விண்ணை தாண்டி வருவாயா? - ஓர் சைக்காலஜிக் அலசல்..

Sunday, March 7, 2010


பிடித்த கௌதமும் மிகப்பிடித்த ஏ.ஆர்.ரகுமானும், பிடிக்காத சிம்புவையும் திரிஷாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார்களே, போகலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலே இவ்வளவு நாட்கள் கடந்து இன்று ஒரு வழியாக படம் பார்த்து விட்டேன்.

ஒரு சாதாரண ஒரு வரி கதையை இரண்டு மனங்களின் ஊடே சென்று இவ்வளவு தெளிவாக அழகாக மிகை இல்லாமல் சொன்னதற்காக கௌதமை பாராட்டியே ஆகா வேண்டும். சமீப காலங்களில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு (குஷி, அ.ஆ) அடுத்த படியாக இரண்டு மனங்களின் குழப்பங்களையும் பிரச்சனைகளையும் இந்த அளவிற்கு ஆழமாக சொன்ன படம் இது தான். ஆனால் எஸ்.ஜே.சூர்யா பட கிளைமாக்ஸ் போல் இது சினிமா தனமாக இருக்காது.

"உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும் பொது நான் ஏன் ஜெஸ்ஸிய பாத்தேன்? நான்னா கார்த்திக்.." என்று ஒரு சுஜாதா கதையில் வருவது போல் பேசி சிம்பு கதையை ஆரம்பிக்கிறார்.

இப்போது நாம் பேச போவது கதையை பற்றியோ தொழில்நுட்பத்தை பற்றியோ அல்ல. படம் நிறைய நிரம்பி இருக்கும் சைக்காலஜி பற்றி தான்.

"ஒரு ஆண் தனக்கு எதுவுமே இல்லாத போதும், எல்லாம் இருக்கும் போதும் எதை பற்றியும் கவலை பட மாட்டான். ஆனால் ஏதாவது முக்கியமான ஒன்று அமையும் போதும், கிடைக்கும் போதும் மிக யோசித்து தான் ஒவ்வொரு செயலிலும் இறங்குவான்" என்பதை சிம்பு பாத்திரம் மூலமும் (அந்த கோவா சூட்டிங் சீனில் திரிஷாவின் கேள்விக்கு பதில் சொல்லும் காட்சி); "அதே ஒரு பெண் தான் எந்த நிலையில் இருந்தாலும், பிறரை அண்டி வாழ வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தாலும், இந்த சமுதாயத்திற்காக தன் விருப்பு வெறுப்புகளை அமைத்துக்கொள்வாள்" என்பதை திரிஷாவின் பாத்திரம் மூலமும் மிக அழகாக செதுக்கியுள்ளார் இயக்குனர்.

பெண்கள் எப்போதுமே ஏன் பிறருக்காக வாழ்கிறார்கள்? ஒரு வேலை சினிமா தான் அவர்களை அப்படி சித்தரிக்கிறதா? "யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்..."; "அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்..." என்பன போன்ற பாடல்கள் பெண்கள் பாடுவதாகவே ஏன் அமைக்கப்பட்டுள்ளன? 'இந்த உலகத்துல நம்மள சுத்தி யாருமே இல்லேனா உன்ன லவ் பண்ணுவேன் டா..' என்பதன் அர்த்தம்?

"சரி வா போலாம்" என்று கார்த்திக்கை அழைத்துக்கொண்டு செல்லும் ஜெஸ்ஸி அவனோடு செல்லாமல், மறைவிடத்தில் ஒருசில காதல் வசனங்களை மட்டும் பேசி விட்டு அவனை மட்டும் அனுப்பி விடுகிறாள். பிறருக்கெல்லாம் சரியான பொருளையோ, ஆளையோ தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாகவும் சரியாகவும் இருக்கும் பெண்கள், தங்கள் வாழ்கை என்று வரும் போது ஏன் பின்வாங்கி பயப்பட வேண்டும்? அதுவும் காதல் விஷயத்தில் ஆணும் பெண்ணும் நிஜத்தில் மிக அவசரத்தில் முடிவெடுக்கிறார்கள். அவசர முடிவு என்றாலும், அதை 'சரியான முடிவு தான் என்று நிரூபிக்க' ஆண் தெளிவாகவும் தைரியமாகவும் இருக்கிறான்; ஆனால் பெண் 'நாம் தவறு செய்து விட்டோம்' என்றெண்ணி அவளும் நிம்மதியாக இல்லாமல் அவனுக்கும் இம்சை கொடுக்கிறாள். திருந்துங்க போம்பளைகளா...

பின்குறிப்பு:
1. இந்த படம் பார்த்த பின்பு சிம்புவை மிகவும் பிடித்துப்போய் விட்டது எனக்கு. என்னது திரிஷாவா? க்ளோசப் ஷாட்லலாம் கமலா காமேஷயும் உமா ரியாஸ்கானையும் பார்ப்பது போல் இருக்குப்பா.
2. கெளதம், நீங்க என் வாழ்க்கைல, முக்கியமான நேரங்கள்ல கூடவே இருந்தீங்களா? இந்த படம் எனக்கு என்னென்னவோ ஞாபகப்படுத்துது...

3 comments

  1. romba kastapatu love panirupinga pola

    ReplyDelete
  2. gujaratla aasya pathu yemaandhuten

    ReplyDelete
  3. "ஒரு ஆண் தனக்கு எதுவுமே இல்லாத போதும், எல்லாம் இருக்கும் போதும் எதை பற்றியும் கவலை பட மாட்டான். ஆனால் ஏதாவது முக்கியமான ஒன்று அமையும் போதும், கிடைக்கும் போதும் மிக யோசித்து தான் ஒவ்வொரு செயலிலும் இறங்குவான்".

    மிகவும் அருமையான தொடர் நண்பரே . . . உளவியல் ரீதியாக பெண்களின் மனதை அப்பட்டமாக சித்தரித்து இருக்கிறார் கெளதம்.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One