சாரு நிவேதிதாவும் அவரின் ஒப்பீடுகளும்..

Sunday, November 7, 2010

பெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்து விடலாம் என்பது பெரியாரின் நம்பிக்கை. இதை பாஷன் ஆக்கியது முத்தமிழ் அறிஞர். ஆன்மிகத்திற்கு இவர்கள் என்றால், கலைத்துறைக்கு ஒரு சாரு நிவேதிதா.

ரோட்டில் செல்லும் ஒரு அழகான பெண்ணை பார்த்து நீங்கள் சைட் அடித்து ரசிக்கும் போது, ஒரு அதிகப்பிரசங்கி, அந்த பெண்ணின் உடைகளை களைந்து, 'இவர் முலைகளைப்பார், ஒன்று பெரியதாக உள்ளது, ஒன்று சிறிதாக உள்ளது..' 'இவள் (யாரோ ஒரு வெளிநாட்டுக்காரியின் பெயரைக்கூறி) அவளை காப்பி அடித்து உள்ளே சிலிக்கான் பேட் வைத்திருக்கிறாள்'.. 'இவளுடைய அம்மா ஒரு தேவடியாள்'.. என்கிற தொனியில் வக்கிரமாக கேவலமாக பேசினால் உங்களுக்கு என்ன மனநிலை இருக்குமோ, அதே மன நிலை தான் இந்த சாரு நிவேதிதா என்பவரின் எந்திரன் படத்தைப்பற்றிய கட்டுரையை வாசிக்கும் போது எனக்கு இருந்தது..

படத்தின் இசை வெறும் சத்தமாக மட்டும் உள்ளதாம். படத்தின் லோகேசன் கேவலமாக இருக்கிறதாம். இப்படி எல்லாம் கூறி, ஏதேதோ கேள்வியே படாத சில வேற்று மொழிப்படங்களை ஒப்பிட்டுப்பேசுகிறார். எனக்கு இரண்டு வருடங்களாக இவருடைய வலைத்தளம் மட்டுமே பழக்கம், சமீபமாக ஆனந்த விகடன். இவர் வலை தளங்களில் எந்த தமிழ் படத்தையும் பாராட்டி நான் கண்டதே இல்லை. ஆனால் நமக்கு என்னவென்றே தெரியாத வேற்று மொழிப்படங்களை சிலாகித்துப்பேசுவார். இசையிலும் அப்படியே. ஏன் இப்படி என்று புரியவில்லை. இவர் ஆனந்த விகடனில் எழுதும் பத்தியிலும் 'அந்த நாட்டில் அப்படி உள்ளது, இந்த நாட்டில் இப்படி உள்ளது, என்றெல்லாம் மற்ற நாடுகளை பெருமையாக பேசிவிட்டு, கடைசியில் இந்தியாவை அசிங்கப்படுத்துவார். மாநிலங்களைப்பற்றி பேசும் போது தமிழகத்தை மட்டம் தட்டுவார். தான் சார்ந்துள்ள மாநிலத்தையும் நாட்டையும் மக்களையும் மிக தாழ்வாக நினைக்கிறார் இவர்.

என் சந்தேகம் எல்லாம், இவருக்கு பிற நாடுகளும், பிற மொழிப்படங்களும், வேற்று நாட்டவரின் இசை மட்டுமே பிடிக்கும் போது இவர் ஏன் தமிழ் படங்களுக்கும், இசை அமைப்பாளர்களுக்கும் விமர்சனம் எழுத வேண்டும்? அதுவும் இவர் அங்காடி தெரு, தசாவதாரம், குருதிப்புனல், எந்திரன் போன்ற பலரையும் கவர்ந்த தமிழ் படங்களை தான் குப்பை என்று எழுதுவர். இந்தப்படங்களில் எல்லாம் குறையே இல்லை என்று சொல்ல முடியாது. நான் முன்பு சொன்ன உதாரணம் போல, ஒரு பெண்ணை சைட் அடிக்கும் போது அவளின் தலைமுடி கொஞ்சம் கலைந்திருப்பது நமக்கு சிறு குறையாக தெரியலாம். ஆனால் இவரோ, அந்த பெண்ணை, நான் முன்பு சொன்ன உதாரணத்தை போல கூறு போடுகிறார். படம் என்பது 2, 3 மணி நேரம் கவலைகளை மறந்து சந்தோசமாக இருப்பதற்காக தான் நாம் பயன் படுத்துகிறோம். அதில் சில நல்ல கருத்துகள் இருந்தாலும் ஏற்றுகொள்கிறோம், நமக்கு சரி என்று பட்டால். ஆனால் குறை கண்டு பிடிக்கா விட்டால் தனக்கு கிறுக்கு பிடிக்கும் என்பதற்காகவே படம் பார்த்தால் இவரைப்போல் தான் எழுத வேண்டும்.

எனக்கு இருக்கும் சந்தேகம் இவருக்கு எந்த தமிழ் படமுமே பிடிக்காதா? சில மாதங்களுக்கு முன்பு சிவாஜியின் நடிப்பை செயற்கையின் உச்சம் என்று கூறிய இவர், இப்போது அவரின் நடிப்பை, மற்றவ்ரகளைப்போல மர்லான் பிராண்டோவோடு ஒப்பிடுகிறார். ஒரு வேளை தென் அமெரிக்காவில் இப்படி தான் மாற்றி மாற்றி பேசுவார்கள் போல.

'ரஜினி என்ற 61 வயது (71 வயது தோற்றம் கொண்ட) முதியவர், 37 வயது மாமியுடன் டூயட் பாடுகிறாராம்'. இது இந்த எழுத்தாளருக்கு வக்கிரமாக இருக்கிறதாம். வயதுக்கு ஏற்ற கதைகளில் நடிக்க வேண்டுமாம். அய்யா சாரு நிவேதிதா அவர்களே, உங்களை யாரும் வயதுக்கு தகுந்த மாதிரி பேசு, எழுது என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நீங்கள், கூட தான், கல்லூரிப்பெண்களை கவர, ஒரு இளைஞன் போல் நடித்து, ஜாக்கி ஜட்டி எல்லாம் அணிந்து சென்றதாக பெருமையுடன் கூறினீர்களே, அப்போது எங்கே போனது உங்கள் வயது? ஒரு நடிகன் எப்படி நடிக்கிறான் என்று பாருங்கள், அவன் வயதைப்பற்றி உங்களுக்கு என்ன? நான் நினைக்கிரீன் உங்களுக்கு ரஜினி மீது பொறாமை, இந்த வயதிலும் கதாநாயகனாக பெண்களோடு டூயட் பாடுகிறார் என்று. இந்தப்படம் 3000 பிரிண்ட் போடப்பட்டதில் இருந்து இவ்வளவு பெரிய வெற்றி அடைந்தது வரை உங்களுக்கு வயிற்றெரிச்சல் தான்.

ரகுமான் ஹிந்தியில் இசை அமைத்தால் உங்களுக்கு பிடிக்கும், அதே தமிழில் பிடிக்காது. இங்கு ஒரு நல்ல விஷயம் நடந்தாலுமே உங்களுக்கு அதில் உள்ள சிறு தவறு மட்டுமே தெரியும். நல்லவைகள் எல்லாம் உங்களுக்கு தூரமாகவே இருக்க வேண்டும். நீங்கள் ஒரு pessimist சாரு.

எனக்கும் உங்கள் எழுத்துக்களை படிக்கும் போது வக்கிரமாக உள்ளது. உங்கள் எழுத்துக்களை பிடித்து உங்களையும் மதித்து கடிதம் போடுபவர்களை (நீங்கள் தான் உங்களுக்கே அப்படி கடிதம் எழுதுவதாக ஒரு பேச்சும் உள்ளது) நீங்கள் எவ்வளவு வக்கிரமாக திட்டுகிறீர்கள்? இதில் இருக்கும் வக்கிரத்தை ஒப்பிட்டால் ரஜினி டூயட் பாடுவது ஒன்றுமே இல்லை.

எனக்கு இன்னொரு மிகப்பெரிய சந்தேகம், நீங்கள் ஏன் பெயரே வாயில் நுழையாத எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் மேற்கோள் காட்டுகிறீர்கள்? அப்படி என்றால் இத்தனை நாட்களாக எங்களுக்கு தெரிந்த எழுத்தாளர்களும் சினிமாக்காரர்களும் அறிவு கெட்டவர்களா? இல்லை அவர்களை வாசித்த ரசித்த எங்களுக்கு மூளை இல்லையா? ரஜினி ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார் 'ரசிகர்களை முட்டாள்னு நெனைக்குறவன் ஒரு முட்டாள்' என்று. நீங்களும் அப்படி ஒரு முட்டாள் தான். உங்களை வாசிப்பவர்களையும் மற்ற மக்களையும் கூட, உங்களை விட கீழானவர்களாக முட்டாள்களாக நினைக்கிறீர்கள்.

அதே நேரத்தில் உங்களை இந்தியாவில் (அப்படி சொன்னால் கோபம் வருமே, உங்களை இந்தியா என்ற குப்பை நாட்டிற்குள் அடைத்து விட்டதாக..), சாரி, உலகிலேயே மிகப்பெரிய எழுத்தாளராக நினைத்துக்கொண்டு காலம் தள்ளுகிறீர்கள். நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும். நீங்கள் கூறும் பெயர் தெரியாத எழுத்தாளர்களை பற்றியும், இன்னும் பிறவும், நீங்கள் கூறுவதை விட விக்கிபீடியாவிலும் கூகிளிலும் அதிகமாக உள்ளன.

ஒரு படைப்பாளி படைக்க வேண்டும், இப்படி பிற படைப்பை குறை கூறியே பொழுதை ஒப்பேற்ற கூடாது. முதலில் நீங்கள் உங்கள் எழுத்தை ஒழுங்காக கவனியுங்கள்.

குறிப்பு:
உங்களை சுப்பிரமணிய சாமியுடன் ஒப்பிட்டு எழுதியது உங்களுக்கு அவ்வளவு கோபத்தை உண்டு பண்ணுகிறதோ? அவரை விட நீங்கள் ஒரு மிகப்பெரிய கோமாளி. அவர் பல வெளி நாடுகளின் (வெளி நாடு என்றால் உங்களுக்கு பிடிக்குமே) பல்கலைகழகங்களில் உரை ஆற்றயுள்ளார். கேரளாவில் முதன்மையான ஒரு நிர்வாகவியல் கல்லூரியை நடத்துகிறார். நீங்கள் என்ன செய்து விட்டர்கள்? அவர் அரசியல் பேச்சை விடவும் சிறு பிள்ளைத்தனமாக உள்ளது உங்களை நீங்களே உலகின் சிறந்த எழுத்தாளராக கொண்டாடுவது.
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One