கடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்ளஸ் ஒன் சேர்ந்திருந்த சமயம்.. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ பத்தாம் வகுப்பில் நான் எடுத்திருந்த மார்க்குக்கு முதல் குரூப் தான் கொடுப்போம் என்று சொல்லி என்னை அந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள்.. அது வரை ஒரே புக்காக இருந்து உயிரை வாங்கிய சயின்ஸ், ப்ளஸ் ஒன்னில் இருந்து டபுள் ஆக்ட் கொடுத்து பீதியை கிளப்பியது... நானாவது பரவாயில்லை, பயாலஜி எடுத்த பயலுகளுக்கு அது ட்ரிபிள் ஆக்ட் ட்ரீட் கொடுத்தது.. அடுத்த எமகண்டம் மேத்ஸ்.. அதுவரை ஜியாமெட்ரியும், கிராப்பும் மட்டுமே படித்து மேத்ஸ்சில் பாஸ் ஆகிய எனக்கு ப்ளஸ் ஒன்னில் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்கள், இனி ஜியாமெட்ரியும் கிராப்பும் கிடையாது என்று.. பாடங்கள் எல்லாம் ரொம்ப கஷ்டமாக இருந்தன.. பள்ளிக்கு போகவே வெறுப்பாக இருக்கும்..
அப்போது தான் ஒரு மாலை வேளையில் என் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் பேச்சு கொடுத்தார். அவர் ஒரு ப்ரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர். ”ப்ளஸ் ஒன்னா படிக்கிற?”
“ஆமா அண்ணாச்சி”
“ஃபர்ஸ்ட் க்ரூப்பா?”
“ஹ்ம் ஆமா”.. இந்த ஃபர்ஸ்ட் குரூப் என்று வெளியில் பீற்றிக்கொள்ள பெருமையாகத்தான் இருக்கும்.. ஆனால் படிப்பதற்குள் தான் டவுசர் கழண்டு விடும்..
“ரொம்ப கஷ்டமா இருக்கும்ல ஃபர்ஸ்ட் குருப்புன்னா?” எனக்காக வருந்துவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்..
ஆஹா நம்ம கஷ்டத்தை புரிந்த ஒரே ஜீவன் என்று நினைத்து “ஆமாண்ணாச்சி” என்றேன்..
“நீ ஈசியா படிச்சி பாசாயி நல்ல மார்க எடுக்க என்ட்ட ஒரு ஐடியா இருக்கு”
“என்னண்ணாச்சி அது?”
“நீ டெய்லி ஏசப்பா கிட்ட pray பண்ணு.. நீ தான் க்ளாஸ் ஃபர்ஸ்ட்”
“நெஜமாவா?”
“ஆமா..”
“ஏசு சாமிய கும்பிட்டா நான்...” குறுக்கிட்டு, “கும்பிடுறதுன்னுலாம் சொல்லக்கூடாது.. Prayer இல்லனா ஜெபம் பண்ணுறதுன்னு சொல்லணும்.. எங்க சொல்லு பாப்போம்”
“சரி. ஏசு சாமிய pray பண்ணுனா நான் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துருவேனா?”
“ஃபர்ஸ்ட் மார்க் என்ன? அதுக்கு பெறவு எல்லாத்துலயும் நீ தான் ஃபர்ஸ்ட்..” என்று சொல்லி என்னை அவர் வீட்டுக்குள் அழைத்துச்சென்று எப்படி முட்டி போட்டு ப்ரேயர் பண்ண வேண்டும் என சொல்லிக்கொடுத்தார்.. பைபிளை திறந்து எனக்காக என்னமோ வாசித்தார்.. நான் நல்லா மார்க் எடுக்கணும்னு வேண்டினார்.. எனக்கு அவரையும், ஏசு சாமியையும் மிகவும் பிடித்துவிட்டது.. ‘ச்சே நமக்காக எவ்வளவு தூரம் சாமிட்ட வேண்டுறாரு? இல்ல இல்ல ஜெபம் பண்ணுறாரு?’ என்று அவர் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.. அவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒன்றை சொன்னார், “ஒங்க வீட்ல இருக்கிற ஃபோட்டோவ எல்லாம் இனிமே கும்பிடாத.. அதெல்லாம் சாத்தான்.. அதனால தான் நீ இப்ப கஷ்டப்படுற, புரியுதா?”..
நான் தயக்கத்துடன், “அப்புடியா?”
“ஆமா.. சாமினா ஒன்ன இப்டி கஷ்டப்பட விடுமா? அது எல்லாமே சாத்தான்.. ஏசப்பா தான் ஒரே சாமி.. உண்மையான சாமி.. இனிமேல் அவர மட்டும் ப்ரே பண்ணு, சரியா?”
“சரிண்ணாச்சி”. மறுநாளில் இருந்து நான் ஏசப்பாவை தான் ஜெபம் செய்தேன்.. சாத்தான்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தார் ரோட்டுக்கு நடுவில் வெள்ளைக்கோடு போட்டது போல் என் நெற்றியில் இருந்த திருநீறு அதற்கு அடுத்த நாளில் இருந்து இருக்கவில்லை. முதல் மாதத்தேர்வு முடிந்து பரிட்சை பேப்பரை கொடுத்தார்கள். தமிழ், இங்கிலீஷை தவிர அனைத்திலும் ஃபெயில். அதிலும் மேத்ஸ்சில் முட்டை.. என் வாழ்க்கையில் அது தான் நான் முதன்முதலில் ஃபெயில் ஆகிய தருணம். முட்டை மார்க் எல்லாம் என் கனவிலும் வாங்குவேன் என்று நினைக்கவில்லை. நான் மட்டும் முட்டை அல்ல, வகுப்பில் முக்கால்வாசி பேர் முட்டை தான்.. ஒரு க்றிஸ்டியன் பிள்ளை கூட ஃபெயில் ஆகி அழுதுகொண்டிருந்தது பாவம்.. எனக்கு கடுப்பாகிவிட்டது, ‘என்னடா இது ஏசப்பாவ கும்பிட்டும் இப்படி ஆயிருச்சே? அவருக்கு இவ்வளவு தான் பவரோ?’னு..
மாலை அந்த பக்கத்து வீட்டு அண்ணாச்சியிடம் விசயத்தை சொன்னேன்.. அவர் சொன்னார், “நீ அந்த சாத்தான இப்ப கும்பிடாம ஏசப்பாவ ஜெபம் பண்ணுறீல, அதான் சாத்தான் ஒன்ன இப்படி தண்டிக்குது”..
“ஆனா க்ளாஸ்ல எல்லாருமே ஃபெயில் தான்ண்ணாச்சி.. ஒரு க்றிஸ்டின் பிள்ள கூட ஃபெயில் தான் தெரியுமா?”
“அதான்டா சொல்றேன்.. நீ ஏசப்பாவ கும்பிடுறது தெரிஞ்சதும் அந்த சாத்தான் எல்லாரையும் இப்படி பழிவாங்குது. அதான் எல்லாரையும் ஃபெயில் ஆக்குது”
எனக்கு கோபம் வந்துவிட்டது.. தன்னை நம்பி கும்பிட்ட, ஸாரி, ஜெபம் பண்ணிய ஒருத்தனை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை, அவனால் பிறர் பாதிக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கும் ஆளா எல்லாம் வல்ல கடவுள்? அவரை நம்பியா இனியும் நாம் போவது? சாத்தான் என்றாலும் இத்தனை நாட்களில் என்னை ஃபெயில் கூட ஆக்கியதில்லை பிள்ளையாரும், சரஸ்வதியும். படிக்காமல் போனதால் வாத்தியாரிடம் அடி வாங்கிக்கொடுத்தாலும், பரிட்சை அன்று கும்பிட்டு போனால் கண்டிப்பாக பாஸ் தான்.. ஆனால் இந்த புதுக்கடவுள் என்னை ஃபெயில் ஆக்கும் வரை, அதுவும் முட்டை வாங்கும் வரை பார்த்துக்கொண்டிருக்கிறார்.. அந்த ஆள் வேஸ்ட் என முடிவு செய்து கொண்டு, அந்த அண்ணாச்சியிடம் இருந்து மெல்ல நகர்ந்தேன்.. “டேய் எங்க போற? வா சாத்தான்ட்ட இருந்து ஒன்ன காப்பாத்த ஒரு ப்ரேயர் பண்ணிருவோம்”
’ஒன்னும் வேண்டாம்.. ஒங்க ஏசுவ விட எங்க சாத்தானுக்கு தான் பவர் ஜாஸ்தின்னு தெரியுது, நான அவரையே கும்பிட்டுக்கிறேன்’னு சொல்ல நெனச்சேன்.. ஆனா தைரியம் இல்லாதனால, “எங்கம்மா தேடுவாங்க அண்ணாச்சி, நான் பெறவு வாரேன்”னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.. அதற்கு பின் நான் அவர் முகத்தில் கூட முழிக்கவில்லை.. ஜெபமும் செய்வதில்லை, சாமி தான் கும்பிடுகிறேன் தினமும் தார் போன்ற என் நெற்றியில் வெள்ளைக்கோடு போன்ற திருநீறு இட்டு.. கதை இதோடு முற்றும்.. இப்ப மேட்டருக்கு வருவோம்.
நம் தமிழ் நாட்டில், அதுவும் குறிப்பாக தென்பகுதிகளில் பக்கத்து வீடு, தூரத்து சொந்தம், ஸ்கூல் டீச்சர், வகுப்புத்தோழன் போன்ற யாராவது ஒருவரிடம் இருந்து இது போன்ற மறைமுக, நேரடி மதமாற்ற முயற்சியை பெரும்பாலும் எல்லோரும் அனுபவித்திருப்போம்.. நாம் சோர்ந்திருக்கும் நேரத்திற்காக காத்திருக்கும் அவர்கள், சரியான நேரம் வரும் போது, வார்த்தைகளில் கனிவைக்கூட்டி நம்மை மதம் மாற்ற முயற்சிப்பார்கள். ஒரு சின்ன statistics பாருங்கள்..
ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 25லட்சம் பேர்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்படுகிறார்கள்/மாறுகிறார்கள். இத்தனைக்கும் கிறிஸ்தவம் தான் உலகின் மிகப்பெரிய மதம். அதன் இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருக்கும் இஸ்லாம், இந்து மதங்களின் ஒட்டு மொத்த கூட்டுத்தொகையை விட மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தான் உலகில் அதிகம். ஏழை, எளியவன் தனக்கு இருப்பதே போதும் என நிம்மதியாக இருப்பான்.. ஆனால் அதிக காசு இருப்பவன் ’இன்னும் இன்னும் இன்னும்’ என்று அலைந்து கொண்டு இருப்பானே, அது போல் தான் இவர்களும்.. உலகம் முழுவதும் தாங்கள் பரந்து வளர்ந்திருந்தாலும், இன்னும் இன்னும் இன்னும் என்று அலைகிறார்கள் பிறரை தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்கு. அவர்கள் மதம் மாற்றுவதற்கு ஒன்றும் பிறர் மீதான அக்கறையோ, உண்மையான கடவுள் பக்தியோ காரணம் இல்லை. பின் என்ன காரணம்? அந்த காரணமும் அதற்கு பின் இருக்கும் மார்க்கெட்டிங் வித்தைகளும் பலருக்கும் தெரிந்த ரகசியம் தானே? நான் வேறு என்னத்தை புதுசாக சொல்வது?
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நம் அண்டை வீட்டில் இருக்கிறார்கள். நம்முடன் நன்றாக பழகுகிறார்கள்.. தீபாவளிக்கு நம் வீட்டில் செய்யும் பலகாரங்களை கொடுத்தால் வாங்க மாட்டார்கள். அட பொங்கல் அன்று கரும்பு கொடுத்தால் கூட திங்க மாட்டார்கள்.. கேட்டால், சாத்தான் இருக்குமாம் அதில் எல்லாம்.. அண்டை வீட்டுக்காரன் என்ன உங்களுக்கு விஷமா கொடுத்துவிடப்போகிறான்? கிராமங்களில் அறுவடையின் போது, சாமியை கும்பிட்டுவிட்டுத்தான் ஒவ்வொரு முறையும் நெல் அறுவடை நடக்கிறது. எப்படி அதை மட்டும் உண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. நெல்லில் மட்டும் சாத்தான் புகுந்துவிடாதா? விருந்தோம்பல் என்கிற ஒரு அடிப்படை பண்பை கூட மதிக்காத, சக மனிதனுக்கான மரியாதையை கூட கொடுக்காத இவர்கள் தான் நாம் கஷ்டப்படும் போது ஓடோடி வந்து நம் மீது அக்கறை காட்டுவார்கள் மதம் மாற்ற.. அவன் கொடுக்கும் சாதாரண பலகாரத்தை நம்பி திங்க மாட்டீர்கள், ஆனால் அவன் உங்களை நம்பி உங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். நல்ல லாஜிக். ரோமன் கத்தோலிக்கர்களை தவிர மற்ற அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்..
இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே அனைத்து மதங்களையும் அனுசரித்து வாழும் மக்கள் இந்துக்கள் மட்டும் தான்.. சிறு வயதில் இருந்தே அவர்கள் பக்கத்து வீட்டினருடன் சர்ச்சுக்கு செல்லலாம், மசூதிக்கு சென்று தண்ணீர் தெளித்துவிட்டு வரலாம், வீட்டில் ஏசுநாதர் படத்தை மாட்டி அதற்கும் வெள்ளிக்கிழமைகளில் மாலை மாட்டி பூஜை செய்யலாம், கழுத்திலோ கையிலோ மேரி மாதாவின் படத்தை டாலராகவோ மோதிரமாகவோ மாட்டிக்கொள்ளலாம்.. வீட்டில் யாரும் தடுக்க மாட்டார்கள். சொல்லப்போனால் தங்கள் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் இன்னும் எக்ஸ்ட்ராவாக ஏசு, அன்னை மேரி, அல்லா மூவரையும் சேர்த்துக்கொள்வார்கள், அவ்வளவு தான்.. அவர்களைப்பொறுத்தவரை கடவுள் பல ரூபங்களில் இருக்கிறார் என்பார்கள், அது ஏசுவாகவும் இருக்கலாம் என்பார்கள். இந்து மதத்தின் பலமும் அது தான், பலவீனமும் அது தான். ஆனால் இதையே ஒரு கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ கண்டிப்பாக சொல்ல மாட்டார்.. சாத்தான், ஹரம் என்றெல்லாம் பிற மத நம்பிக்கைகளை இழிவு படுத்துவார்கள்.
இவர்களின் மதம் மாற்றும் டெக்னிக் மிக மிக கொடுமையானது. ஒரு மகிழ்ச்சியான குடும்பம் இருக்கிறது. திடீரென்று ஒரு பிரச்சனை வருகிறது அவர்கள் குடும்பத்தில். உடல் ஆரோக்கியம் கெட்டு, மிகுந்த மன உளைச்சலும் பண விரயமும் ஆகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் இவர்கள் உள்ளே நுழைவார்கள். அவருக்காக, அந்த குடும்பத்திற்காக கண்களை மூடி கண்ணீர் விட்டு ஜெபம் செய்வார்கள். நம் மக்களும், ’சொந்தக்காரன் கூட கண்டுக்காத சூழ்நிலையில கூட, யாருன்னே தெரியாத ஒரு ஆள் நமக்காக சாமி கும்பிடுறாரே?’னு ஃபீல் ஆகிருவாங்க.. நம் மக்கள் எல்லாம் sentimental idiots என்பதை தெரிந்து வைத்திருப்பதால் தான் இப்படி sentiment attack நடத்துவார்கள். பின் அந்த வீட்டு பெண்களை சர்ச்சுக்கும், தங்கள் வீட்டில் நடக்கும் ஜெப நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பார்கள். அந்த பெண்ணும் சாதாரணமாகத்தான் ஆரம்பத்தில் செல்வாள். போகப்போக அவளின் பொட்டை அழிப்பார்கள், குழந்தைகளையும் மாற்றுவார்கள், வீட்டில் இருக்கும் இந்து அடையாளங்களை மறைப்பார்கள். எல்லாம் மாறிய பின் அந்த வீட்டின் ஆண் மட்டும் என்ன செய்ய முடியும்? அவனும் மாறிவிடுவான். ஆனால் அந்த கஷ்டம் மட்டும் அப்படியேத்தான் இருக்கும்.
தாழ்த்தப்பட்டவர்களை மதம் மாற்றும் போது, ‘நாங்கள் ஜாதியே பார்ப்பதில்லை. எங்கள் மதத்திற்கு வந்தால் நீ உயர்ந்துவிடலாம்’ என்பார்கள்.. ஆனால் மதம் மாறிய பின் தான் அவனுக்கு தெரியும், ஒரு கிறிஸ்தவ பள்ளரால் ஒரு கிறிஸ்தவ நாடாரையோ கிறிஸ்தவ வேளாளரையோ மணக்க முடியாது என்று. அங்கு போயும் அவன் தாழ்த்தப்பட்டவனாகத்தான் இருக்க வேண்டும். கிறிஸ்தவத்திற்கு மாறினால் ஜாதிய ஏற்றத்தாழ்வு மறைந்துவிடும் என்பது பெரும் அபத்தம்.. இன்றும் தென் தமிழக்த்தில் கிறிஸ்தவர்களின் கல்யாண பத்திரிக்கைகளில், “நெல்சன் நாடார்”, “சேவியர் பிள்ளை” என்று தான் இருக்கும்.. இதை விட ஒரு பெரிய கொடுமை, ஊர் ஊராக “பிராமண சகோதரியின் சாட்சியை காண வாருங்கள்” என்று போஸ்டர் ஒட்டி அழைக்கிறார்கள் மதம் மாறிய ஒரு பிராமண பெண்ணின் பேச்சை கேட்க.. ஜாதியே இல்லை என்று பீற்றும் ஒரு மதம் தான் பிராமண ஜாதியை உயர்வான ஜாதி போல் குறிப்பிட்டு “பிராமண சகோதரியின் சாட்சி” என்கிறது. ஒரு நடிகர் கூட “கிறிஸ்டியன் ப்ராமின் அசோசியேசன்” என்று ஆரம்பித்திருப்பதாக கேள்வி..
அடுத்த விசயம், ”எங்கள் மதத்திற்கு மாறிவிட்டால், ஊமைகள் பேசுவார்கள், குருடர்கள் பார்ப்பார்கள், முடவர்கள் நடப்பார்கள்” என்று அள்ளி விடுவார்கள். ஆனால் இன்னமும் கிறிஸ்தவர்களில் குருடர்களும், செவிடர்களும், முடவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? மத ஊழியம் செய்யும் ஒரு கிறிஸ்தவ நண்பரிடம், “உங்கள் மதத்திலேயே பலர் இது போல் இருக்கும் போது அவர்களை குணப்படுத்தாமல் ஏன் பிறரை டார்கெட் செய்கிறீர்கள்?” என்றேன்.. அதற்கு அவர் சொன்ன பதில் என்னை தூக்கிவாரிப்போட்டது.. “அவர்கள் எல்லாம் ஏசுவை உண்மையாக நம்பவில்லை. அதனால் தான் செவிடாக, முடமாக, குருடாக இருக்கிறார்கள். உண்மையாக நம்பினால் மட்டுமே குணமாகும்” என்றார். தன்னை நம்பாத மக்களை குருடனாக, முடவனாக வைத்திருக்கும் ஆள் எப்படி கடவுளாக முடியும்? இது போல் குருடர்களை பார்க்க வைக்கிறேன், முடவர்களை பேச வைக்கிறேன், அதிசயங்களை காணப்பண்ணுகிறேன் என்று ஊர் ஊராக மேடை போட்டு மேஜிக் ஷோ போல் நடத்தும் ஆட்கள் எல்லாம், தங்கள் உடம்புக்கு ஒன்று என்றால் அப்பல்லோவிலோ, ராமச்சந்திராவிலோ அல்லது அமெரிக்காவிலோ மருத்துவத்திற்கு சென்று விடுகிறார்கள். ஏன், அவர்களும் ஜெபம் செய்தே தங்களை குணப்படுத்திக்கொள்ளலாமே? ஒரு வேளை அவர்களும் ஏசுநாதரை உண்மையாக நம்புவதில்லையோ?
”எங்க கம்பெனி காம்ப்ளான குடிச்சா பனை மரத்துல பாதியா ஒசரமா வளந்துரலாம்..”
”எங்க கம்பெனி ஹார்லிக்ஸ குடிச்சா கால்குலேட்டர் இல்லாமலே கணக்கு போடுற அறிவாளியா ஆயிரலாம்...”
”எங்க கம்பெனி ஃபேர் & லவ்லி போட்டா செக்கச்செவேர்னு ஆயிரலாம்..”
இந்த விளம்பரங்களின் வரிசையில், உலகம் முழுவதும் பெரிதும் வரவேற்பை பெற்ற successful ஆன இன்னொரு விளம்பரம்..
“எங்க மதத்துக்கு மாறினா கஷ்டம் எல்லாம் மறஞ்சி, கோடி கோடியா பணம் கொட்டி, வாழ்க்கையே சுபிட்சமாயிரும்.. அற்புதங்கள் நிகழும்”...
இப்படி சொல்லி மதம் மாற்றுபவன் வீட்டிலும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கும். அவன் மனைவிக்கும், அம்மாவுக்கும் வீட்டில் சண்டை இருக்கத்தான் செய்யும்., மாசக்கடைசியில் கணக்கு போட்டுத்தான் அவனும் வாழ்வான், பிள்ளைகளில் வருங்காலத்தை நினைத்து அவனுக்கும் கவலைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். கஷ்டம், கவலையே இல்லாமல் மனிதன் இருக்க வேண்டும் என நினைத்தால் அது அவன் மரணத்திற்கு பின்பு தான். ஒரு மத்தத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதால் கஷ்டமும் கவலைகளும் எப்படி போகும்? உடம்பில் உயிர் இருக்கும் வரை கஷ்டமும், போராட்டமும் இருக்கத்தான் செய்யும்.
இப்படி சொல்லி மதம் மாற்றுபவன் வீட்டிலும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கும். அவன் மனைவிக்கும், அம்மாவுக்கும் வீட்டில் சண்டை இருக்கத்தான் செய்யும்., மாசக்கடைசியில் கணக்கு போட்டுத்தான் அவனும் வாழ்வான், பிள்ளைகளில் வருங்காலத்தை நினைத்து அவனுக்கும் கவலைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். கஷ்டம், கவலையே இல்லாமல் மனிதன் இருக்க வேண்டும் என நினைத்தால் அது அவன் மரணத்திற்கு பின்பு தான். ஒரு மத்தத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதால் கஷ்டமும் கவலைகளும் எப்படி போகும்? உடம்பில் உயிர் இருக்கும் வரை கஷ்டமும், போராட்டமும் இருக்கத்தான் செய்யும்.
ஏற்கனவே கேள்விப்பட்ட கதை ஒன்று. ஒரு பெண் புத்த மகானிடம் “சாமி நாம் எப்பவுமே சந்தோசமா இருக்கணும். அதுக்கு வழி சொல்லுங்கள்” என்கிறாள்.. ”சாவே நிகழாத வீட்டில் ஒரு வேளை சோறு வாங்கி சாப்பிடு உன் வாழ்வில் என்றும் சந்தோசம்” என்கிறார். அவள் எங்கு தேடியும் அப்படி ஒரு வீடு இல்லவே இல்லை. அனைத்து வீடுகளிலும் இன்றோ, நேற்றோ, சில வருடங்களுக்கு முன்போ சாவு நிகழ்ந்திருக்கிறது. அவள் சோகத்துடன் புத்த மகானிடம் வருகிறாள். புன்முறுவலுடன் புத்தர் சொல்கிறார், “எப்படி சாவிடம் இருந்து யாரும் தப்ப முடியாதோ, அது போல் இந்த வாழ்க்கையின் பிரச்சனைகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் தப்ப முடியாது. அதனால் பிரச்சனைகளை எதிர்கொள்ள போராட கற்றுக்கொள்” என்கிறார். அது போல் தான், மதம் மாறினால் பிரச்சனைகள் தீராது.. நான் ஒருவனிடம் கடன் வாங்கியிருக்கிறேன், திருப்பி கட்ட முடியவில்லை. அவன் என்னை மிரட்டுகிறான்.. நான் மதம் மாறிவிட்டால், என்னிடம் கடனை திரும்ப கேட்க மாட்டானா அவன்? என் சுகரும், ஹார்ட் ப்ராப்ளமும் மதம் மாறினால் சரியாகிவிடுமா? கொஞ்சம் அறிவை பயன்படுத்தி யோசித்தால் மதம் மாறுவது வேஸ்ட் என்று தெரிந்துவிடும். அதனால் தான் நாம் அறிவை பயன்படுத்த முடியாத, குழப்பமான சூழலில் இருக்கும் போது மதம் மாற்றுகிறார்கள்.
மதம் மாற்றுவதில் இப்போது புது யுக்தி நடிகர், நடிகைகளை மதம் மாற்றி அவர்கள் மூலம் பிரச்சாரம் செய்வது. பழம்பெரும் நடிகர் ஏவிஎம் ராஜனில் இருந்து, நக்மா, ஜூனியர் பாலய்யா, குமரிமுத்து, சாருஹாசன் என்று பலரையும் மதம் மாற்றி ஊர் ஊராக மதப்பிரச்சாரம் செய்ய வைக்கிறார்கள்.. நடிகர்கள், குளிர் பானங்கள், காப்பித்தூள், துணிக்கடைகளுக்கு எல்லாம் விளம்பரம் செய்த காலம் போய், இப்போது மதத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவை நடிகர் செந்தில், டி.ஆர்., ராமராஜன் போன்றவர்களும் மதம் மாறிவிட்டதாக சொல்கிறார்கள். உண்மையா என்பது சில நாட்களில் அவர்கள் மேடை ஏறும் போது தெரிந்துவிடும். கொஞ்ச நாட்களுக்கு முன் ரஜினி வீட்டிற்கு ஒரு கிறிஸ்தவ போதகர் வந்து ரஜினிக்காக் ஜெபித்திருக்கிறார். அந்த வெவரம் இல்லாத மனுசனும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். உடனே கிளப்பிவிட்டுவிட்டார்கள் ரஜினி மதம் மாறிவிட்டார், உண்மையான இறைவனை கண்டு பிடித்துவிட்டார் என.. கடவுளை விட அதை பின்பற்றும் நடிகனுக்கு தான் இங்கே முக்கியத்துவம் இருக்கிறது. கடவுள் தான் அனைத்திலும் பெரியவர், உயர்ந்தவர்.. ஆனால் இவர்கள் கடவுளையும், மதத்தையும் ஒரு சந்தைப்பொருள் போல் நடிகர்களை வைத்து விளம்பரப்படுத்துகிறார்கள். சூர்யாவே சன்ரைஸ் காப்பி தான் குடிக்கிறாராம், நீயும் குடி என்பது போல், சாருஹாசனே ஏசுவை தான் கும்பிடுகிறாராம் என்கிறார்கள். சாமியை விட அதை கும்பிடும் நடிகனுக்கு தான் இங்கு முன்னுரிமை. கடவுளை பரப்ப வேண்டும் என்பதை விட மதத்தை விற்க வேண்டும் என்கிற எண்ணம் தான் அவர்களிடம் அதிகம் இருப்பது போல் தெரிகிறது..
ஆனால் நான் சொன்ன எதையுமே ப்ரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். “நாங்களா மதம் மாற்றுகிறோம்? இல்லை.. அவர்களாக கர்த்தரை நம்பி வருகிறார்கள்” என்பார்கள். கர்த்தரை அவர்களாக நம்பி வருகிறார்கள் என்றால் ஏன் ஒவ்வொரு ஊரிலும் மூன்று நாள், நான்கு நாள் விடுதலைப்பெருவிழா, சுகமளிக்கும் கூட்டங்கள் எல்லாம் நடத்த வேண்டும்? அந்த மேடையில் ஏன் டிராமா போட வேண்டும்? நிஜமாகவே முடவனை நடக்க வைக்கிறார்கள் என்றால் நாட்டில் இருக்கும் முட வைத்தியசாலைகளை எல்லாம் மூடிவிட்டு அதற்கு பதிலாக சுகமளிக்கும் கூட்டங்களை தெருத்தெருவாக நடத்தலாமே? இப்படி ஊர் ஊராக மேடை நிகழ்ச்சி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்த மனிதர் கூட தன் கடைசி காலத்தில் இறைவனை நம்பாமல் ஆஸ்பத்திரியில் டாக்டரைத்தான் நம்பினார். ஏன் அவர் தன்னையும் குணப்படுத்த ஒரு கூட்டம் போட்டு மேடையில் ஆண்டவரிடம் ஜெபித்திருக்கலாமே?
மதம் மாறுவதால் ஒருவனின் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால், இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை கூட எளிதாக தீர்த்துவிடலாமே? இந்திய, பாகிஸ்தான் ராணுவத்தளபதிகளை மதம் மாற்றிவிட்டால் அடித்துக்கொள்ள மாட்டார்களே? ஏன் சார், நீங்க பிரச்சனையே வராதுனு சொல்ற கிறிஸ்தவ மதத்த பின்பற்றுற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்ல தான தனி மனித வன்முறைகள், விவாகரத்துக்கள் எல்லாம் அதிகமா இருக்கு? அதுக்கு என்ன காரணம்? மதம் மாறினால் செல்வம் கொழிக்கும் என்றால் இன்று உலகில் எந்த சர்ச்சுக்கும் வெளியில் பிச்சைக்காரர்கள் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். எல்லா கிறிஸ்தவர்களும் கோடீஸ்வரராக, நோயற்றவராக மாறியிருப்பார்கள். ஆனால் இல்லையே? கிறிஸ்தவர்களும் கவலையில் தோய்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள்? பின் அந்த மதத்திற்கு மாறி மட்டும் என்ன பயன்? இன்னொரு சின்ன டவுட். இந்துக்கள் இருக்கும் ஏரியாவிற்குள் மட்டும் வந்து மதம் மாற்ற நினைக்கும் ஆட்கள், ஏன் இஸ்லாமிய மக்கள் இருக்கும் ஏரியாவுக்குள் இதை முயற்சிப்பதில்லை? மத விற்பனை வேலையில் இருக்கும் யாராவது இதற்கு பதில் சொன்னால் தேவலை.
மதம், கடவுள் இதெல்லாம் கஷ்ட காலத்தில் நமக்கு ஒரு வழித்துணையாக இருக்கவும், தைரியத்திற்காகவும் நாமே படைத்துக்கொண்டே விசயங்கள், ஒரு நம்பிக்கை, அவ்வளவு தான்.. அந்த நம்பிக்கையால் வெற்றி பெறும் போதும் அகம்பாவம் தலைக்கு ஏறிவிடக்கூடாது என்பதற்காகத்தான், வெற்றி பெற்றதற்கும் இறைவன் தான் காரணம் என்று கூறி நன்றி செலுத்துகிறோம்.. மற்றபடி உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வந்து “உன்னை நான் அதிசயங்களை காணப்பண்ணுவேன்”னு உங்கள் பெர்சனலுக்குள் நுழைவது தான் கடவுளின் வேலையா? இல்லை, இல்லவே இல்லை. கடவுள் - ஒரு வேளை இருந்தால் - இந்த அண்ட சராசரத்திற்கென்று என்று, அதன் செயல்பாடுகளுக்கென்று ஒரு நெட்வொர்க்கை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமைத்திருப்பார். இப்போது அவர் ஒரு பெரிய நெட்வொர்க் கம்பெனியின் முதலாளி. நீங்களும் நானும் அந்த நெட்வொர்க்கின் சிறு புள்ளியில் இருக்கும் இந்த சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம். அவ்வளவு தான். அந்த நெட்வொர்க்கை நாம் சிதைக்காத வரை கடவுளுக்கு உங்களையோ என்னையோ பெர்சனலாக தெரிய வாய்ப்பேயில்லை.. ஆனால் இந்த நெட்வொர்க் மனிதனாகிய நம் எல்லையைத்தாண்டி, நம் சக்தியை மீறி இருப்பது. அதனால் நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள், உங்கள் வீட்டில் யாருக்கு என்ன பிரச்சனை என்றெல்லாம் அவருக்கு தெரியாது.. நீங்கள் அதையெல்லாம் சமாளித்து, சரிக்கட்ட வேண்டும். உங்கள் பிரச்சனைகளைக்கும் தீர்வு சொல்ல, உங்களுக்காக உழைக்க கடவுள் உங்கள் வீட்டு வேலைக்காரர் இல்லை.
So, நீங்கள் எந்த மதமாக இருந்தாலும், எந்த சாமியை கும்பிட்டாலும் உங்களது அடுத்த வேளை சோறுக்கு நீங்கள் தான் உழைக்க வேண்டும். எந்த சாமியும் நீங்கள் மதம் மாறி prayer பண்ணும் அழகைப்பார்த்து, அப்படியே உருகி, உங்கள் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி உங்களுக்கு பொன்னுச்சாமி ஓட்டல் ஃபுல் மீல்ஸையோ, அஞ்சப்பரின் அயிரை மீன் குழம்பையோ கொடுக்காது.. உங்களை மதம் மாற்ற நினைப்பவருக்கும் அது தான்.. “ஆஹா நம்ம மதத்துக்கு எத்தனை பேரை புதுசா கூட்டி வந்திருக்கிறான்? இவனால தான இன்னைக்கு நம்மள ஒரு 539 பேர் புதுசா கும்பிடுறாங்க?” என்றெல்லாம் புலங்காகிதம் அடைந்து கடவுள் அவன் வீட்டிலும் காலிங் பெல் எல்லாம் அடித்து சோறு கொடுக்க மாட்டார். அவன் பார்க்கும் மத விற்பனை வேலையை பார்த்தால் தான் அவனுக்கும் சோறு.. அந்த வேலைக்கு முறையான ஊதியம் இல்லையென்றால் அவனும் வேறு வேலைக்கு போய் விடுவான்..
மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ‘கடவுள்’ என்னும் சொல்லின் நிஜமான அர்த்தம் புரிந்தவன் மதம் மாறவும் மாட்டான், மதம் மாற்றவும் மாட்டான். அந்த சொல்லின் அர்த்தம் புரியாத, அல்லது, புரிந்திருந்தாலும் அதை பெரிதாக சட்டை செய்யாத ஆட்கள், தங்களின் சுயலாபத்துக்காகத்தான் மதம் மாற்றுகிறார்கள். கடவுள் என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர்... அவர் முருகனோ, சிவனோ, ராமனோ, ஏசுவோ, அல்லாவோ, புத்தரோ... யாராக இருந்தாலும் அவர் மதங்களை கடந்தவர். இதை புரிந்து கொண்டாலே பாதி பேர் தெளிவாகிவிடுவார்கள். மீண்டும் சொல்கிறேன், ஃபேர்&லவ்லி போட்டாலும் எப்படி உங்கள் ஒரிஜினல் கலர் மாறாதோ அது போல் நீங்கள் மதம் மாறினாலும், ஜாதி மாறினாலும், உங்கள் ஒரிஜினல் கஷ்டம் மாறாது. கஷ்டம் போக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும். கணபதி படத்தை கடாசிவிட்டு கர்த்தர் படத்தை வைத்தால் உங்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம் செலவு தான் 500ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்குமே தவிர உருப்படியாய் மாற்றம் ஒன்றும் வந்திருக்காது. உங்கள் சோற்றுக்கும், நல் வாழ்வுக்கும் நீங்கள் தான் உழைக்க வேண்டும். கடவுள் உங்களுக்கான substitute அல்ல.. இந்த ஆத்திக பகுத்தறிவு இருந்தால் உங்கள் நம்பிக்கை கடவுள் மீது மட்டும் தான் இருக்கும், மதத்தின் மீது அல்ல...
இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகளின் உண்மை செயல்பாடுகளை அறிய இங்கே சொடுக்கவும்.. இதை எழுதியவர் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கிறிஸ்தவர்..
Wow. Beautifully narrated.
ReplyDeleteI could not have expressed better than this.
These people cannot tolerate Hinduism and expect us to tolerate them. Funny.
இவ்வளவு அலசியும் மாற்றம் வரும் என்று எதிர்ப்பார்க்க முடியாது...! மேற்கோள் காண்பிக்க முடிவில் உள்ள பத்தி முழுவதும் சொல்ல வேண்டும்... தலைப்பே எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது... பாராட்டுக்கள்...
ReplyDeleteநன்றி அண்ணே :)
Delete
ReplyDeleteகிருத்துவர்களை குறித்த இது மிக உண்மையானது.நான் அந்த லைனில் பல பேரை முழங்கால் போட வைத்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்.இன்று லட்சம் லட்சமாக சம்பாதிக்க ஒரு கொட்டகையும் பைபிளும் இருந்தால் போதும்.
##இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே அனைத்து மதங்களையும் அனுசரித்து வாழும் மக்கள் இந்துக்கள் மட்டும் தான்.. சிறு வயதில் இருந்தே அவர்கள் பக்கத்து வீட்டினருடன்
சர்ச்சுக்கு செல்லலாம், மசூதிக்கு சென்று தண்ணீர் தெளித்துவிட்டு வரலாம், வீட்டில் ஏசுநாதர் படத்தை மாட்டி அதற்கும் வெள்ளிக்கிழமைகளில் மாலை மாட்டி பூஜை செய்யலாம், கழுத்திலோ கையிலோ மேரி மாதாவின் படத்தை டாலராகவோ மோதிரமாகவோ மாட்டிக்கொள்ளலாம்.. வீட்டில் யாரும் தடுக்க மாட்டார்கள். சொல்லப்போனால் தங்கள் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் இன்னும் எக்ஸ்ட்ராவாக ஏசு, அன்னை மேரி, அல்லா மூவரையும் சேர்த்துக்கொள்வார்கள், அவ்வளவு தான்.. அவர்களைப்பொறுத்தவரை கடவுள் பல ரூபங்களில் இருக்கிறார் என்பார்கள், அது ஏசுவாகவும் இருக்கலாம் என்பார்கள். இந்து மதத்தின் பலமும் அது தான், பலவீனமும் அது தான். ###
மாற்று மதங்களை ஒத்துக்கொண்ட காரணத்தினால் இந்து மதம் சிறந்து விடாது.உள்ளே உள்ள குறைகள் உங்களுக்கு தெரியும்.அதோடு கோவில்களுக்குள் மாற்று மதத்தினர் வரவும் அனுமதியில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.அப்படியான கோவில்கள் நம்ம ஊர் அம்மன் கோவிலோ சுடல கோவிலோ இருக்காது.மனதில் வைத்து கொள்ளுங்கள்.மதங்கள் எல்லாமே மனிதனை மலடாக்கும் ஒரு வித போதைதான்.
அதுல இஸ்லாம்,கிருத்துவம்,இந்து என எந்த வித்தியாசமும் இல்லை.
அண்ணே இந்து மதத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன.. ஆனால் அது இந்த போஸ்ட்டுக்கு சம்பந்தம் இல்லாதது.. தனக்குள் 1008 பிரச்சனைகள் இருந்த போதும், கும்பல் குமபலாக மதம் மாற்றுவதை அது ஒரு வியாபாரம் போல் செய்யவில்லை.. மீண்டும் சொல்கிறேன், இது மதமாற்றம் பற்றிய பதிவே தவிர, இந்து மதம் தான் பெரியது என்று குறிப்பிடும் பதிவு அல்ல.. perfectஆன மதம் இருக்கவே முடியாது..
Deleteஎந்த கோயிலில் யார் விடுவதில்லை? அப்படி விடாதவனை நானும் எதிர்க்கிறேன்.. செருப்பால் அடியுங்கள், சட்டத்தின் முன் நிறுத்துங்கள்..
nam naattil moodargalum muttaalgalin ennikkai migudhi adhan kaaranamaaga inge ellaam nadakkum padhivittamaikku nandri surendran
ReplyDeleteமிகவும் சுவாரஸ்யமான நடையில் கசப்பான உண்மையை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்,
ReplyDeleteவேதனை தீரும் நாள் நெருங்கும்.
அப்பாவிகள் பலியாவது விரைவில் நிற்கும்.
தர்மம் தழைக்கும்.
அதற்கு விநாயகர் வழிகாட்டுவாராக !!
உங்கள் எழுத்துப் பணியை பாராட்டுகிறேன்
பலவீனமான மனங்கள் மனிதர்களிடம் உள்ளவரை மதங்கள் மண்ணாங்கட்டைகள் இருந்து கொண்டே இருக்கும்.. கிறித்தவம், இஸ்லாம் இரு மதமும் மத மாற்றத்தினை பிரதானமாய் கொண்ட மதங்கள், அதுவும் ஜனநாயக நாடுகளில் ஆள் சேர்ப்பே அதிகாரத்தையும், செல்வத்தையும் மத தலைகளுக்கு கிடைக்கச் செய்யும்.. அது போக சகிப்புத் தன்மை கொண்ட மதம் என இந்து வைதிக மதத்தை சொல்வது பிழையானது, பெரும்பாலான இந்துக்கள் சகிப்புத்தன்மையற்ற சாதியத்தை போற்றி பாதுகாத்து வருகின்றனர். என்ற போதும் பல் கடவுள் கொள்கை மற்றும் ஸ்திரமற்ற கோட்பாடுகள் இல்லாதிருப்பதால் இந்து மதம் எக் கடவுளையும் மக்களையும் உள்வாங்கி கொள்கின்றது. ஆனால் அவற்றுக்கும் வேட்டு வைக்க இந்து எவாஞ்சிலசத்தை ஆரிய சமாஜம், இந்துத்துவம், புது புது சாமிமடங்கள் பரப்பி வருகின்றபடியால் இந்து மதத்தின் ஏற்புக் கொள்கையும் சகிப்புத்தன்மையும் நிலைக்குலைந்தும் அரசியலாக்கப்பட்டும் வருவது, வேற்றுமைகள் நிரம்பிய வளரும் தேசத்துக்கு ஏற்புடையதல்ல என்பதே சத்தியம்.
ReplyDeleteமுதலில் ஒரு அருமையான கட்டுரையை திறம்பட எழுதியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்... சில கட்டுரைகள் போல் இதையும் ஜஸ்ட் லைக் தட் எழுதிவிட முடியாது.. அப்படி எழுதினீர்கள் என்றால் இந்துத்துவா முத்திரை குத்தி அனுபிவிடுவார்கள்... ஒரு இந்துவாக.. ஒரு காமன்மேனாக பார்வையை அழுத்தமாகவே பதிவு செய்துள்ளீர்கள்..
ReplyDeleteஎனக்கு அடுத்த வீடு தீவிர இந்து.. இன்று தீவிர கிறிஸ்தவம் தற்போது அவர்களுக்கு அடுத்தடுத்த வீடுகளிலும் இந்த முயற்சி நடந்து வருகிறது.. என்னதான் எவ்வளவு பேர் தான் விழிப்புணர்வு பிரசங்கம் செய்தாலும் போறவர்களை தடுக்க முடியாது... சில சமயங்களில் இதனை நினைக்கும் போது இருக்கிறது...
அல்ரெடி இந்துத்துவா முத்திரை குத்திட்டாய்ங்களே நமக்கு.. சரி முழு இந்துத்துவாவா மாறிருவோம்னு தான் இந்த பதிவு.. இந்த பதிவை படித்து விட்டு இதுவரை மூன்று கிறிஸ்தவ நண்பர்கள் கேட்டு விட்டார்கள், “நீ RSS ஆ?” என்று. அதாவது ஒரு இந்து தன் பக்க ஞாயத்தை கேட்டால், மனக்கஷ்டத்தை சொன்னால், தனக்கு இழைக்கப்படும் அநீயை பேசினால் அவன் காவித்தீவிரவாதி, RSS என்று அழைக்கப்படுவான்.. ஆனால் அவன் நம்பிக்கைகளை மொத்தமாக சிதைப்பவர்கள், அசிங்கப்படுத்துபவர்கள் சிறுபான்மையினர், பகுத்தறிவாளர்கள் எனப்படுவார்கள்.. அவர்கள் அப்படி நம்மை புண்படுத்துவதை சிறுபான்மை உரிமை என்பார்கள்..
Deleteபலரும் படிக்க வேண்டிய மிகச் சிறந்த பதிவு.
ReplyDeleteதங்கள் துணிவைப் பாராட்டுகிறேன்.
நல்ல கட்டுரை...... பாராட்டுகள்....
ReplyDeleteஎந்த மதத்தினையும் அடுத்தவர்கள் மீது திணிப்பது சரியல்ல...
"கடவுள் என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர்... அவர் முருகனோ, சிவனோ, ராமனோ, ஏசுவோ, அல்லாவோ, புத்தரோ... யாராக இருந்தாலும் அவர் மதங்களை கடந்தவர். இதை புரிந்து கொண்டாலே பாதி பேர் தெளிவாகிவிடுவார்கள்"
ReplyDeleteநண்பரே, உங்கள் கட்டுரையின் பொன்வரிகள் இவைதான். இந்த உண்மை எல்லோருக்கும் புரியும்போது, ஜாதி, மதங்கள் எல்லாமே இல்லாமல் ஒழிந்துவிடும்.
இந்து மதமும் இதே காரியத்தில் ஈடுபடலாம்.
ReplyDeleteபிரச்னை என்னன்னா வர்றவனை எந்த சாதியில சேக்குறது ?
மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க பாஸ்.
எனக்குப் பிடித்த வரிகள்:
ReplyDelete//ஒரு நடிகர் கூட “கிறிஸ்டியன் ப்ராமின் அசோசியேசன்” என்று ஆரம்பித்திருப்பதாக கேள்வி..//
யாருங்க அவரு ... சாருஹாசனா?அவர் சும்மா ஒரு விளம்பரப் படத்தில் நடித்தார் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
//கொஞ்சம் அறிவை பயன்படுத்தி யோசித்தால் மதம் மாறுவது வேஸ்ட் என்று தெரிந்துவிடும். // அறிவைப் பயன்படுத்தினால் மதமே வேஸ்ட் என்று புரிந்து விடாதா?
//கடவுளை பரப்ப வேண்டும் என்பதை விட மதத்தை விற்க வேண்டும் என்கிற எண்ணம் // அப்போதானே உங்களுக்கு ‘நல்ல’ சுவனமெல்லாம் கிடைக்கும்!
//ஏன் இஸ்லாமிய மக்கள் இருக்கும் ஏரியாவுக்குள் இதை முயற்சிப்பதில்லை? // அது வியாபாரப் போட்டியாகி விடுமல்லவா?
//உங்களுக்காக உழைக்க கடவுள் உங்கள் வீட்டு வேலைக்காரர் இல்லை.// !!!
//‘கடவுள்’ என்னும் சொல்லின் நிஜமான அர்த்தம் புரிந்தவன் மதம் மாறவும் மாட்டான், மதம் மாற்றவும் மாட்டான்.// அவனுக்கு மதமே தேவையில்லாது போய் விடும்.
அருமையான கட்டுக்கதை.தொடக்கமே பொய்யில் தான் தொடங்குகிறது.அதுவரை நல்லா படித்த உங்களுக்கு முட்டை எடுக்கிற அளவுக்கு மண்டை மழுங்கி போச்சுன்னு சொன்ன கொஞ்சம் காமெடியா இல்லை.ரோட்ல சும்மா போறவனை எல்லாம பிடிச்சு மதம் மாத்துரானுக.இது சிலரை மகிழ்ச்சி அடைய செய்யும் .சிலருக்கு வேதனயை கொடுக்கும் .ஆனால் இந்த கட்டுரை வேற எந்த பலனையும் தராது
ReplyDeleteஎன் வாழ்வில் நடந்ததை பொய் என்று சொல்ல நீங்கள் யார் சார்? என்னை யாரென்று இந்த பதிவை தாண்டி தெரியாத நீங்கள் என் வாழ்க்கையில் நடந்ததை பொய் என்று எப்படி முடிவு செய்யலாம்? லூசுத்தனமாக உளறுவதை நிறுத்துங்கள் முதலில்..
Delete//ரோட்ல சும்மா போறவனை எல்லாம பிடிச்சு மதம் மாத்துரானுக// வேற யார மாத்துறாங்க? உங்க குடும்பம் எத்தனை வருடத்துக்கு முன் மாறியது மிஸ்டர்.வின்ஸ் ராஜ் @ வின்சென்ட் ராஜ்?
பூக்கடைக்கே விளம்பரம் தேவையில்லை எனும் பொழுது எல்லாம் வல்லவனுக்கு பிரச்சாரம் தேவையா ?போலி மதவாதிகள் இவர்கள் !
ReplyDeleteதாங்களின் விளக்கம் அருமை !
த ம +1
புராடஸ்டாண்ட் கிறிஸ்துவர்களைப் போலவே 'அடுத்த பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் எனக்கு முட்டை கிடைத்திருந்தது' என்பதுபோன்ற உண்மையல்லாத உதாரணங்களைக் கொடுத்திருந்தபோதிலும் எழுத எடுத்துக்கொண்ட நோக்கத்தையும் எழுதியிருக்கும் பொருளையும் சரியாப் புரிந்து தெளிந்து............., மற்றவர்களுக்குப் புரியவும் தெளியவும் எழுதப்பட்ட பதிவாகவே இருக்கிறது. பாராட்டுக்கள்.
ReplyDeleteநான் முட்டை வாங்கியதை நம்புவது ஏன் பலருக்கும் கஷ்டமாக இருக்கிறது என்று தெரியவில்லை.. வேண்டுமானால் என் பள்ளி முகவரியை தருகிறேன்.. போய் செக் செய்து கொள்ளுங்கள்.. இது போன்ற முக்கியமான பதிவில் பொய் சொல்லும் அளவிற்கு நான் தரம் தாழந்தவன் அல்ல..
Deleteஅருமையான கட்டுரை.
ReplyDelete//அதிலும் மேத்ஸ்சில் முட்டை// கட்டுரைக்கு மட்டும் சூப்பரா அழகு சேர்க்குது.. கடவுள் பார்துக்குவார்னு நீங்க பேப்பர ஆன்னு பார்த்து இருந்திங்களா பாஸ்.. என்ன பாஸ் இப்படி இருந்த ஒருவரோட வரிகள எப்டி முழுமையா ஏற்க முடியும் சிறந்த கருத்துக்கள்னு
ReplyDelete//அது எல்லாமே சாத்தான்.. // கிறிஸ்தவர்கள் மட்டும் இப்படி கூறுவதில்லை..
//நீ ஏசப்பாவ கும்பிடுறது தெரிஞ்சதும் அந்த சாத்தான் எல்லாரையும் இப்படி பழிவாங்குது// இந்த வரியை ஒரு 7 வயசு பிள்ளை கிட்ட போய் சொல்லுங்க அதுவே இதை நம்பாது.. ஜாலிக்காசும் எடுத்துட்டு போய்டும்.. இங்கையும் நீங்க பல்ப் தான்.. (நான் பல்ப் என்பது எப்போதும் மெச்சூரிட்டி இல்லாத ஒருவரின் நிலையை விழிக்கவே).. இப்படி இருந்த ஒருவரோட வரிகள எப்டி முழுமையா ஏற்க முடியும் சிறந்த கருத்துக்கள்னு
//அட பொங்கல் அன்று கரும்பு கொடுத்தால் கூட திங்க மாட்டார்கள்.. கேட்டால், சாத்தான் இருக்குமாம் அதில் எல்லாம்.. // நீங்க எப்படி பட்டவர்களை சந்தித்தீர்கள் என்று தெரியவில்லை.. இவர்கள் நீங்கள் குறிப்பிடுவதில் 10% கூட இருக்க மாட்டார்கள்..
//இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே அனைத்து மதங்களையும் அனுசரித்து வாழும் மக்கள் இந்துக்கள் மட்டும் தான்..// இங்கு தான் உங்க கட்டுரையின் நோக்கமும் புரிந்தது..
//அவர்கள் எல்லாம் ஏசுவை உண்மையாக நம்பவில்லை. அதனால் தான் செவிடாக, முடமாக, குருடாக இருக்கிறார்கள். உண்மையாக நம்பினால் மட்டுமே குணமாகும்// என்ன பாஸ் ரொம்ப அப்பாவியா இருக்கீங்க பொடனில ரெண்டு தட்டு தட்டி என்ன கருமம்னு கேட்காம,
ரொம்ப பாதிக்க பட்டு இருக்கீங்க ஜி.. ;-)
இதை தவிர்த்து கட்டுரையின் பல இடங்களில் ஒத்து போகிறேன்.. அதை தாண்டி முக்கியமாக இக்பால், சதிஷ் கருத்துகளையும் சேர்த்து..
மற்ற படி இதுவும் குறிப்பிட்ட இன்னொரு மதத்துக்கான பிரச்சாரம் தான்.. ஆனால் என்ன sentiment attack கிடையாது..
நான் முட்டை வாங்கியதை நம்புவது ஏன் பலருக்கும் கஷ்டமாக இருக்கிறது என்று தெரியவில்லை.. வேண்டுமானால் என் பள்ளி முகவரியை தருகிறேன்.. போய் செக் செய்து கொள்ளுங்கள்.. இது போன்ற முக்கியமான பதிவில் பொய் சொல்லும் அளவிற்கு நான் தரம் தாழந்தவன் அல்ல..
Deleteபாஸ் என் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவேயில்லையே உங்களை? 7 வயசு பிள்ளை கூட நம்பாதா? அதனால் தான் 40,50 வயது ஆட்கள் கூட அதை நம்பி மதம் மாறுகிறார்களா?
அடுத்த பொங்கல் அன்று அனைத்தையும் வீடியோ எடுத்து உங்களுக்கு அனுப்புகிறேன்..
பதிவை பற்றி பேசுவதை விட்டு, எழுதபவனை தாக்கும் உங்கள் நோக்கமும் புரிகிறது..
//எழுதபவனை தாக்கும் உங்கள் நோக்கமும் புரிகிறது.. //
Deleteஏண்ணே இப்படி?? ;-)
இல்லை முதல்ல உங்க தைரியமான எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.. ஆனா இந்த பதிவை குறிப்பிட்ட மதத்தவர்கள் தங்களுக்கு சார்பாகவும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் யூஸ் பண்ணலாம்.. ஒரு வாசகரா பாருங்க.. அதனால தான் அப்டி தோணிச்சு.. சொன்னேன்.. தட்ஸ் ஆல்.. மற்ற படி எழுதினவரை தாக்கி எல்லாம் கிடையாதுங்க ஜி.. ;-)
Deleteவிடுங்கள் விடுங்கள்.. கிறிஸ்தவர்களை இந்த கட்டுரை தாக்கவில்லை.. மதம் மாற்றுபவர்களை தான் தாக்குறது.. இதைப்படித்து ஒருவருக்கு மனம் உறுத்தினால் தவறு கட்டுரை மீதோ என் மீதோ அல்ல, அவர் மீது தான்
Delete//மதங்கள் எல்லாமே மனிதனை மலடாக்கும் ஒரு வித போதைதான்.
ReplyDeleteஅதுல இஸ்லாம்,கிருத்துவம்,இந்து என எந்த வித்தியாசமும் இல்லை.// DITTO ;-)
மதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு
ReplyDeleteஎங்கள் அருமை ராம்குமாரின் அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் Ram Kumar
எல்லாம் உங்கள் ஊக்கமும் ஆசிர்வாதமும் தான் சார் :-)
Deleteஎன்னுடய பெயரும் வாழ்வும் இந்த கட்டுரையுடன் பெரிதும் ஒத்துப் போகிறது :)
ReplyDeleteதைரியமான பதிவு...நல்லதொரு அலசல்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
கிருத்துவம், இந்து, முஸ்லிம் என அணைத்து மதங்களுமே மனிதனால் உருவாக்கப்பட்டவை இவற்றில் என மதம் சிறந்தது அவர்கள் மதம் தவறானது என்று போட்டிபோட்டு கொள்வதில் எந்த பயனும் இல்லை. இந்த மத வெறியால் தான் குஜராத்தில் அவ்வளவு முஸ்லிம்களும் இந்துக்களும் இறந்தார்கள் பாகிஸ்தானில் ஆலயத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பைபிள், வேதம், ராமாயணம், மகாபாரதம் என்று இவர்களின் கதைகளை படித்தாலே தெரிகிறது அது ஒரு மிகையான கட்டுக்கதை என்று ஆனால் அதை அறிவுள்ள மனிதன் நம்புவது தான் ஆச்சரியாமாக உள்ளது. நான் கடவுள் என்று ஒருவர் இல்லை என்று சொல்லவில்லை நம்மை தாண்டி ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக அது இயேசுவோ, சிவனோ, அல்லாவோ கிடையாது.
ReplyDeleteகிட்டத்தட்ட உங்கள் கருத்தும் தான் என் கருத்தும்.. அதற்காக மற்றவர்களின் மத நம்பிக்கையை தூற்றவோ, கோழி பிடிப்பது போல் அவர்களை பிடித்து தன் மதத்துக்கு இழுத்துப்போடுவதோ முறை இல்லையே?
Deleteஉங்களிம் இருந்து இப்படி ஒரு தீர்க்கமான சரியான நெத்தியடியான பதிவை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது போன்ற ஒரு கட்டுரையை நான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனக்குள்ளும் இது போன்ற சம்பவங்களும் கோவங்களும் இருக்கிறது. ஆனால் உங்கள் அளவுக்கு எழுத முடியுமா என்று தெரியவில்லை, வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி அண்ணே :)
Deleteபொடனில நாலு சாத்து சாத்துன மாதிரியான எழுத்து நடை ... இந்த மாதிரி சாமாச்சாரங்களுக்கு இப்படித்தான் இருக்கணும் ...
ReplyDeleteதீர்க்கமான நடையில் தெளிவான எழுத்து ... ஊடால சொன்ன குட்டி கதை செம பொருத்தம் ..(எழவு விழாத வீட்டில் சாப்புட சொன்னது ) உங்களின் கோபம் தொடரட்டும்
பொடனிலலாம் சாத்த முடியாது நண்பா.. சிறுபான்மையினர் உரிமை அது இது என்பார்கள்..
DeleteNALLA PATHIVU SIVAKASIYARE VAZHTHUKKAL
ReplyDelete1. கிறிஸ்துமஸுக்காக வீட்டிற்கு அழைத்து கேக் கொடுத்த நண்பரின் தாயார் நீங்களெல்லாம் சர்ச்சுக்கு வரவேணும் என்று பிரச்சாரம் செய்த பெந்தகோஸ்ட்.
ReplyDelete2. இந்துக் கோவில்களுக்குத் தயங்காமல் வரும் பல தலைமுறை கண்ட ரோமன் கத்தோலிக்க நண்பர். இவர்தான் ஏசுநாதர் கடவுள் அல்ல, இறைத்தூதர் மட்டுமே எனவும் யூத, கிறித்தவ, இஸ்லாமிய தொடர்பையும் (மோசஸ் வழித்தோன்றல்கள்) விளக்கியவர்.
3. கல்லூரியில் கிறித்தவத்தை வரித்துக்கொண்ட, தான் மிகச்சிறந்த விசுவாசி என நிரூபிக்க முயலும் முதல் தலைமுறை நண்பர்.
4. பெருமாள் கோவில் மடப்பள்ளியில் மதிய உணவாக வாங்கி வந்த எலுமிச்சை, புளியோதரையை 'இது கடவுளுக்கு படைத்தது அல்லவே' என பலமுறை கேட்டு உண்ணத் தயங்கிய கிறித்தவர்.
நண்பர்கள் பலர், குணங்கள் பலவிதம்.
துணிச்சலான கட்டுரை. தெளிவான கருத்துக்கள். நியாயமான கோபம்! பாராட்டுகள்....!
ReplyDeleteநெத்தியடி! கட்டுரை. இந்த மத மாற்ற கும்பலால் தமிழன் தன் அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறான். இவர்களை கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்த ஓரு நல்ல இயக்கம் உருவாக வேண்டும். இல்லை என்றால் சீக்கிரமே தமிழகத்தில் இந்த மத மாற்று கும்பல்களால் மத கலவரம் உருவாக வாய்ப்புள்ளது.
ReplyDeleteஇயக்கம் வேண்டுமா? இந்த ஒரு கட்டுரைக்கே என்னை RSS முத்திரை குத்தப்பார்க்கிறார்கள்.. இயக்கம் எல்லாம் ஆரம்பித்தால் ஏதோ சிறுபான்மையினரை எல்லாம் நாம் கொல்லப்போவதாக சொன்னாலும் சொல்வார்கள்..
Deleteபெரும்பான்மை மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை பேசுவதை கூட வன்முறை, அடக்குமுறை என்று சொல்லும் நாடு தான் இது.. துத்தேறி..
இயக்கம் வேண்டுமா? இந்த ஒரு கட்டுரைக்கே என்னை RSS முத்திரை குத்தப்பார்க்கிறார்கள்.. இயக்கம் எல்லாம் ஆரம்பித்தால் ஏதோ சிறுபான்மையினரை எல்லாம் நாம் கொல்லப்போவதாக சொன்னாலும் சொல்வார்கள்.. ///// அவனுக கிடக்குராணுக லூசுப்பயலுக :) இந்த பதிவை பார்த்து ஒரு கிறிஸ்தவர் திருந்தினாலும் உங்களுக்கு வெற்றியே :)
Deleteஇவன்,
மதங்களில் மூழ்காதவன்
proud to be a hindu
ReplyDeleteகட்டுரை நீளமாக இருந்தாலும் விரிவாக அழகாக எழுதியுள்ளீர் கன்னடத்துல ஒரு பழமொழி உண்டு (இத்துதன்ன இத்தங்கே ஏலுத்ரே எத்பந்து எதெகே ஒத்னந்தே ) அதாவது இருப்பதை இருப்பதாக சொன்னால் எழுந்துவந்து நெஞ்சிலே உதைத்தானாம் இந்தபழமொழி இங்கே எதிரானகருத்தை சொல்பவர்களுக்கு அழகாக பொருந்தும் விவேகானந்தரே அதைத்தான் சொன்னார் எங்கநாட்டிற்கு மதமோ கடவுளோ வேண்டாம் அவைகள் ஏற்கனவே நிறைய இருக்கிறதென்று
ReplyDeleteஇந்த பதிவிலேயே எத்தனை சண்டைகள் :( மனிதனால் உருவாக்கப்பட்டவை பெரும்பாலும் மனிதனின் வாழ்க்கையில் சதி செய்கின்றன :( விஞ்ஞானமும் சரி மதங்களும் சரி :(
ReplyDeleteஅறிவைப் பயன்படுத்தினால் மதமே வேஸ்ட் என்று புரிந்து விடாதா?
ReplyDeleteஉங்கள் பதிவுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகார வார்த்தைகள். விருதுக்குச் சமமான வாசகங்கள். பல இடங்களிலும் பகிரப்பட வேண்டிய கட்டுரை இது.
மிக்க நன்றி சார்..
DeleteSo, நீங்கள் எந்த மதமாக இருந்தாலும், எந்த சாமியை கும்பிட்டாலும் உ
ReplyDeleteங்களது அடுத்த வேளை சோறுக்கு நீங்கள் தான் உழைக்க வேண்டும்//
மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ‘கடவுள்’ என்னும் சொல்லின் நிஜமான அர்த்தம் புரிந்தவன் மதம் மாறவும் மாட்டான், மதம் மாற்றவும் மாட்டான். ///
அருமையான எழுத்து தட..தட .. என வைகை எக்ஸ்பிரஸ் போல சரளமான வேக நடையில் அருமையான கட்டுரை .// பெரும்பாலும் மனதளவில் வீக்கான வறுமையில் இர்ருப்பவர்கள் தான் இலக்கு //
இப்போதெல்லாம் எல்லாருமே அவர்களின் இலக்கு தான்.. சும்மா இருப்பவனை கூட, அவனுக்கு ஒன்றுமே இல்லை என்பது போல் நினைக்க வைத்து, மதம் மாற்றுகிறார்கள்
Deletedear all.. Idhu matha maatram alla.. Manamaatramea..! Unmaiyaana iraivanai kaanum satthiya vazhi..! Naanum appadi unarndhu maariyavan.! Maatrappattavan all..! Ariyaadha kaalangalil ungal kondhalippai poala pala madangu kothitthavan..! Aanaal unmaiyileayea athai unara iraivanea arula veandum..! Mudhalil christian endru alla.. Anaivarum kadavulin pillaigal.. Avlavuthaan.! Manithan kondu vandhathea satthiyatthirkku appaarpatta mathangal.! Oru irai vazhi idhuvea.! Satthiya vazhiyai pinpatrugiravargal athai unarndhu nadakkaamal adhai poarthi kondu nadippavargal palar.. Andha kuraigalea namakku therigiradhu.. Unmaiyai unara neengal veadhatthai muzhumaiyaaga vaasitthu paarungal.. Andha iravan ungal vaazhvil velitchamaaga iruppaar.. God bless you all.!
ReplyDeleteMariappan'S.
Email:friendsforall2010@gmail.com
உண்மையை உணர நான் ஏன் வேதத்தை வாசிக்க வேண்டுமா? சார் எது உண்மைனு மொத சொல்லுங்க.. அப்புறமா வாசிக்கலாமே வேண்டாமானு நான் சொல்றேன்.. நீங்கள் சொல்லும் உண்மையை விட இந்து மதத்திலும் இஸ்லாத்திலும் பல உண்மைகள் இருக்கின்றன வாழ்க்கை நெறிகளைப்பற்றி.. அது உங்களுக்கு தெரியுமா முதலில்?
Deleteநீங்கள் இந்துவாக இருந்த போது இந்து மத வேதங்களை படித்திருக்கிறீர்களா சார்? அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றால் அப்படியே விட்டு விட வேண்டியது தானே? ஏன் மதம் மாற்ற வேண்டும்? கடவுள் தன்னை கும்பிடாதவர்களை, ஸாரி, ஜெபம் செய்யாதவர்களை எல்லாம் நரகத்திற்கு அனுப்பி விடுவார் என்றால் அவர் நிஜமாகவே கடவுள் தானா? உண்மையான சாத்தானே அவர் தான், அப்படி செய்தார் என்றால்..
மதுரை செல்லூர் இல் பாதி பேரை மாத்திட்டாங்க பாஸ்!!!
ReplyDeleteமதம்தான் மாறுகிறதே தவிர அவரவர் முந்தைய இடங்களில் இருந்த மனநிலையும் எண்ணங்களும் அப்படியேதான் தொடர்கிறது.
ReplyDeleteஇந்து மதத்தில் ஒதுக்கப் பட்டவர்களாய் வாழ்வதை விட கிறித்துவ மதத்தில் சம நிலையில் வாழ முடியும் என்று சிலர் நம்புகிறார்கள். அது நியாயமானதும் கூட ஆனால் அங்கும் பேதம் பார்க்கப் படுவது வேதனை . மதம் மாறிய ஆதி திராவிடர்கள் கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருகிறார்கள்.
ReplyDeleteஒரு வேளை அது நடந்தால் கிறித்துவத்தில் தாழ்வாகக் கருதக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு நிரந்தரமாக இன்னொரு பிரிவு உருவாகி விடும்.
கட்டுரையை முடித்தவிதம் சரியில்லை. மதம் என்றால் என்ன என்றே தெரியாதவர் முடிக்கும் விதம். இப்படி முடித்தபிறகு, உங்களை இந்து என்று சொல்லிக்கொண்டு பின்னூட்டங்களில் உணர்ச்சிகரமாக இந்துமதத்திற்காகப் பேசுகிறீர்கள். மதங்களுக்கு அப்பாற்பட்டவர் கடவுள்; உழைத்தால்தான் சாப்பாடு. மதமே வேண்டாமென்பவருக்கு இந்துமதம் மட்டும் எப்படி வந்தது? அதையும் தூக்கிப்போட்டுவிட்டாலென்ன?
ReplyDeleteமதங்களைப்பற்றிய பதிவெழுதும் முன் - மதமாற்றமும் மதங்களைப்பற்றியதுவே- மதங்கள் ஏன் உலக மக்களுக்கு அவசியமாகிறது? அதனால் அவர்களுக்கு என்ன கிடைத்தது? கிடைக்காத ஒன்றை அவர்கள் பிடித்துக்கொண்டிருப்பார்களா? எனபதையெல்லாம் நன்கு ஆராய்ந்து தெளிந்த பின்னரே பதிவெழுத வேண்டும்.
அருுமைையான பதிவுு இது. வாழ்த்துுக்்கள்். தெெளிிவான கருுத்துுக்கள்், மத விியாாபாரிகளுுக்்கு செருுப்்படிி. ஆயிிரம்் குுறைகளிிருுந்்தாாலுும்் fullest freedom in your religious ு only byம்தி இந்து மதம்் ம ட்டுமே.
ReplyDeleteஅண்ணாச்சி!
ReplyDeleteநீங்க சிவகாசிக்காரரு. உங்க சாதிய நீங்க சொல்லாமலே நான் கண்டு பிடிச்சுடுவேன். உங்க மதத்தையும்தான். இருந்துட்டுப் போகட்டும்.
ஒரு சிலர் இதுபோல் மதம் மாற்றுவது உண்மைதான். ஆனால் அந்தக் காலத்திலே நாடார்கள் முன்னேறியதற்கு மதமாற்றமும் (மும்னு சொல்றேன் கவனிங்க) ஒரு காரணம். ஏன் என்றால் அவர்களுக்கு மதம் பெரிய மேட்டரே கெடையாது. சாதிதான் முக்கியம். அதனால் மதம் மாறுவதை எல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டா.
அதேபோல் தேவர்கள், தாழ்த்தப் பட்டவர்களும் மாறி இருக்காங்க. என்னதான் இவர்கள் மூவருக்குள்ளும் தன் சாதி வெறி இருந்தாலும், ஒரே சர்ச்ச்க்கு இவர்கள் போகலாம். ஒரே பள்ளியில் சக ஆசிரியர்களாக பணியாற்றலாம். பொதுவாக இவர்கள் சாதியைச் சொல்லி யாரும் "இன்சல்ட்" செய்வதில்லை என்பதே உண்மை.
மேலும் பலர், முக்கியமாக பெண்கள் கிருத்த்வத்தை விரும்பிதான் மாறுகிறார்கள். அவர்களுக்கு ஜபம் செய்வது, ஜீசசை வணங்குவது எல்லாம் பிடிக்கும். நீங்க சொல்வதுபோல் "பச்சையாக" மாற்ற முயல்பவர்கள் அப்பாவிகள். இப்படி உங்களிடம் "ஊரறிய திட்டு வாங்குறாங்க" பாருங்க. ஆனால் மதம் மாறும் அனைவரும் அப்படியல்ல.
When they are depressed after a "great loss", change of lifestyle (change in religion) help some people. New community, new friends, new "temple", new God..all help them lead a peaceful life. That's the reason they mainly convert themselves. If money is involved, a job is given for changing their religion, I dont see a problem there either. Because, there is no God, how does it matter to an atheist when one moves from one religion to another and BENEFITS from that?
anyway, I will continue later! I have to go now!
Excellent post Ram.
DeleteThere are few facts:
1. Spiritualism is different; religion is different. The objective of religion is to show the path to God realization.
I believe in God. But, I do not follow any specific religion. I do not need a intermediary (poojari/imam/priest) for my communion with God. It is direct.
I have corroborated my personal experiences with other realized beings of all religions and found that, my experience is the same as theirs.
Quit religion, seek God!
Today, people are stuck to religions and have forgotten the God realization part completely.
2. Religion = Rules
Every path have got its own codes of conduct - similar to a club, association or any group activity.
All the fight that is happening today is, whose rule is right.
3. No one is right or wrong.
There are as many paths to a destination and there is no one way to Realize. Every path is designed for a Seeker at a particular stage of entry. From rookies to fairly advanced beings.
God has intelligence that is far beyond the reach of our small, petty mind/intelligence.
No one can claim the right to Godhood.Example, God will listen to me/my religion AND punish others.
God listens to me. period.
4. Where do I find God?
Within myself. As the feeling of existence. As the feeling of I.
As a supreme force that is called Life.
No Life. No existence. No outer world.
First comes Life. Then the consciousness called I. Then Mind. Then thoughts, then the outer world manifests.
Just think (does not require a religion), If YOU do not exist, for whom the world exists? Aham Brahmasmi!
I again repeat, grow out of religions.
Psycho's comment on his blog about this post..
Delete//****புதிய கோணங்கி ! said...
வழக்கம் போல............ :))
இந்த தடவை ராம்குமாரா ???***
புதிய-fucking-கோணங்கி!
If shatrriya-hindu-fucking ramkumar nadar does not allow me to debate in his fucking blog, AND REMOVES all my comments as an "administrator", what the fuck should I do?
Let him jerk off in his own blog. You can, go, help him too! lol//
வழக்கம் போல மெண்டல் சூடாகிடிச்சு.. இதுல புதிய கோணங்கி நு ஒரு கேன மெண்டலுக்கு ஒரு கமண்ட்ட போடவும் மெண்டல் அவரையும் திட்டுது.. அதென்னப்பா சிவகாசின்ன ஒடனே ராம்குமார் நாடார்னு சொல்லுது ? சிவகாசில வேற ஜாதியே இல்லியா? சரி விடு நான் நாகர்கோயில் காரன் , நான் என்ன ஜாதின்னு அந்த சைக்கோ கண்டுபிசிடுவானா ? பகுத்தறிவு பகுத்தறிவுன்னு கத்திகிட்டே ஜாதி மத பேதம் பாக்குறதுல சைக்கோ மண்டையன் வருண்தான் பெரிய ஆளு.
அட விடுங்க பாஸ்.. பௌர்ணமி டைம்ல.. அதான் அந்த ஆளுக்கு கொஞ்சம் ஓவர் ஆயிருச்சி.. ஃப்ரீயா விடுங்க.. பகுத்தறிவு நொன்னைகள் தான் மதம், ஜாதி சண்டைகளுக்கு மூலாதாரமே.. கடவுள் இல்லைனு சொல்றவன் கோயிலை இடிச்சது இல்லனு பீத்துவாய்ங்க.. கோயிலை இடிச்சுட்டா தான் அவைங்களால பொழப்ப பாக்க முடியாதே? அதனால எல்லா மத வழிபாட்டுத்தலங்களும் சிறப்பா இருக்கணும்.. அவைங்க சண்டை மூட்டி பொழப்ப பாக்கணும்னு தான் நெனைப்பாய்ங்க.. ப்ளடி...
Deleteஎப்பவும் யாரையாவது திட்டுவது தான் வருணோட வேலை. ்அவன் ப்லாக் முழுவதும் வெறும் கோள் மூட்ற பதிவுகள் தான். போதாக்குறைக்கு ஐயர் பாஷை பேசுறதா நெனச்சு ெஎரிச்சல் பண்ணுவான்!
Deleteசிறப்பான பகிர்வு
ReplyDeleteRomba super sir.......excellent. ungaloda intha pathivuku piraku than ennaku en yesapavukaga yethavathu seiyanum.nu ninaikiren.. padikama test eluthi 0 vaangunathuku kadavul mela thapu solringa...ungaloda intha pathivuku. Wishes soluravanga...ippadi ethavathu oru mutal thanatha panavanga than sir... ithu varaikum.yesapa .va unmaiiya nesichingana appo athoda. Balan kidaichirukum....sir..ulagathula ulla christians ellarum intha maathiri panrangana athukana arthathai purinchipanga sir.over.a elthureekinga.
ReplyDelete****இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகளின் உண்மை செயல்பாடுகளை அறிய இங்கே சொடுக்கவும்.. இதை எழுதியவர் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கிறிஸ்தவர்..***
ReplyDeleteஇதைத்தான் தந்தை பெரியாரும் செய்தார். பார்ப்பணர்களும் இந்து மத வெறியர்களும் இந்த கிருத்தவரை பாராட்டுவான், ஆனால் அவர் மதத்தில் பார்ப்பனர்கள் செய்த அயோக்கியத்தனத்தை சொன்னால், பெரியாரை வில்லனாக்கி விட்டான்!
Do you respect Periyaar, ramkumar??
You can not. Because it is obvious you worship hinduism, you can not appreciate periyaar for criticizing stiny part of hinduism.
Now why the hell you quote another christian who criticizes his own religion.
Dont think like a Paappaan? Do you understand. Scratch you BRAIN and THINK!
உங்களை போன்ற பகுத்தறிவாளர்களாக காட்டிக்கொள்பவர்கள் பேசும் பிரிவினைவாதம் மிக அழகாக தெரிகிறது.. உங்கள் வேஷத்தை எல்லாம் ஒரு காலத்தில் சிலர் நம்பினார்கள்.. இன்னமும் நம்புவார்கள் என நினைக்க வேண்டாம், வருண்....
DeleteThis comment has been removed by the author.
DeleteDear Ramkumar,
DeleteGreat job..Mr.varun-n moolai eppadi maratthu ponathu endru araichi panna vendam....Ivargaluku Bassism pesinal mattum pothum.Velipadaiyaga Matra mathathin kadavul-galai SATHAN-ena kooruvathu,Prasatham-galai ilivu paduthi intha ulagathaye puthai-kirargal. Madham,Kadavul irandai vida Manitham-than Natil elaigaluku thevai.Matru mathathai ilivu inthu mathathirkum paravinal en thai natin nilamayai ninaithu-kooda parka-mudiyavillai.Oru mathathil Thathu-vangal purintha piragu matham maruvathu, thani-manitha sudhanthiram & urimai. MATHAM-MARUVATHU,MATRU-MATHATHAI ILIVU-PADUTHUVATHU udanadiyaga nirutha-padavendum...Don't even think about Mr.Varun's Worrrr.....you pls continue....Great job...
***ஜார்க்கண்டில் இவர்கள் செய்த ஏமாற்று வேலைகளை அறிய இங்கே சொடுக்கவும்..***
ReplyDeleteஅட அட அட. சங்கர் ராமன் னு ஒரு ஆள கொன்னுபுட்டானுக!! கொன்னவன் பூராம் சுதந்திரமாத் திரிகிறான்.
இதுதான் இன்றைய ஹிந்து மதம் தலைதூக்கி நிற்கும் உம்முடைய ஹிந்து தேசம்.
நீர் ஜார்கண்ட்ல ஓயி என்னத்தை கிழிக்கிறீர்?
இந்தமாறி கொலைகாரப்பயளுகல கேக்க இங்கே சொம்படிக்கும் ஒரு ஹிந்து வெரியனுக்கும் வக்கில்லை??!! அது ஏன்??
***மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ‘கடவுள்’ என்னும் சொல்லின் நிஜமான அர்த்தம் புரிந்தவன் மதம் மாறவும் மாட்டான், மதம் மாற்றவும் மாட்டான். அந்த சொல்லின் அர்த்தம் புரியாத, அல்லது, புரிந்திருந்தாலும் அதை பெரிதாக சட்டை செய்யாத ஆட்கள், தங்களின் சுயலாபத்துக்காகத்தான் மதம் மாற்றுகிறார்கள்.****
ReplyDeleteமதம் முக்கியமில்லை கடவுள்தான் முக்கியம்னா, மதம் மாறி அவன் அந்த புதிய மதத்தின் மூலம் கடவுளை வணங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை, அண்ணாச்சி?
நீங்க இந்துமதத்தை விட்டு எல்லாரும் ஓடிப்புடுவானுகளோனு பயப்ப்படுறேளா?? எதுக்கு இந்த பயம்? கோவம்? வருத்தம்?
**கடவுள் என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர்...***
அப்புரம் ஏன் நீங்க ஹிந்துனு சொல்லிக்கிட்டு திரிகிறீங்க. முருகனையும், பிள்ளையாரையும், மட்டும் வணங்குறீங்க???
***அவர் முருகனோ, சிவனோ, ராமனோ, ஏசுவோ, அல்லாவோ, புத்தரோ... யாராக இருந்தாலும் அவர் மதங்களை கடந்தவர். இதை புரிந்து கொண்டாலே பாதி பேர் தெளிவாகிவிடுவார்கள். மீண்டும் சொல்கிறேன், ***
சும்மா ஏமாத்திக்கிட்டு திரியாதீங்க! உங்களுக்கு இந்ஹ்டு மதப்பற்று ஜாஸ்தியாத் தெரியுது. கடவுள் ஒருவன் என்று நம்பினால் நீங்க ஏன் இப்படி பொங்கி எழுறீங்க? உங்க உணர்வுகளே உங்களுக்குப் புரியலை. அதான் பிரச்சினை.
***ஃபேர்&லவ்லி போட்டாலும் எப்படி உங்கள் ஒரிஜினல் கலர் மாறாதோ அது போல் நீங்கள் மதம் மாறினாலும், ஜாதி மாறினாலும், உங்கள் ஒரிஜினல் கஷ்டம் மாறாது. கஷ்டம் போக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும். கணபதி படத்தை கடாசிவிட்டு கர்த்தர் படத்தை வைத்தால் உங்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம் செலவு தான் 500ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்குமே தவிர உருப்படியாய் மாற்றம் ஒன்றும் வந்திருக்காது. உங்கள் சோற்றுக்கும், நல் வாழ்வுக்கும் நீங்கள் தான் உழைக்க வேண்டும். கடவுள் உங்களுக்கான substitute அல்ல.. இந்த ஆத்திக பகுத்தறிவு இருந்தால் உங்கள் நம்பிக்கை கடவுள் மீது மட்டும் தான் இருக்கும், மதத்தின் மீது அல்ல...***
இதெல்லாம் வெட்டிப் பேச்சு. பல காரனங்களுக்காக மக்கள் மதம் மாருகிறார்கள். உங்க இந்து மதத்தில் உள்ள சாதிப் பிரச்சினை, எந்தக் கடவுளை வனங்கிறதுனு ஏற்பட்ட குழப்பம், டெய்லி ஒருத்தன் புதுசா கடவுளகிறான் என்ன் எழவுடானு பிரச்சினை. இப்படிபல காரணங்கள்..
உங்க ஹிந்துக்கள் அமெரிக்காவில் வந்துஎன்ன பண்ணிட்டு திரிகிறானுகனு தெரியுமா? பகவத் கீதை புக்கை வச்சுட்டு கிருத்தவர்களை வாசிக்கச் சொல்றான். அவ்னையெல்லாம் செருப்பால அடிக்கணுமா என்ன?
நல்ல வாதம்.. ஒருத்தனை குறை சொன்னா இன்னொருத்தனை குறை சொல்வது சூப்பர் டெக்னிக்.. கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை என்று சொல்லும் போதே உங்கள் அறிவாளித்தனம் பளிச்சிடுகிறது.. வாழ்த்துக்கள்..
Deleteபெர்னாட் ஷா சொன்ன ஒன்று தான் ஞாபகம் வருகிறது, “Never wrestle with pigs. You both get dirty and the pig likes it.”.. இனி உங்களிடம் வீண் வம்பு பேச எனக்கு விருப்பமில்லை.. உங்கள் குப்பைகளையும், மரியாதைக்குறைவான வார்த்தைகளையும் கொட்டுவதென்றால் கொட்டுங்கள்.. என் பக்கம் பதில் லேது நைனா.. ஆல் தி பெஸ்ட்..
“Never wrestle with pigs. You both get dirty and the pig likes it.”
ReplyDeleteFitting reply for Varun idiot.
Just let him bark and ignore him.
Ram, I guess your call here to Christians is that to live a life of example, than just praying or conversion. I agree your argument is true as that is the call of Bible too.
ReplyDeleteAlso, I think we need to understand your religion quite well before trying to preach as we share a lot of good principles, but sadly that is just not happening here. We do have borrowed some principles like removing the footwear in holy places from India and other eastern countries and it is found suitable too. (Then God said, “Do not come near here; remove your sandals from your feet, for the place on which you are standing is holy ground. Exodus 3:5). What I understand is we need to give up our pride just for being Christian, and start respecting others
Acceptance and consumption of sweets from neighbours and friends is changing well, I personally stopped asking already whether it was presented to their God. But I agree we do not consume the offerings served in the temple itself.
Even I scored a single digit mark in that exam, and several people scored zero. (I don't remember Ram's score, but otherwise he scores well)
We still have a lot more to do to grow out of caste; I agree more with your other article which talked on respecting all people than abolishing caste system.
(I do not have much knowledge about your religion) My cousin married a converted Hindu Girl about 10 years back, as expected my family was offended and her family too (still a broken relationship). My aunt and other cousin behaved badly with her family, despite all this her statement is that "We have pretty much everything in that religion too, but no one has come back from Death" (She was telling about the resurrection of Jesus) (in her knowledge). That statement means a lot to me.
As for the miracles, it is definitely not the most important aspect of Christianity. It is just another gift. I have to agree; we misused it and spoiled our God's name. I still wear spectacles and have health problems, but my distant cousin (Grandma's sister's Granddaughter) wrote a detailed blog of the miracle she enjoyed (still faces other problems just like everybody). You would be able to find the medical records too in the blog.
http://jyes-jas.blogspot.in/2013/07/then-nations-around-you-that-remain.html
Bible is certainly not against hard work, but Bible looks for it (In all toil there is profit, but mere talk tends only to poverty. Proverbs 14:23)
After all, Thanks for writing this, it helped me do a self-analysis.
It this Paul? Here I don't fight or dictate Christians to live a perfect life.. I just asked some Christians, not to disturb or exploit the innocent people.. That is all da..
DeleteThere are so many real miracles happened in both Hinduism and Islam da.. But it should not be used for minting money..
DeleteAnonymous for a reason, please don't reveal name...
DeleteDisturbance is the direct result of lack of knowledge / understanding. I agree people are exploited.
http://rcg.org/questions/p070.a.html
Miracles for money is definitely bad.
Speaking of Money, My uncle and aunt are missionaries (Nagpur city), as of 2010-11, their combined salary was just above Rs 10000. They both were working in Good schools (Science) near hometown 25 years back. If their salary was cut, it might have slowed them, but I'm sure they won't have stopped. I say this, while I agree that there are people who do it for Money.
இன்றும் முக்கடவுளரும் உள்ள படம் வைத்திருந்தால் அவர் நிச்சயம் இந்து தான். தமிழ் செல்வன், அழகு மயில் என்று பொது பெயர் இருந்தால், கண்டிப்பாக அது இந்துதான்.
ReplyDeleteநிச்சயமாக... இந்துக்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மை வேறு யாருக்கும் கிடையாது..
Deleteமிக அருமையான அலசல்.. ராம்...
ReplyDeleteஇவையெல்லாம் நானும் மனதுக்குள் புழுங்கிய விசயங்கள்தான்.. என் முகப்புத்தகத்தில் இதனை பகிர்ந்து கொள்கிறேன் உங்கள் அனுமதியோடு.. உங்களின் சுட்டியோடு..
தாராளமாக :-)
Deleteeven though i am a muslim i agree with most of your comments.
ReplyDelete/உங்க ஹிந்துக்கள் அமெரிக்காவில் வந்துஎன்ன பண்ணிட்டு திரிகிறானுகனு தெரியுமா? பகவத் கீதை புக்கை வச்சுட்டு கிருத்தவர்களை வாசிக்கச் சொல்றான். அவ்னையெல்லாம் செருப்பால அடிக்கணுமா என்ன?/
ReplyDeleteno doubt about that.
true with good heart ram
ReplyDeleteஎனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் உண்டு. 2000 ஆண்டு வருவதற்குமுன் என் நண்பர் ஒருவர் "2000ல் உலகம் அழியும் கர்த்தரால் மட்டுமே நம்மை ரக்ஷிக்க முடியும்" எனச் சொல்லுவார். இப்போது 2025 என மாற்றிவிட்டார்.
ReplyDeleteவெளிநாடுகளில் உள்ள பல ஈழத்தமிழர்கள் வேலைவாய்ப்புகள் கிடைக்குமென பெந்தகொஸ்தேவிற்கு மாறியதை பார்த்திருக்கிறேன். ஐரோப்பிய நாடுகளில் ஆசியர் என்று தெரிந்தாலே பிரசாரத்துண்டுகளுடன் வீடுதேடி சிலர் வருவார்கள்.
மதத்தை ஒரு ஆம்வே பொருள் அளவிற்கு மாற்றியது தான் கிறிஸ்துவம் இந்த உலகிற்கு கொடுத்த செய்தி..
Deleteஅருமையான் பதிவு நண்பா. வசீகரமான் எழுத்து நடை. நீங்கள் தமிழின் சிறந்த எழுத்தாளராக பேரும், ப்ணமும், புகழும் பெற வேண்டும் என விழைகிறேன்..
ReplyDeleteரொம்ப நன்றிங்க.. ஆனால் ஒரு பார்ப்பன அடுவருடியான, காவி தீவிரவாதியான என்னை பாராட்டுகிறீர்களே, உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்.. :-P
Deleteமதம் சார்ந்த விஷயங்களில் கருத்து சொன்னால் ஒன்று இந்துத்வா என்று சொல்லி காவி சாயம் பூசிவார்கள், அல்லது நீங்கள் யாராக இருந்தாலும் பூணுல் மாட்டிவிடுவார்கள். இது இணையத்தில் சகஜம்.
Deleteஉண்மை... இவர்களின் பகுத்தறிவு வேஷத்தை எல்லாம் அரபு நாடுகளில் போய் காட்டட்டும்..
Deleteஅருமையான பதிவு நண்பரே :-)
ReplyDeleteமிக்க நன்றி @STAY SMILE :-)
ReplyDeleteசாத்தானின் அடையாளம் - பிறை நிலவு நட்சத்திரம்
ReplyDeleteஆதி முதற்கொண்டு பிசாசானவன் மனித குலத்தை மோசம் போக்குகிறவனாயிருக்கிறான். அவனுடைய திட்டவட்டமான நோக்கம் மனித குலத்துக்கும் தேவனுக்குமான உறவை துண்டிக்கச்செய்து அவர்களை பாவத்தில் மூழ்கச்செய்வதே. ஆதியில் ஏவாளை சர்ப்பமாக வந்து வஞ்சித்து அவர்களை மோசம் போக்கினான். அப்பொழுது தேவன் சர்ப்பமான சாத்தானை சபிக்கிறார்.
“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும், சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய்”. (ஆதியாகமம் 3:14)
இவ்வாறு சர்ப்பத்தினை சபிக்கப்பட்டவன் என தேவன் கூறுகிறார். பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு வேதாகமம் வெளிப்பட்டது எபிரேயத்தில். இந்த எபிரேய மொழியில் சாபம் என்பதை குறிக்க பயன்படும் வார்த்தை “அல்லாஹ்” என்பதாகும். ஆம். சர்ப்பமானது தேவன் சபித்த அன்றிலிருந்து “அல்லாஹ்” வாக மாறியது.
இவ்வாறு “அல்லாஹ்” வாக மாறிய சர்ப்பமானது உலகத்தையெல்லாம் மோசம் போக்குகிறது (வெளி 12:9) என வேதாகமம் எச்சரிக்கின்றது.
அதே விதமாக அல்லாஹ் மோசம் செய்வதிலும், சதி செய்வதிலும் மிகச்சிறந்தவன் (குர்ஆன் 3:54) என்பதாக குர்ஆனும் கூறுகிறது. மேலும் அல்லாஹ் எனும் அரபி எழுத்தின் வடிவமும் சர்ப்பத்தினை ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சாத்தானை வேதாகமம் விடிவெள்ளி நட்சத்திரம் எனவும் உவமையாக வருணிக்கிறது.
“அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!” (ஏசாயா 14:12)
விடிவெள்ளி நட்சத்திரம் என்பது அதிகாலையில் தோன்றுவதாகும். அப்பொழுது இரவின் நிலவானது முழுமையாக மறையாமல் சிறு பிறையாக காணப்படும். பிசாசானவன் வேதாகமம் உவமையாக வருணிக்கும் விடிவெள்ளி நட்சத்திரத்தையே தனது அடையாளம் ஆக்கிக்கொண்டான்.
இவ்வாறு பிறையும், விடிவெள்ளியும் அவனது அடையாளமாகவும் “அல்லாஹ்” அவனது பெயராகவும் மாறியது. இவன் மிகவும் ஞானம் மிகுந்தவன். ஆணவம் மிகுந்தவன். மேலும் உன்னதமான தேவன் இயேசுவின் சிங்காசனத்திற்கு ஆசை கொள்பவன் (ஏசாயா 14:14) என்று வேதாகமம் கூறுகின்றது.
எனவே இவன் உலகத்தை மோசம் போக்க ஒரு மதத்தையோ, அல்லது ஒரு சித்தாந்தத்தையோ ஸ்தாபிக்க வில்லை. அநேகத்தை ஸ்தாபித்திருக்கிறான்.ஆனால் அவைகள் அனைத்துக்கும் ஞானத்தோடு தன்னுடைய அ
ஞானத்தோடு தன்னுடைய அடையாளமாகிய பிறை மற்றும் விடிவெள்ளியையே குறியீடாக வைத்திருக்கிறான்.
ReplyDeleteமேலும் எசேக்கியேல் 38 கூறும் இவ்வுலகத்தின் அழிவைத் தீர்மானிக்கும் யுத்தமாகிய மாகோகு யுத்தத்திற்கு இவ்வுலகை ஆயத்தப் படுத்தி வருகிறான்.
இந்த எசேக்கியேல் 38 கூறுவது
“நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து, நீ அவர்களுக்குக் காவலனாயிரு” (எசேக்கியேல் 38:7)
“நீ தேசத்தைக் கார்மேகம்போல்மூட என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி வருவாய். கடைசி நாட்களிலே இது சம்பவிக்கும். கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன் மூலமாக நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும் படிக்கு உன்னை என் தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்”. (எசேக்கியேல் 38:16)
“அவர்களோடேகூடப் பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள். அவர்களெல்லாரும் கேடகம் பிடித்து தலைச்சீராவுந் தரித்திருப்பார்கள்". (எசேக்கியேல் 38:5)
இதில் குறிப்பிடப்படும் அத்தனை நாடுகளும் இஸ்லாமிய நாடுகளாக இருப்பதன் மூலமாக என்ன நடக்கிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.
யூதர்களுடன் முஸ்லீம்கள் இறுதியுத்தம் நடத்தாத வரை கியாமத் நாள் வராது (ஹதீஸ்-11) என்று முகம்மது மூலம் “அல்லாஹ்” கூறுவதன் உள்ளர்த்தமும் இதுவேயாகும்.
எல்லா மக்களுக்கும் ஒரே இரட்சகராய் வந்த ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்து உங்கள் நித்திய ஜீவனை இழந்து விடாதீர்கள் என்பதற்காகவே இந்தப்பதிவு.
பிதா சுதன் தூய ஆவியின் பெயரால் ஆமென்.
ஞானத்தோடு தன்னுடைய அடையாளமாகிய பிறை மற்றும் விடிவெள்ளியையே குறியீடாக வைத்திருக்கிறான்.
ReplyDeleteமேலும் எசேக்கியேல் 38 கூறும் இவ்வுலகத்தின் அழிவைத் தீர்மானிக்கும் யுத்தமாகிய மாகோகு யுத்தத்திற்கு இவ்வுலகை ஆயத்தப் படுத்தி வருகிறான்.
இந்த எசேக்கியேல் 38 கூறுவது
“நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து, நீ அவர்களுக்குக் காவலனாயிரு” (எசேக்கியேல் 38:7)
“நீ தேசத்தைக் கார்மேகம்போல்மூட என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி வருவாய். கடைசி நாட்களிலே இது சம்பவிக்கும். கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன் மூலமாக நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும் படிக்கு உன்னை என் தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்”. (எசேக்கியேல் 38:16)
“அவர்களோடேகூடப் பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள். அவர்களெல்லாரும் கேடகம் பிடித்து தலைச்சீராவுந் தரித்திருப்பார்கள்". (எசேக்கியேல் 38:5)
இதில் குறிப்பிடப்படும் அத்தனை நாடுகளும் இஸ்லாமிய நாடுகளாக இருப்பதன் மூலமாக என்ன நடக்கிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.
யூதர்களுடன் முஸ்லீம்கள் இறுதியுத்தம் நடத்தாத வரை கியாமத் நாள் வராது (ஹதீஸ்-11) என்று முகம்மது மூலம் “அல்லாஹ்” கூறுவதன் உள்ளர்த்தமும் இதுவேயாகும்.
எல்லா மக்களுக்கும் ஒரே இரட்சகராய் வந்த ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்து உங்கள் நித்திய ஜீவனை இழந்து விடாதீர்கள் என்பதற்காகவே இந்தப்பதிவு.
பிதா சுதன் தூய ஆவியின் பெயரால் ஆமென்.
ஞானத்தோடு தன்னுடைய அடையாளமாகிய பிறை மற்றும் விடிவெள்ளியையே குறியீடாக வைத்திருக்கிறான்.
ReplyDeleteமேலும் எசேக்கியேல் 38 கூறும் இவ்வுலகத்தின் அழிவைத் தீர்மானிக்கும் யுத்தமாகிய மாகோகு யுத்தத்திற்கு இவ்வுலகை ஆயத்தப் படுத்தி வருகிறான்.
இந்த எசேக்கியேல் 38 கூறுவது
“நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து, நீ அவர்களுக்குக் காவலனாயிரு” (எசேக்கியேல் 38:7)
“நீ தேசத்தைக் கார்மேகம்போல்மூட என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி வருவாய். கடைசி நாட்களிலே இது சம்பவிக்கும். கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன் மூலமாக நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும் படிக்கு உன்னை என் தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்”. (எசேக்கியேல் 38:16)
“அவர்களோடேகூடப் பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள். அவர்களெல்லாரும் கேடகம் பிடித்து தலைச்சீராவுந் தரித்திருப்பார்கள்". (எசேக்கியேல் 38:5)
இதில் குறிப்பிடப்படும் அத்தனை நாடுகளும் இஸ்லாமிய நாடுகளாக இருப்பதன் மூலமாக என்ன நடக்கிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.
யூதர்களுடன் முஸ்லீம்கள் இறுதியுத்தம் நடத்தாத வரை கியாமத் நாள் வராது (ஹதீஸ்-11) என்று முகம்மது மூலம் “அல்லாஹ்” கூறுவதன் உள்ளர்த்தமும் இதுவேயாகும்.
எல்லா மக்களுக்கும் ஒரே இரட்சகராய் வந்த ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்து உங்கள் நித்திய ஜீவனை இழந்து விடாதீர்கள் என்பதற்காகவே இந்தப்பதிவு.
பிதா சுதன் தூய ஆவியின் பெயரால் ஆமென்.
கிறிஸ்தவம் என்பது மதம் அல்ல, ஒரு மனிதன் அரசியலையே சார்ந்திருக்கும் போது மற்றவர்கள் அவர்களை அரசியல்வாதி என்று அழைக்கிறார்களோ அதே போல் இயேசு கிறிஸ்துவையே சார்ந்து இருப்பதனால் அவர்களை கிறிஸ்தவர்கள் என்று மற்றவர்கள் அழைத்தனர் (அப்போஸ்தலர் 11:26) என்று பைபிள் கூறுகிறது. மதம் மாற்றக்கூடாதென்று இயேசுவே கூறுகிறார். ஒருவனை உங்கள் மதத்தில் சேர்ந்து கொள்ளும்படி சமுத்திரத்தையையும் பூமியையும் சுற்றித் திரிகின்றீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானான போது உங்களிலும் இரண்டு மடங்கு நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (மத்தேயு 23:15) எங்கள் மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று யாராவது கூறினாலும் பணம் தருகிறேன் என்று கூறினாலும் நீங்கள் மதம் மாறவே கூடாது அதில் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை. சுறுக்கமாக சொல்லப்போனால், கடவுள் பூமியை உண்டாக்கினார். மனிதனுக்குத் தேவையான அனைத்தையுமே உண்டாக்கியப் பின்னர் மனிதனை அவருடைய சாயலின்படியே உண்டாக்கினார். பூமியில் மனிதன் தேவனோடு ஆசிர்வதிக்கப்பட்ட பூமியில் மிகவும் சந்தோசமாக தேவனோடு இருந்தான். மனிதன் தேவனுடைய வார்த்தையை மீறினதினாலே கடவுளோடு மனிதனனின் உறவு துண்டிக்கப்பட்டது. மனிதன் தேவனையும், பூமியின் ஆசிர்வாதத்தையும், எல்லாவற்றையுமே இழந்தான். இவையெல்லாவற்றையும் மீண்டும் மனிதன் பெற்றுக் கொள்ள வேண்டும், என்பதற்காக கடவுளாகிய கர்த்தர் இந்த பூமியில் அவதாரமாக வந்தார். உண்மையாகவே மனித அவதாரத்தில் பூமியில் பிறந்தவர் இயேசு மட்டுமே. ஏனென்றால் பூமியில் மரித்தார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். ஏதோ கதை மூலமாக அவதாரம் எடுக்கவில்லை. கடவுள் மனிதனை ஏமாற்ற மாட்டார். மனிதனை ஏமாற்றத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று வந்தவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆனால் பூமியில் வஞ்சிக்கிற (ஏமாற்றுகிற ஆவிகள்) பூமியில் உள்ளது. ஆகவே நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் ஆக வேண்டும் என்பதே இதன் நோக்கம். தேவனுடைய வழியை போதிக்கிறது. நம் எல்லோருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு. மனிதன் எப்படி பாவத்தினால் எல்லாவற்றையும் இழந்தானோ அதை எல்லாவற்றையும் தேவன் உண்டாக்கப்போகிற புதிய வானம் புதிய பூமியில் பெறப்போகிறதற்காக பாவங்களை மன்னித்து அதற்கான தண்டனையையும் அவரே ஏற்றுக் கொண்டு நம்மை அதிலிருந்து விடுதலையாக்க இந்த பூமிக்கு வந்தார். ஆகவே கர்த்தராகிய இயேசுவே என்று கூப்பிட்டுப் பாருங்கள் அப்போது தெரிந்து கொள்வீர்கள். ஏனென்றால் தேவன் ஆவியாயிருக்கிறார் நாம் அவரை நம்முடைய மாம்சக் கண்களால் அல்ல, ஆவியினாலே அறிந்து கொள்ள முடியும் ஆகவே இயேசு படத்தை மாட்டினாலும் பிரயோஜனம் இல்லை. மனிதன் கையினால் செய்த ஒவியத்திலும் மனிதன் செய்த பொருட்களிலும், கையினால் கட்டப்பட்ட கோவில்களிலும் தேவன் குடியிக்க மாட்டார் ( அப்போஸ்தலர் 17: 24 to 30) தேவன் பரலோகத்தில் இருக்கிறார். கூப்பிட்டால் நமக்குள் வருகிறார். நாம்தான் ஆலயம் நீங்களே அந்த ஆலயம். ஆனால் நாம் அவரை நோக்கி கூப்பிட்ட வேண்டும். நீ என்னை நோக்கி கூப்பிடவில்லை என்கிறார்.கூப்பிட்டுப் பாருங்கள். அவர் உங்களிடம் பேசும்வரை விடாமல். 👍 நன்றி
ReplyDelete