தமிழ்ப்புத்தாண்டா? இந்து புத்தாண்டா?

Sunday, April 14, 2013

எங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து குதித்து விடுகிறார்கள். ’தை முதல் நாள் தான் தமிழர்களோட புது வருசம்.. சித்திரை ஒன்னு இந்துக்களோட புது வருசம்’ என்று எதையாவது வந்து கத்திக்கொண்டு இருப்பார்கள்.. சித்திரை ரெண்டாம் தேதிக்கு பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியாது.. மீண்டும் அடுத்த ஆண்டு பங்குனி கடைசியில் வருவார்கள். ’தை தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்று தொண்டை கிழிய கத்துவார்கள். மீண்டும் போய் விடுவார்கள். அவர்களுக்கும், லேசான குழப்பத்தில் இருக்கும் சில தமிழர்களுக்கும் எனக்கு தெரிந்த விபரங்களை வைத்து விளக்க முயல்கிறேன்.

தமிழன் தை முதல் நாளை தன் விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கும், மாடுகளுக்கும் பொங்கல் வைத்து கொண்டாடுகிறான். அது நன்றி சொல்லும் ஒரு பண்டிகை. நன்றியை நீங்கள் ஒருவருக்கு ஆரம்பத்திலா சொல்வீர்கள்? அதே போல் தை மாதம் பெரும்பாலும் அறுவடை நடைபெறும் மாதம். அறுவடையை யாராவது ஆரம்பமாக சொல்வார்களா என தெரியவில்லை. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பழமொழி இருக்கிறதாம். ஆம், அறுவடை முடிந்ததும் கையில் காசு புலங்கும் அதனால் வழி பிறக்கும். அதற்கும் புத்தாண்டுக்கும் என்ன சார் சம்பந்தம்? சித்திரையில் தான் மீண்டும் விவசாயத்தை ஆரம்பிப்பான் தமிழன். தன் தொழிலை வாழ்வை புதிதாக ஆரம்பிக்கும் காலத்தை புத்தாண்டாக கொண்டாடினான். அறுவடை செய்து எல்லாவற்றையும் வழித்து அள்ளுவதை புத்தாண்டாக கொண்டாட அவன் மடையன் இல்லை.

உலகின் பெரும்பாலான கலாச்சார, வரலாற்று சிறப்புகள் இருக்கும் நாடுகளில் இளவேனில் காலத்தில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இளவேனில் என்பது நமது சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் தான். தை மாதம் என்பது முன்பனிக் காலம். இதை பற்றி விபரம் தெரியாத பலரும், அரைகுறையாக எங்கோ கேட்டதை வைத்துக்கொண்டு தை மாதத்தில் தான் இளவேனில் காலம் வருகிறது என்கிறார்கள். பத்தாங்கிளாஸ் தமிழ் தான் ஒழுங்காக படிக்கவில்லை என்றாலும், ஒரு விசயத்தை சொல்லும் முன் நெட்டிலாவது தேடி சரி பார்த்த பின் சொல்லலாமே மக்களே?  இளவேனில் காலம் சித்திரை வைகாசியில் வருவது. தமிழர்கள் வரலாறு மற்றும் கலாச்சார சிறப்பு உடையவர்கள் என்பது உண்மையானால் அவர்கள் சித்திரையில் தான் புத்தாண்டை கொண்டாடினார்கள் என்பதும், சித்திரை தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதும் உண்மை. உலக இலக்கியங்களில் பனிக்காலத்தை ஒரு முடிவாக/அழிவாக தான் உவமைப்படுத்துவார்கள்.. தை என்பது முன்பனிக்காலம். அப்படிப்பட்ட பனிக்காலத்திலா தமிழ்ப்புத்தாண்டை நாம் கொண்டாடியிருப்போம்?

இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. ’சித்திரை மாதம் இந்துக்களின் புத்தாண்டு, தமிழர்களுக்கு இல்லை’.. ‘தமிழ் ஆண்டுகளுக்கு பெயர் சமஸ்கிருதத்தில் இருக்கிறது’ என்று குட்டையை குழப்ப ஆரம்பிப்பார்கள். என் பெயர் ஒரு சம்ஸ்கிருத பெயர் தான்.. (திராவிடம் என்பதே கூட சமஸ்கிருத பெயர் தான் என்கிறார்கள் சில அறிஞர்கள்).. நான் ஒரு இந்து தான்.. இவர்களின் கூற்றுப்படி நான் தமிழன் இல்லையா? இவர்கள் என்னை தமிழன் இல்லை என்று கூட சொல்வார்கள். ஏன்னா ஒரு இந்துவை இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இதையே வேறு விதமாக கேட்போம்.. ஜனவரி ஒன்றை கிறிஸ்தவ புத்தாண்டாக இவர்கள் கூறுவார்களா? தமிழன் ஜனவரி ஒன்றையும் கொண்டாட கூடாது என்று டிசம்பர் கடைசியில் வந்து தொண்டை கிழிய கத்துவார்களா? ஹிந்துக்களை தமிழர்கள் இல்லை என்பது போல் கூறும் இவர்கள் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களையோ தமிழர்கள் இல்லை என்பார்களா? ஊருக்கு இளிச்சவாயன் இந்து.. அதனால் எல்லோரும் அவனை மட்டம் தட்டி அவனின் பண்டிகைகளை நக்கலாகத்தான் பேசுவார்கள். அதிலும் சித்திரை ஒன்று என்னும் தமிழர் புத்தாண்டை கூட இந்துக்களுக்கு மட்டுமானது என்பது போல் விசமத்தனமாக பேசுவது இவர்கள் மக்களின் மனதில் என்ன விதமான எண்ணத்தை விதைக்க நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

இவர்கள் சொல்ல வருவது ஆரியர்களின் சூழ்ச்சியால் நாம் சித்திரையை புத்தாண்டாக கொண்டாடுகிறோம் என்பது. ஆரியர்கள் என்ன சூழ்ச்சி செய்தார்கள் இதில் என்று எனக்கு புரியவில்லை. நாம் கும்பிடும் மாரியம்மன், காளியம்மன் போன்ற சிறு தெய்வங்களை ஆரியர்கள் வணங்க மாட்டார்கள். நம் முருகன் கூட அவர்களுக்கு சுப்ரமணியன் தான். மாரியம்மனும் காளியம்மனும் தமிழர்களின் தெய்வங்கள். இந்த கோயில்களில் ஆரியர்கள் சம்பளத்திற்கு பூஜை செய்தாலும் நம்மை போல் வணங்க மாட்டார்கள். நாம் வணங்கும் மாரியம்மன் காளியம்மன் மற்றும் சிறு தெய்வ கோயில்களில் திருவிழாக்கள் எந்த மாதங்களில் நடக்கின்றன? பங்குனி முதல் சித்திரை வரை தமிழனின் திருவிழா. பங்குனியிலும் சித்திரையிலும் ஏன் தமிழன் கோயில் திருவிழாக்களை வைத்தான்? சும்மா பொழுது போகாமலா? தன் விவசாய தொழில் ஆரம்பிக்கும் இந்த காலத்தில், தான் கோயிலுக்கு போய் கடவுளிடம் ஆசி பெற்று தொழிலை ஆரம்பிக்கிறான். சம்பந்தமே இல்லாத தையில் எந்த கோயிலில் திருவிழா நடக்கிறது? எல்லாவற்றையுமே கடவுளோடு இணைக்கும் தமிழன் தன் புது வருடத்தை கடவுளோடு இணைக்காமல் இருந்திருப்பானா? தமிழும் மலயாளமும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஒரே மொழியாக இருந்தன. அத்தகைய மலயாள மக்கள் சித்திரையில் தான் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். அவர்களும் பார்ப்பன அடிமைகளா?

சரி, இதெல்லாம் வரலாறு மற்றும் ஒவ்வொருவரின் எண்ணங்களை வைத்து அமைவது. இப்போது அரசியலுக்கு வருவோம்.. 1921ல் சில அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து தை தான் தமிழ் புத்தாண்டு என முடிவு செய்தார்களாம். அதை ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவர், 4 முறையும் ஞாபகமே இல்லாமல் தான் ஐந்தாவது முறை பதவிக்கு வரும் போது மட்டும், மண்டையில் திடீரென பல்ப் எரிந்து “இனி தை 1 தான் தமிழ் புத்தாண்டு’ என்று அறிவித்தாராம்.. ஆனால் அவர் ஆட்சியிலேயே தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக அறிவித்த பின்னரும் கூட சித்திரை ஒன்றுக்கு லீவு விடுவாராம். இது தான் அவரின் இரட்டை வேசம். ஏன் லீவு என்று கேட்டால் “சித்திரை திங்கள் விடுமுறை” என்பார். அப்போ வைகாசி திங்கள், ஆனி திங்கள் மார்கழி திங்களுக்கெல்லாம் லீவு விடுவாரா என்று யாரும் அவரிடம் கேள்வி கேட்க கூடாது. ஏன்னா, அவர் தான் ’தி ஒன் அண்ட் ஒன்லி தமிழன தலிவர்’.. கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவர் சொன்னதுக்கு எதிரா கேள்வி கேட்டா நீங்க தமிழின துரோகி ஆகிருவிங்க.. பார்ப்பன அடிவருடினு ஒரு எக்ஸ்ட்ரா பட்டமும் சேர்ந்து கிடைக்கும்.

சரித்திரம் என்பதே யாரோ ஒருவர் தன் கற்பனையை சேர்த்து சொன்ன ஒன்றை, எல்லோரும் உண்மை என நம்பிக்கொண்டிருப்பது தான். அத்தகைய சரித்திர ஆராய்ச்சி என்பது புதிதான, வழக்கத்தில் இல்லாத ஒன்றை பற்றி இருக்கலாம். ஏற்கனவே காலம் காலமாக சித்திரையில் கொண்டாடி வருவதை பற்றி ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்? சரி அந்த ஆராய்ச்சியில் தமிழன் தை மாதத்தில் தான் புத்தாண்டு கொண்டாடினான் என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்றால் எதுவும் இல்லை. வெறும் ஊகங்கள் தான். இவர்கள் வெறும் ஊகத்தை வைத்துக்கொண்டு தையில் புத்தாண்டை கொண்டாட சொல்வார்களாம். நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வருவதை நிறுத்திவிட்டு இவர்கள் பின் வாலை ஆட்டிக்கொண்டு செல்ல வேண்டுமாம். தமிழனை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.

சுருக்கமாக, தமிழன் தன் கடவுள்களுக்கு இளவேனில் காலத்தில் பண்டிகை வைத்து தன் தொழிலை ஆரம்பித்து கொண்டாடிய மாதமான சித்திரையில் தான் அவனின் புத்தாண்டு தொடங்குகிறது. தை என்னும் அறுவடை மாதத்தில் அவன் தனக்கும் தன் தொழிலுக்கும் உதவி செய்த சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி சொல்கிறான். அதுவும் ஒரு சிறப்பான முக்கியமான பண்டிகை தான் என்றாலும் அது நம் புத்தாண்டோடு சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. தமிழர்களாகிய நம் புத்தாண்டு சித்திரை ஒன்றே...

மிக சீரியசான பின்குறிப்பு:
ஜனவரி ஒன்றோ, தை ஒன்றோ, சித்திரை ஒன்றோ - புத்தாண்டு என்று கொண்டாடப்படும் நாள் வெறும் இன்னொரு நாள் தான். அதே சூரியன், அதே வெயில், அதே வேலை, அதே குடும்பம், அதே மின்வெட்டு, அதே உலகம், அதே டிராஃபிக், அதே ஆஃபிஸ், அதே டென்சன் என எல்லாமே மாற்றம் இல்லாமல் முந்தைய நாள் நடந்தது தான். அடுத்த நாளும் நடக்கப்போவது தான். புத்தாண்டில் எதுவும் மாறிவிடப்போவதில்லை. பின் புத்தாண்டை மட்டும் மாற்றி என்ன ஆகிவிடப்போகிறது? நாட்டில் நாம் சண்டை போட எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன.. ஒரு அரசியல்வாதி சொன்னார் என்கிற ஒரே காரணத்துக்காக, நம் பழக்க வழக்கங்களை அறியாமல் அவர் சொல்வதை கேட்டு அப்படியே பின் செல்வது எந்த வகையில் சிறந்தது என தெரியவில்லை. 

இந்த இனிய தமிழ்ப்புத்தாண்டில் அனைவருக்கும் என் அப்பன் தமிழ்க்கடவுள் முருகனின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டுகிறேன்.. எல்லாருக்கும் நல்ல புத்திய குடு ஆண்டவா..............

53 comments

  1. ஹிந்துக்களை தமிழர்கள் இல்லை என்பது போல் கூறும் இவர்கள் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களையோ தமிழர்கள் இல்லை என்பார்களா? ஊருக்கு இளிச்சவாயன் இந்து.. அதனால் எல்லோரும் அவனை மட்டம் தட்டி அவனின் பண்டிகைகளை நக்கலாகத்தான் பேசுவார்கள்.

    இந்த இனிய தமிழ்ப்புத்தாண்டில் அனைவருக்கும் என் அப்பன் தமிழ்க்கடவுள் முருகனின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டுகிறேன்.. எல்லாருக்கும் நல்ல புத்திய குடு ஆண்டவா.............

    அருமை ராம்குமார். உங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் உவதல், காய்த்தல் இல்லாது இந்த பதிவை படித்து கருத்திட வேண்டுகிறேன்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்.. இவர்கள் நம்மை பேசிக்கொண்டே இருந்தால் எத்தனை நாள் தான் பொறுத்துப்போவது? இந்த மாதிரி வியாக்கியானம் பேசும் எவனும் அதை தன் வீட்டில் இருந்து ஆரம்பிப்பது இல்லை. ஆனால் ஊருக்கு மட்டும் முதல் ஆளாக உபதேசம் செய்ய வந்துவிடுவார்கள்.. இவர்களை எதிர்த்தோ மறுத்தோ ஒரு வார்த்தை பேசிவிட்டால், நம்மை தமிழின துரோகி அது இதுவென்று தூற்ற ஆரம்பித்துவிடுவார்கள்..
      நம் பழக்க வழக்கம் நமக்கு தெரியும்.. நாம் எப்பொழுதும் போல் அமைதியாக சந்தோசமாக கொண்டாடுவோம்.. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்..

      Delete
  2. கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆத்தாடி இவ்ளோ செல்வமா இருக்கு? ரொம்ப நன்றிண்ணே.. உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

      Delete
  3. அருமையாண பதிவு அண்ணா,



    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் @Mahesh :-)

      Delete
  4. நல்ல பகிர்வு.....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணே.. உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  5. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

      Delete
  6. மிக அருமையாக எழுதி இருக்கீங்க..தங்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

      Delete
  7. இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இன்று வரை எனக்கு விடை தெரியாத விஷயம், சமுக அறிவியல் பாடத்தில் வரலாறு என்ற பாடத்தில் எதை நமக்கு உருப்படியாய் சொல்லித் தந்துள்ளார்கள். யோசித்துப் பார்த்தால் சுதந்திர வரலாற்றைக் கூட ஒழுங்காக நமக்கு சொல்லித் தரவில்லை.

    காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஏற்ற ஒரு வரலாற்றை நாடு முழுக்கவும், திராவிட அரசாங்கத்திற்கு ஏற்ற ஒரு வரலாறை தமிழகம் முழுமையும் பரப்பி நம் மனதில் உரு ஏற்றி வைத்து விட்டனர்.

    இதன் மூலம் நான் சொல்ல வருவது, வரலாறை நமக்கு சொல்லித் தரவில்லை, அதனால் கால காலத்திற்கு மாற்றும் பொழுது எதிர்த்து கேள்வி கேட்கத் தெரியாமல் மந்தை ஆடுகள் போல் பின்னால் செல்கிறோம். வரலாறு தெரியாத தமிழகமாக இந்தியாவாக தான் உள்ளது. எவனோ வெளிநாட்டுக்காரன் வந்து பார்த்த அரை குறையாக அவன் மனதில் பதிந்ததை எழுதியதை கொண்டாடுபவர்கள், கல்வெட்டில் பதிந்ததை ஆரிய சூழ்ச்சி என்று ஒதுக்குகிறார்கள். அரசியல் வாதிகளே உங்களை நோக்கி தலை வணங்குகிறேன்

    மிக அருமையான பதிவு, எனது விரிவான கருத்தை விரைவில் பதிகிறேன்( கட்சி அலுவல்கள் அழைக்கிறது). :-)


    ReplyDelete
    Replies
    1. //காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஏற்ற ஒரு வரலாற்றை நாடு முழுக்கவும், திராவிட அரசாங்கத்திற்கு ஏற்ற ஒரு வரலாறை தமிழகம் முழுமையும் பரப்பி நம் மனதில் உரு ஏற்றி வைத்து விட்டனர். // 200% உண்மை நண்பா. சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸில் இருந்த வரை தான் அவரை பற்றி வரலாற்று பாடத்தில் இருக்கும்.. அடுத்து அவர் INA ஆரம்பித்துவிட்டார் என்று மொட்டையாக முடித்துவிடுவார்கள். இடையில் நடந்ததை சொல்ல மாட்டார்கள்.. காங்கிரஸை தவிர சுதந்திரத்துக்கு யாருமே போராடியதில்லை என்றும் கிளப்பிவிடுவார்கள். உண்மையில் பல மன்னர்களை விட ஆங்கிலேயர்களுக்கு நன்றியுள்ள நாயாக இருந்தது காங்கிரஸ் தான்.. அதே போல் இங்க நம்ம தமிழீன தலைவர் கட்சி.. சமூக மாற்றத்துக்காக ஆரம்பித்தில் இருந்து போராடிய நாராயண குரு, அய்யா வைகுண்டர் போன்றவர்களை பற்றியே கண்டுகொள்ளாமல், பெரியார் தான் என்னமோ சமுதாயத்தையே மாற்ற வந்தவர் போல் பேசுவார்கள்.. என்ன பகுத்தறிவோ? எல்லாம் பொய்யறிவு..
      //எவனோ வெளிநாட்டுக்காரன் வந்து பார்த்த அரை குறையாக அவன் மனதில் பதிந்ததை எழுதியதை கொண்டாடுபவர்கள், கல்வெட்டில் பதிந்ததை ஆரிய சூழ்ச்சி என்று ஒதுக்குகிறார்கள்.// யாரோ கொஞ்ச பேரு 1921ல முடிவு பண்ணுனாங்களாம்.. அவர்கள் எதை வைத்து அந்த முடிவுக்கு வந்தார்கள்? என்ன ஆதாரம் என்று எதுவுமே தெளிவாக இருக்காது. ஆனால் நாம் அதை கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டும்.. என்ன கொள்கையோ அவர்களுடையது..
      ரொம்ப நன்றி நண்பா உங்கள் கருத்துக்கு.. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..

      Delete
    2. நம்ம தமிழினத்தலைவர விட அதீத ஆர்வலரா இருந்த பாவணர் கூட அக்காலத்திலேயே இதை எதிர்த்திருக்காரு . நம்மிடம் இந்தியவரலாறும் இல்லை , தமிழ் இலக்கிய வரலாறும் இல்லை . அம்புட்டு பெரிய மனுஷர் திலகர் , அவரப்பத்தி ஒரு பத்திக்கூட புத்தகத்துல இல்ல . வெறும் காங்கிரஸ் , காங்கிரஸ் , காங்கிரஸ் . இன்னொருபக்கம் தமிழ்நாட்டு வரலாறுல நீதிக்கட்சி பத்தி 10 பக்கம் இருக்கு , திராவிடர் கழகம் , தி.மு.க ணு அதுக்கு ஒருபாடமே இருக்கு . ஆனா அதுக்குமுன்னாடி மற்றும் பின்னாடி இருந்த ஆட்சியாளர்கள் பற்றி ஏதோ வரிச்செய்தி மாதிரி இருக்கு .

      இப்போலாம் இது ஒரு புதுரக பப்ளிசிட்டியா போச்சு . காலம்காலமா இருக்கறத எதிர்த்து பேசுனா , நம்மள அறிவாளினு நினைச்சிக்குடுவாங்கனு . அதெல்லாம் அந்தக்காலம் . மக்கள் அப்போலாம் இருந்த பிரச்சனையில யோசிக்காம 'இவன் ஏதோ நாட்டுக்கு நல்லது சொல்லவரான்னு' நினைச்சி எல்லாத்தையும் பொத்திட்டு கேட்டுட்ருந்தாங்க . இப்போலாம் பெரியாரே ரிட்டர்ன் வந்தாலும் கேள்வி கேட்க பல ஆயிரம் பேர் இருக்காங்க . பெரியார் மாத்திரம் இல்ல , அவரோட பேர சொல்லிகிட்டு புரட்சி , தமிழர் விடுதலைனு டகால்டி அடிக்கர ஆளுங்க காலமெல்லாம் மலையேறிடுச்சி .

      அண்ணே ! அட்டகாசமான பதிவு அண்ணே ....

      Delete
    3. அந்தப் பப்பு எல்லாம் வேகாது என்பதால் தான் திமுக ஆட்களே இந்த வருடம் மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.. அந்த பயம் இருக்கணும்டா.. ப்ளடி..

      Delete
  8. கருணாநிதிக்கு ஜனவரி ஒன்று ஆங்கிலப் புத்தாண்டு தமிழர்கள் கொண்டாடகூடாதுன்னு சொல்ல திராணியிருந்தா...ஏன் அடிக்கடி வனவாசம் போறாரு...!ராம்குமார் பளார்...பளார்ன்னு அறைஞ்சிருக்கிங்க...

    ReplyDelete
    Replies
    1. கருணாநிதியின் பகுத்தறிவு இந்துக்கள் மீது மட்டும் தான் வேலை செய்யும்.. மற்ற இடங்களில் ஊமையாகிவிடும்.. இந்துக்களிடம் ஒற்றுமை இல்லாத வரை இவரை போன்ற ஆட்கள் நம்மை நக்கல் செய்து கொண்டும் கிண்டல் செய்து கொண்டும் தான் இருப்பார்கள்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே :-)

      Delete
  9. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்தரசு அவர்களே.. உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..

      Delete


  10. have an open mind dude.

    read the following blog post.

    http://valavu.blogspot.in/2007/01/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. I don't want to prove me as an open minded person by accepting something which is not true.. :-) இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அனானி.. :-)

      Delete
    2. அசோக் ப்ரணவ்April 14, 2013 at 1:43 PM

      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் பதிவு மிக அருமை. மனம் மகிழ்ந்து பாராட்டுகிறேன்..

      Delete
    3. நன்றி அசோக் ப்ரணவ்.. உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-)

      Delete
  11. fair enough!
    sorry for bothering you.

    ReplyDelete
    Replies
    1. hey no sorry and all.. cool.. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  12. ராம்...
    சிறந்த பதிவு உரிய நேரத்தில்....

    நீங்க இவ்வளவு சொல்லியும், அடுத்த ஆண்டு யார் யார் தை..தை... தத்தத்தைன்னு குதிக்கறாங்கன்னு பார்போம்....

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் அடங்க மாட்டார்கள்.. கொஞ்ச நாள் தை தை என்று தான் குதிப்பார்கள்.. கையில் ஆட்சியும் இல்லை.. மத்திய அரசிலும் கழட்டி விட்டுவிட்டார்கள்.. பாவம் என்ன தான் செய்ய முடியும் இவர்களால்? சும்மா கத்தத்தான் முடியும்!!!

      Delete
    2. பார்பணியமும் ஊடகங்களை கையில் போட்டு கொண்டு கத்தியே வந்துள்ளது மனு தர்மத்தை தூக்கி ஆடும் அவர்களால் வேறு எங்காவது செலுத்த முடியுமா ..இங்கு தான் முடியும். ஏமாளிகள் இருக்கும் வரை.

      Delete
    3. மிஸ்டர்/மிஸ் அனானி பார்ப்பனர் தான் இதை கொண்டு வந்தார்கள் என்பதற்கு ஒரு ஆதாரம் கொடுக்க முடியுமா உங்களால்? சும்மா உங்கள் அரசியல் தலைவர் சொன்னார் என்று சொன்னைதையே சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.. உங்கள் தலைவருக்கு 4முறை வராத அறிவு சென்ற ஆட்சியில் மட்டும் வந்துவிட்டதோ?

      Delete
  13. "என்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..". இந்த கட்டுரையில் இருந்து நீங்க ரொம்ப பாமரன்னு தெரியுது. நமக்கு ஒரு விஷயம் புரியலன்னா அல்லது நாம நினைத்துக்கொண்டிருப்பதற்கு மாற்றாக இருந்தால் அது தவறு என்ற இளவயது முட்டாள்தனத்தின் வெளிப்பாடுதான் இந்த கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. என்னை பற்றி சொல்ல நீங்கள் யார்? ஆம் நான் பாமரன் தான்.. விசயம் எல்லாம் புரிந்த பாமரன்.. திடீர் ஞானோதயமாக உங்களுக்கு வந்திருக்கும் இந்த பேதலிப்பு தான் எனக்கு புரியவில்லை. 2009க்கு முன் வரை உங்களை போன்ற கூட்டம் எங்கு இருந்தீர்கள்? எனக்கு தமிழனின் பாரம்பரியமும் பண்டிகையும் புரிகிறது.. எந்த அரசியல் காரணங்களுக்காகவும் அதை மாற்றிக்கொள்ள மாட்டேன்.. இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு உண்மை புரியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன்.. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அனானி :-)

      Delete
  14. மிஸ்டர் அனானி சன்டிவி அறிவாலயம் மாடியில் சித்திரை ஒன்று புத்தாண்டு அன்று கலைஞர் திறந்து வைக்கும் போது இது ஆரியர்கள் கூட்டத்தின் நாள் என்று உங்கள் தலைவர் மற்றும் ஜால்ரா சு.பவீ, வீரமணி, கலைஞரிடம் ஏன் சொல்லவில்லை...?

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நாம இதையெல்லாம் கேட்டா இவைங்க காத பொத்திக்குவாய்ங்க.. நேத்து ஒரு உடன் பிறப்பு கிட்ட கேட்டா, “கலைஞர் சொல்றாருனு நீங்க ஒரு நல்ல விசயத்த ஏத்துக்கிட மாட்றீங்க.. கலைஞர் இத சொன்னாருனு நினைக்காம பாருங்க, இதுல இருக்குற உண்மை புரியும்”னு சொல்றாரு.. கருமம், அதுல என்ன உண்மை இருக்குனு இவைங்களுக்கு தான் வெளிச்சம்..

      Delete
  15. அருமையான பதிவு. 'அரசியல்ல இருக்கறவங்க சும்மா இருந்தா மக்கள் மறந்து விடுவாங்க'ன்னு இவங்களே எதாவது ஒரு சர்ச்சையை ஆரம்பிக்கறாங்க. இல்லை என்றால் அவங்க வாய் ஊரும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ரூபக் ராம்.. எதாவது பேசலாம்.. ஆனால் அதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.. பிறரின் நம்பிக்கைகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.. உண்மையை திரிக்காமல் இருக்க வேண்டும்.. ஆனால் இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு பிறரின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் நையாண்டி செய்து மட்டம் தட்டி பேசுவதே வேலை..

      Delete
  16. ராம் குமார், எனக்கொரு சீரியசான சந்தேகம். இளவேனிற் காலம் சித்திரை வைகாசி என்றால், முதுவேனிற் காலம் ஆனி ஆடி. இளவேனிற் காலத்தை விட முது வேனிற் காலத்தில் வெயில் அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்? அதே போல பின்பநிக்காலத்தில் முன்பனி காலத்தை விட கடுமையான பனியல்லவா இருக்க வேண்டும்? பங்குனியில் பனியா இருக்கிறது? சித்திரை மாதம் தான் கத்திரி வெயில் அடிக்கும். அது முதுவேனிற் காலத்தின் அடையாளம் இல்லையா? கத்திரி முடிந்ததும் சூடு குறைவதை நாம் உணர்வதில்லையா?
    -பாரதி.

    ReplyDelete
    Replies
    1. பின்பனிக்காலம் என்றால் பனிக்கு பின் என்றல்லவா அர்த்தம்? முது வேனில் என்றால் வெயிலுக்கு பிந்தைய காலம் என்றும் எடுத்துக்கொள்ளலாமே? இளவேனில் என்பது வெயில் ஆரம்பிக்கும் பருவம்.. இளவேனில் முதுவேனில் இரண்டுக்கும் இடையில் வெயில் காலம்.. அதை தனியாக சொல்லவில்லையென்றாலும் நாம் அப்படி எடுத்துக்கொள்ளலாம்.. இது என் கருத்து..
      ஆனால் உங்கள் கேள்வியை யாராவது விபரம் தெரிந்தவர்கள் தீர்த்து வைக்கலாம்.. அந்த காலத்தில் இப்படி தான் பிரித்திருக்கிறார்கள். எதை வைத்து இப்படி பிரித்தார்கள் என தெரியவில்லை..

      Delete
    2. இல்லை ராம்குமார். இளவேனில் என்பதை இளமை + வேனில் என்றும் முதுவேனில் என்பதை முதுமை + வேனில் என்று பிரிக்கலாம். முதுவேனில் என்பது வேனிற் காலத்தின் முதிர்ந்த நிலை.
      பின்பனி என்றால் பனிக்கு பின் என்ற பொருள் வராது. இது பின்னந்தலை என்றால் தலைக்கு பின்னால் என்றும் கீழ்முதுகு என்றால் முதுகுக்கு கீழ் என்றும் பொருள் கொள்வதை போன்றது.
      அதுபோல வெயில் காலத்துக்கு வெயில் காலம் அப்படின்னு பேர் வெச்சுட்டு அதற்கு பிந்தைய காலத்தை அதன் தன்மை சார்ந்த பெயர் வைக்காமல் 'வெயிலுக்கு பின்' என்று பெயர் வைக்குமளவு ஒரு வளம் குறைந்த மொழியா நம்முடையது?
      நாம் அப்படி எடுத்துக்கொள்ளலாம் என்று வசதிக்கு மாற்றிக்கொள்வதை பற்றி பிரச்சினை இல்லை. ஆனால் அது தான் உண்மை என்று மொழியியல் ரீதியாக நிரூபிக்கப்பட வேண்டுமல்லவா? இல்லையென்றால் சவுகரியத்துக்கு வைத்துக்கொண்டு அது தான் பாரம்பரியம் என்று அதிகாரம் இருக்கும் யார் வேண்டுமாகிலும் சொல்லலாமே?

      Delete
    3. ஹ்ம் சரி தான்.. ஆனால் இளவேனில் என்பது இப்போதிருக்கும் சித்திரை வைகாசி என்று தான் குறிப்பிடப்படுகின்றன.. என்ன செய்வது? அந்தக்காலத்துல பருவநிலை அப்படி இருந்திருக்குமோ?

      Delete
    4. http://valavu.blogspot.in/2007/01/blog-post.html

      எதுக்கும் படிச்சித்தான் பாருங்களேன்! :)

      Delete
    5. சித்திரை வைகாசி எங்க இளவேனில் அப்படின்னு குறிப்பிடப்பட்டிருக்குன்னு தெரியலை. உங்களுக்கு தெரிஞ்சா லிங்க் அல்லது புத்தகம் எதுன்னு சொல்லுங்க. கண்டிப்பா படிச்சி பாக்குறேன். ஆனால் நம்ம பழைய தமிழ் நூல்களில் நிலம், காலம் போன்றவை தெளிவா குறிப்பிடப்பட்டிருக்கு. அதுல கொஞ்சம் தான் நாம பள்ளியில் படித்தது.
      குறிப்பு : முந்தின லிங்கு போட்ட அனானி நானில்லை. அதையும் படிச்சி பாக்குறேன்.
      -பாரதி.

      Delete
    6. அனானியப்பன்April 25, 2013 at 1:36 PM

      அது உங்களுக்கு இல்ல. சிவகாசிக்காரருக்கு. நீங்களும் படிக்கலாம்.

      Delete
    7. அனானியப்பன் :-)) (நல்லா வைக்குறீங்க பேரு!!)
      படிச்சிட்டேன்.

      Delete
  17. சித்திரை வைகாசி எங்க இளவேனில் அப்படின்னு குறிப்பிடப்பட்டிருக்குன்னு தெரியலை. உங்களுக்கு தெரிஞ்சா லிங்க் அல்லது புத்தகம் எதுன்னு சொல்லுங்க. கண்டிப்பா படிச்சி பாக்குறேன். ஆனால் நம்ம பழைய தமிழ் நூல்களில் நிலம், காலம் போன்றவை தெளிவா குறிப்பிடப்பட்டிருக்கு. அதுல கொஞ்சம் தான் நாம பள்ளியில் படித்தது.
    குறிப்பு : முந்தின லிங்கு போட்ட அனானி நானில்லை. அதையும் படிச்சி பாக்குறேன்.
    -பாரதி.

    ReplyDelete
    Replies
    1. http://dinamani.com/weekly_supplements/kadhir/article732313.ece
      இந்த சுட்டியை படித்துப்பாருங்கள் பாரதி..

      Delete
    2. படிக்கிறேன்..

      Delete
  18. நாளை மற்றோரு நாளே.!

    ReplyDelete
  19. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே.!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

      Delete
  20. தகவலுடன் பதிவு.....நல்லதொரு விவாதம்....

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  21. அப்போ ஆரியம் என்பது பொய் புழுகலா...

    ReplyDelete
    Replies
    1. சரியான வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்ததைப் பற்றி.. அப்படியே அவர்கள் வந்தேறிகளாக இருந்தாலும், ஆயிரம் ஆண்டுகளாக நம்மோடு ஒன்றாகப் பழகும் ஆளைப் பிரித்து வைப்பது துவேசம் தான்

      Delete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One