"அவர்கள்" விவேகானந்தர் பாறையையும் விட்டு வைக்கலையா???

Sunday, May 7, 2023

 அது 1962ம் ஆண்டு. சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்ப முடிவு செய்கிறார்கள். விவேகானந்தர் என்றாலே குமரி தானே? கன்னியாகுமரியில் அவர் தவம் செய்த ஸ்ரீபாதப்பாறையில் எழுப்பலாம் என ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேவி கன்னியாகுமரி, சிவபெருமானை மணப்பதற்காக தவமிருந்த பாறையும் அது தான். அங்கிருக்கும் பாதத்தடம் அவளுடையது தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதனால் தான் அது ஸ்ரீபாதப்பாறை. அங்கு மண்டபம் எழுப்பக் கோவில் குழுவினரும் சம்மதித்து விட்டார்கள்.



அது எப்படி எல்லாம் நல்லபடியாகப் போகலாம்?? இந்துக்களின் நம்பிக்கைகள், மதநூல்களின் நல்ல கருத்துக்களை எல்லாம் உருவி தன்னிது எனச் சொல்லிக்கொள்ளும் மதமாற்ற மாறுவேட மதம் ஒன்று இருக்கிறதல்லவா? அது இப்போது தன் குயுக்தியை ஆரம்பிக்கிறது. ‘அது ஸ்ரீபாதப்பாறை அல்ல. நானூறு வருடங்களுக்கு முன் மதம் மாற்ற வந்த புனித சேவியர் ஜெபம் செய்த பாறை அது. அது எங்களுக்குத் தான் சொந்தம்’ என இரவோடு இரவாக ஒரு சிலுவையை நட்டுவைத்து விட்டார்கள். சிலுவை என்றால் சாதாரணமாக இல்லை, கரையில் இருந்து பார்த்தாலே தெரியக்கூடிய அளவு பெரிதாக. ரஜினி முருகனில் வரும் அதே ஏழரை மூக்கன் டெக்னிக் தான்.




இப்போது இந்து, கிறிஸ்தவ மதப்பிரச்சினையாக இது மாற ஆரம்பிக்கிறது. மாறி மாறி போஸ்டர், கண்டனக் கூட்டம் என நடக்கிறது. அப்போதைய தமிழக முதல்வர் அல்திரு.பக்தவத்சலம், ஒரு விசாரணைக் குழுவை அனுப்புகிறார். விசாரணை முடிவில் கிறிஸ்தவர்களுக்கும் அந்தப் பாறைக்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிய வருகிறது. வருவாய்த்துறை மூலம் சிலுவையைப் பெயர்த்து எடுக்க ஆணை போகிறது. விடுவார்களா? கேரளாவில் இருந்து ஒரு கிறிஸ்தவ அமைப்பு மீடியாவைத் தூண்டி விடுகிறது. ‘பல ஆண்டுகளுக்கு முன் புனித சேவிதர் வைத்த சிலுவையை யாரோ அகற்றிவிட்டார்கள். இப்போது இருப்பதையாவது அரசு பாதுகாக்கக் கூடாதா? ஏன் கிறிஸ்தவர்களின் உணர்வோடு விளையாடுகிறது?’ என லுட்டியன் பத்திரிகைகள் எழுத ஆரம்பித்துவிட்டன. அதற்குத் தூபம் போட பல அமைப்புகளும் உதிறிக் கட்சிகளும். ‘இதென்னடா வம்பாப்போச்சி!’ எனத் துணுக்குற்ற முதல்வர், சிலுவையும் வேண்டாம் விவேகானந்தர் மண்டபமும் வேண்டாம் என முடிவு செய்தார். ‘அப்போ ஓக்கே ஓக்கே’ எனப் போராடிய அமைப்புகள் அமைதியாகிவிட்டன. அப்படியானால் அவர்களுக்குத் தேவை உரிமையோ சிலுவையோ அல்ல, விவேகானந்தர் பாறை வரக் கூடாது என்கிற கெட்ட எண்ணம் மட்டுமே.


ஆனால் விவேகானந்தருக்குரிய மரியாதையைச் செய்ய வேண்டும் என நினைத்த பலரும், RSSற்கு இந்தத் தகவல்களை அனுப்புகிறார்கள். ரானடே என்னும் அகில இந்திய பொதுச்செயலாளரை கோல்வால்கர் அனுப்புகிறார். அவருக்குத் தமிழும் தெரியாது, தமிழ்நாடும் தெரியாது, கன்னியாகுமரியும் தெரியாது, அங்கிருக்கும் மதமாற்றம், மதச் சண்டை என எதுவும் தெரியாது.. ஆனாலும் வருகிறார். ‘இவரால் என்ன செய்ய முடியும்?’ என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.


நேராக வந்தார். எந்த அமைப்புகளிடமும் கருத்துக் கேட்கவில்லை. ஜஸ்ட், விவேகானந்தர் பாறை சம்பந்தமான அறிக்கைகள், செய்திகள் என அனைத்தையும் படித்தார். கடைசியில் அவருக்குத் தெரிய வந்த விஷயம், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் "ஹுமாயூன் கபீர்" தான் ஆரம்பத்தில் இருந்தே இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்பது. (இவர் இரண்டு முறை மத்தியில் கல்வி அமைச்சராகவும் இருந்துள்ளார்.) எப்படி இருக்கிறது இது பாருங்கள்! ஒரு கலாசாரத்துறை அமைச்சர், இந்திய கலாசாரத்தை அமெரிக்காவில் முழங்கிவிட்டு வந்த விவேகானந்தருக்கு மண்டபம் கட்ட மறுக்கிறார், கூட்டணிக்குக் கேரள அமைப்புகளும் பத்திரிகையும். மல்லுக்கள் அன்றிலிருந்தே இப்படித் தான் போல.




ரானடே பார்த்தார். நேராக வங்காளம் சென்றார். ஹுமாயூன் கபீர் கல்கத்தாவில் இருந்து தான் எம்.பி.யாகித் தேர்வாகி மந்திரியானவர். பத்திரிகைகளை அழைத்தார். “நம் வங்காளத்தின் பெருமையான விவேகானந்தருக்கு, எங்கோ கடைக்கோடியில் மண்டபம் கட்ட ஆசைப்படுகிறார்கள். அந்தப் பெருமையை  ஒருத்தர் தடுக்கப் பார்க்கிறார். அவர் வேறு யாருமல்ல, விவேகானந்தரின் மண்ணில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய உங்கள் எம்.பி. தான். இது ஏதோ கன்னியாகுமரி மக்களின் பிரச்சினை அல்ல, உங்களின் பிரச்சினை, உங்களின் பெருமை’ எனப் பேட்டி கொடுக்கிறார். கேரள அமைப்பு மண்டபத்திற்கு எதிராகச் செய்த அதே டெக்னிக். வங்கப் பத்திரிகைகள் ஹுமாயூன் கபீரைக் கிழித்து எடுக்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிகிறது. பயந்து போன அமைச்சர், ‘நம் விவேகானந்தருக்கு நான் மறுப்பேனா? தாராளமாகக் கட்டிக்கொள்ளலாம்’ என ஜகா வாங்கிவிட்டார். So, officially அனைத்தும் ஓக்கே. ஆனாலும் உடனடியாக கட்டிட வேலைகளை ரானடே ஆரம்பிக்கவில்லை. அதை வெறும் ஆன்மீக மண்டபமாக இல்லாமல், தேசிய உணர்வோடு sentiment ஆகவும் கொண்டுவர நினைக்கிறார்.

இது அவருடைய அடுத்த strategic move. விவேகானந்தர் மண்டபம் கட்ட ஒரு கமிட்டி அமைக்கிறார் ரானடே. வெறும் RSS, லோக்கல் இந்துக்கள் என்றில்லாமல், காங்கிரஸார், அண்ணாதுரை (ஆம் அவரே தான்), கம்மீஸ் எனப் பலரையும் அழைக்கிறார், இணைக்கிறார். இதில் உச்சகட்டம் என்னவென்றால், ஜோதிபாசுவிடமே நன்கொடை கேட்டது தான். அவர் இதெல்லாம் தன் கட்சியின் கொள்கைக்கு விரோதமானது (பின்னே அவர்களிடமே உண்டியல் குலுக்கினால்??) எனச் சொல்லி, தன் மனைவியை நன்கொடை அளிக்கச் செய்தார்.




பல மாநிலங்களிலும் RSSகாரர்கள் நன்கொடை வசூலித்தார்கள். கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக இருக்கும் நாகாலாந்தில் கூட சில ஆயிரம் வசூலானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ரானடேவின் எண்ணம், விவேகானந்தர் என்பவர் ஏதோ இந்து மதத்திற்கு மட்டுமான ஒரு துறவி அல்ல. அவர் இந்த ஒட்டுமொத்த தேசத்திற்குமான அடையாளம் என அனைத்து மதக்காரர்களின் மனத்திலும் நிலைக்க வைப்பது தான். அதனால் தான் தேசம் முழுவதும் மக்களிடம் இதைப் பற்றிப் பேசி நன்கொடை வசூலிக்க வைத்தார் தன் சேவகர்களை. அதில் அவர் ஜெயித்தும் காட்டினார். இப்படி உருவானது தான் நம் விவேகானந்தர் மண்டபம்.



ரானடே தான் இறந்த பின் விவேகானந்தர் மண்டபம் அருகிலேயே புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதே போல் அவர் இறந்த பின் அங்கேயே புதைக்கப்பாட்டார். அவர் சமாதிக்கு அருகிலேயே விவேகானந்தர் சிலையும் வைக்கப்பட்டது. விவேகானந்தரின் பாதஙகள் வழியாகப் பார்த்தால் கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் மண்டபம் தெரியும் வகையில் அருமையாக இருக்கும் அதன் வடிவமைப்பு. இன்னொரு விஷயம் சொல்லவா? இதே ரானடே தான் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வைக்கவும் முதல் அடியை எடுத்து வைத்தவர். அவர் பல முறை தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தினால் தான் வள்ளுவர் சிலைக்கான அச்சாரம் இடப்பட்டது.



இறந்த பின்னும் இந்த தேசத்தின் உணர்வாக இருந்ததால் தான், ஒட்டு மொத்த தேசமும் விவேகானந்தருக்காகக்  கூடியது. பல மதவெறியர்களையும் தாண்டி மண்டபமும் சாத்தியமானது. 'இறந்தும் போராடிய' என்று பீச்சோர இடம் பற்றி ஸ்டேட்டஸ் போடும் வம்சாவளிகள் இந்த வரலாற்றைப் பற்றிப் பேசாததில் ஆச்சரியமேதுமில்லை.

No comments:

Post a Comment

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One