியாபாரியும், ஒவ்வொரு குடும்பத்தலைவனும் கட்டும் பணமானது அந்த ஊரின், அந்த சமூகத்தின் நன்மைகளுக்காகப் பயன்பட்டன. வியாபாரத் திறமை மட்டும் போதாது, அதை நிர்வகிக்க படிப்புத்திறமையும் வேண்டும் என அறிந்து கொண்ட நாடார் சமுதாய மக்களின் கவனம் கல்வி பக்கம் திரும்பியது.. அந்த மகமை நிதியைக் கொண்டு பல ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர். விருதுநகரில் 1885ம் ஆண்டில் திறக்கப்பட்ட KVS என்று அழைக்கப்படும் ஷத்ரிய வித்யா சாலா பள்ளி தான் அந்த மாதிரியான முதல் பள்ளி. பின் மருத்துவமனைகள், கோயில்கள் என தங்கள் சமூகத்திற்கு தேவையான அனைத்தையும் உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஊரிலும் மகமை பண்டு நிதியின் மூலமாக இவை செயல்படுத்தப்பட்டன.. சமூகத்தில் நல்வுற்றோர்களுக்கு உணவும், ஆடையும், வலிமையுள்ளோர்களுக்கு வேலையும் தரப்பட்டன. போதுமான நிதியை பயன்படுத்தி வியாபார நஷ்டங்கள் சரி செய்யப்பட்டன. சமூகத்திற்காக கிணறுகளும், பொதுக்கட்டிடங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால் அதிகமான நிதி கல்விக்கூடங்களுக்கு தான் ஒதுக்கப்பட்டது. அனைத்து ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர். அதாவது எந்த ஒரு சூழலிலும் பிறரை சார்ந்தோ, அரசு உதவிகளை எதிர்பார்த்தோ அவர்கள் எதற்கும் காத்திருக்கவில்லை. தங்களுக்கு வேண்டியதை தாங்களே செய்து கொண்டார்கள்.


நாடார்களின் இந்த மகமை பண்டு செயல்பாடுகளை கவனித்த அன்றைய முதல்வர் ராஜாஜி இதனை அடிப்படையாகக் கொண்டு தான் விற்பனை வரி என்னும் salestax  அறிமுகப்படுத்தினார் என்பதே சொல்லும் இந்த மகமை பண்டு என்னும் நிதி மேலாண்மையின் மேன்மையை..

ஒரு காலத்தில் தங்களது சாதியை காட்டி என்னவெல்லாம் அவர்களுக்கு மறுக்கப்பட்டதோ அவை அனைத்தையும் பிறரை சார்ந்திருக்காமல் தாங்களே அடைந்து கொண்டனர். கிணற்றில் தண்ணீர் எடுக்க உரிமை இல்லையா? நானே ஒரு கிணறு வெட்டிக்கொள்கிறேன்.. கோயிலுக்குள் விட மாட்டாயா? எனக்கான கடவுளுக்கு நானே கோயில் கட்டிக்கொள்கிறேன், படிக்க விட மாட்டாயா? வா நான் ஆரம்பிக்கும் பள்ளியில் என்னோடு சேர்ந்து உன் பிள்ளைகளும் படிக்கட்டும் என்று ஒவ்வொன்றையும் ஒற்றுமையாக செயல்படுத்தினர். எந்தக் கோயில்களில் எல்லாம் ஒரு காலத்தில் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லையோ அந்த கோயில்களுக்கும் அள்ளி அள்ளி நிதி வழங்கினார்கள். மூடிய கோயில்க் கதவுகள் எல்லாம் தன்னால் திறந்தன. ஒரு காலத்தில் நாடார்களை உள்ளேயே விடாத கோயில்களில் கூட, இன்று நாடார்கள் இல்லாமல் எந்த பண்டிகைகளும் நடப்பதில்லை என்பது கண் கூடாகத்தெரியும் உண்மை.


இது போக தாழ்த்தப்பட்டவர்கள் என்று இருந்த தங்களின் நிலையை சுதந்திரத்திற்கு முந்தைய அன்றைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது போராடி, பிற்படுத்தப்பட்டோர் என மாற்றிக்கொண்டனர். தாங்கள் தாழந்தவர் இல்லை, அத்தகைய சொல் பிரயோகம் தங்களுக்கு தேவையில்லை என்று தூக்கி வீசினர். மகமை பண்டு ஒரு புறம் என்றால், 1910ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாடார் மகாஜன சங்கம் இன்னொரு புறம்.. இவர்களின் முக்கிய குறிக்கோளும் கல்வி தான். 1921ம் ஆண்டில் இருந்து 1964 வரையில் சுமார் மூவாயிரம் மாணவர்களுக்கு, அன்றைய மதிப்பில் நான்கு லட்ச ரூபாய் வரை கல்விக்கான உதவியாக மட்டும் செய்துள்ளனர். இது கடனாகத்தான் கொடுக்கப்பட்டது.. வட்டியில்லாக்கடன். படித்து முடித்ததும் அந்த மாணவன் அதைத் திருப்பி செலுத்திவிட வேண்டும். வெளிநாடுகள் சென்று படிப்பதற்கும் கூட உதவிகள் செய்யப்பட்டன. பள்ளிகளில் இருந்து கல்லூரிகள் பக்கமும் தங்கள் கவனத்தை செலுத்தினார்கள். இன்று இருப்பது போல் பொறியியல் கல்லூரிகளை ஆரம்பிக்காமல் ஒவ்வொரு ஊரிலும் கலை, அறிவியல் கல்லூரிகளை ஆரம்பித்து சமுதாய மாணவர்களை பட்டதாரிகளாக்க முழுமுனைப்புடன் இருந்தன இந்த சங்கங்கள்..

பொருளாதார முன்னேற்றம் இருந்தாலும், ஆதிக்க சாதியினரான மறவர், வேளாளர் போன்றோர்களின் எதிர்ப்பு நாடார்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்து வந்தது. ஆனால் தங்களின் பள்ளி, கல்லூரிகளில் அவர்களின் பிள்ளைகளுக்கும் இடம் கொடுத்து, தங்கள் நிறுவனங்களில் பிற சாதியினருக்கும் வேலை கொடுத்து, ஒரு இணக்கமான சூழலை உருவாக்கிக்கொண்டார்கள். இன்று சிவகாசி, விருதுநகர் போன்ற நகரங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி, எண்ணெய் நிறுவனங்கள், தீப்பெட்டி, அச்சு நிறுவனங்கள், பட்டாசுத்தொழிற்சாலைகளில் இதை வெகு சகஜமாக காணலாம். அதாவது ஜாதியால் தன்னை தாழ்ந்தவன் என்று மட்டமாக நினைத்த உயர் ஜாதி ஆட்களைக் கூட தங்கள் ஒற்றுமையால் தங்களை சார்ந்து வாழ வைத்தது தான் நாடார்களின் வெற்றி.

இது தான் நாடார்களின் சுருக்கமான முன்னேற்ற வரலாறு. இதில் எத்தனையை இன்றைய தலித் சங்கங்களோ, அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளோ செய்திருக்கிறார்கள்? நாடார்கள், எதிர்வினை என்னும் பெயரில் எவனெல்லாம் தங்கள் வீட்டுப்பெண்களின் மாராப்பை கிழித்தெறிந்தானோ, அவன் வீட்டுப்பெண்களின் மாராப்பையும் கிழித்து எறிந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. தங்களின் இழி நிலை ஒழிய வேண்டுமானால் உயர் ஜாதி பெண்களை இழுத்து ஓடுவது தான் ஒரே வழி என்றும் அவர்கள் நினைக்கவில்லை.. ஒற்றுமையும், முன்னேற்றமுமே குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைய இட ஒதுக்கீடு ஒரு மனிதனை மட்டும் தான் முன்னேற்றும். அவன் தனக்குப் பின் தன் பிள்ளைகளுக்கு தான் அதை பெற்றுத்தர முனைவானே ஒழிய, தன் சமூகத்தை சார்ந்த, இன்னும் கீழ் நிலையில் இருக்கும் பிறர் அதை அனுபவிக்க விடுவதில்லை பெரும்பாலும். ஆனால் இடஒதுக்கீட்டையும் தாண்டி ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் அதற்கு ஒற்றுமை அவசியம். பிறர் நம்மை மட்டமாக பேசுகிறார் என்பதற்காக அதை நினைத்து வருந்தாமல், சண்டை போடாமல், வைராக்கியமாக தன் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால், தன்னை பேசியவனையும் தாண்டி ஒரு காலத்தில் வளர்ந்து நிற்கலாம்.. அல்லது கடைசி வரை சண்டை போட்டுக்கொண்டு தானும் முன்னேறாமல், அவனையும் முன்னேற விடாமல் இழி நிலையிலேயே இருக்கலாம்.. இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பது சில தலித் சங்கங்களின் கைகளில் தான் உள்ளன..

இன்னொரு முக்கியமான விசயம், நாடார்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கென்று ஒரு அரசியல் தலைவரை உருவாக்கிக்கொண்டதில்லை, உருவாக விட்டதும் இல்லை.. என்று ஜாதியத்திற்குள் ஓட்டு அரசியல் வருகிறதோ, அன்றே அது அந்த ஜாதியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி, அந்த ஜாதியை வளர விடாமல் செய்து விடும்.. அப்போது தானே அந்த ஜாதிய தலைவர்களால் வெற்றிகரமாக அரசியல் செய்ய முடியும்? முன்னேறி விட்டால் அரசியல் செய்ய முடியாதே? இன்று தங்களை தலித்துகளின் அரசியல் தலைவர்களாக காட்டிக்கொள்ளும் பலரும் செய்வது இதைத்தான்.. அதனால் அரசியல் தலைவர்களையும், இட ஒதுக்கீட்டையும், நம்புவதை விட தலித்துகள் தங்களுக்குள் ஒற்றுமையாக சிறு சிறு குழுக்கள் அமைத்துக்கொண்டு நாடார்களின், “மகமை பண்டுபோன்ற விசயங்களை அதில் செயல்படுத்தி முன்னேறலாம்..

அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி, அடுத்தவன் வீட்டுப் பெண்ணை கையப்பிடித்து இழு, எதிர்வினை செய் என்பதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு அன்றாட பிழைப்பை ஓட்டத்தான் பயன்படுமே ஒழிய, அந்த சமூகத்திற்கு எந்த விதத்திலும் அது பயனைக்கொடுக்காது.. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் படிப்பும், பணமும் தான் பிரதானம். அரசு கொடுக்கும் இடஒதுகீட்டை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் அந்த படிப்பும் பணமும் அனைவருக்கும் கிடைக்க இன்னும் 200 ஆண்டுகள் கூட ஆகலாம்.. அதுவே தங்கள் சொந்தக்காலில் ஒற்றுமையாக நின்று முன்னேறும் போது, சீக்கிரத்தில் பொருளாதார நிலையில் வளர்ச்சியை அடைந்து விடலாம்.. பொருளாதார வளர்ச்சி மட்டும் தான் ஒரு ஜாதியை அதன் கீழ் நிலையில் இருந்து மேலே உயர்த்தும் முக்கிய காரணி.. அதனால் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன மாதிரியான முன்னெடுப்புக்களை எடுக்க வேண்டும் என தலித் மக்கள் சிந்திப்பதே அவர்கள் முன்னேற்றத்துக்கான ஆரோக்கியமான முதல் படியாக இருக்கும்..

இல்லை இன்னமும் நாங்கள் எங்கள் அரசியல் தலைவர்கள் வகுத்துக்கொடுத்த சீரிய பாதையில் தான் செல்வோம் என்றால், தலித்துகளுக்கு சமூகத்தில் இன்று இருக்கும் மதிப்பு மாற வெகு காலம் பிடிக்கும் என்பது மட்டும் உறுதி...


126 comments

  1. அண்ணா முதலில் இந்த தலைப்பைப்பார்ரத்தவுடன் , தலீத்களின் இழிநிலைக்கு யார் காரணம்,அவர்கள் படும் வேதனை,என்று பலரும் கூறும் இறந்தகால கருத்தையே தாங்களும் சொல்வீர்களோ என எண்ணினேன்.ஆனால் மிகத்தெளிவாக மற்றவர்களைத்தாக்கியோ,இழிந்தோ பேசாமல்,தாழ்த்தப்பட்டவர்களின் நிலை எவ்வாறு உயர்த்தப்பட வேண்டும் என்று வருங்காலத்தை யோசித்து அற்புதமான கட்டுரை வடித்துள்ளீர்கள்.இன்று தலைநிமிர்ந்து நடக்கும் நாடார்மக்களின் பழைய வாழ்க்கை முறை சிறிதே தெரிந்து வைத்திருந்தேன்.அதைத்தெளிவாகவும் விரிவாகவும் கூறியதற்கு நன்றி அண்ணா.இதைக்கூட வக்கிரபுத்தி உள்ள சிலர் சுயநலத்திற்காக எதிர்வினை ஆக்கிவிட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. நான் கூற நினைத்ததை அப்படியே எழுதி விட்டீர்கள் திருக்குமரன்... அழுது வடியும் கட்டுரை போல் அல்லாமல் எல்லா சாதியினருக்கும் பொருந்தும் வகையில் இனி என்ன செய்ய வேண்டும் என் தெளிவாக கூறும் கருத்துக்கள் ராம்குமார்.... வழக்கம்ப்போல் வசீகரமான எழுத்து நடை....

      Delete
    2. இழி நிலைக்கு பிறரை குறை கூறிக்கொண்டே இருந்தால் முன்னேற முடியாது... அவன் யார் என்னை மட்டமாக நினைக்க? நான் வளர்வேன் என்கிற எண்ணம் இருந்தால் மட்டும் தான் முன்னேற முடியும்.. நன்றி திருமுருகன் அவர்களே :-)

      ரொம்ப ரொம்ப நன்றி யவனிகை காரே...

      Delete
  2. It was nice reading about this social success story again. Very motivating.

    ReplyDelete
  3. megneash k thirumurugan/// ungalai pola tan nanum thalaippai paarthathum thavaraka ennitten. nalla katturai anna

    ReplyDelete
  4. நெகிழ்ந்து விட்டேன். அற்புதமான எழுத்தாற்றல். உண்மைகளை அருமையாக எழுதியிருக்கிறீர்கள் திரு ராம்குமார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படித்து கருத்துகளை பதிய வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் முதலில் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் சார்.. நீங்கள் கொடுத்த நாடார் வரலாறு புத்தகம் தான் என்னை இதை எழுதிய தூண்டியது.. உங்களுக்கு தான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.. நன்றி சார்..

      Delete
    2. மகிழ்ச்சி ராம்குமார்.

      Delete
  5. அருமையான கட்டுரை ,மேலும் நாடார்களின் வரலாறு தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் மறுபக்கம் நாவலை படிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல்.. கண்டிப்பாக படிக்கிறேன்.. :-)

      Delete
  6. வீரியமிகு எழுத்து நடை ...
    மேம்போக்காக சொல்லாமல் நன்கு ஆழ்ந்து சிந்தித்த
    தாக்கம் எழுத்தில் தெரிகிறது ... இனி சொல்ல ஒண்ணுமில்லை
    தலித்துகளுக்களுக்கு மட்டுமில்லை, மற்ற ஏனைய சாதிகளுக்கும் பொருந்த கூடிய பதிவு தான் தலைவரே ...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தலைவரே.. ரொம்ப நாளாக இதைப்பற்றி எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டே தான் இருந்தேன்.. இன்று நடந்துவிட்டது.. நன்றி :-)

      Delete
  7. very informative and interesting writeup.

    ReplyDelete
  8. மிக அருமையன கட்டுரை எல்லா சாதியினருக்கும் பொருந்தும் இந்த நாடார்களின் முன்னேறத்திற்கு பின்னே உள்ள கடின உழைப்பு பற்றி கூறவில்லையே!! மளிகை கடையில் விடிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகும் உழைப்பு இரவு பத்து மணிவரை குடும்பமே உழைக்கும் அந்த கடின உழைப்புதான் பொருளாதார ரீதியாக முன்னேற்றியுள்ளது

    ReplyDelete
    Replies
    1. ஆம்.. ஒரு அளவிற்கு முன்னேறிய பின்னும் அவர்கள் உழைப்பை நிறுத்தவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.. :-)

      Delete
  9. They must have STRONGLY believed THE FACT that they are NOT INFERIOR to ANYBODY. Their unity in raising themselves should be appreciated. They, generally ignore the "religion" and give importance to "caste" when it comes to choosing a "life partner" because they knew that they all have the "same gene" though they believed in different Gods.

    The funny part is, they never looked up on so called higher caste and THEY THEMSELVES completely avoided marrying a so called "higher caste" to raise their "status"! Because they knew the consequences. They knew that one day, in the future, the other community relatives will show "their true color" and WILL LOOK DOWN on them indicating them as a "lower caste" ! Here, their unity based on the "CASTE' can not be criticized at all because they can not TRUST anybody but their own folks and it can be easily justified too!

    I must admit the success of Nadars to raise their social and economic status is something amazing. They could do it because they realized no matter what happens their own caste people will never look down on themselves and so UNIFIED THEM and raised their status in an "ahimsa approach"!

    ReplyDelete
    Replies
    1. For the first time in my blogging history, you are for my article.. Thanks.. :-)

      Delete
  10. வந்துட்டான் வருண் நாட்டாமை. இனி அவன் பார்ப்பான், அவன் இவன் எல்லோரையும் கண்டமேனிக்கு திட்டி எழுதுவான் பொறம்போக்கு....

    ReplyDelete
    Replies
    1. அவரே எதோ நல்ல மூடுல இருக்காரு.. ஏங்க ஏத்தி விடுறீங்க?

      Delete
    2. Anonymous: If you come up with the same identity, some name such as . "Rajeeesh" or "Koomar" or any of such I can figure out when and where you got whacked by me! lol

      If you come as an anonymous dick-less wimp and bark, it is hard to figure out who you are!

      Next time come back with identity in which you got whacked, we can talk! OK, wimp??

      Delete
    3. Hello Mr.Naattamai varun.. If I want to comment on you I do on my own ID, with my photo in it.. not like you winnie the pooh.. and cant stop laughing when u said you whacked me ,, hahhah come on man, grow up.. why do people stop replying you in your debates on comments in posts.? it is because they don't want to see you growing more and more aggressive like a maniac.. and I strongly believe you are one. I am typing this comment just to let you know I don't prefer fake ID or anonymity.. you poor soul..get well soon

      Delete
    4. OK, that's not you! My apologies if you are HONEST here. Did I spell your name correctly? I guess not. But you got the message! Seems like it is some other idiot this time. Why dont you ask your God and tell me who is this anonymous bastard? lol

      Delete
    5. See Mr Varun, it is very obvious you intended to point me .. You know that for sure.. and I am not 'that' ignorant to understand it. You could have mentioned my name correctly. I wont get offended. Dont beat around the bush hereafter.. Oh you mean to say some message to me.. ahh that part really sucks man.. You remind me of a quote from pink panther which suits you the best... you are a man Brimming with self confidence, and completely lost.. hahahah.. bye bye

      Delete
    6. Because you are copying and pasting my comments in my blog and bringing here and abusing it in the last post.

      WHY THE FUCK you were doing it, IDIOT?

      Now you act like INNOCENT

      Delete
    7. Mr Varun, did I say I am innocent..? Yes I copied and pasted your comment from your blog in some posts here long back , I am not denying it. why do you copy and paste some paragraphs or comments from some XYZ posts and make it as a post in your blog and use your foul mouth and abusing others..? for the same reasons I did that.. wanted to give you the taste of your own medicine.. now shut the fuck up and move IDIOT..

      Delete
    8. @ Ram.. sorry for arguing with Varun which is irrelevant to this post content at all.. he dragged me into this.. bye

      Delete
    9. When I did not talk about you, you fucked up all over here!

      ***Rajesh kumarMarch 20, 2014 at 3:45 PM

      Psycho's comment on his blog about this post..

      //****புதிய கோணங்கி ! said...

      வழக்கம் போல............ :))

      இந்த தடவை ராம்குமாரா ???***

      புதிய-fucking-கோணங்கி!

      If shatrriya-hindu-fucking ramkumar nadar does not allow me to debate in his fucking blog, AND REMOVES all my comments as an "administrator", what the fuck should I do?

      Let him jerk off in his own blog. You can, go, help him too! lol//

      வழக்கம் போல மெண்டல் சூடாகிடிச்சு.. இதுல புதிய கோணங்கி நு ஒரு கேன மெண்டலுக்கு ஒரு கமண்ட்ட போடவும் மெண்டல் அவரையும் திட்டுது.. அதென்னப்பா சிவகாசின்ன ஒடனே ராம்குமார் நாடார்னு சொல்லுது ? சிவகாசில வேற ஜாதியே இல்லியா? சரி விடு நான் நாகர்கோயில் காரன் , நான் என்ன ஜாதின்னு அந்த சைக்கோ கண்டுபிசிடுவானா ? பகுத்தறிவு பகுத்தறிவுன்னு கத்திகிட்டே ஜாதி மத பேதம் பாக்குறதுல சைக்கோ மண்டையன் வருண்தான் பெரிய ஆளு.
      ***

      you should not have done this fuck up if you were innocent. Now shut the fuck up! you are full of shit!

      Delete
    10. hello .. this is how others feel when you do the same shit numerous times..what makes you elite you bugger..? if you think you have the rights to foul mouth others by their caste names , someone will do the same to you.. got it now..? and now get lost!

      Delete
    11. சம்மந்தமே இல்லாமல் என்னை விமர்சிச்சவந்தான் நீ. அதேபோல் சம்மந்தமில்லாமல் நீ அனானியாக வரவும் வாய்ப்பிருக்கு. நீ பெரிய யோக்கியன்னு சொல்லிக்கிட்டு அலை. அப்படி யோக்கினா இருந்தால் உன் வேலையைப் பார்த்துட்டு இருந்து இருக்கணும். என்ன மயிருக்கு சம்மந்தமே இல்லாமல் என்னைப் பற்ரி விமர்சிச்சடா வெண்ணை???

      Delete
    12. ஹா ஹா ஹா .. ஆரம்பிச்சிட்டான்டா அவன் பினாத்தல.. இப்போ நான் உன்கூட பேசி பிரயோஜனம் இல்லேன்னு அப்பீட் ஆவேன் . உடனே அவன் " வெற்றி வெற்றி வெற்றி" னு நாச்சியப்பன் பாத்திரக்கடையில பேரு வெட்டிட்டு வீரமா திரிவான்.. ஐயா ராசா நாட்டாம .. நான் யோக்கியன் இல்லைதான் ஆனா நீயும் ஒழுங்கு கிடையாது அதுனால வாயையும் சூ ... வையும் மூடிட்டு போடா..

      Delete
    13. சரி சரி நீ ஜெயமோகனுக்கு உருவிவிடுறவன், ஹிந்துத்த்வா, மதவெறி பிடித்தவன்னு எல்லாருக்கும் தெரியும்.

      பதிவு சம்மந்தமா எதாவது சொல்லு. இல்லைனா எடத்தைக் காலிபண்ணு.

      இங்கே வெற்றிவாகை சூடியது நீதான்னு நான் எல்லாருக்கும் சொல்லிடுறேன். சரியாடா வெண்ணை?

      Delete
    14. டேய் மொண்ண , கடைசீல நீ இங்கதான் வந்து நிப்பேன்னு எல்லாருக்கும் தெரியும் .. ஆ ஊன்னா ஹிந்துத்துவா , மதவெறினு பேசுவ .. உண்மைலேயே சாதி மத வெறி உன் நாரவாயில இருந்துதான் வரும்னு இந்த உலகத்துக்கே தெரியும் .. புதுசா ஏதாவது சொல்லு .. ஏண்டா சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுற.. ரைட்டு விடு உனக்கு இப்போ முத்திடிச்சு .. நீ தனியாவே ஆடி அடங்கு . ..
      நல்லா பொழுது போச்சுடா உன்னால .. ஹா ஹா ஹா ..

      Delete
  11. Attitude matters.....

    ReplyDelete
  12. சில மாதங்களுக்கு முந்தைய உங்கள் பதிவில் உள்ள சில வாதங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்

    https://www.facebook.com/RamKumarThangmani/posts/10202293446594716?comment_id=6337317

    யார் க்ஷத்ரியர்கள் பாண்டியர்,சேரர்,சோழர் வாரிசுகள் என்று நாடாரகளுக்கும் வன்னியர்களுக்கும் நடந்த வழக்குகள்,சண்டைகள் பற்றிய புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன்.
    இரு சாதியினரின் பத்திர்க்கைகளும் ,எழுத்தாளர்களும் வடமொழி,சங்கத்தமிழ் நூல்களை ஆதாரம் காட்டி அடுத்த சாதியை மட்டம் தட்டும் அழகே தனி
    1920 ஆம் நாடர்குல மித்திரன் ,க்ஷத்ரியன் போன்ற இதழ்களின் தொகுப்பை படித்தால் பல உண்மைகள் விளங்குகின்றன
    அடங்க மறு,அத்து மீறு ,நான் தான் ஆண்ட சாதி என்று கூவாத சாதி எதுவும் கிடையாது.
    இரண்டு கணவனை இழந்தவரை முதல் மனைவியாக கட்டும் பள்ளிகள் ஆண்ட சாதியா என்று நக்கல் செய்யும் நாடர்குல மித்திரன் ஆகட்டும்.கல் இறக்குவதை ,ஆலய நுழைவு இல்லாததை கீழ் சாதி என்று ஆதாரம் காட்டும் வன்னியர்களின் இதழ்கள் ஆகட்டும்,இவை அனைத்தும் இரு சாதிகளின் வெறியை நன்றாக உணர வைக்கிறது
    முக்குலதொருக்கும் நாடார்களுக்கும் இடையே நடந்த கலவரங்களில் உயிர் பலிகளும் குறைவு கிடையாது.1925 ஆம் ஆண்டிலேயே வணிகத்தால் பணம் பெற்றவர்கள் பலர் உருவாகி உள்ளதால் உயர்சாதி என்று தம்பட்டம் அடிக்கிறார்கள் என்று நாடார்களை மற்ற சாதிகள் குறைகூறுகின்றன


    நாடார்கள் எந்த சாதியோடும் சண்டை இடாமல் முன்னேறினார்கள் என்ற வாதத்தில் எந்த உண்மையும் கிடையாது.
    குறிப்பிட்ட தொழிலில்,தொழில்களில் இருந்ததால் ஒரு காலகட்டத்தில் முன்னேற்றம் பல நாடார்களிடம் ஏற்பட்டது.வெள்ளையன் ராணுவத்தில் பணி புரிந்ததால் (வெள்ளையன் ராணுவத்தில் தமிழகத்தில் 1757 முதல் பணியாற்றியவர்கள் அன்று கீழ்சாதியாக இருந்தவர்கள் தான்.தேயிலை தொட்ட தொழிலாளர்களாக உலகம் முழுவதும் அழைத்து செல்லபட்டவர்களும் அன்றைய கீழ் சாதிகள் தான்)தாமஸ் மலை கண்டோன்மென்ட் ,பல்லாவரம் கண்டோன்மென்ட் ,அதன் சுற்றுபுரங்களில் நிலம் ஒதுக்கப்பட்ட பள்ளிகள் நில மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் வெகுவாக உயர்ந்ததால் பணக்கார்கள் ஆகி விட்டதும் அவர்களிடம் சாதி வெறி அதிகமாவதற்கு முக்கிய காரணம்.
    யார் ஆண்ட சாதி என்று அடித்து கொள்வது,யாருக்கு கீழ் யார் என்பதற்காக உயிர்களை இழப்பது,எடுப்பது என்பதை செய்யாத சூத்திர சாதிகள் எதுவும் கிடையாது

    உழைப்பால் முன்னேறிய என்பதும் ஒரு மாயை.இதுவும் ஒரு சாதி வெறி தான்.பணம் திடீரென்று வருவதால் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று தம்பட்டம் அடிப்பது நியாயமான செயலா

    ReplyDelete
  13. நாடார்கள், பெரியாரின் சுய மரியாதைக் கொள்கையை பெரும்பாலும் பின்பற்றினார்கள். அவர்கள் வீட்டுத் திருமணங்கள், இன்ன பிற சுப காரியங்களில், ஆதிக்கச் சாதியினரை நுழைய விடாமல், தாங்களே தங்களுக்குள் இருந்த அனுபவஸ்தர்களை த்லைமையாகக் கொண்டு நடத்திக்காட்டினர். ஆனால் இப்போது அவர்களில் பலருக்கும் வசதிகள் சேரச் சேர, பழைய வரலாறுகளைப் படிக்காத, மறந்துபோன புதிய தலைமுறையினர், மீண்டும் அக்கினிக்குண்டம், ஐயர், அருந்ததி பார்ப்பது, அம்மி மிதிப்பது என தன் சுய மரியாதையை விட்டுக்கொடுக்கின்றனர், இது நாடார்களுக்கு பின்னடைவே. இன்று ஜாதகம் பார்ப்பதிலும், ராகு எமகண்டம் நல்ல நாள் என்று ஆரியச்சுழலில் விழ சாமனியர்களும் ஆசைப்படுகிறார்கள் :(

    ReplyDelete
    Replies
    1. பெரியார் மூத்ததிரத்தை எல்லாம் பின்பற்றவில்லை...!!!

      200 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த அய்யா வைகுண்டர் அய்யா வழி என்ற எங்களுக்கான தனி வழிபாட்டு முறைய்யையே உருவாக்கி கொடுத்தார்.
      அதனைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்....

      அதற்கும் பெரியாருக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

      Delete
  14. சாதியினரின் எண்ணிக்கை,சில இடத்தில்/மாவட்டங்களில் தனி பெரும்பான்மை என பலம் பெற,மற்ற சாதிகள்,கட்சிகள் அரசியல் ரீதியாக பயப்பட பல காரணங்கள் உண்டு.
    தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த சாதிகளின் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு அளவில் இருப்பவர்களுக்கு ,அதிலும் பெரும்பான்மையானோர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இருப்பதால் கிடைக்கும் வலிமை ஆகியவற்றை கணக்கில் எடுத்து கொண்டால் கட்டுரையாளரின் வாதங்களில் உள்ள குறைகள் தெளிவாக விளங்கும்.
    காமராஜரின் பின் பெருவாரியாக திரண்டு நின்று சாதியின் சதவீதத்தை விட அதிக அறுவடையை காங்கிரெஸ் மூலமாக பெற்ற நிலையில் தனியாக சாதி கட்சிக்கு என்ன அவசியம்.தங்கள் சாதிக்கு குறைந்த இடங்கள்,அநீதி இழைக்கப்படுகிறது என்ற காரணத்தை சொல்லி,அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் சாதி கட்சிகள் உருவாகின்றன,வலுவும் பெருகின்றன
    1940,1950 ஆண்டுகளில் வந்த சாதி சங்கங்களின் பத்திரிக்கைகளை படித்தால் தங்கள் சாதிக்கு காமராஜர் இழைத்த அநீதி என்று அவர்கள் போதும் பட்டியலை படிக்கலாம்.காமராஜர் மிக குறைந்த இடங்கள் ஒதுக்கியதால் தான் 1952 தேர்தலில் மாணிக்கவேலர்,எஸ் எஸ் ராமசாமி தனி கட்சி துவங்கி காங்க்ரெஸ் பெரும்பான்மை பெறுவதை தடுத்து 20 தொகுதிகளுக்கு மேற்பட்ட இடங்களையும் கைப்பற்றினர்.
    பசும்பொன் முத்துராமலிங்கம் மற்றும் காமராஜர் இடையே இருந்த பகை அறியாதவர் வெகு சிலர்.சி சுப்ரமணியம் மற்றும் பக்தவத்சலம் இருவரும் காமராஜருக்கு எதிர் கோஷ்டி.சி சுப்ரமணியம் முதல்வர் ஆவதை தடுத்தவர் என்று கொங்கு வேளாளர்கள் ,பக்தவத்சலத்தை முழுமனதாக ஆதரிக்காதவர் என்று முதலியார்கள் காமராஜரை குறை கூறுவதையும் அன்றைய மற்றும் இன்றைய காலகட்ட சாதிசங்க இதழ்களின் மூலம் புரிந்து கொள்ளலாம்

    எண்னை கிடைத்ததால் பெரும் கோடீஸ்வரர்கள் ஆகி விட்ட துபாய் ஷேக்குகள் தான் உலகில் மற்றவர்களுக்கு எடுத்துகாட்டா
    முன்னேற்றம் என்பது எது.ஆண்,பெண் இருவரும் விருப்பப்பட்ட படிப்பை படிக்க,தொழில் செய்யா,விரும்பிய துணையை தேர்ந்தெடுத்து வாழ அதிக தடைகள் உள்ள ஒரு சமூகம் எடுத்துக்காட்டு என்பது நியாயமான ஒன்றா.ஆண்களின் காதலுக்கு சில சமூகங்கள் எதிரிப்பு தெரிவிப்பதில்லை.சாதி சங்கங்களும் ஆண்களின் காதலுக்கு முழு துணையாக இருக்கும்.சாதிவெறி அதிகம் உள்ள பெரும்பான்மை சாதிகள் இவற்றில் அடங்கும்

    ஆண் பெண் இருவரின் விருப்பபடி பதிப்பு,வேலை,துணையை தேர்ந்தெடுததல் போன்றவற்றிர்க்கு சில சமூகங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.அவை முன்னேறிய சமூகங்களா அல்லது மேஜர் ஆன ஆண்,பெண் என்ன பதிப்பு படிக்க வேண்டும்,தந்தையின் தொழிலை தான் பார்க்க வேண்டும்.அவர்கள் லட்சம் அல்லது கோடிக்கணக்கில் வரதட்சிணை வாங்கி கொண்டு கொண்டு வரும் துணையை தான் மணக்க வேண்டும் என்ற நிலையில் பெரும்பான்மையானோர் உள்ள சமூகம் முன்னேறிய சமூகமா

    ReplyDelete
    Replies
    1. Dr. PonvaNNan!

      Just like any other community, Nadar community has all the flaws. The point here is, they certainly did take a "non-violent approach" to raise themselves in the society. They believed in themselves and solved the "discrimination problems" in a wiser approach.

      Nobody denies that there was a dhevar-nadar war in Thirunelkveli district and there were bloodshed. But it stopped right there. They did not continue such "mistakes" later. But that is not the case when you take other communities.

      You need to learn to appreciate their positive approach in resolving their problems. They did not cry and they did not fight ruthlessly, they rather united themselves and helped each other and came up. They ignored when people insulted them as a lower caste. They completely avoided interacting with them. They interacted with themselves so that they don't need to think low of themselves.

      One more thing, THEY also KNOW HOW TO IGNORE your TRASHY LECTURE too! So, you will lose, that much I can guarantee!

      Delete
    2. Sir what is there to win and lose in the essay.why should one caste have the rights to ignore others and preach what others should do.
      There is nothing good about any caste and good performers/good individuals are suddenly brought inside castefold and made as torchbearers of the caste

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. We certainly need to march towards the "casteless" society. That is present and future. But What we talk here is HISTORY. History of one community which was considered low and, their women were abused by "higher caste idiots"!

      How to overcome such a problem? How to solve the problem? How to protect their women? How did they do it?

      UNITY! Help each other as a family! As a community! Ignore the ill-treatment by ignoring them completley. Keep away from the abusers! Treat them like TRASH!. Get together with your own people. That's what nadar community did to come up. That was HISTORY of course.

      It is a humble suggestion... that other communities could do that too. It is NOT IMPOSSIBLE. If a "higher caste moron" abuses you, SPEAK UP! There are people like "vinavu" "savukku" are there to help you reveal the truth today. You can inform them anonymously and bring a "national attention" and get justice. There is no need for bloodshed and "tit for tat" today. That wont solve the problem.

      One more thing.. Consider the "higher caste" as low-class people! They are indeed. Keep away from those bastards. Never ever try marry a girl/guy from that community who thinks as "superior" than you are. Do it like "BLACK PRIDE"!

      Be proud of what you are! If you do that, you dont give much opportunity for them to abuse you!

      That's what nadar community did and they did succeed! The same thing suggested for others here!

      If you know how to deal with your OWN problems, show a deaf ear to whatever advice you get from anybody like me. That is not a problem. And do it your way, the high way whatever you think is BETTER! I dont have a problem with that either

      Delete
    5. We do not live in seclusion and its unfair and a wrong practise to promote ones own caste at the expense of others.Marwaris settled across India including insurgency prone areas and rarely allowed others who tried to enter their domain of business to grow.Even now certain fields are completely dominated by them.Even a group of sikhs dominate automobile spareparts industry across the country using their collective might to crush others.The same was done by nadars and all this will fall under unfair trade practises and punishable offenses now.
      The nadar associations and its leaders fought hard with others including court cases,pitched battles,running several magazines deriding other castes to claim a superior status for their castes,promoting fights between enemy castes and enemies of them.Whitewashing the past is neither correct history nor good for anyone including them
      Development of a community cannot be measured by the amount of money and freedom for women,poor,weak within the community to study/work/live according to their choices is a far better indicator to measure development and nadars fall way behind in that.Dowry menace is the maximum in them and pressure to follow the footsteps of family members and family business is maximum in them.
      Opposition to marriage on their own choice too is very high and this should be a far greater worry than two adults eloping and marrying on their choice

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Your lectures are TOTALLY USELESS!

      ***a wrong practise to promote ones own caste at the expense of others.***

      When a community women were abused by other community BASTARDS based on community. All the other community BASTARDS were watching and NO OTHER MOTHER FUCKER belong to other communities came forward in support of them and said "that it is WRONG" and protected them besides people like EVR.

      DO you UNDERSTAND?

      One community is discriminated based on the CASTE. The only solution for such a problem is UNIFYING the people whose women were abused. That's what they did.

      You are keep giving nonsensical lecture and impractical solutions for the solved problems.

      Delete
    8. துபாய் ஷேக்குகள் பற்றி பேசும் இதே நீங்கள் தான் பொருளாதார முன்னேற்றம் தான் ஒரு சமூகத்தின் விடுதலைக்கு அடிப்படை காரணம் என்று பல முறை சொல்லியிருக்கிறீர்கள்.. இல்லை என்று நீங்கள் மறுத்தாலும், என்னால் உங்களைப்போல் நீங்கள் பேஸ்புக்கில் போட்ட கமெண்ட்டை எல்லாம் தேடிப்பிடிக்க நேரம் இல்லை.. ஆனால் நீங்கள் சொன்னீர்கள் என்பது எனக்கும் உங்கள் மனசாட்சிக்கும் தெரியும்...

      படிப்பு - இன்றும் 10th, 12th ரிசல்ட்டுகளில் தென் தமிழகம், குறிப்பாக நாடார்கள் பெரும்பான்மையாக இருக்கும் விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான மாவட்டங்கள் தான் சாதிக்கின்றன.. பொருளாதாரம் மட்டும் அல்ல, படிப்பிற்கும் முக்கியத்துவம் உண்டு..

      தொழில் - ஒருவன் இன்ன தொழில் தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அப்பாவோ, அதைக் கேட்கும் பையனோ இன்னும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.. தங்களுக்கு பிடித்ததை செய்துகொள்ளும் உரிமை இருக்கிறது.. வேண்டுமானால் சாவகாசமாக இந்தப்பக்கம் வரும் போது மக்களிடம் பழகி தெரிந்துகொள்ளுங்கள்..

      ஏதோ st.thomas mountன் நில மதிப்பு கூடி விட்டதால் முன்னேறிவிட்டார்கள் என்று சாதரணமாக கூறுகிறீர்கள்? நான் சொல்வது கிட்டத்தட்ட 200 ஆண்டு கால தென் தமிழகத்தில் நடந்த முன்னேற்றங்களை.. சென்னை st.thomas mountல் இருக்கும் நாடார்கள் மட்டும் வளர்ந்துவிட வில்லை..

      ஏதோ பத்திரிகையில் இரண்டு சாதிகள் மாறி மாறி சண்டை இட்டுக்கொள்வதை, அந்த மொத்த மக்களும் சண்டை இடுவது போல் திரிக்காதீர்கள்.. அவர்கள் என்றுமே பொருளாதார முன்னேற்றத்தை நோக்கித்தான் ஓடினார்களே தவிர இதற்கெல்லாம் ஒரு சாதாரண நாடார் அலட்டிக்கொண்டதில்லை..

      ஒருவன் முன்னேறியிருக்கிறான் என்று சொன்னால், “ஒரு காலத்துல எவ்வளவு கேவலமா இருந்திருக்க பாரு”னு சொல்றது தான் உங்க பகுத்தறிவுப் புரட்சின்னா அந்த பகுத்தறிவே எனக்கு வேண்டாம் சார்.. வருங்காலத்தில் தலித்கள் முன்னேறினாலும் இதே போன்று தான் கூறுவீர்கள்..

      இங்கு நான் சொல்ல வந்தது தாழ்ந்து கிடந்த ஒருவன் முன்னேறும் போது, ஏன் ஒற்றுமையாக தலித்துகளும் முன்னேற முடியாது என்பதை தான்.. அதை விடுத்து மற்ற அனைத்தையும் (அதில் பல சம்பந்தமே இல்லாதவை, நாடார்களை பழிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவை) பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.. நாடார்கள் குறிப்பிட்ட பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்த மக்கள் தான்.. அங்கு தான் ஒற்றுமையாக முன்னேறினார்கள்.. ஏன் தலித்துக்கள் தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் பெரும்பான்மையாக இல்லையா? ஒற்றுமையும், முன்னேற வேண்டும் என்கிற வேட்கையும் இருந்தால் முடியும் சார்.. என்ன ஒன்று, அவர்கள் முன்னேறினால், நீங்களே கூட சொல்வீர்கள், அம்பது வருசத்துக்கு முன்னாடி கால்ல செருப்பில்லாம நடந்த ஆட்கள், இப்ப திடீர்னு காசு வந்ததும் பேசுறான் பாருனு...

      என் பதிவு சொல்ல வரும் கருத்தை புரிந்தாலும் புரியாத மாதிரியே வீண் விவாதம் செய்ததால் தான் உங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை.. ஆனால் நான் ஏதோ விவாதம் செய்ய பயந்து கொண்டு ஓடுவதாக ஒரு சிலர் சொன்னதால் தான் வந்திருக்கிறேன். இதற்கு மேலும் என்னிடம் பதில் இல்லை.. உங்களிடம் கேள்விகள் இருந்தால் கேட்டுக்கொண்டே இருங்கள்.. அதற்கு ஏற்கனவே பதில்கள் எல்லாம் சொல்லப்பட்டு விட்டன.. அதனால் மீண்டும் மீண்டும் பதில் சொல்லமால ஓடிவிட்டான் என என்னை நக்கலாக பேசுவதை விடுத்து என் பதில்களையும், பதிவையும் இன்னொரு முறை படித்துப்பாருங்கள்...

      Delete
    9. லட்சக்கணக்கில் பலரின் மத மாற்றத்தின் அடிப்படை சாதி ரீதியான இழிவுகளை ஒழிக்க தான்.
      கிருத்துவத்தை தழுவிய நாடார்கள் கல்விக்காக பெருமளவில் உழைத்தார்கள்.
      திராவிட இயக்கம் வலுப்பெறு முன் நாடார்கள்,பள்ளிகள்,கள்ளர்கள்,உடையார்கள்,மீனவர்கள் என்று பல சாதிகளில் இருந்தும் லட்சக்கணக்கில் மக்கள் கிருத்துவத்தை தழுவினார்கள்.திராவிட இயக்கத்தின் பலனால் அரசியலில்,ஆட்சியில் பங்கு வந்தவுடன் சாதி,மத பெருமைகள் முன் வந்தன.காமராஜர் கட்சியில்,ஆட்சியில் உயர்பதவியில் இருந்ததும் அதிகாரத்தின் பலனால் வந்த மாற்றங்கள் மதமாற்றத்தை தடுக்க பெரிதும் உதவியது.
      காமராஜர் அவர் சாதிக்கு மட்டும் செய்தார் என்றால் ஞாயம்,சரி என்று ஒத்து கொள்வீர்களா.அது தவறு என்றால் வணிகர் சங்கத்தின் தலைமைக்கும்,வங்கியின் நிர்வாகிகளுக்கும் பொருந்தாதா .தன் சாதிக்கு முன்னுரிமை கொடுத்தார்கள் எனபது உண்மையாக இருந்தாலும் அது தவறு தானே தவிர மற்றவர்கள் பின்பற்ற வேண்டிய வழி கிடையாது


      st தாமஸ் மவுண்ட்,மகாபலிபுரம் சாலை நில விலை உயர்வு பள்ளிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்று தான் கூறினேன்.எந்த வணிகமும் செய்யாமல் திடீரென்று ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்கள் உருவாகியதும் சாதி வெறியின் அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணம்
      எல்லா சாதியையும் தான் திட்ட வேண்டும்.சாதிகள் என்றும் முன்னேற முடியாது.தனி மனிதனை விமர்சிக்கும் சாதியையும்,அவன் சமூகமும் அவன் வெற்றி பெற்ற பிறகு அவனை பெருமையாக கட்ட அணைத்து தலைவனாக்கி கொள்ளும்.
      கிருத்துவத்திற்கு முதலில் சென்ற நாடார்கள் சந்திக்காத கிண்டல்,கேலிகளா.ஆனால் முதல் தொழில் அதிபர்கள்,டி எஸ்டேட் முதலாளிகள் அவர்கள் தான்
      எந்த பண்டாக இருந்தாலும் இயேசுவின் சீடர்களின் கருணை பார்வையால் தான் பெரும்பான்மையான பணம் வந்தது.
      விடுதலையின் போது சிறுபான்மை கமிசனின் முதல் தலைவர் மற்றும் அரசியல் சட்ட நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்த பரிசுத்த நாடார் மற்றும் குடும்பத்தவர் சாதிகளை தாண்டி பலரின் கல்விக்கு உதவினர்.தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க 150 ஏக்கர் நிலம் கொடுத்தவர். அவர்.இயேசுவின் ,அவரின் பிரசாரகர்கள் அருளால் நாடார்கள் பொருளாதார ரீதியாக வளம் பெற்றார்கள் என்றால் ஏற்று கொள்வீர்களா
      தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த மக்கள் எந்த தொகுதியிலும்/மாவட்டத்திலும் பெரும்பான்மை கிடையாது..
      இலங்கையில் கல்வியில்,தொழிலில் ,கலையில் சிறந்து விளங்கிய தமிழர்கள் ஒரு பகுதியில் பெரும்பான்மையாக இருந்தாலும் மொத்தத்தில் சிறுபான்மையினராக இருந்ததால் அடைந்த துயரை பார்த்தால் உங்கள் கூற்றின் குறைகள் விளங்கும்.
      எதிராக பெரும்பான்மை மக்கள் இருக்கும் போது சிறுபான்மையினரை நசுக்குவது எளிது.

      Delete
    10. தமிழ்நாட்டில் கிருத்துவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்கள் கன்யாகுமரியும்,தூத்துக்குடியும் தான் .
      கிருத்துவ மிசினரிகளின் காரணமாக அவர்கள் துவக்கிய கல்வி நிறுவனகள்,அவர்கள் உதவியுடன் நிகழ்ந்த மாற்றங்கள் காரணமாக கல்வியில் முன்னேறியதை மகமை பண்டின் காரணம் என்று சொல்வது ஞாயமா
      அதிக அளவில் கிருதுவதிர்க்கோ,இஸ்லாமுக்கோ மாறினால் முன்னேறலாம் என்று வேண்டுமானால் கன்யாகுமரியின் கல்வியின் அளவுகோல்களை வைத்து எடுத்து கொள்ளலாம்.அந்த வழியை மற்ற சாதிகளுக்கும் உபதேசிக்கிரீர்களா

      http://en.wikipedia.org/wiki/Christianity_in_Tamil_Nadu

      Christians are a minority community comprising 6% of the total population.[1] Christians are mainly concentrated in the southern districts of Tamil Nadu - Kanyakumari (48.7% of the population, 2001[1]), Thoothukudi (17%, 2001) and Tirunelveli (11%, 2001).

      Delete
    11. டாக்டர் பூவண்ணன் என்னதான் சொல்றாருனு படிச்சுப் பார்த்ததில் எனக்கு புரிஞ்சது ..

      * சம்மந்தமே இல்லாமல் வடக்கே வாழ்ந்த வன்னியர்களுக்கும், தெற்கே வாழ்ந்த நாடார்களுக்கும் இடையே சண்டை இழுத்து விடுகிறார்.

      * நாடார்கள் உழைத்து முன்னேறவில்லை. மதம் மாறி, முன்னேறினார்கள் என்கிறார்.

      * நாடார்கள், சண்டைபோடுவதில் எந்த சாதிக்கும் குறைந்தவர்கள் அல்ல என்கிறார்.

      * காமராஜால் நாடார்கள்முன்னேறினார்கள் என்கிறார்.

      ஆக நாடார்கள் ஒரு இழிவான சாதி. அதனால தலித்கள் இக்கட்டுரையை புறக்கணித்துவிட்டு, இளவரசனைப் போல் முட்டாளாக, தன்னை உயர்சாதி என்று நினைத்துக்கொண்டு வாழும் வன்னியர் பொண்ணுகள, இல்லைனா முக்குலத்தோர் பொண்ணுகளை காதலிச்சு தற்கொலை பண்ணி இல்லை கொலை செய்யப்பட்டு சாவதுதான் உயர்வான செயல் அப்படினு சொல்றாரு.

      ஆக, தலித்கள் சம அந்தஸ்துக்காக இந்த உயர்சாதினு பிதற்றிக்கொண்டு திரியும் காட்டுமிராண்டி சாதிகளிடம் போராடி, வெட்டு குத்தில் இறங்கி வீர மரணம் அடைவதுதான் பெருமை சேர்க்கும் விசயம் என்கிறார்..

      இவரு டாக்டருக்கு படிச்சும் இவர் சிந்தனைகள் எல்லாம் இன்னும் இப்படித்தான் இருக்கு.

      இவர் நாடார்களை கேவலப்படுத்துவதால், தலித் களின் தரம் உயரும்னும், அவர்கள் சம உரிமைக்காகப் போராடும் போராட்டம் சரி நம்பினால் இவரைப்பார்த்து பரிதாபப் படுவதைத் தவிர வேறொன்றுமில்லை.

      Delete
    12. இந்த கட்டுரை ஒரு சாதி தங்கள் உழைப்பால்,ஒற்றுமையால்,ஒருவருக்கொருவர் உதவி கொண்டதால் மிகுந்த வளர்ச்சி அடைந்தது என்ற வாதத்தை முன்வைக்கிறது.
      அது உண்மையா ,எந்த சமூகத்தை முன்னேறிய வளர்ச்சி அடைந்த சமூகமாக,மாதிரியாக எடுத்து கொள்ளலாம் அவர்கள் உண்மையிலேயே வளர்ச்சி அடைந்து விட்டார்களா என்ற கேள்விகளே சாதியை கேவலபடுத்தும் செயல்கள் என்று என்னும் போது
      அடுத்த சாதியை பார்த்து வேறு சாதி துணிகளை இழுத்து கொண்டு ஓடினால் பிரயோசனம் கிடையாது என்று குற்றம் சாட்டுவது அவர்களின் மேல் உள்ள உண்மையான அக்கறையினால் எனபது கேப்பையில் நெய் வடிகிறது கதை தான்
      இது முழுக்க முழுக்க சாதி பெருமை பேசும் பதிவு.அதோடு மற்ற சாதிகளுக்கு எங்களை பார்த்தாவது முன்னேறுங்கள் என்று அறிவுரை கூறும் பதிவு.

      நூறில் ஒரு இடத்தில அரிதாக நடக்கும் மேஜர் ஆன ஆண்-பெண் தங்கள் விருப்பத்தின் பேரில் துணை தேடி கொள்வதை கொச்சைபடுத்தும் பதிவு

      Delete
    13. எங்களை பார் எங்கள் வளர்ச்சியை பார் ,எங்களை பார்த்து கற்று கொள்ளுங்கள் முட்டாள்களே எனபது மற்ற சாதிகளை கேவலபடுத்தும் செயல் .இல்லையா
      சேலம் சிவராஜ வைத்தியர் தொலைக்கட்சியில் என்னிடம் வாருங்கள் ,எல்லா வியாதிகளுக்கும் மருந்து இருக்கிறது,மற்ற வகை மருத்துவங்கள் அனைத்தும் மோசம்,எங்கள் மருந்து,வழிமுறைகள் தான் சிறந்தது என்பதற்கும் இந்த பதிவிற்கும் என்ன வித்தியாசம்
      எல்லா சாதியும் கேவலம் தான்.சாதியால் முன்னேறினோம் என்ற கூற்று எந்த சாதிக்கும் பொருந்தாது.சாதியால் பெண்ணிற்கு திருமணம் செய்ய கஷ்டப்படுகிறோம்,விருப்பமான படிப்பு படிக்க வைக்க முடியவில்லை,எனக்கு விருப்பம் இருந்தாலும் மகளை,சகோதரியை சாதியின் கட்டாயத்தின் பேரில் படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைக்க வேண்டியதாகிற்று எனபது தான் சாதியால் நடக்கும் நிகழ்வுகள்.
      ஷிவ் நாடாரோ,சரவண பவன் அண்ணாச்சியோ ,தேவாரம் ஐ பி எஸ் ஸோ பல துணைகளை தேடி கொள்வது தவறாக தெரியாது.அவர்கள் என்ன செய்தாலும் சாதியின் வைரங்கள். .ஆனால் 20 வயது ஆணும்,பெண்ணும் தங்களுக்கு விருப்பமான துணையை தேடி கொள்வது தான் பெருங்குற்றமாக பார்க்கப்படும்.அது தான் சாதி.
      ஜீவஜோதி வன்னியர் பெண்.அவர் கணவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்.அதனால் தான் அவருக்கு இந்த கதி என்றும் சில காலம் கழித்து வாதிடுவார்கள் போல.அண்ணாச்சியை பார்த்து அவரை வழிகாட்டியாக கொள்ளுங்கள்,இளவரசன் மோசமானவன் என்பதை ஏற்று கொள்ள வேண்டுமா.இருவரில் யார் தவறு செய்யாதவர்கள் என்பதை நியாயமாக யோசித்து பார்த்தால் புரியும்

      Delete
    14. * எல்லாம் சரி, நீங்க ஏன் வன்னியர்களுக்கும் நாடார்களுக்கும் இடையில் சண்டை மூட்டி விடுறீங்க?

      * நாடார்கள் கிருத்தவராக மாறி முன்னேறியதாக சொல்லுறீங்க. அவர்கள் இனத்தை இந்துக்கோவிலில் விட மறுத்த இந்துமதத்தை விட்டு அவர்கள் ஒதுங்கிப் போவதில் என்ன தப்பு? த்ன்னை சிறுமைப்படுத்தும் மதத்தையும் கோவிலையும் தூக்கி எறிவதில் என்ன தப்பு???

      எனக்குத் தெரிய தலித்களும், தேவர்களும்கூட கிருத்தவத்தை தழுவியுள்ளார்கள். என்னவோ நாடார்கள் மட்டும்தான் கிருத்தவத்தை தழுவியதாக சொல்றீங்க.

      சரி, தலீத்கள் ஏன் கிருத்தவர்களாவும் இஸ்லாமியராகவும் மாறினார்கள்?

      அதற்கேனும் விளக்கம் இருக்கா?

      Delete
    15. ****ஷிவ் நாடாரோ,சரவண பவன் அண்ணாச்சியோ ,தேவாரம் ஐ பி எஸ் ஸோ பல துணைகளை தேடி கொள்வது தவறாக தெரியாது.அவர்கள் என்ன செய்தாலும் சாதியின் வைரங்கள். ****

      அப்படினு உங்ககிட்ட யார் சொன்னது? நீங்களா விதண்டாவாதம் பேசுறீங்க. வைரம் தங்கம் என்று பட்டம் கொடுத்து இஷ்டத்துக்கு ஜோடிக்கிறீங்க

      Delete
    16. ****ஆனால் 20 வயது ஆணும்,பெண்ணும் தங்களுக்கு விருப்பமான துணையை தேடி கொள்வது தான் பெருங்குற்றமாக பார்க்கப்படும்.அது தான் சாதி.
      ஜீவஜோதி வன்னியர் பெண்.அவர் கணவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்.அதனால் தான் அவருக்கு இந்த கதி என்றும் சில காலம் கழித்து வாதிடுவார்கள் போல.அண்ணாச்சியை பார்த்து அவரை வழிகாட்டியாக கொள்ளுங்கள்,இளவரசன் மோசமானவன் என்பதை ஏற்று கொள்ள வேண்டுமா.இருவரில் யார் தவறு செய்யாதவர்கள் என்பதை நியாயமாக யோசித்து பார்த்தால் புரியும்***

      அண்ணாச்சி தரமும், இளவரசன் தரமும் எல்லாருக்கும் தெரியும்.

      இளவரசன் இப்போ உயிரோட இல்லை. அந்த இழப்புக்கு யார் பொறுப்பு?

      இல்லை அவனுடைய மறைவு தலீத்களுக்கு பெருமை சேர்க்குமா?

      என்னனு சொல்லுங்க

      Delete
    17. ஒரு 20 வயது ஆண் 20 பெண்ணின் மேல் விருப்பபடுவது தவறா.அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ,திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பது தவறா
      அதை தவறு போல பார்ப்பதை,எழுதுவதை,மோசமான செயல் என்று அறிவுறுத்துவதை விட தவறான சிந்தனை இருக்க முடியுமா

      ஒரு தவறும் செய்யாத இளவரசனை குற்றவாளியாக்கி அவர் வாழ்க்கையை வைத்து அந்த சாதியில் உள்ள அனைவரும் அவர் போல என்று முடிவுக்கு வரும் போது,அவரை எடுத்துக்காட்டாக ஆக்கும் போது அண்ணாச்சி போல தான் அவர் சாதியினரும் என்ற எதிர்வினை மட்டும் தவறாகுமா
      நாடார்களுக்கு முன்பே ஒரு தொழிலில் சாதியை சார்ந்த 99 சதவீதத்தினர் இயங்கி வந்த சமூகம் முடிதிருத்தும் நாவிதர் சமூகம்.மருத்துவச்சிகளும் அடங்கிய சமூகம்.சில காலம் முன்வரை அவர்களுக்கு கூலி மீதியான சாதம் தான்.தொழில் செய்ய மறுக்கும் உரிமையும் ,பணத்தை கூலியாக கேட்க்கும் உரிமையும் மறுக்கப்பட்டது. இன்று அதிக பணம் வரும் தொழிலாக மாறியவுடன் அணைத்து சாதிகளும் உள்ளே நுழைந்து விட்டனர்.இன்று ஆயிரக்கணக்கில் முடிவெட்ட பணம் வாங்கும் யாரும் நாவிதர் சமூகத்தை சேர்ந்தவர் கிடையாது.ஒரு பகுதியில் எண்ணிக்கை தரும் வலிமையை புறந்தள்ளி விட்டு உழைப்பை முன்னிறுத்தி செய்யும் வாதம் நியாயமான ஒன்றா

      Delete
    18. *****ஒரு 20 வயது ஆண் 20 பெண்ணின் மேல் விருப்பபடுவது தவறா.அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ,திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பது தவறா
      அதை தவறு போல பார்ப்பதை,எழுதுவதை,மோசமான செயல் என்று அறிவுறுத்துவதை விட தவறான சிந்தனை இருக்க முடியுமா?***

      இளவரசன் என்கிற வாலிபனை மதிக்கத் தெரியாத காட்டுமிராண்டிக் கூட்டத்தில் போய் ஒரு பெண்ணை தேர்ந்டுப்பது தவறு. நம்மை மதிக்கத் தெரியாத ஒரு கூட்டம் அது. இவனுக சவகாசம் நமக்கு வேண்டாம் என்று அவனை திவ்யாவிடம் இருந்து பிரித்து அவனை காப்பாத்தி வாழ வைத்து இருக்கலாம்.

      அதை விடுத்து அவனை பலிகொடுத்ததுக்கு காரணம் என்ன வென்றால் சிந்திக்கத் தெரியாத உங்களைப் போல பெரியமனிதகள்தான் காரணம்.

      என்னை நீங்க சமம்னு நெனைக்கலைனா, நான் ஒரு டாக்டர், நீ ஒரு பொறம்போக்குனு ஒரு சிந்தனை உங்களிடம் இருந்தால் நான் உங்கலிடமிருந்து ஒதுங்கிப் போயிடுவேன். அதுதான் என் பாலிசி. உங்க கிட்ட வ்ந்து என்னை சமமா நினங்கனு வந்து கெஞ்சு கூத்தாடினால் நான் ஒரு முட்டாள்.

      I think you are never going to understand what is suggested here. I better stop.

      Delete
    19. I hope you atleast agree that there exist another point of view which may help in eradicating differences faster than the solution of forming single caste communes

      இளவரசனின் கிராமத்திலும் பல காதல்,சாதிமறுப்பு திருமணங்கள் நடைபெற்று தம்பதிகள் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.ஏன் குடும்பத்திலும்,என்னுடன் படித்த பலரும் சாதிமறுப்பு திருமணங்கள் செய்து கொண்டு ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
      மெதுவாக அதிகரித்து வந்த சாதிகடந்த திருமணங்களால் வெறுப்புற்று இருந்த சாதி வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு கிடைத்த வரப்ரசாதமாக மாறி விட்டது இளவரசனின் வாழ்க்கையும் முடிவும்.

      http://idlyvadai.blogspot.in/2013/07/blog-post.html

      இந்த பதிவு உண்மையில் வருத்தம் தெரிவிக்கும் பதிவு மாதிரி தெரியவில்லை
      போயிட்டானா ,ஹைய்யா ஜாலி ஜாலி இனிமே எவனாவது/எவளாவது காதல்,சாதிமறுப்பு திருமணம் என்று எண்ணினால் காட்டி மிரட்ட ஒரு சடலம் கிடைத்த மகிழ்ச்சி தான் தெரிகிறது
      ஆயிரக்கணக்கான பேர் சாதிகடந்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்

      இந்த கொடூர நிகழ்வை காட்டி சாதி முக்கியம்.அவனவன் சாதியில் துணை தேடுங்கள் என்று கூச்சம் இல்லாமல் எழுதுவது வருந்த வேண்டிய ஒன்று

      மேலவளவு பஞ்சாயத்து தலைவர் சாதிவெறியால் படுகொலை செய்யப்பட்ட போது பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆசைப்பட கூடாது.சாதி தொழிலை செய்து அமைதியாக வாழுங்கள் என்று எழுத வேண்டியது தானே
      ராணுவ வீரர்கள்,காவல்துறையினர் கொடூரமான முறையில் உயிர் இழந்த நிகழ்வுகளின் போது ,இனி யாரும் இந்த வேலைகளை பற்றி யோசிக்காதீர்கள் .அரசு திட்டமான கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் கிடைக்கும் வேலையை பார்த்து கொண்டு இருங்கள்.அது நல்லது என்று பதிவிட வேண்டியது தானே
      இங்கு மட்டும் ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற அறிவுரை எங்கிருந்து குதிக்கிறது.


      Delete
    20. ****இளவரசனின் கிராமத்திலும் பல காதல்,சாதிமறுப்பு திருமணங்கள் நடைபெற்று தம்பதிகள் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.ஏன் குடும்பத்திலும்,என்னுடன் படித்த பலரும் சாதிமறுப்பு திருமணங்கள் செய்து கொண்டு ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.***

      அதனால, ஒரு இளவரசனை பலிகொடுப்பதில் தப்பில்லைனு சொல்றீங்களா?

      கல்யாணம் என்பது ஆரம்பம். இதுபோல் கலப்புத் திருமணம் செய்து வாழும் தம்பதிகள் வாழ்க்கை பற்ரி உங்களுக்கு என்ன தெரியும்.

      சும்மா சதோஷமாக வாழ்கிறார்கள்னு ஒப்புக்கு சொல்வதை ஏற்க முடியாது.

      ஒரு நாலு தம்பதிகளை இங்கே அழைத்து வந்து சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.

      I am challenging you here. Prove what you said. Prove me wrong! CAN YOU?

      Delete
    21. ***மெதுவாக அதிகரித்து வந்த சாதிகடந்த திருமணங்களால் வெறுப்புற்று இருந்த சாதி வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு கிடைத்த வரப்ரசாதமாக மாறி விட்டது இளவரசனின் வாழ்க்கையும் முடிவும்.***

      சாதி வேணும்னு சொல்வது தலீத்களும்தான் என்பது கசப்பான உண்மை. தாழ்த்தப்பட்டதால், இன்று அவர்களை உயர்ப்படுத்த அரசாங்கம் முயல்கிறது. அதற்கு சாதை அடையாளம் கேட்கப்படுகிறது. அதை அவர்கள் பச்சையாக எழுதுகிறார்கள். நான் என் சாதியைச் சொல்லமாட்டேன். சாதியில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று அவர்கள் சொல்வதில்லைனு உங்களுக்கும் தெரியும். நீங்க இங்கே பேசுவது வெரும் வேடம்தான். உண்மையல்லை என்பதை எல்லோரும் அறிவோம்,.

      Delete
    22. ***http://idlyvadai.blogspot.in/2013/07/blog-post.html

      இந்த பதிவு உண்மையில் வருத்தம் தெரிவிக்கும் பதிவு மாதிரி தெரியவில்லை
      போயிட்டானா ,ஹைய்யா ஜாலி ஜாலி இனிமே எவனாவது/எவளாவது காதல்,சாதிமறுப்பு திருமணம் என்று எண்ணினால் காட்டி மிரட்ட ஒரு சடலம் கிடைத்த மகிழ்ச்சி தான் தெரிகிறது
      ஆயிரக்கணக்கான பேர் சாதிகடந்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

      இந்த கொடூர நிகழ்வை காட்டி சாதி முக்கியம்.அவனவன் சாதியில் துணை தேடுங்கள் என்று கூச்சம் இல்லாமல் எழுதுவது வருந்த வேண்டிய ஒன்று.***

      So, you believe such a suggestion is WRONG! Whoever suggests that is a "BAD PERSON"?

      இதைத்தானே நீங்க சொல்றீங்க?

      அப்பறம் ஏன் உங்களைப் போல மேதாவிகளால் இளவரசனுக்கு போராடி வாழக் கற்றுக்கொடுக்க முடியவில்லை?

      அத் உம்முடைய இயலாமைதான் இல்லையா?

      ஏன் அரைக்கிணறு தாண்டுறீங்க???

      இவ போனா இன்னொருத்தினு அவனுக்கு வாழக் கற்ருக்கொடுக்காத உங்களைப் போல் வாய்கிழிய பேசும் பெரிய மனிதர்கள்தாம்

      இல்லையா???

      Delete
    23. ***மேலவளவு பஞ்சாயத்து தலைவர் சாதிவெறியால் படுகொலை செய்யப்பட்ட போது பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆசைப்பட கூடாது.சாதி தொழிலை செய்து அமைதியாக வாழுங்கள் என்று எழுத வேண்டியது தானே
      ராணுவ வீரர்கள்,காவல்துறையினர் கொடூரமான முறையில் உயிர் இழந்த நிகழ்வுகளின் போது ,இனி யாரும் இந்த வேலைகளை பற்றி யோசிக்காதீர்கள் .அரசு திட்டமான கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் கிடைக்கும் வேலையை பார்த்து கொண்டு இருங்கள்.அது நல்லது என்று பதிவிட வேண்டியது தானே
      இங்கு மட்டும் ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற அறிவுரை எங்கிருந்து குதிக்கிறது.***

      இங்கே மிதவாதம் பேசப்படுகிறது. துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்பது சொல்லப்படுகிறது.

      அதை நீங்க, "விசமத்தனம்" செய்கிறார்கள் என்கிறீர்கள்.

      ஒரு இளவரசனை பலிகொடுத்தால் ஒண்ணுமில்லை என்கிறீர்கள்.

      எங்களை சமமாக மதிக்கத் தெரியாத காட்டுமிராண்டிகளோடதான் நாங்க திருமணம் பந்தம் செய்வோம் . அதற்காக 100 என்ன ஆயிரம் இளவரசனை பலிகொடுப்போம் என்கிறீர்கள்.

      கொடுங்கள்!

      போராடுங்கள்!

      வெல்லுங்கள்!

      My advance congratulations to you! GO ON! FIGHT! Victimize hundreds of young blood and win eventually!

      Delete
    24. உங்கள் கேள்விக்காக
      என் குடும்பத்தினர், என்னுடன் படித்தவர்கள்,தாம்பரத்தில் எங்கள் வீடு இருக்கும் தெருவில் நடைபெற்ற திருமணங்கள்,ஏர் இந்தியா,ராணுவத்தில் பணிபுரிந்த போது கிடைத்த நண்பர்களில் எவ்வளவு பேர் சாதி,மதம் கடந்து திருமணம் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் 25 சதவீதத்திற்கு அருகில் வருகிறது.
      என் கல்லூரி வகுப்பில் மட்டும் ஆறு சோடிகள்.அதாவது 12 பேர் வகுப்புக்கு உள்ளேயே சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.சீனியர்,ஜூனியர் ,மேற்படிப்பு படிக்கும் போது உடன் படிதவர்களோடு திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதை கணக்கிட்டால் 20க்கு மேல் வருகிறது 140 மாணவ மாணவிகளில் 35க்கு அருகில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்..எனக்கு சில ஆண்டுகள் சீனியர் பாட்சில் மட்டும் பாட்சிர்க்கு உள்ளேயே 14 சோடிகள்.
      நான் என் அண்ணன்,தம்பி மூவரும் வேறு சாதி,மதத்தில் திருமணம் செய்தவர்கள்.ராணுவத்தில் உடன் பணி புரிந்தவர்களில் பலர் வேறு மாநில துணை உட்பட எளிதாக தங்கள் விருப்பத்தின்படி திருமணம் செய்து கொண்டவர்கள் தான்.
      தாம்பரத்தில் என் பக்கத்துக்கு வீட்டில் இருந்த இரு பெண்களில் ஒருவர் ரெண்டு வீடு தள்ளி இருந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.தங்கையின் கணவர் இஸ்லாமியர்.பின்னால் இருக்கும் வீட்டில் வசிதவரின் மனைவி அவருக்கு எதிர்வீட்டில் வசித்து வந்த கிருத்துவ மதத்தை சார்ந்தவர்அவரின் அப்பா அம்மா பார்த்து வைத்த துணைகளை தேடி கொண்டு வாழ்பவர்களை போல தான் இவர்களும் கொஞ்சம் அதிகமான காதல்,மற்றும் அதே கோபதாபங்கள்,அன்றாட பிரட்சினைகளோடு வாழ்கின்றனர்
      இவை அனைத்தும் கிராமங்களுக்கு பொருந்தாது என்பதையும் நன்கு அறிவேன்.ஆனால் மாறும் என்ற நம்பிக்கையை கூட விதைப்பதை தவறு என்று சொல்வது ஞாயமா

      Delete
    25. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Dharmapuri-hamlets-okay-with-inter-caste-marriages/2013/06/08/article1625298.ece?service=print

      On the reason behind such clashes, he said, “Here the people don’t have any problem; it’s politics that is the cause of problems. Love and marriage are between two families, if we mix politics with it, surely the outcome will not be good.”

      “Almost all villages like Kallipatti, Kallipuram, Pallathur, around the Pennagaram taluk witness at least five inter-caste marriage every year and the couples are happy. They may be a few exceptions, but that is not the opinion of the majority,” he insisted.

      Delete
    26. ****இவை அனைத்தும் கிராமங்களுக்கு பொருந்தாது என்பதையும் நன்கு அறிவேன்.ஆனால் மாறும் என்ற நம்பிக்கையை கூட விதைப்பதை தவறு என்று சொல்வது ஞாயமா****

      அறியாமை என்பதுதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

      இளவரசனை தன் மகள் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் அந்தாளு போய் சேர்ந்துட்டான்!

      இதிலிருந்து என்ன தெரியுது?

      இது ஒரு "ஸ்பெஷல் கேஸ்"! இதில் பெண் வீட்டார் குடும்பம் அறியாமையில் சாதி வெறியில் மூழ்கி இருக்கு என்பது தெளிவாகத்க் தெரிகிறது.

      நீங்க சொல்கிற கலப்புத் திருமணங்களில் அப்படி எதுவும் நடந்திருக்காது.

      ஏன் எங்கெங்கேயோ போறீங்க, பதிவர் ஆரூர் மூனா, பதிவர் மதிமதி, பதிவர் கிருபாநந்தினி போன்றோர் கலப்புத் திருமணம்தான் செய்துள்ளார்கள். இவர்களையும் உங்க லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

      இளவரசன் கேசில் பெண்ணுடைய அப்பா காலி.

      இந்த ஒரு சூழலில் என்ன செய்யணும்??? இது பெரிய பிரச்சினையாடுச்சினு இளவரசனைக் கூட்டி வந்து அறிவுரை சொல்லி அதோட முடிச்சி இருக்கணும். அதுக்கப்புறமும் பெண்வீட்டாருக்கு திறந்த மனதில்லைனு தெரிந்த பிறகும் நடந்த போராட்டம் அவசியம் அற்றதுனு புரிந்து கொள்ளுங்கள்.

      I disagree with the IE article saying everything is politicized. That's not strictly TRUE. We still have "casteist" people with us especially in villages. You must accept that. WHAT YOU NEED TO LEARN is SOME CASES are special. That's why Divya's dad committed suicide. It is not that politics made him commit suicide. It is his ignorance. It is his beliefs. In the small world he lived what his daughter did is "unacceptable"!

      Now, it is obvious that there is something seriously wrong here, in this particular case. What do we have to do?!!

      The best solution would be, Ask her to go back and do what her family wishes to do as she already LOST HER DAD.

      This is what I consider as "wise approach". You never understand EVERY CASE is DIFFERENT!

      நீங்க எல்லா கலப்புத் திருமணங்களும் ஒரே வகை என்பதுபோல் சொல்வதுதான் பிரச்சினை.

      -------

      நாடார்களிலும் கலப்புத் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ராம் குமார் ஒரு பதிவெழுதி சொல்லிட்டாருனு 100% மும் அரேஞிட் மேரேஜ் செய்வதில்லை.

      உங்க வாதம் அந்தத் திசையில் போகணும். அதாவது கலப்புத் திருமணம் நாடார்லயும் நடக்கத்தான் செய்யுதுனு நாலு பேரைக் காட்டலாம். அதை விட்டுப்புட்டு, அண்னாச்சியைப் பிடித்து தொங்குறீங்க ஏன் னு தெரியவில்லை.

      அண்ணாச்சி போல் தருதலைகள், எல்லா சாதியிலேயும் இருக்காங்க, தலீத்களிலும் இருக்காங்க, வன்னியர்களிலும் இருக்காங்க, முக்குலத்தோரிலும் இருக்காங்க, பார்ப்பனர்களிலும், முதலியார், கவுண்டர், பிள்ளைமார்னு எல்லா சாதியிலும் இதுபோல் தருதலைகள் உண்டு.

      நீங்க என்னவோ, அண்ணாச்சிமாரி ஆட்கள் நாடார்ல மட்டும் இருக்காங்கனு பேசிக்கிட்டு இருப்பது கேலிக்கூத்து!

      Delete
  15. ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு அறிவுரை சொல்லக் கிளம்பியிருக்கும் உங்களை நினைத்தால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன சகோ..

    ReplyDelete
    Replies
    1. Dear ANONYMOUS,

      If you have really read the article, you would not disagree. Ramkumar has done a good job and a reasonable research for the article and you cannot disagree to it. If you have d 'guts', you can comment straight away rather than being an Anon and commenting something idiotically. Learn to respect other's opinion dear Anonymous

      Regards,
      JC

      Delete
    2. Dear Mr. Christopher J (Nadar)

      Prove ur guts by answering atleast Poovannan sir's comments. Learn to respect other's opinion too dear Christopher J Nadar

      Delete
  16. Excellent article Ram Kumar.

    Could you clarify about Sivakasi Riots of 1899, one of the reason NMS - Nadar Mahajana Sangam was formed.

    And you also left the formation of Nadar Bank(now Tamilnad Mercantile Bank)

    Overall, it's a kickass article!

    ReplyDelete
    Replies
    1. It is a separate big story.. Try to write about it.. Thank you brother..

      Delete
  17. இவற்றில் சிலவற்றை எங்கள் தாத்தா கூறி கேள்விபட்டிருக்கிறேன். இப்பொழுது முழு வரலாற்றை தெரிந்து கொண்டேன். பெருமை. பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  18. Semmma......Nadar history ipa than theriyuthu....

    ReplyDelete
  19. நாடார்களின் உழைப்பு, சாதி ஒற்றுமை மற்றும் வளர்ச்சி பற்றி உங்க்ளது கருத்துக்கள் ஏற்கப்படக் கூடியதே.

    அதே நேரத்தில் தலித் மக்களுக்கு மட்டுமே உள்ள நாடார் சாதியினருக்கு இல்லாத சில பிரச்சினைகளயும் கவனத்தில் கொள்ள வேண்டும். திரு. பூவண்ணன் கூறுவது போல, நாடார் சாதி சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் வாழ்ந்தது. பெருவாரி தமிழ் மக்களுக்கு நாடார் சாதி ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதி என்பது இன்று கூட தெரியாது. கோவை மாவட்டம் போன்ற இடங்களில், கிராம பகுதியில், ஒரு அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு நாடார் மளிகை கடை வைக்க முடியும், வியாபாரம் நடக்கும். ஆனால் இன்று கூட ஒரு உள்ளூர் தலித் ஒரு மளிகை கடை வைத்து வெற்றிகரமாக நடத்த முடியாது.

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் இன்று கூட ஒரு உள்ளூர் தலித் ஒரு மளிகை கடை வைத்து வெற்றிகரமாக நடத்த முடியாது//
      இதற்கு என்ன பதி சொல்வது?
      அடுத்து நாடார்கள் முன்னேற்றம் மற்ற சாதிக்காரர்களை பாதிக்கவில்லை. ஆனால் தலித்துகளின் முன்னேற்றம் அப்படி பட்டதல்ல.ஒருவன் செய்யும் விவசாயத் தொழிலிருந்து மாறும் போது உடனடியான பாதிப்பு ஏற்படும்.எனவே பலன் அனுபவித்தவன் அவர்களை முன்னேற விடாமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்குகிறான்.
      என்னவாய் இருந்தாலும் நாடர்களின் முன்னேற்றம் பாராட்டுக்குரியது.
      //அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி// என்று அடிக்கடி குறிப்பிட்டிருப்பது ஏனென்று தெரியவில்லை. நீங்கள் அடங்கி வாழவும், யாரும் அடித்தால் அடியை வாங்கிக்கொண்டு திருப்பி அடிக்காமல் அமைதியாய் வாழவும் வாழ்த்துக்கள்.

      Delete
  20. ஒரு வித்தியாசமான கோணத்தில் கருத்துக்களை அறிந்தேன்,

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. இஸ்லாமியராக மாறினால் ஒரு நொடியில் சாதியை வைத்து வரும் இழிவுகள் அழிந்து மதிப்பும்,மரியாதையும் வந்து விடும் என்று இஸ்லாமிய பிரசங்கிகள் சொல்வதை போல தான் இருக்கிறது உங்கள் கட்டுரையும்

    நீங்கள் சொல்வதை விட எளிதாயிற்றே இது.

    நாடார்களின் பொருளாதார ரீதியிலான வளர்ச்சியில் கிருத்துவத்தின் பங்கை மறைப்பது நியாயமா.லட்சக்கணக்கில் கிருத்துவத்தை தழுவிய நாடார்கள் அதனால் கிடைத்த பலன்களை மதத்தை தாண்டி சாதியை முன்னிறுத்தி சாதியினரோடு சங்கங்கள் அமைத்து உதவியது இல்லையா.சாதியை வைத்து உதவி கொள்ளுங்கள் என்ற வாதம் மதத்தை வைத்து அதே மதத்தை சார்ந்த ஒருவருக்கொருவர் உதவி கொள்ளுங்கள் என்பதற்க்கும் பொருந்துமே அதே மதத்தை சார்ந்த மற்ற சாதியினரோடு மதரீதியாக ஒன்றுபடுவதை விட வேறு மதமாக இருந்தாலும் தன்சாதியினரோடு சங்கம் அமைப்பதை இந்தியாவிலேயே ஆரம்பித்தவர்கள் நாடார்கள் தான்.இன்று பொருளாதார ரீதியான வளர்ச்சி வந்த பிறகு மதரீதியான பிளவுகள் அதிகரித்து விட்டன.பணம் இல்லாத போது ஒற்றுமை வரும்.பணம் வந்த பிறகு வேற்றுமைகள் தன்னால் உருவாகி பெரிதுபடுத்தப்படும்

    ReplyDelete
  23. http://books.google.co.in/books?id=14_D50nU7R8C&pg=PA77&இந்த புத்தகத்தில் பக்கம் 77 இல் இருந்து 1840 முதல் கிருத்துவத்தை ஏற்று கொண்ட நாடார்கள் அடைந்த கணிசமான மாறுதல்கள் பற்றிய விவரங்கள் வருகின்றன

    கிருத்துவத்தை தழுவியதால் அதிகரித்த கல்வி கற்கும் வாய்ப்புகள் ,உயர்சாதியினரோடு எளிதான தொடர்புகள் பற்றியும் வருகிறது

    dq=caldwell+nadars&hl=en&ei=GmpqTMD8BozksQPU5r3FDw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDUQ6AEwAQ#v=onepage&q=caldwell%20nadars&f=false

    ReplyDelete
  24. தலித்துகளின் அறிவியக்கமானது அம்பேத்கரின் கொள்கைகளையும் திராவிட இயக்கக்கொள்கைகளையும் அடிப்படையாக்கொண்டு கட்டமைக்கப்பட்டது . தலித்திலக்கியம் என்று கூறப்படும் இச்சிந்தனைகளை பல எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கான நூல்களிலும் கட்டுரைகளிலும் எழுதிவருகின்றனர்.நீங்கள் அவற்றை பற்றி அறிய வாய்ப்பில்லை.
    தலித்துகள் எல்லாரும் பெண்களை இழுத்துக்கொண்டு ஓடுவதே தொழிலாகக்கொண்டிருப்பது போல் ஓர் பிம்பம் கடந்த ஓர் இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு உருவாக்கப்படும் social paranoia அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் ஏதுவாக இருக்கிறது

    உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் இது போன்ற சதிவளைகளை எதிர்த்தே போராடி வென்றனர் .இதுவும் கடந்து போகும்.

    நம்நாட்டில் சாதி அமைப்பு பலநிலைகளைக்கொண்டது. பழைய திருவிதாங்கூர் அரசிற்குட்பட்ட இடங்களில் நாடார் சமூகமும் ஈழவ சமூகமும் பல அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் • மறுப்பதற்கில்லை• விவேகானந்தரால் பைத்தியக்காரக்கூடம் என்று கூறப்பட்ட திருவிதாங்கூர் தவிர்த்து பிற இடங்களில் நாடார்கள் தலித்துகள் போல் தீண்டாமைக்கு இரையாகவில்லை• வளமான நாடார்களும் இருநதனர் • அதே திருவிதாங்கூரில் புலையர்களும் நாயாடிகளும் பறவர்களும் இருந்த நிலையை ஏன் நீங்கள் எழுதவில்லை• ஓர் புலையன் தன் கழுத்தில் பானை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும்• அவன் எச்சில் கீழே விழாமலிருக்க• பகலில் யார் கண்ணிலும் படக்கூடாது• அவனை கண்டாலே பாவம்• மீறி தெருவில் நடந்தால் முரசு போன்ற கருவியை ஒலித்து எச்சரித்து கொண்டே வர வேண்டும்•
    தலித்துகளின் வரலாற்றையும் நாடார்களின் வரலாற்றையும் ஒப்பிடுவது மிக மோசமான புரட்டு• மூலைசலவை•
    நாடார்கள் ஓர் நிலப்பகுதியில் பெரும்பான்மையானவர்கள்• அந்த advantage தலித்துகளுக்கு இல்லை
    ஆகவே அவர்கள் போராட்டங்கள் கீழ்வெண்மணி போன்ற anti climax களில் முடிந்து விட்டன
    இல்லையேல் அவர்கள் வீட்டுப்பிள்ளைகளும் உங்களைப்போல தம் சாதி பெருமைகளை ப்ளாகில் எழுதிக்கொண்டிருப்பனர்

    மேலாடை அணிய உரிமை மறுக்கப்பட்ட பெண்கள் அன்று அடங்க மறுத்தும் அத்து மீறியும் போராடியதாலேயே நீதி கிடைத்தது

    அடங்க மருப்பதும் அத்துமீறுவதும் வன்முறைக்கான அரைக்கூவலல்ல. காலனியாதிக்கத்தை எதிர்த்து காந்தியும் அடங்கமறுக்கவே சொன்னார்.

    அது ஒடுக்குமுறைக்கெதிரான ஓர் universal slogan.

    உங்கள் போன்றவர்களின் இனவெறியயைும் சாதிவெறியையும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உழைப்பாலும் முயர்ச்சியாலும் வெல்வர்.

    ReplyDelete
  25. நாடார் மகாஜன சங்கம் - பற்றி மேலும் நிறைய செய்திகளைத் தெரிந்து கொண்டேன்..
    பதிவினுக்கு நன்றி.. வாழ்க நலமுடன்..

    அன்புடன்,
    துரை செல்வராஜூ.

    ReplyDelete
  26. மிகவும் அருமையான கட்டுரை நண்பா ... இதற்கு நீங்கள் மேற்கொண்ட தேடல் நிச்சயம் அதிகமானதாய் இருக்கும்... இருந்தும் இந்த உலகம் உங்களை மீண்டும் மீண்டும் தேடும்படி பணிக்கும்.. தொடர்ந்து தேடுங்கள் தொடர்ந்து எழுதுங்கள்... :-)

    ReplyDelete
  27. அருமையான பதிவு. கருத்துகளைத் தொகுத்த விதம் அருமை.

    ReplyDelete
  28. நல்லா எழுதியிருக்கிறீங்க.........வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. சிறப்பான வகையில் ஆக்க பூர்வமாக விளக்கியிருப்பது நல்ல முயற்சி.வழக்கமாக இதுபோன்ற தலைப்புக்களில் எழுதும்போது பிர சாதி தாக்கியே எழுத்தும் வழக்கம் எல்லோரிடமும் இருக்கும். ஆனால் அது போன்ற அவலங்களை தவிர்த்து அடிப்படை காரணிகளை விளக்கியது நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. // பார்ப்பன மேலாண்மையினை மனமுவந்து ஏற்றுக்கொண்ட சற்சூத்திர தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்களான பறையர்களைத் தமிழர்களாகக் கூட ஏற்க மறுக்கும் சாதிவெறியில்தான் இருந்தனர்//
    http://www.vinavu.com/2014/06/10/remembering-robert-caldwell/

    ReplyDelete
    Replies
    1. சேக்காளி: மற்றவர்கள் உங்களுக்கு உதவணும்னு எதிரபார்த்தால் அது நடந்தேறாது. வினவு இப்படியே சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அவர்கள் ஆர்ட்டிகிளால் அவங்களுக்கு கூட்டம் சேரும் அம்புட்டுத்தான்.

      நீங்க பாதிக்கப் பட்டால் நீங்கதான் போராடணும். அடிதடி பழிக்குப் பழி எல்லாம் வெற்றி பெற்றுத்தராது. உயிர் சேதம்தான் ஆகும்.

      பாதிக்கப் பௌகிறவர்கள், குடும்பமாக, சொந்தபந்தமெல்லாம் ஒண்னு சேரும்போது சாதி அடிப்படையில் ஒண்ணு சேருவதை தவிர்க்க முடியாது.

      ஆக, உங்க பிரச்சினைக்கு நீங்கதான் தீர்வு காணணும்.

      அப்படிதான் நாடார்கள் தீர்வு கண்டுள்ளார்கள். அதை சாதி வெறினு சொல்ற பெரியமனுஷனுக, நாடார்களை கீழ்த்த்ரமாக நடத்தும்போது வேடிக்கை பார்த்தவர்கள் என்பதை மனதில் கொள்ளவும்.

      அவன் அவர் பிரச்சினை அவன் அவனுக்குத்தான் தெரியும். பூவண்ணன் சும்மா வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இருக்காரு. அவர் சொல்வதை எல்லாம் செயல்படுத்த முடியாது. குப்பையில் போட வேண்டியதுதான்.

      Delete
    2. முன்பே சொன்னது போல் நாடார்களின் முன்னேற்றம் பாராட்டுதலுக்குரியது.
      பறையர்களோடு மற்ற சமூகத்தினர் பாரபட்சமின்றிதான் பழகுகிறார்கள் என்கிறீர்களா?

      Delete
  31. நீங்க இங்கதான் தப்புப் பண்ணுறீங்க. பார்ப்பனர்களையே மற்ற சாதியினர் கேவல்மாத்தான் விமர்சிக்கிறாங்க. அவர்கள் அதுக்காக பழிக்குப் பழி வாங்கவில்லை. உங்களை மற்றவன் சமமா நடத்தணும்னு நீங்க ஏன் எதிர் பார்க்கிறீங்க? அந்த எதிர்பார்ப்பே தவறு.

    அதுபோல் நாடார்கள் எதிர்பார்த்து கவலைப் பட்டு அழுதழுது இருந்தால், அவர்கள் அப்படியேதான் இருந்து இருப்பார்கள்.

    தன்னை இழிவுபடுத்தியதை பொருட்படுத்தாமல் தன் இனத்தவனையே, முடிவெட்டுபவனாகவும், வெட்டியானாகவும், ச்லவைத் தொழில் செய்பவனாகவும் ஆக்கிக்கொண்டு பிறரை புறக்கணித்தார்கள்.

    அப்படி தாழ்த்தப்பட்டவர்களும் செய்யலாமே? என்பதே இங்கு முன் வைத்துள்ள விசயம்.

    மத்தவன் உங்களை உயர்வா நினைக்கணும்னு நினைப்பதே ஒரு மனவியாதி. அதிலிருந்து மொதல்ல வெளியே வரணும். நீங்க எல்லாரையும் விட உயர்வானவர், யாருக்கும் குரைந்த்வரில்லைனு நம்பணும். அந்த நம்பிக்கை நம் கைய்யில்தான் இருக்கு. மற்றவரிடம் இல்லை. புரியுதா?

    ReplyDelete
    Replies
    1. //புரியுதா?//
      இல்லை.
      பறையர்களோடு மற்ற சமூகத்தினர் பாரபட்சமின்றிதான் பழகுகிறார்கள் என்கிறீர்களா?

      Delete
  32. பறையர்கள் என்ன, நாடார்களிடமும் இன்றும் மற்ற சமூகத்தினர் பாரபட்சமின்றி பழகவில்லை என்கிறேன். அது உங்களுக்குத் தெரியவில்லை. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை எமன்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இப்போது தெரிந்து கொண்டேன்.

      Delete
  33. எப்பொழுது திருமண பேச்சில்ஜாதி இல்லாத காலம் வருகிறதோ அப்பொழுது தான் உண்மையில் ஜாதி வெறி இல்லாதசமுதாயம் உருவாகும். அந்த மனப்பான்மை இங்கு யாருக்கும் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த கட்டுரையின் படைப்பிலும் அதுதெரிகிறது . இந்த கட்டுரையிலும் ஜாதி வெறி தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. @ K Veeramani
      நீங்க ஜாதி வெறி இல்லாதவரா?

      Delete
    2. எந்தஒரு ஜாதியினரும் அடுத்தஜாதியினருக்குஅறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . ஜாதி என்பது அவரவர் ரத்தத்தில் ஊறிய விசயம். இது ஒரு பரம்பரை கவுர்வமாகஅந்தந்தஜாதியீனரிடையே உள்ளது. உதாரணத்திற்கு தாழ்த்த்ப்பட்ட ஜாதியீனரிடையே கூட இந்த விசயம் உள்ளது. அதன் படி பார்த்தால் ஒவ்வொரு ஜாதியினரும் தன் சார்ந்த ஜாதி பற்றி பெருமை பேசுவதுஒன்றும் புதியது அல்ல. ஆனால் அவர்கள் பேசும் விதம் மற்றும் எழுதும் விதம்ஆகியவற்றை வைத்தே அந்த ஜாதியினரின்உண்மை நிலை தெரிய வரும்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. @ K Veeramani,
      // இந்த கட்டுரையிலும் ஜாதி வெறி தெரிகிறது//
      நீங்க சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் இன்னும் கேள்விக்கு பதில் இல்லை. நீங்க ஜாதிவெறி இல்லாதவரா?

      Delete
  34. ***எப்பொழுது திருமண பேச்சில்ஜாதி இல்லாத காலம் வருகிறதோ அப்பொழுது தான் உண்மையில் ஜாதி வெறி இல்லாதசமுதாயம் உருவாகும். அந்த மனப்பான்மை இங்கு யாருக்கும் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த கட்டுரையின் படைப்பிலும் அதுதெரிகிறது . இந்த கட்டுரையிலும் ஜாதி வெறி தெரிகிறது***

    உங்க வாழ்நாளில் அப்படி எதையும் நீங்க பார்க்கப் போறதில்லைனா என்ன செய்யப் போறீங்க? எங்கேயாவது கருங்கல்லாப் பாத்து முட்டிக்கோங்க!

    இன்றைய நடைமுறையில் என்ன நடக்கிறதோ அதைப் பாருங்க.

    இப்படி இருந்தால் அப்படி வாழலாம்னு முட்டைக் கடைக்காரன் கனவுகண்டு நாசமாப்போனமாரி போயிடாதீங்க

    ReplyDelete
  35. ***எந்தஒரு ஜாதியினரும் அடுத்தஜாதியினருக்குஅறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . ஜாதி என்பது அவரவர் ரத்தத்தில் ஊறிய விசயம். இது ஒரு பரம்பரை கவுர்வமாகஅந்தந்தஜாதியீனரிடையே உள்ளது. உதாரணத்திற்கு தாழ்த்த்ப்பட்ட ஜாதியீனரிடையே கூட இந்த விசயம் உள்ளது. அதன் படி பார்த்தால் ஒவ்வொரு ஜாதியினரும் தன் சார்ந்த ஜாதி பற்றி பெருமை பேசுவதுஒன்றும் புதியது அல்ல. ஆனால் அவர்கள் பேசும் விதம் மற்றும் எழுதும் விதம்ஆகியவற்றை வைத்தே அந்த ஜாதியினரின்உண்மை நிலை தெரிய வரும்.***

    ஆமா, இதென்ன???

    பெரியவா நீங்க சொல்ற அறிவுரையாக்கும்?

    ஐயா எழுதி இருக்க ரெண்டு பின்னூட்டத்தையும் ஐயா மொதல்ல வாசிக்கணும்.

    முதல் பின்னூட்டம் சொல்லுது சாதியை மறந்து கல்யாணம் கருமாதி எல்லாம் செய்யணும்னு

    ரெண்டாவது பின்னூட்டம் என்ன சொல்லுதுனா..

    ****ஜாதி என்பது அவரவர் ரத்தத்தில் ஊறிய விசயம். ***

    எங்கேயிருந்துடா வர்ரீங்க, வீரமணி பெரியார்னு பேரை வச்சுக்கிட்டு ஏதாவது ஒளறித்தள்ள??

    ReplyDelete
  36. //அவர்களுக்கு திருப்பி அடிக்கவெல்லாம் நேரம் இல்லை// - Keep it up Ram :)

    ReplyDelete
  37. மிகுந்த ஆதங்கத்துடன் பேஸ்புக்கில் நடைபெற்ற இப்பதிவின் மாற்றுக்கருத்துக்களை பதிவு செய்கிறேன்.நாடார்கள் சொந்தமாக முன்னேறினார்கள் இதர இதர அறிவுரைகளை குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் தலித்களை இழுத்துட்டு ஓடுபவர்களாக எந்த விதத்தில் சித்தரித்திர்கள் என்பதே எனது கேள்வி.வன்முறையாளராக எந்த அடிப்படையில் காண்பிக்கிறீர்கள்?

    ReplyDelete
  38. வீரா பாலு எத்தனை பெண்கள் அப்படி இழுத்துச்செல்லப்பட்டு திருமணம் செய்யப்பட்டு தலித்துகள் வாழ்க்கையில் உயர்ந்து இருக்கிறார்கள் கட்டுரையாளர் ஆதாரத்தோடு நிறுவ முடியுமா .பின்னால் இருந்து இதை தூண்டுபவர்கள் யார் விளக்கமுடியுமா ?இன்றைக்கும் தலித் ஆண்கள் சாதி இந்துப்பெண்களை காதலித்தால் கொல்லப்படுவ்தும் கொடூரமாக தாக்க்ப்படுவதும் வீடு சூறையாட படும் சூழலும் இருக்கும் போது கட்டுரையாளர் சொல்வது போல சாதிப்பெண்களை தலித் காதலிப்பது சாதாரண விசயமாக இல்லை.கல்லூரி மற்றும் சேர்ந்து வேலி செய்யும் சூழலில் தான் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனரே ஒழிய இதில் மாஸ்டர் பிளான் ஏதுமில்லை.கட்டுரையாளரின் தலித் வன்மத்தையே இது காட்டுகிறது-
    10 ஜூன் இல் 03:44 PM
    __________________________________________________________
    Maya Kannan தலித்தாகிய நாங்கள் சிந்திக்ககூடிய ஒரு நல்ல பதிவு இது ///////// அண்ணாச்சி நாடர்கள் தங்கள் இழிநிலையை போக்க கையில் எடுத்த ஆயுதம் பொருளாதார தொழில் முன்னேற்றம் ஆகும், பனங்கருப்பட்டியும், பருத்தி போன்ற பணப் பயிர்களை விளைவித்து சந்தைகளில் விற்று அந்த பணத்தில் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தாங்களே செய்துகொண்டு முன்னேறி இன்று இந்த சமுதாயத்தில் முன்னேற்ற இடத்தில் இருப்பது என்பது உண்மைதான் இது அவர்களின் கூட்டு முயற்ச்சி..,,,,, ######## இதோ தலித்களின் நிலை கொடுவெயிலுக்கும், குளிர் மழைக்கும் குந்திட குடிசை இல்லாத போது எங்கிருந்து விவசாயம் செய்ய முடியும், ,,,,,,, நாடர்கள் மாராப்பு சேலைக்குதான் போராட்டம் நடத்தினார்கள், ஆனால் தலித் ஆண்கள் கோவணம் கட்டுவதே பெரும் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறது, ,,,,,, நாடார்கள் தங்கள் வண்டிகளை நிறுத்துவதற்க்கு இடம் வாங்கி அதற்க்கு "மகமை" என்று பெயரிட்டு வரி வசூலித்தனர்,,,,,,,, வீதியிலே நடக்க உரிமை இல்லாதபோது பறையனுக்கு நிலம் கொடுப்பார்களா?, காதல்மேல உங்களுக்கு அப்படி என்ன கோவம் நீங்க நினைக்கிற மாதிரி அவர்களுடைய பணத்தில் சுகவாழ்வு வாழ மட்டும்தான் காதலிக்கிறார்களா? தலித் மட்டும்தான் கதலிக்கிறானா?, தலித் உயர்சாதி பெண்ணை மட்டும்தான் காதலிக்கிறானா?, உங்கள் எண்ணம் தவறானது காதல் என்பது மனம் சம்மந்தப்பட்டது இதில் சாதி எனும் நஞ்சை ஊற்றவேண்டாம்,, ,,,,,,,,,,, அடங்கமறு, அத்துமீறு, திருப்பிஅடி, திமிரி எழு இது அண்ணன் திருமாவின் வாசகம், ///////// விளக்கம்:- ஆதிக்க சாதிகளால் அடக்கப்பட்ட நீ உன் உரிமையை வென்றெடுக்க ""திமிரிஎழு,"" அவர்களை ""கல்வி"" என்னும் ஆயுதத்தால் திருப்பிஅடி, ஆதிக சாதிகளின் கொடுமைகளுக்கு அடங்கமறு, இன்னும் கொடுமைகளை எழுதிகொண்டே போகலாம்...... அண்ணாச்சி

    ReplyDelete
  39. கவிதா சொர்ணவல்லி அது என்ன இழுத்துகிட்டு ஓடுறது / ஏன் இவனுங்க எல்லாம் லவ்வே பண்ண மாட்டானுன்களா இல்ல தலித் சமூகத்தை தவிர - மத்த எந்த ஜாதியில பொறந்தவந்களுக்கு காதல்னா என்னே தெரியாதா ???
    __________________________________________________________
    வீரா பாலு எத்தனை நாடார்கள் தலித் மக்கள் போல இழிதொழில் செய்ய நிர்பந்தப்பட்டனர் .எத்தனை பேர் அப்படி இழிதோழில் செய்துள்ளனர்???பத்து பைசாவிற்கு வக்கற்ற தலித்துகள் எப்படி நாடார் போல ஆதிக்கசாதிகளை பொருளாதார ரீதியாக எதிர்த்து நிற்க்கமுடியும் ???இன்னும் கூட தலித்துகள் விவசாய கூலிகளாகத்தான் பலநூறு கிராமங்களில் ஆதிக்க சாதியின் கீழ் இருக்கின்றனர்.இவர்களை எப்படி பொருளாதார ரீதியாக வழுப்படுத்த முடியும் .
    10 ஜூன் இல் 04:29 PM · பிடிக்கவில்லை · 5

    Mgptcaa Jani பணம் பெற்றால் ஒருவர் முன்னேறி வர்க்க அடுக்கில் மேலே போய் விடலாம்-இங்கே சாதி அடுக்கில் அது சாத்தியம் இல்லை என்கிறார் அண்ணல் .
    10 ஜூன் இல் 06:34 PM · பிடிக்கவில்லை · 2

    Mgptcaa Jani அவர் மற்ற பதிவை படித்ததில் பதிவு சாதி வேண்டும் என்றும் சாதி கலப்பு நமது பழக்க வழக்கம் எதிராக அமையும் என்று தான் எழுதி இருக்கிறார்

    ReplyDelete
  40. Sathish Chelladurai மிக எளிதான அறிவுரை ....சரி பாராட்டலாம்.தலித்கள் என்ன இழுத்துட்டு ஓடுறத பொழப்பா வைச்சிருக்கோமா என்ன்?தெரு தெருவா அருவா எடுத்து சுத்தறமா என்ன ?இது என்ன குற்றச்சாட்டு ?
    10 ஜூன் இல் 10:23 PM · விருப்பம் · 1

    Abu Thahir என்ன ஒரு முட்டாள்தனமான பதிவு.... தலித்கள் உயர்சாதி பெண்ணை இழுத்துட்டு ஓடுறத ஒரு பொழப்பாவே பண்ர மாதிரியும், எந்த நேரமும் வன்முறைக்கு தயார்நிலையில் இருப்பவர்களை போன்றும், மிகவும் கீழ்தரமான பதிவிட்டுள்ளனர்.... தலித் ஆண்கள் உயர்சாதி பெண்ணை காதலித்து திருமணமாவது செய்கின்றனர், ஆனால் உயர்சாதி என சொல்லிகொள்பவர்கள் தலித் பெண்களை கற்பழிக்க மட்டுமே தயாராக இருக்கின்றனர்.... தலித்களின் ஓரளவு விழிப்புணர்வாலே, அவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்ததாலே இன்று ஓரளவுக்கு உயர்ந்திருக்கின்றனர்.... இன்று எந்த அரசு அலுவலகம் சென்றாலும் அதில் குறிப்பிட்ட சதவிகித பணியாளர்கள் தலித்களாவே இருக்கின்றனர், அவர்கள் தங்கள் நிலையை நன்றாக உணர்ந்து ஓரளவுக்கு மேலே வர துடிக்கின்றனர், நாம் கை கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, கீழே தள்ள துடிக்காதீர்கள் இது போன்ற கீழ்தரமான பதிவை போட்டு....
    11 ஜூன் இல் 08:48 PM · பிடிக்கவில்லை · 4

    ReplyDelete
  41. Sathish Chelladurai
    10 ஜூன்
    தலித்துகள் எதிர்வினை என்று உயர் சாதி பெண்ணை இழுத்துட்டு ஓடாமல், திருப்பி அடி என்றுல்லாம் வன்முறையில் ஈடுபடாமல் துட்டு சம்பாதித்து முன்னேறனும் -நண்பரின் பதிவு

    இஸ்லாமியர்னா தீவிரவாதின்னு சொல்ற கேவலமான பொதுப்புத்தியோடு தலித்னா வன்முறையாளர்கள்னு புதுப்புத்திய கிளப்புவதில் அப்படி என்னய்யா மகிழ்ச்சி ?

    #உதவி செய்யலன்னாலும் உபத்திரவம் கொடுக்காதிங்க சாமிகளா

    ReplyDelete
  42. Ram Kumar அண்ணே என் போஸ்ட்டை என்ன விட நீங்க ரொம்ப பாப்புலர் ஆக்குறீங்க.. நன்றி..

    அவருக்கு ஏற்கனவே பதில் கொடுத்த விசயங்களை திரும்ப திரும்ப வேறு வேறு மாதிரி கேள்வியாக கேட்க அவருக்கு நேரம் இருக்கலாம்.. பதில் சொல்ல எனக்கு சத்தியமாக நேரம் இல்லை..

    அடுத்தவனை குறை கூறி பிரயோஜனம் இல்லை.. நம் முன்னேற்றத்திற்கு நாம் தான் அடி எடுத்து வைக்க வேண்டும்னு சொல்றேன்.. இல்ல திரும்ப திரும்ப எவனையாவது குத்தம் சொல்லிட்டே தான் இருப்போம்னு முடிவு கட்டி வந்த பிறகு பேச என்ட்ட ஒன்னும் இல்ல.. பதிவின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாமல் குய்யோ முறையோ என்று கத்தும் கும்பலுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..

    விடைகள் சொல்லப்பட்டுவிட்ட/தெரிந்த கேள்விகளை திரும்ப திரும்ப கேட்பதால் கேட்பவருக்கும் இன்னும் சிலருக்கும் மகிழ்ச்சி கிடைக்கலாம்.. மகிழ்ந்து விட்டுப்போகட்டுமே இன்னைக்கும் சொல்றேன், என் இழி நிலைக்கு அடுத்தவனையே குறை கூறிக்கொண்டிருந்தால் நான் முன்னேறவே முடியாது.. இது தான் நிஜம்..

    இப்ப இந்த பதிவுக்கு கூட கமெண்ட் போட்டிருக்க மாட்டேன்.. என்ன ஏதோ லுச்சாப்பய மாதிரி நெனச்சிறக் கூடாதுல்ல? அதான்..
    12 ஜூன் இல் 08:17 PM · விருப்பம் · 1
    __________________________________________________________
    Sathish Chelladurai தம்பி ராம் ....நான் உங்ககிட்ட பதிலுக்கு போடாததே என்னய லூசுப்பயன்னு பார்க்குறவன் நினைக்கிறான்னுதான்.உங்க போஸ்ட் பாப்புலராவது எனக்கு தெரியாதா என்ன ?
    உங்க போஸ்ட்டை நான் போட்டுதான் பிரபலமாகனுமா என்ன ?

    உங்களுடைய நாடார் முன்னேற்றம் முன்னுதாரணமாக வைத்து பார்க்கலாம் என்றேன் .அதிலும் பல பிரச்சனைகளை நண்பர்கள் தெரிவித்துள்ளனர் .அந்த முன்னேற்றம் பணம் மட்டுமே ....இன்னும் எனக்கும் உங்களுக்கும் மேலான ஒன்று அதிகாரம் கொண்டு உள்ளது.அதைப்பற்றி கவலையில்லை என ஒதுக்கிவிட முடியாது.போகட்டும் உங்கள் அறிவிரையை யோசிக்கலாம் ...முயற்சிக்கலாம் ...
    என்னுடைய கேள்வி இழுத்துட்டு ஓடுகிறது தலித்தின் பொழைப்பா ? வன்முறை கொண்டு திரிகிறோம் எனில் எப்போதிருந்து ?ஏன் ? சொல்லுங்க ராம் ...வீடு கேட்டு புலம்புற நான் வன்முறையாளனா ?சாதி கேட்டவன் வன்முறையாளனா ? எதிர்வினையை நீளமா விமர்சிப்பதற்க்கு எடுத்துக்கொண்ட நேரத்தை வினைகளுக்கு செலவழித்திர்கள்? நான் உயர்ந்த நிலைக்கு வந்தாதான் மதிப்பிங்க? வந்த பிறகும் ஏனிந்த பாரபட்சம் ? நாடாருக்கென்று வன்முறை இல்லை?கராத்தே செல்வின் யார் ?வேறு ஜாதியா ? வன்முறை செய்யலியா ?நாடார் இனம் கொண்டாடலியா ?சரத்குமார் மேல் தனிப்பாசம் இல்ல அவர்களுக்கு? குற்றப்பரம்பரை என சொல்லப்பட்டவர்களும் புல்லட்டில்தான் சுத்துகிறார்கள்.....

    கோவையை சேர்ந்த கிருஷ்ணசாமி எந்த நிலையில் நெல்லை வந்தார் ?இம்மானுவேல் சேகரன் ஏன் கொல்லப்பட்டான் ? வரலாறு என்று உங்களுக்கு தெரிந்த நாடார் வரலாற்றை தெரிவித்தால் எனக்கென்ன பிரச்சினை ?தலித்களை வன்முறையாக இழுத்துட்டு ஓடுபவனாக எந்த அடிப்படையில் கூறினிர்கள்? சொல்லுங்க ராம் ....படிக்கிற தலித்தை லூசுப்பயன்னு நினைத்திர்களா?
    பதிவெழுத நேரம் இருந்தால் பதில் எழுதவும் நேரம் ஒதுக்குங்கள் ...
    12 ஜூன் இல் 08:49 PM · விருப்பம் · 1

    ReplyDelete
  43. Ram Kumar Sathish Chelladurai நீங்கள் இன்றிருக்கும் கராத்தே செல்வினை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது.. அவருக்கு ஜாதி சப்போர்ர்ட் வேறு இருக்கிறதா? 4,5 விடலைகள் பின்னால் திரிவதை அப்படி நினைப்பது உங்கள் தவறு.. ரெண்டு நாளுக்கு முன் பதிவு எழுதிய நான் என் முன்னேற்றத்தை பார்க்க வேலைக்கு கிளம்பி விட்டேன்.. ஆனால் இப்பவும் நீங்கள் “இதைப் பாரீர்”னு என் பதிவை தான் ரெண்டு நாட்களாக பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.. பதில் சொல்வதற்கு நேரம் இருப்பது, சொல்ல விரும்புவதும் என் விருப்பம்.. தலித்துகள் இழுத்துக்கொண்டு ஓடுவது கல்யாணமாக குடும்பமாக இருப்பதற்கு என்றால் நானும் ஆதரவளிக்கிறேன்.. பெண்ணின் பெற்றோரிடம் காசு பறிப்பதற்காக என்றால் எழுதத்தான் செய்வேன்.. அப்படி பல ஆட்களை பார்த்திருக்கிறேன், நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன்.. மீண்டும்ம் கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள்.. நான் கிளம்புகிறேன்
    12 ஜூன் இல் 10:55 PM · விருப்பம்

    Sathish Chelladurai கராத்தே செல்வின் பின்னால் சுற்றியது வெடலைகள் எனில் இங்கே மட்டும் என்னவாம்?செல்வினை வைத்து நாடார்கள் ரவுடிகள்னு சொன்னா ஒத்துப்பிங்க ? ரெண்டு நாளா தொங்குறது புல்ம்புவது எல்லாம் நீங்க கொடுப்பதால்தான் ....உங்களுக்கு சொந்த அனுப்வ்ம் போல எங்களுக்கு ஆயிரம் அனுபவம் இருக்கு.கிளம்பத்தான் வந்தீர்கள் எனில் வந்திருக்கவே வேணாமே....

    பதில் சொல்ல் முடியாது உங்களால் ....நீங்கள் பொத்தாம்பொதுவாக தலித்களை வன்முறைன்னு குற்றம் சாட்டியுள்ளீர்கள். ..விசிக இதர கட்சிககளை விமர்சியுங்கள் ...அதன் வெடலைகளை விமர்சியுங்கள் ...உங்கள் மனசாட்சிக்கு உங்கள் எழுத்தும் அதன் மீதான குற்றச்சாட்டும் சரியா தவறா என யோசிக்கட்டும்.
    நீங்கள் கிளம்பியதே படிப்பவருக்கு புரியும் யார் எவ்வகையான தவறான எழுத்து என்று ....வாழ்க வளமுடன் சென்று வாருங்கள்
    12 ஜூன் இல் 11:04 PM · திருத்தியது · விருப்பம் · 1

    Sathish Chelladurai என்னுடைய கேள்வி இழுத்துட்டு ஓடுகிறது தலித்தின் பொழைப்பா ? வன்முறை கொண்டு திரிகிறோம் எனில் எப்போதிருந்து ?ஏன் ? சொல்லுங்க ராம் ...வீடு கேட்டு புலம்புற நான் வன்முறையாளனா ?சாதி கேட்டவன் வன்முறையாளனா ? எதிர்வினையை நீளமா விமர்சிப்பதற்க்கு எடுத்துக்கொண்ட நேர...மேலும் பார்க்கவும்
    12 ஜூன் இல் 11:14 PM · விருப்பம் · 1

    Sathish Chelladurai பாளை இல்லைன்னா டவுன் மேட்டுத்தெருவில் நின்று டவுன் மார்க்கெட்டில் நின்று அசிங்கமால்லாம் வேணாம் ....செல்வின்னு உங்களுக்கு என்ன செய்தான்னு கொண்டாடுறீங்கன்னு சும்மா கேளுங்களேன் ...நாடார்கள் ஆதரிக்கிறார்களா இல்லியான்னு தெரியும் ...இப்ப லேட்டஸ்ட்டா வெங்கடேஸப்பண்ணையார்....

    #யோக்கியன் வர்றான் சொம்ப எடுத்து உள்ள வை

    ReplyDelete
  44. 88 வகையான தீண்டத்தகாதவரின் மீதான கொடுமைகள் நடைபெறுகிறதாம். நான் அவ்வளவு அனுபவிக்க வாய்ப்பில்லை.ஆனால் தாய் சித்தி இவர்கள் சொல்ல கேட்டுள்ளேன்.அரசு காவல்துறையுடன் சேர்ந்து கொடியங்குளத்தில் அடி வாங்கினர் தலிதகள். திருப்பி அடித்தனர்.வன்முறைதான் ...நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.இதோ இன்று சீவலப்பேரியை கடக்கும் போது முன்பிருந்த பயம் இல்லை.தொட்டால் முன்பு போல் இல்லை இந்தப்பக்கமும் ஒன்று விழும் என்ற உணர்வு வந்துள்ளது.
    அம்பேத்கரின் வாக்குப்படி வாழ முயல்கிறோம்.வாழ விடுங்கள்.யாரையும் கண்டு கொள்ளாமல்தான் செல்கிறோம்.நிர்ப்பந்தங்கள்தான் உங்கள் முன்பு கான்பிக்கப்பட்டு இப்படி எழுதி தள்ளுகிறீர்கள்........ எப்படி செல்வினுக்கு பின்னால் விடலைகளோ அது போலதான் தலித் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவரின் பின்னும்....

    தலித் அல்லாத ஒருங்கிணைப்பு என்று ஓட்டு சம்பாதிப்பவர்களை விமர்சியுங்கள்.தலித் பெயரை சொல்லி ஓட்டு சம்பாதிப்பவர்களை விமர்சியுங்கள்.

    வன்முறையின் விளைவில் படிப்பு பாதித்த சக நண்பர்களை அறிவேன். தங்களது எழுத்தை மீண்டும் படித்து பரிசீலிக்க வேண்டிக்கொள்கிறேன்.ஏனெனில் உலகெங்கும் போகும் இந்த எழுத்துக்கள் தலித்கள் மீதான பார்வையை மட்டமாக மிக கேவலமாக எடுத்து செல்கிறதே அன்றி அதன் வேரை அடையாளம் காட்டாமல் நிற்கிறது.

    எனக்கும் நேரமில்லைதான்...அதை விட உறக்கமில்லை.பதிவை படிப்பவர்கள் மாற்றுக்கருத்தை அறியும் பொருட்டே பின்னூட்டத்தில் பேஸ்புக்கில் பதியப்பட்டவற்றை பதிகிறேன். உங்கள் மனதிற்கு உங்களின் இழுத்துட்டு ஓடும் வார்த்தைகளுக்கு பதில் கேட்டு பாருங்கள் சரியா? தவறா?
    நன்றி தம்பி ராம்.

    ReplyDelete
  45. ****இதோ இன்று சீவலப்பேரியை கடக்கும் போது முன்பிருந்த பயம் இல்லை.தொட்டால் முன்பு போல் இல்லை இந்தப்பக்கமும் ஒன்று விழும் என்ற உணர்வு வந்துள்ளது.***

    சதீஸ் அண்ணா!

    உங்க பிரச்சினைக்கு நீங்க "அழகான தீர்வு" கண்டு, வெற்றியடைந்துள்ளீர்கள். ஆக, "மிதவாதம்" என்கிற அறிவுரை அர்த்தமற்றது என்கிறீர்கள்?

    அப்போ இளவரசனை ஏன் இழந்தீர்கள்?

    அதையும் வெற்றியின் முதல்ப்படினு சொல்றீங்களா? இளவர்சனை பலிகொடுத்தது வெற்றியாகும்னு விளக்கினால் என்னை மாதிரி அரைவேக்காடுகள் புரிந்து கொள்வோம்.

    "ஒதுங்கிப்போவது" ஒண்ணும் பெரிய தப்பில்லை. மிருகங்களையும் வெறிநாய்களையும் பார்த்து ஒதுங்கித்தான் போறோம். அப்படிப்போவது "கோழைத்தனம்" என்று நீங்க நம்பினால் உயிர்பலி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது? உங்க வீரத்தால் அப்பாவிகள் பலர் பலியாகிறார்கள் என்பதையும் கவனிங்க. தலீத்கள் மைனாரிட்டியாக இருக்கும் இடங்களில் வாழ்பவர்கள் நிலைமையையும் யோசியுங்கள்.

    ஒருவன் தன்னை உயர்சாதினு அவன் வீட்டில் உங்களை விடவில்லைனா. அவன் வீட்டு வாசலை மிதிக்காமல் இருக்கலாம். அவனை உங்க வீட்டில் நுழையவிடாமல் இருக்கலாம்.

    சும்மா போகிற உங்களை வந்து தாக்கினால், அவமானப் படுத்தினால், பதிவின்மூலம் உஅலகுக்கு எடுத்துச் சொல்லுங்கள். உங்க பிரச்சினைகளை பதிவெழுதி உலகுக்குச் சொல்லலாம்தானே?. அநீதியை எதிர்த்து போராடலாம்தானே?

    இல்லை நாங்க அடிக்கு அடி, வெட்டுக்கு வெட்டுனு தான் போவோம். தவறுகள் என்றுமே "மேல்சாதி" பிதற்றிக்கொண்டு திரிபவர்கள்மேல்தான். நாங்க எல்லாருமே (ஒட்டுமொத்தமாக) அப்பாவிகள்தான் ஆனால் பழிக்குப் பழிவாங்கித்தான் எங்களை மேம்படுத்துவோம், வெற்றியும் அடைவோம் என்றால் செய்யுங்கள்!

    ReplyDelete
  46. வருண் சகோ ,நிர்ப்பந்திக்கப்பட்டவை அது அங்கு வாழ்ந்தவருக்கு தெரியும்.வன்முறையை தேடி செல்ல விருப்பமில்லை. காக்க வேண்டிய காவல்துறை மன்னார்குடி ஜாதியோடு சேர்ந்து கொடியங்குளத்துல தாக்குதல் நடத்திய போது யாரிடம் சென்று நீதி கேட்பது? நிர்ப்பந்திப்பை வன்முறை என்று பொத்தாம்பொதுவாக எப்படி சொல்ல முடியும்?இங்கு தலித் வெறுப்புதான் இங்கு வெளிப்படுகிறது என சந்தேகிக்கிறேன் ....
    ஏனெனில் செல்வினுக்கு பின்னால் சுத்தியவர்கள் புனிதமானவர்கள். வெடலைகள் .அவர்களை வைத்து நாடார்கள் வன்முறையாளர்னு சொன்னால் ஒப்புக்கொள்வீர்கள்?
    அடித்தோ வெட்டியோ அல்ல ....அது கூட பிரச்சனை இல்லை.இங்கு பொதுவாக தலித்களை இப்படி கேவலமா சித்தரித்தாலே போதும்...
    பதிவெழுதி போராடினாலும்தான் புலம்புவதாக முன்னேற்ற நாடார் பகடி செய்கிறாரே ..
    ஒதுங்கிப்போவது என்றால் என்ன ?அப்படி இருந்து இருந்து வாங்கிய அடி போதும்.யதார்த்தமா பேசுங்க சகோ ...இல்லை இவர்கள் அடி வாங்கியபோது பதிவெழுதி குரல் கொடுப்பது யார்?தனக்கு தானேதானே முடிவை தேட வேண்டியுள்ளது .
    மனிதனாக இதனை குறித்த எத்தனை விழிப்புணர்வு பதிவுகளை எழுதியிருப்பார்கள் மாற்று முன்னேறின ஜாதிகள்.

    இந்த உலகில் உங்களால் தனித்து வாழ இயலும்? அதிலும் ஏழை தலித்துகள் ? நான் எனக்காக இங்கு எழுதுவதில்லை.என்னால் தனித்து சமாளிக்க இயலும்.ஆனால் இன்னும் பல லட்சம் குடும்பங்கள் விவசாய கூலியாக ,பீ சுமப்பவராக வாழ்கின்றனர் .அவர்கள் முன்னேறினால்தான் மதிப்போம் என்பதல்ல எனது ஆசை.அதுவும் தொழில்சார்,அவரும் மனிதர்தான்.தொழிலாலோ சாதியாலோ சக மனிதனை ஏன் மதிக்க மறுக்கிறீர்கள் ? அதை மாற்றுங்கள் ..அந்த மனநிலைதான் இங்கு அடுத்தவனை சீண்டி வருகிறது .
    இன்று தாழ்த்தப்பவர்களில் பள்ளர் சற்று மேலே வரவும் தம்மை ஆண்ட பரம்பரையாக புத்தகம் வெளியிடுவது போல உள்ளது பதிவு.
    எனக்கு யாரும் அடிமையில்லை நான் யாருக்கும் அடிமையில்லை -அம்பேத்கர்

    வன்முறையில் சாவது ஏழைதான்.கொஞ்சமும் நியாயம் செய்ய விரும்பவில்லை.உணர்ச்சிகளை தூண்ட வேண்டாம் என வேண்டுகிறேன்.

    தலித்களுக்கு எதிரான கொடுமைகளை முற்றிலும் மறைத்து இப்படி எழுதுபதற்க்கு ...ப்ளீஸ் சும்மா இருங்க .

    ReplyDelete
  47. ****இன்று தாழ்த்தப்பவர்களில் பள்ளர் சற்று மேலே வரவும் தம்மை ஆண்ட பரம்பரையாக புத்தகம் வெளியிடுவது போல உள்ளது பதிவு.***

    வன்னியர்கள், நாடார்கள் இதையே செய்யும்போது இவர்கள் செய்வதில் என்ன தவறு? ஆளாளுக்கு கதை விடுறானுக, நாங்களும் சொல்லுவோம்னு சொல்லிட்டுப் போகட்டுமே?

    சரி, பிறசாதியினரை கையைக்காட்டும் நீங்க, சொல்லுங்க!

    தலித்களுக்குள் ஒற்றுமை இருக்கா? அதிலும் மெஜாரிட்டியா உள்ளவங்க மற்றவரை இழிவா நெனைக்கிறாங்கனுதான் சொல்றாங்க.ஆக, மனுஷனை மனுஷனா, தன்னைப் போல் சமமாகக் கருத மெஜாரிட்டியான, வலுவான தலித்களும் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை! சரியா?

    இவர்களிலும் ஒரு சிலர் நான் ஆண்ட பரம்பரைனு சொல்றாங்க!!! ஆக, மெஜாடிட்டியா உள்ள தலித்கள் "muscle power" காட்டும்போது மைனாரிட்டியா உள்ளவங்க பாதிக்கப் படுறாங்க.

    நீங்க என்னதான் வாதம் செய்தாலும், தன்னை உயர்சாதினு பிதற்றும் யாரிடமும் போயி தலித்கள் "எங்களை சமமாக நடத்துங்க. நமக்குள் சம்மந்தம் பண்ணிக்குவோம் னு போய் நிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுக்காக போயி சண்டை போட வேண்டியதில்லை."

    இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கா?

    இருந்தால் அது என்ன??






    எனக்கு யாரும் அடிமையில்லை நான் யாருக்கும் அடிமையில்லை -அம்பேத்கர்

    ReplyDelete
  48. வருண் சகோ ,இங்கு எவ்வளவு படித்தாலும் நீ ..............பயதானேன்னு பேசுற ம்னப்போக்கு மாற வேண்டும். தகுதியும் விருப்பமும் இருந்து அதற்கான ஒரு தடையாக சாதி இருந்தால் அவசியம் கேள்விகளும் எதிர்ப்பும் எழும்.
    அல்லாது இங்கு தேடிப்போய் யாரும் சண்டையிடுவதில்லை.நேற்று கூட கர்நாடகாவில் தலித்களை சேரில் உட்கார வைத்து முடி வெட்டியத எதிர்த்து சலூன்கடைகாரர் தாக்கப்பட்டுள்ளார்.அப்ப தலித்களுக்குள் தனியே தமக்கு தாமே முடி வெட்டிக்கொள்ளலாமா ?
    சார்பு வாழ்க்கை மிகுந்த சமூகத்தில் தனித்து முன்னேற்றம் அடையும் அள்வுக்கு நாடாரைப்போன்று அல்ல தலித்கள் .
    வன்முறையாளனா இழுத்துட்டு ஓடுபவராக கூறப்பட்டுள்ளத நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா ?எந்த அடிப்படையில் ?
    இங்கு தன் வழியில் சென்று கொண்டிருப்பவனை சாதியின் பெயரால் இழிவு செய்வதை தனிமைப்படுத்துவதை என்னவாக சொல்வீர்கள் ? அன்புத்துவம் ?அக்கறைத்துவம்?
    இழிவு செய்தது போக வன்முறைன்னு பழி போடுவதற்க்கு என்ன த்துவம் சொல்வீர்கள் ?

    ReplyDelete
  49. ஒரு சண்டைனு ஆரம்பிச்சுட்டா அது கட்டுக்கடங்காமல் கரை புரண்டு ஓடும்போது, தவறு செய்யாதவர்கள்கூட தண்டிக்கப்படுறாங்க. யாரு பிரச்சினக்கு காரணமானவனோ அவன் தப்பித்துக்கொள்ளுவான். பிரச்சினை வலுக்க வலுக்க இரு பக்கமும் வயலண்ஸில் இறங்கும்போது நியாயம் அநியாயம் செய்தவன் எல்லாம் யாரு கண்டு பிடிக்க முடியாது.

    இப்போ ஒரு தலித்தை நீங்அ சொல்வதுபோல் சாதியைச் சொல்லி ஒரு காட்டுமிராண்டி அவமானப்படுத்துறான்னு வச்சுக்குவோம். இந்த பிரச்சினை பெருசாகி அந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தில் 10 பேரு கொல்லப்படுகிறான், தலித்களில் ஒரு ஆறு பேர் கொல்லப்படுகிறார்கள்.

    இந்த ஒரு சூழலில், காட்டுமிராண்டிக் கூட்டத்தில் 10 பேர் (அதிகம் பேர்) பழிவாங்கபட்டு பலியானதால், பிரச்சினையை யார் ஆரம்பித்தார்கள் என்பதைப் பார்க்காமல், தலித்கள் அடாவடி செய்வதாகத்தான் உலகம் பார்க்கும். அது உண்மையா?னு பார்த்தால் இல்லைனுதான் சொல்லணும். ஆனால் உயிரிழப்புனு பார்த்தால் இந்த ஒரு நிலையில் காட்டுமிராண்டிகளுக்குதான் இழப்பு அதிகம்.

    அதனால் தலித்கள் அடாவடி செய்வதாக சொல்லுவார்கள், பேசுவார்கள். சரியா?

    ஆரம்பத்திலேயே சாதியைச் சொல்லி அவமானப்படுத்திய காட்டுமிராண்டியை சட்டத்தின் படியோ அல்லது, மீடியா மூலமாகவோ உலகுக்குக் காட்டுவதுதான் புத்திசாலித்தனம்னு நான் சொல்ல வர்ரேன்.

    பிரச்சினை பெரிதான பிறகும் நல்லவன் அயோக்கியனை கண்டுபிடிப்பது கஷ்டம்.

    சாதியைச் சொல்லி அவமானப்படுத்துபவன் படு மட்டமான "லோ க்ளாஸ் பாஸ்டட்" என்னைக்கு நீங்க முழுமையாக நம்புறீங்களோ.. அப்படி அவமானப்படுத்துவதால் அது உண்மையாகிவிடாது என்று என்னைக்கு உங்களுக்கு தன்னம்பிக்கை வருதோ அன்றுதான் நீங்க வெல்ல முடியும்.

    ஏன் என்றால், உயர்சாதி என்று பிதற்றும் காட்டுமிராண்டிகளிலும், தாந்தான் கடவுளுக்க்ஜு சொந்தம்னு நெனைக்கும் முட்டாப் பார்ப்பனர்களிலும், பிராடு பண்ணுறவன், ஊரை ஏய்க்கிறவன், கூட்டிக்கொடுக்குறவன், கள்ளச்சாரயம் விக்கிறவன், போர்ன் சைட் நடத்துறவன் எல்லாரும் இருக்கத்தான் செய்றானுக. அது தெரியும் இல்லையா உங்களுக்கு? அப்படி இருக்கும்போது அதுபோல் ஆட்கள் அந்த சாதியில் பொறந்த ஒரே காரணத்தால் எப்படி உயர்ந்தவனாவான்???
    ஆக முடியாது. அதனால் சாதியச்சொல்லி இகழ்பவன் தன் இயலாமையை, தோல்வியைக் காட்டுகிறான் என்பதே உண்மை. அதை நீங்க முழுதாக நம்பி அவர்களை புறக்கணிப்பதோ அல்லது ச்ட்டத்தின் முன் நிறுத்துவதோ தான் புத்திசாலித்தனம். திருப்பி அடிப்பதல்ல!

    ReplyDelete
    Replies
    1. வருண் சகோ,யதார்த்தத்தை விட்டு விலகுகிறீர்கள் ....ஆரம்பத்திலேயே சாதியைச் சொல்லி அவமானப்படுத்திய காட்டுமிராண்டியை சட்டத்தின் படியோ அல்லது, மீடியா மூலமாகவோ உலகுக்குக் காட்டுவதுதான் புத்திசாலித்தனம்னு நான் சொல்ல வர்ரேன்.
      அத எழுதுங்க...அத விட்டு இழுத்துட்டு ஓடுறான்னு சொல்றது எப்படிங்க நியாயமாகும்?
      இன்று கூட காவல்துறை அரசு காது கொடுக்காத போது அடுத்த கட்டமாக மக்கள் எதை நோக்கி நகர்வார்கள்? ஏன் ஆரம்பிப்பவர்களை எழுத துப்ப்பில்லாமல் எங்களை பிடித்து அறிவுரைன்னு வீண் பழிகளை சுமத்துகிறீர்கள்?
      இது வரை பாதிக்கப்பட்டவர்கள்,எதிர்வினைகள் என்று நெட்டில் சம்பந்தப்பட்ட இடங்களில் விசாரியுங்கள்.அப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் தலித்கள்தான் அதிகம்.வெளிவராத கொடுமைகள் சாமியின் பெயரால் சாதியின் பெயரால் இன்னும் நடக்கிறது.
      இன்று எனக்கு எழுத தெரிந்து எழுதுகிறேன்....எத்தனை பேருக்கு முடியும்? பாதிக்கப்பட்டவனிடம் எழுதிப்போடு என்றால் என்ன சொல்வான்? இல்லை அரசிடம் காவல்துறையிடம் நம்பகத்தன்மை உள்ளதா?
      இந்து மதத்தின் ஆணிவேரை அறுக்காமல் கடவுளை கொல்லாமல் சாதியை தாண்டி விடமுடியாது.உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் அவர்களை அடிமையாக வைக்க துடிப்பவர்களை அடையாளம் காட்டுங்கள்.முடியலன்னா சும்மா இருங்கள்.ஏற்கனவே கீழ்சாதி அழுக்கு அசிங்கம்னு சாவுரவன இழுத்து ஓடுபவனாக ,கலவரம் செய்றவனா காட்டாதிங்க...கோடி கும்பிடு உங்களுக்கு.
      இன்னும் யாரிடம் இருந்தும் ஒழுத்துட்டு ஓடுறவங்கன்னு எழுதுனதுக்கு வருத்தம் வரல...அதை ஆதரிக்கிறவருக்கும் வரல. உங்க சாதிப்பெருமை எழுத தலித் ஊறுகாய்?
      சின்ன கோட்ட போட்டு பக்கத்துல பெரிய கோடு ..இதுதானே..நல்லாருங்க.

      Delete
    2. ***அத விட்டு இழுத்துட்டு ஓடுறான்னு சொல்றது எப்படிங்க நியாயமாகும்?***

      ஒரே சாதிக்குள் கலத்து/காதல் திருமணம் செய்தாலும் இப்படித்தான் சொல்றாங்க!

      சேரன் அவர் பொண்ணு காதல் திருமணம் செய்ய முயலும்போதும் இப்படித்தான் சொன்னாரு.

      என்னவோ தலித்தை மட்டும்தான் இப்படி சொல்வதாக சொல்வதில் நியாயம் இல்லை! மிகைப் படுத்துறீங்க!

      Delete
    3. ***இன்று கூட காவல்துறை அரசு காது கொடுக்காத போது அடுத்த கட்டமாக மக்கள் எதை நோக்கி நகர்வார்கள்?***

      இந்த அவநம்பிக்கையும், சட்டத்தை கையில் எடுத்து பழிவாங்குதலும் சரியான வழி என எனக்கு தோனவில்லை! உங்க வாழ்க்கை நீங்க எப்படி வேணா வாழலாம். இருந்தாலும் அகிம்ஷை முறையை மேற்கொள்ள ஒரு ஆலோசனை சொல்வதில் தவ்றெதுவும் இருப்பதாகத் எனக்குத் தெரியவில்லை!

      Delete
    4. ***ஏன் ஆரம்பிப்பவர்களை எழுத துப்ப்பில்லாமல் எங்களை பிடித்து அறிவுரைன்னு வீண் பழிகளை சுமத்துகிறீர்கள்?***

      இளவரசன்கள் கலப்புத் திருமணம்னு அரக்கிணறுதாண்டி தற்கொலை செய்து பலியாவதால் சொல்ல வேண்டிய நிர்பந்தம்!

      Delete
    5. ***இந்து மதத்தின் ஆணிவேரை அறுக்காமல் கடவுளை கொல்லாமல் சாதியை தாண்டி விடமுடியாது.***

      இந்து மத்தை இன்னும் கட்டி அழும் தலித்களிடம் சத்தமாக சொல்ல வேண்டியது இது. தேவையில்லாதவர்களிடம் எதுக்கு இந்த வீண் உபதேசம்?

      Delete
  50. //ஆரம்பத்திலேயே சாதியைச் சொல்லி அவமானப்படுத்திய காட்டுமிராண்டியை சட்டத்தின் படியோ அல்லது, மீடியா மூலமாகவோ உலகுக்குக் காட்டுவதுதான்//
    இது டெல்லி மாணவிக்கு நேர்ந்த கதி போன்றதல்ல. தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தை சேர்ந்த மாணவி புனிதாவிற்கு நேர்ந்தது போன்றது வருண்.

    ReplyDelete
  51. ஆக, எல்லாம் தானே சரியாக வேண்டும். எல்லோரும் ஒரு நல்ல நாளில் சரியாகி விடுவார்கள். பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்கிற யோசனையை யாராவது சொன்னால் கேட்க வேண்டியதில்லை. முழு வீச்சில் தர்க்கம் செய்வோம். நான் சொல்வது சரிதானே?

    ReplyDelete
  52. தானே சரியாக வேண்டும் என்று நீங்க சொல்லல....நாங்களும் கேக்கல...யாருக்கு மனப்பிறழ்வோ அவருக்கு வழிகாட்டுங்க...அப்படி இல்லைன்னாலும் ஏற்கனவே அசிங்கங்களை சுமப்பவனிடம் புதுசா இழுத்துட்டு ஓடுறது வன்முறைன்னு மேலும் பழிகளை சுமத்தாதிங்க...

    ReplyDelete
    Replies
    1. உங்க எதிர் வாதத்திற்கு மேலே ஒபதில் சொல்லப்பட்டுள்ளது. போயி என்னனு பாருங்க, சதீஸ்!

      Delete
  53. சேரன் சொல்லிட்டா சரியாகிடுமா ? இந்தப்பதிவில் இழுத்துட்டு ஓடுவதை விட்டு என்றுதான் சொல்லப்பட்டுள்ளது ...எல்லாரும் செய்கிறார்கள் என்றால் ஏன் தலித்தை மட்டும் குறிப்பிட்டு ? தலித் மட்டும்தான் செய்வது போல பதிவு பிம்பத்தை விதைக்கிறது என்பதைத்தானே சொல்கிறேன்.... சுய சாதி பெருமைக்கு தலித் ஊறுகாயா ?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என்ன புரியலை இப்போ? கலப்புத் திருமணம், காதல் திருமணம் எல்லாம் சொந்த ஊரில் செய்வதில்லை. எங்கேயவது ஊருவிட்டு ஊரு ஓடிப்போயிதான் செய்வதுண்டு. அப்படி அந்தப் பெண் விரும்பியே ஒருவருடன் போனாலும் அவளை அவன் இழுத்துக்கொண்டு ஓடியதாகத்தான் சொல்லுவாங்க. இதில் அவன் தலீத்தாக இருக்கணும்னு அவசியம் இல்லை எந்த சாதிக்காரனா இருந்தாலும் அவன் இழுத்துக்கொண்டு ஓடியதாகத்தான் பெற்றோர்கள், உரவினர்கள், தெருக்காரங்க, ஊர்க்காரங்க எல்லாரும் சொல்லுவாங்க.

      இதில் தலித் தலித்னு ஏதோ தலித்கள் மட்டும்தான் இப்படி செய்வதுபோல் நீங்க ஏன் அடிச்சுக்கிறீங்கனு எனக்குப் புரியவைல்லை!

      Delete
  54. ராம்குமார், Anonymous பின்னூட்டங்கள் அனுமதிக்காதீர்கள். பதிவிற்கு தொடர்பில்லாத - அவர்களுக்குள்ளான தனி மனித தாக்குதல்களை - உங்கள் பதிவில் அனுமதிக்காதீர்கள். அவர்கள் சண்டை வெளியே வைத்துக் கொள்ளட்டும். பின்னூட்டங்கள் நீங்கள் approve செய்த பின் வெளி வருமாதிரி settings வைத்துக் கொள்ளுங்கள். நல்ல் விவாதங்கள் தான், சிலர் மிக தரக்குறைவாக எழுதுகிறார்கள். இது negative publicitiy யா தெரியவில்லை. வாழ்த்துகள் ராம்குமார். இந்த பதிவை எனது மதிப்பிற்குரிய நண்பருக்கு அனுப்பியிருக்கிறேன். சில பின்னூட்டங்கள் தான் என்னை கவலைப்பட வைக்கின்றன். நன்றி ராம்குமார்.

    ReplyDelete
    Replies
    1. Negative Publicityன்னுலாம் இல்லை சார்... நான் இரவில் மட்டுமே online வருவதாலும் கமெண்ட்களை approve செய்யத் தாமதமாகும் என்பதாலும் அந்த settings வைக்கவில்லை.. இனி, வைப்பதைப் பற்றி யோசிக்கிறேன் சார்.. நன்றிகள் சார் :)

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One