ஜப்பான் பிரதமரைக் கொன்ற சர்ச்???

Wednesday, March 22, 2023

சில மாதங்களுக்கு முன் ஜப்பானிய முன்னாள் பிரதமர் Shinzo Abe சுட்டுக் கொல்லப்பட்டது சர்ச் ஃபாதரின் பாவமன்னிப்பு லீலைகள், யூ ட்யூப் மதனின் ஸ்டிங் ஆபரேஷன் எல்லாம் தாண்டி உங்கள் நினைவில் இருந்தால் அதிசயம் தான். அவருடைய கொலைக்கான காரணம் பற்றி படித்துப் போது 'டேய் நீங்க அங்கேயுமாடா?' என அதிர்ச்சியாய் இருந்தது. சரி, Shinzo Abe ஏன் கொல்லப்பட்டார்? யார் அவரைக் கொன்றது? அதைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கிற்காக 55கோடி ஆண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும்!!


55 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியை southern hemisphere, northern hemisphere எனப் பிரிக்கவில்லை. Gondwana & Laurasia எனப் பிரித்திருந்தார்கள். Gondwana நிலப்பரப்பில் தான் இன்றைய தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா எல்லாம் இருந்தன. பின் பூமிக்கடியில் இருக்கும் tectanic plates நகர்வுகளால் இந்த நிலப்பரப்புகள் எல்லாம் இன்றைய கண்டங்கள், கடல்கள், மலைகள், தீவுகளாயின. 



மனித இனம், Gondwana & Laurasia நிலப்பரப்புகள் நகர்ந்து இன்றைய நிலப்பரப்பு போல் மாறிய பிறகே உருவாகின என்றாலும், இன்றும் இந்த Gondwana பகுதி மக்களின் முக அமைப்பு ஒரே மாதிரி தான் இருக்கும். லத்தீன் அமெரிக்க நாட்டினர் எல்லாம் நம்மூர் ஆட்கள் மாதிரித் தான் இருப்பார்கள். அது மட்டுமல்ல இந்த Gondwana பகுதி மக்களின் வழிபாடும் ஒரே மாதிரியானது தான்; இயற்கை முதற்கொண்டு பல தெய்வங்களை வணங்குபவர்கள். நெருப்பு, மழை, பாம்பு, கோரமான முகம் கொண்ட சிலை என இவர்களுக்கு அனைத்துமே கடவுள் தான்.



இப்ப அப்படியே Laurasia பகுதியில் தோன்றிய மதங்களைப் பாருங்கள். ஓரிறைக் கொள்கை கொண்ட ஆபிரஹாமிய மதங்கள். ஓரிறைக் கொள்கை கொண்டவர்களுக்குத் தங்கள் மதத்தைப் பரப்புவது ஒரு தலையாயக் கடமை, அது அன்பினாலோ, வாள் முனையிலோ, ஏகாதிபத்தியம் மூலமோ. இந்த Gondwana லூசுகள் பல கடவுள்களைக் கும்பிடுவதால், அந்த ஓரிறையையும் தங்களின் ஒரு கடவுளாக ஏற்க ஆரம்பித்து, முடிவில் நெகிழ்வுத்தன்மை கொண்ட தங்கள் வழிபாட்டு முறையை விட்டுவிட்டு, வறட்டுத்தனமான அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றப்பட்டிருப்பார்கள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா எனப் பல கோடி உதாரணங்கள் உண்டு. இவர்களின் இந்த மதமாற்றும் வெறியால் பல கோடி உயிர்களும் பல லட்சம் கோடி வளங்களும் அழிந்தது தான் மிச்சம். Shinzo Abe அதில் ஒரு சிறு துரும்பு.



1920ல் கொரியாவில் Sun Myung Moon என்பவர் பிறக்கிறார். இவருடைய 15வது வயதில், "ஏசுபிரான் என் கனவில் தோன்றி, 'மகனே என்னால் முடிக்க முடியாத பல காரியங்களை நீ தான் முடிக்க வேண்டும் மொத்த மனித குலத்திற்கும் தகப்பனாக இருந்து" எனச் சொன்னதாக அறிவிக்கிறார். இந்த பல இறைக் கொள்கை கொண்ட கும்பல் தான் எவன் சாமியாராக வந்தாலும் ஏற்றுக்கொள்ளுமே? கொரியாவிலும் ஜப்பானிலும் இவரைப் பின்பற்றும் மக்கள் உருவாக ஆரம்பித்தார்கள். Unification Church என்கிற அமைப்பை உருவாக்குகிறார். இந்த UCன் முக்கிய வேலையே பணக்காரர்களையும் அதிகாரமிக்கவர்களையும் தங்கள் மதத்திற்கு மாற்றுவது. அப்படி முடியவில்லை என்றால், அட்லீஸ்ட் அவர்களுக்குக் காசு கொடுத்துத் தங்கள் மதத்தைப் பற்றி மேடைகளில் பேச வைப்பது. நம்மூரில் மார்க்கெட் போன நடிகர்கள், துணை நடிகைகள் ஜீவ சாட்சி சொல்கிறார்களே, அப்படி.



இது போன்ற influencers மூலமாக ஆள் பிடிக்கிறார்கள். ஆள் பிடித்தால் மட்டும் போதுமா? வருமானத்திற்கு வழி என்ன? "உங்கள் மூதாதையர்களோடு பேச வைக்கிறேன்", உங்களின் கஷ்டங்களைப் போக்க வைக்கிறேன், இந்த எண்ணிற்கு அழைக்கவும்" என விளம்பரப்படுத்துகிறார்கள். நம்பிய மக்களும் அந்த எண்ணிற்கு அழைத்தால் ஆரம்பநிலை வேண்டுதலுக்கே பல ஆயிரம் செலவு. ஆனால் அரசியல்வாதிகள், நடிகர்கள் எனப் பலரும் இந்த மதம் பற்றிய தங்கள் அனுபவங்களைப்(!!!) பேசுவதால் நம்பிப் பணம் கட்ட ஆரம்பித்தார்கள். UCன் கல்லா நிறைய ஆரம்பித்தது.



இந்த சர்ச்சில் தான் Shinzo Abeவின் தாத்தா ஒரு உறுப்பினராகச் சேர்கிறார். அப்போது அவர் ஜப்பான் பாராளுமன்ற உறுப்பினர். பின் Shinzo Abeவின் அப்பா ஜப்பானின் வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த காலத்தில் UC அவர்களின் LDP கட்சிக்காகப் பிரச்சாரமே செய்தது. இது Shinzo Abe பிரதமராக ஆகும் வரை தொடர்ந்தது. LDP கட்சியின் உறுப்பினர்கள், ஜப்பானிய அரசியல் தலைவர்கள் எனப் பலரையும் UCயின் தலைமையகத்துக்கு அனுப்பி "இறையியல்" பற்றிப் பாடம் படிக்க வைத்தார். அவர்களுக்குத் தேவ சாட்சியம் அளிக்க வைத்தார். அரசாங்கத்திற்குள் இந்த UCன் மூக்கு அதிகமாகவே நுழைந்தது. 



இந்த 70 ஆண்டுகளில் UCயை நம்பிப் பல மக்கள் தங்கள் பணத்தை இழந்து நடுத்தெருவிற்கு வந்தார்கள். இவர்கள் வீடு புகுந்து, "உங்கள் கொள்ளுப்பாட்டியின் ஆத்துமா உங்களிடம் பேசத்துடிக்கிறது. குடும்ப ரகசியம் உள்ளதாம்" என ஆரம்பித்து, கொள்ளுப்பாட்டியிடம் பேச லட்சக்கணக்கில் கொள்ளையடித்தால் தெருவிற்கு வராமல் தேவலோகமா போவார்கள்? வீட்டில் கெட்ட ஆவிகளை (ஜப்பானியக் கடவுள்) ஓட்டுகிறோம் எனச் சொல்லி, அலங்காரப் பானைகள் & பொம்மைகளை ஆயிரக்கணக்கில் விற்றார்கள். 1980களிலேயே இந்த UC ஜப்பானின் மிகப்பெரிய nuisance என பொதுமக்களும் வக்கீல்களும் அங்கங்கு போராட்டம், வழக்கு என ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அதன் வளர்ச்சி சீராகவே இருந்தது. படிப்படியாக வளர்ந்த UCயிடம் இப்போது கிட்டத்தட்ட 1.24லட்சம் கோடி சொத்து உள்ளது!! அதில் 70% ஜப்பானில் மட்டும்.


இந்த UCயில் கண்மூடித்தனமாக நம்பிக்கை கொண்டு, தன் சொத்து அனைத்தையும் தேவனுக்காக அழித்தார் ஒரு பெண்மணி. அவருடைய குடும்பம் நடுத்தெருவிற்கு வந்தது. குழந்தைகளின் எதிர்காலம் நாசமாய் போனது. அவருடைய பையன், தன் குடும்பம் அழியக் காரணமாய் இருந்த UC மேல் உருவான கோபத்தை, அது ஜப்பானில் வளர முக்கிய காரணமாக இருந்த Shinzo Abe மீது துப்பாக்கி குண்டு வழியே காட்டினான். அவர் செத்தார். இவன் ஜெயிலில். ஆனால் இது எதையுமே கண்டுகொள்ளாதது போல் UC எப்போதும் போல் "இறை சேவை" செய்து வருகிறது.


ஆனாலும் Abeவின் இறப்பு ஜப்பான் முழுவதும் UC மேல் மிகப்பெரிய வெறுப்பையும் அதன் செயல்பாடுகள் மீதான விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இருந்தாலும் அதெல்லாமே too late than. ஏனென்றால்,


ஜப்பானில் கட்டற்ற மத சுதந்திரம் உண்டு. இங்கு நீங்கள் ஒரு Shintoவாக (புத்த மதப்பிரிவு) இருந்து கொண்டே non religious/secular என்றும் சொல்லிக்கொள்ளலாம். பல பெரும்பான்மை புத்த மதத்தினரும் பெருமையாகத் தங்களை secular என அழைத்துக் கொள்கிறார்கள். சமீப நாட்களாக அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடுவது, மேற்கத்திய பாணியில் திருமணம் செய்து கொள்வது எனப் பல விஷயங்களும் UC போன்ற அமைப்பினரால் "மதச்சார்பற்ற" சடங்குகளாக, திருவிழாக்களாக அந்த மக்களின் மீது திணிக்கப்படுகிறது. அது ஒரு ஃபேஷனாகவும் மாறி வருகிறது. ஜப்பானிய இளைஞர்கள் தங்கள் சடங்குகளை விட இந்த மதச்சார்பற்றச் சடங்குகளையே விரும்புகிறார்கள். ஒரு Shinzo Abe போனால் என்ன, மதத்தை எந்த வழியிலும் திணிக்கப் பல Abeக்களை அவர்களால் உருவாக்க முடியும் என UC நிரூபிக்கிறது. ரெக்கார்ட் படி ஜப்பானில் 1.5% - 2% தான் கிறிஸ்தவர்கள். ஆனால் நிஜத்தில் இதை விடப் பல மடங்கு இருக்கலாம் என்கிறார்கள். நான் முதல் பத்தியில் சொன்ன "டேய் நீங்க அங்கேயுமாடா?" என்பதன் அர்த்தம் இப்போது விளங்கியிருக்கும் உங்களுக்கு. 


கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள். கார்ப்பரேட்டுகளுக்கெல்லாம் அப்பன் தான் இந்த மதமாற்ற கும்பல். கடவுள் என்னும் தங்கள் காஸ்ட்லி பொருளை விற்க, கல்லா கட்ட அவர்கள் யாரையும் அழிக்கத் துணிவார்கள், எந்த கலாசாரத்தையும் கேவலப்படுத்துவார்கள், எத்தனைக் குடும்பஙகளையும் சீரழிப்பார்கள். தங்களுடைய சரக்கு விற்றால் சரி அவர்களுக்கு.


பல இறைக்கொள்கை கொண்ட Gondwanaவில் ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து அடுத்த பலி ஜப்பானாகத் தான் இருக்கும் என்றால் அதை யாரால் மாற்ற முடியும்? அதன் பின் மிச்சம் இருப்பது "இந்தியா".

No comments:

Post a Comment

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One