ஏமாற்றி மதம் மாற்றுவதற்கு எதிரான ஒரு சிறு ஆரம்பம்..

Friday, July 11, 2014

சென்ற கட்டுரையின் அனல் கொஞ்சம் அடங்கிய பின் அடுத்த விசயம் எழுதலாம் என்று காத்திருந்தேன்.. அந்த அனல் முந்தாநாள் வரை அடித்து, இப்போது இரண்டு நாட்களாகத் தான் ஓய்ந்திருக்கிறது.. அடுத்த பதிவை ஒரு நகைச்சுவைக் கதையாகவோ, லேசான கட்டுரையாகவோ எழுதலாம் என்று தான் நினைத்திருந்தேன்.. ஆனால் ’அப்படியெல்லாம் லேசுல உன்ன விட்டுற முடியாது’ என்று இறைவன் நினைத்து விட்டார் போல.. இதோ மீண்டும் நாலாபுறத்தில் இருந்தும் என்னை அட்டாக் செய்ய ஏதுவான, அனல் பறக்கும் அடுத்த கட்டுரை.. முக்கியமான விசயம் என்னவென்றால், இதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு பதில் அளித்து என் நேரத்தையும், சக்தியையும் நான் வீணடிக்கப்போவதில்லை.. சரி விசயத்திற்கு வருகிறேன்..

ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் தங்களின் இன்றைய நிலை குறித்து கேலியாக சொல்லிக்கொள்வார்களாம், “அவர்கள் (ஐரோப்பியர்கள்) இங்கே வந்த போது எங்கள் கையில் நிலமும் அவர்கள் கையில் பைபிளும் இருந்தது.. இப்போது எங்கள் கையில் பைபிளும் அவர்கள் கையில் நிலமும் மாறிவிட்டது”.. உண்மை தான், பெரும்பாலும் மதமாற்றம் என்பது ஒரு வியாபாரமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது உலகம் முழுவதும்.. வளரும், ஏழை நாடுகளில் கிறிஸ்தவ இயக்கங்கள் இதை ஒரு பெரிய நெட்வொர்க்காகவே செய்துகொண்டு வருகின்றன.. ’இந்துக்கள், யாரையும் மதம் மாற்றுவது இல்லையா?’என்று சிலர் கேட்கலாம்.. ஆம், அமெரிக்காவில் சில இந்து இயக்கங்களும் இதைச் செய்கின்றன.. ஆனால் அவர்கள் இந்தியாவில் கிறிஸ்தவ இயக்கங்கள் செய்வது போல் ஊர் ஊராக, தெருத்தெருவாக, வீடுவீடாக ‘ஊழியக்காரர்’களை நியமித்து எங்கு, யார் வீட்டில் துக்கம் நடக்கிறது, அதை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற அளவிற்கு குரூரமாக இறங்கவில்லை. இன்னொரு விசயம் ஒரு வளர்ந்த நாட்டில் மக்களை அவ்வளவு எளிதாகவெல்லாம் ஏமாற்றி மதம் மாற்றி விட முடியாது. ஆனால் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற படிப்பறிவும் விழிப்புணர்வும் பெரிய அளவில் இல்லாத மூன்றாம் உலக நாடுகளில், மிக எளிதாக மக்களை மதம் மாற்றிவிடலாம்..

”மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு.. அதை மாற்றிக்கொள்ள அவருக்கு விருப்பம் இல்லையா? அதை ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்று சிலர் கேட்கலாம்.. நல்ல கேள்வி தான்.. வேறு ஒரு விசயத்தை இதே போன்று கேட்டுப்பார்ப்போம்.. இந்தி கற்றுக்கொள்வதென்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு.. இந்தி படிக்க ஒருவருக்கு உரிமை இல்லையா? பின் ஏன் இந்தியை எதிர்க்கிறோம்? பதில், ரொம்ப சிம்பிள், மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரம்.. இன்னொரு மொழியை திணித்தால் அந்த இனத்தில் அடையாளம் அழிந்து விடும்.. கிட்டத்தட்ட அதே போன்றது தான் மதமும்.. இந்தியா முழுவதும் மதம் சார்ந்து அமையப்பட்ட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு கலாச்சாரம், பழக்க வழக்கம், சடங்குகள் இருக்கின்றன.. மதமாற்றத்தால் அவை அனைத்தும் சிதைந்து போகின்றன.. யோசித்துப்பாருங்கள், ஒரு இந்துவின் திருமணம் போன்ற சடங்குகள் அவர்களின் இடம், ஜாதி, மொழி சார்ந்து ஒவ்வொரு விதத்தில் அமையப்பட்டிருக்கும்.. ஒவ்வொன்றும் ஒரு வகையில் அழகாக இருக்கும். ஒரு மராத்திய பிராமணரின் திருமணம், நாயக்கர்களின் திருமணம், கேரள மக்களின் திருமணம் என இடம், ஜாதி, மொழி சார்ந்து இங்கு தான் எவ்வளவு சடங்குகள் உள்ளன? அதுவே அவர்கள் மதம் மாறிவிட்டால், அந்த சடங்குகள் எல்லாம் மொத்தமாக அழிந்து போய் ஐரோப்பியர்களின், வளைகுடாக்காரர்களின் கலாச்சாரம் தான் நம் கலாச்சாரம் என்பது போல் மாறிவிடும்.. பின் நமது அடையாளம் மொத்தமாக அழிந்து போகும்.. மதமாற்றத்தின் இறுதி நிலை என்பது மொத்தமாக நம் அடையாளத்தை இழக்கச்செய்வது தான்.. 

“ஹலோ இந்து மதம்ங்கிறதே இப்பத்தான் முகலாயர்களும், பிரிட்டீஷ்காரனும் வந்த பின்னாடி வந்துச்சி.. அதுக்கு முன்னாடி அதுக்கு பேரே கிடையாது. தமிழ்நாட்டிலும் சிறுதெய்வ வழிபாடு தான் இருந்துச்சி. அதை மொத்தமா இந்துன்னு சேத்துக்கிறத எப்படி நம்மின் அடையாளமா ஏத்துக்க முடியும்?” என்றும் சிலர் கேட்கலாம்.. இதுக்கும் முதலில் சொன்ன உதாரணத்தையே சொல்கிறேன். தொல்காப்பியர் காலத் தமிழைத்தான் நாம் இன்றும் பேசுகிறோமா? அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள்? நாம் இன்று பேசும் தமிழை ஆதிகாலத் தமிழன் ஒருவனும் தமிழ் என்றே ஒத்துக்கொள்ள மாட்டான்.. ஆனால் நமக்கு இது தான் தமிழ்.. இந்தி என்கிற அந்நிய மொழி உள்ளே நுழைவதை பார்த்ததும் நாம் பேசும், பின்பற்றும் இந்தத் தமிழை ஆதரிக்க நினைக்கிறோமே, அது போல் தான் இதுவும்.. இப்போது நாம் பின்பற்றுவது தான் இந்து மதம்.. அதன் கலாச்சாரத்தை, பழக்க வழக்கத்தை ஒரு சிலர் வேற்று மதங்களை புகுத்தி அழிக்க நினைக்கும் போது நாம் ஒன்று கூடத்தான் வேண்டும்.

“ஆனால் இந்து மதங்களில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றனவே? இன்னமும் சில கோயில்களில் ஜாதியின் பெயரால் சிலர் அனுமதிக்கப்படுவதில்லையே? இன்னமும் சில ஊர்களில் இரட்டைக்குவளை முறைகள் எல்லாம் இருக்கின்றனவே?”. ஆம் உண்மை தான்.. ஆனால் மதம் மாறினால் இதுவும் மாறிவிடுமா? தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி சர்ச்சுகள் உண்டு.. சில இடங்களில் மற்ற சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காதவாறு கீற்றுக்கொட்டகையால் பிரிக்கப்பட்டிருப்பார்கள் சர்ச்சுகளில்.. அதனால் மதம் மாறிவிடுவதால் ஒருவர் மீது காட்டப்படும் துவேசம் எல்லாம் குறைந்து விடாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.. கிறிஸ்தவ பிராமண அசோசியன் என்றெல்லாம் ஆரம்பித்து “உயர்வான”வர்கள் எங்களிடமும் இருக்கிறார்கள் என்று கிறிஸ்தவ பிராமணர்களை வைத்து பைபிள் கதாகாலேட்சபம் நடத்துகிறார்கள் கிறிஸ்தவர்கள்.. அங்கு ஜாதி வித்தியாசம் இருக்காது என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்த்தனம்.. இஸ்லாமியர்கள் கூட கீழ் சாதி இந்துக்களை மட்டமாக நடத்துவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.. அவர்கள் மதத்திற்கு மாறிய பின் இஸ்லாமியர்கள் அப்படி செய்வதில்லை என்றாலும், ஒரு இந்து தாழ்த்தப்பட்டவரை அவர்கள் மதிப்பதில்லை.. அதாவது ஜாதி வெறி என்பது இஸ்லாமியர்களுக்குள்ளும் தான் இருக்கிறது.. 

“சரி, கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டிலும் ஜாதி வெறி இருக்கிறது என்பதற்காக இந்து மதத்திலும் அது இருப்பது சரியா? அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா?”.. நிச்சயமாக இல்லை. இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாக களையப்பட்டுக்கொண்டு தான் வருகின்றன.. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்காக எத்தனை பிற மதத்தினர் குரல் கொடுத்திருக்கிறார்கள்? ஒருவரும் கிடையாது.. தங்கள் மதத்திற்கு மாறினால் ஜாதி பேதம் கிடையாது என்று புழுகுபவர்கள், ஏன் இந்து மதத்தில் இருக்கும் ஜாதி வித்தியாசத்திற்காக குரல் கொடுப்பதில்லை? அவர்கள் நம் ஏற்றத்தாழ்வுகளை தங்களுக்கு சாதகமாகத்தான் பயன்படுத்துகிறார்களே ஒழிய, இந்த ஏற்றத்தாழ்வு மறைய அவர்கள் ஒன்றுமே செய்ததில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மறையாமல் பார்த்துக்கொள்பவர்களே அவர்கள் தான்.. ஏனென்றால் இதை வைத்து தான் அவர்கள் பிழைப்பை ஓட்ட வேண்டும்.. மாறாக இந்துக்களில் பலர் தான், ராஜா ராம்மோகன் ராயில் இருந்து, விவேகானந்தர், நாராயண குரு, அய்யா வைகுண்டர், வைத்தியநாத ஐயர் என்று ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மறைய குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் சீரிய செயல்பாடுகளின் விளைவுகளால் தான் இந்த ஏற்றத்தாழ்வு குறைய ஆரம்பித்தது என்றால் மிகையாகாது.. அரசும் இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்ற பல செயல்களை செய்து வருகிறது.. இந்து மதத்தில் தான் ஒடுக்கப்பட்டவருக்கு சலுகைகள் கிடைக்கிறது அரசின் மூலம்.. 

நீங்கள் ஜாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவராகவே இருக்கலாம்.. ஆனால் உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் உங்கள் சாதியையும், மதத்தையும் சார்ந்து தான் இருக்கும்.. பிறப்பில் இருந்து இறப்பு வரை அதுஅதற்கென்று இருக்கும் சில சடங்குகளை, நீங்கள் சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லாதவராகவே இருந்தாலும் செய்து தான் ஆவீர்கள்.. ஏனென்றால் அது தான் நம் அடையாளம்.. மதமாற்றத்தினால் அந்த அடையாளம் சுத்தமாக அழிந்துபோகும்.. நம் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவாவது சில விசயங்களை நாம் எதிர்க்க வேண்டும்.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதால் அழியப்போவது இந்து மதம் மட்டும் அல்ல, இந்தியர்களின் அடையாளமும் தான்.. நம் அடையாளத்தை காப்பதற்காகவாவது அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட முன்வர வேண்டும்..  

இன்னொரு முக்கிய விசயம் இந்தப் பதிவு எந்த மதத்திற்கும் எதிரான பதிவு இல்லை. எப்படி ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறதோ, அது போல் இந்துக்களும் எங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறோம், அவ்வளவே.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதை தடுப்பதற்கான ஒரு சிறு முயற்சி தான் இது.. அதற்கான ஆரம்பப்புள்ளி தான் இந்தப்பதிவு.. ஒத்தக்கருத்துள்ள, இணைந்து களப்பணியாற்ற விருப்பம் உள்ள நண்பர்கள் hindusagainstconversion@gmail.com என்னும் ஈமெயில் முகவரியில் உங்கள் விருப்பத்தினையும், கருத்துக்களையும் தெரிவிக்கவும்... இது வெறும் தொடக்கப்புள்ளி தான்.. :-)

30 comments

  1. Good retrospective. Keep it up

    ReplyDelete
  2. நமது அடையாளத்தைக் காக்க வேண்டியது நமது கடமை

    ReplyDelete
    Replies
    1. கடமையை செய்ய வேண்டுமே? எப்போது எப்படி செய்யலாம?

      Delete
  3. அடையாளத்தை மாற்ற நினைப்பது சிரமம் தான்... ஆனால் தவிர்க்கலாம்...!

    ReplyDelete
    Replies
    1. தவிர்த்தாலும் பின் தொடர்ந்து வருவார்கள்.. திரும்பி அட்லீஸ்ட் முறைக்கவாவது செய்ய வேண்டும்..

      Delete
  4. இந்தப் பதிவு எந்த மதத்திற்கும் எதிரான பதிவு இல்லை. எப்படி ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறதோ, அது போல் இந்துக்களும் எங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறோம், அவ்வளவே.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதை தடுப்பதற்கான ஒரு சிறு முயற்சி தான் இது.. = அற்புதம் Ram Kumar. எங்கள் அருமை ராம்குமார் அருமையான சிந்தனையாளர். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார் :)

      Delete
  5. நீங்கள் ஜாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவராகவே இருக்கலாம்.. ஆனால் உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் உங்கள் சாதியையும், மதத்தையும் சார்ந்து தான் இருக்கும்.. பிறப்பில் இருந்து இறப்பு வரை அதுஅதற்கென்று இருக்கும் சில சடங்குகளை, நீங்கள் சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லாதவராகவே இருந்தாலும் செய்து தான் ஆவீர்கள்.. ஏனென்றால் அது தான் நம் அடையாளம்.. மதமாற்றத்தினால் அந்த அடையாளம் சுத்தமாக அழிந்துபோகும்.. நம் அடையாளத்தை காப்பாற்றுவதற்காகவாவது சில விசயங்களை நாம் எதிர்க்க வேண்டும்.. அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதால் அழியப்போவது இந்து மதம் மட்டும் அல்ல, இந்தியர்களின் அடையாளமும் தான்.. நம் அடையாளத்தை காப்பதற்காகவாவது அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட முன்வர வேண்டும்.. //மிகச் சிறப்பான கருத்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  6. //ஹலோ இந்து மதம்ங்கிறதே இப்பத்தான் முகலாயர்களும், பிரிட்டீஷ்காரனும் வந்த பின்னாடி வந்துச்சி.. அதுக்கு முன்னாடி அதுக்கு பேரே கிடையாது. தமிழ்நாட்டிலும் சிறுதெய்வ வழிபாடு தான் இருந்துச்சி. அதை மொத்தமா இந்துன்னு சேத்துக்கிறத எப்படி நம்மின் அடையாளமா ஏத்துக்க முடியும்?” என்றும் சிலர் கேட்கலாம்..///

    இதே ஆங்கிலேயர்கள் வந்து ஆண்டு சென்றபின்தான் இந்தியா என்ற நாடும் உருவானது.அதற்குமுன் இந்து மதத்தை போல தான் நாடும் பலபாகங்களாக,பல ராஜ்ஜியங்களாக பிரிந்து இருந்தது.

    //“சரி, கிறிஸ்தவம், இஸ்லாம் இரண்டிலும் ஜாதி வெறி இருக்கிறது என்பதற்காக இந்து மதத்திலும் அது இருப்பது சரியா? அதை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டுமா?”.//

    அண்ணா,இதற்கு பதிலாக நான் ஒன்னைச்சொல்லவிரும்புகிறேன்.நாட்டின் பெயரால் இந்தியன்,பாகிஸ்தானியன் என்று பிரித்துக்கொண்டு வாழ்வது மாத்திரம் இவர்களுக்குபிடிக்கும்.சாதியின் பெயரால் பிரித்தால்,அது மனித தன்மையற்ற செயல்.முதலில் மக்கள் என்று இவர்கள் சொன்னபின் சாதியை ஒழிக்க அரும்பாடு படட்டும்.

    //நீங்கள் ஜாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவராகவே இருக்கலாம்.. ஆனால் உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் உங்கள் சாதியையும், மதத்தையும் சார்ந்து தான் இருக்கும்//

    சிறந்த உதாரணம்தமிழின தலைவரின் வீட்டில் நடந்த திருமணம்.

    //எப்படி ஒவ்வொரு மதமும் தங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறதோ, அது போல் இந்துக்களும் எங்கள் மதத்தை காத்துக்கொள்ள நினைக்கிறோம்,//

    சரியான வார்த்தைணா! ஆனா,இது ஒரு சிலர் கண்ணுக்கு இந்து மதம்தான் உயர்ந்ததா?,கிறிஸ்துவர்கள் எல்லாம் மதமாற்றவேலையிலா அலைகிறோம்?எங்களைப்பற்றி பேச நீ யார்?அப்பிடி இப்பிடினு கூப்பாடு போட்டுகிட்டு வர ஆரம்பிச்சிடுவாங்க.நாம என்ன சொல்ல வர்றோம்னு படிக்காமலே,அறைகுறையா படிச்சிட்டு,இவன் மத வெறியன்,சாதியைச்சாடுபவன்-னு இஷ்டத்துக்கு அவங்களா மனசுல நினைச்சிக்கறாங்க.


    இந்த மதமாற்றம் பற்றிய உங்களுடைய முந்தைய பதிவிலே அனைத்துவிஈயங்களும் போட்டுட்டிங்களே!இதுல எதுக்கு மறுபடியும் அதையே அறைக்கிறிங்கனு நினைச்சுகிட்டே படிக்கறப்ப,கடைசியா கொடுத்திருந்த மெயில் ஐடி,அந்த எண்ணத்த நொறுக்கிடுச்சி!!நம்ம மெயில் வந்து சேர்ந்துச்சா ணா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. அது என் கண்ட்ரோலில் இருக்கும் மெயில் ஐடி அல்ல.. முக்கியமான ஒருவரின் மெயில் ஐடி.. அவரிடம் கேட்டு சொல்கிறேன்.. நான் அவரின் இயக்கத்தில் ஒரு ஆள் அவ்வளவே :)

      Delete
  7. *****அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றுவதால் அழியப்போவது இந்து மதம் மட்டும் அல்ல, இந்தியர்களின் அடையாளமும் தான்.. நம் அடையாளத்தை காப்பதற்காகவாவது அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக போராட முன்வர வேண்டும்..***

    The author of this article hardly knows the difference between an "indian" and a "hindu"

    Buddha ran away from HInduism as he found that it is not a worthy religion to follow.

    People still call Budda as an INDIAN and not HINDU! He is well known to the world unlike this hindu author Ramkumar whos lives in a "small world"!

    ---------------

    ----------------------


    I wonder HOW ARE YOU guys GOING to FIND OUT someone was converted FORCEFULLY?

    Are you going to interview who got out of your religion as he/she finds that your religion is WORTHLESS and TRASHY?

    He will ask you to "fuck off" if he or she changed her/his religion wholeheartedly. So YOU BETTER BE CAREFUL when you approach someone!

    It is NO POLITE to GO ASK anybody, "Why did you change your religion?" Because it is none of anybody's business!

    You can RAPE someone forcefully but I don't think you can convert one's religion without his/her willingness!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் கருத்து நல்லதுதான்.ஆனால் இதற்கு நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்.ஒன்றும் அறியாத 16 வயது உடைய ஒரு பெண்ணை,நயவஞ்சகமாக பேசி,அவள் விருப்பத்துடன் உடலுறவு கொண்டு அவளை ஏமாற்றினால் அது ஞாயயமா?அது உடலுறவு வகையைச்சாறுமா?இல்லை கற்பழிப்பு என்று மாறுமா?

      Delete
    2. செக்ஸ்க்கும் ரிலிஜனுக்கும் சம்மந்தமே இல்லைங்க. செக்ஸ் உணர்ச்சிவேகத்தில் செய்வது. ரிலிஜன் என்பது உங்க "மன ஆறுதலுக்காக" நிதானமாக இருக்கும்போது சிலவற்றை நம்பி, அந்த நம்பிக்கையால் உங்களை நீங்களே மனச்சலவை செய்து வாழ்வது.

      எனக்குத் தெரிய ஒரு ஆளு இவரு தேவர், நல்லா படிச்சு வந்த பிறகு ஒரு அழகான ஸ்டையிலான பொண்ணு அவர் சாதியிலேயே பார்க்கணும்னு பார்த்தாரு. தேவர் பொண்ணு கெடச்சது ஆனால் அது கிருஷ்டியன். இவரு கிருஷ்டியனா மாறணும், சர்ச்ச்லதான் கல்யாணம்னு சொல்லீட்டாங்க பொண்ணு வீட்டிலே. இவருக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருச்சு. அவ வாங்கும் சம்பளம் வேற இவர் வாங்குவதுக்கு இணையான அளவு. உடனே, எல்லாத்துக்கும் சரினு போயி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆனால் தனியாக நண்பர்களிடம் பேசும்போது கிருத்தவர்களை கேலிதான் பண்ணுவாரு. பொண்டாட்டி அருகில், மற்றும் அவங்க வீட்டுக்குப் போகும்போது மட்டும் கிருத்தவரா நடிப்பாரு.

      இவரை யாரு ஏமாத்தினா?

      இவர்தான் எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருக்காரு..இந்தமாதிரி கல்யாணத்த்க்காக மட்டும் கிருத்த்வராக நடிக்கும் வியாபாரிகளும் இந்துக்களில் இருக்கத்தான் செய்றாங்க. இவர்களை என்ன செய்வது?

      Delete
    3. http://www.sivakasikaran.com/2014/03/blog-post_15.html

      இந்த பதிவ படிச்சிங்கனா உங்களுக்கு கொஞ்சம் புரியும்னு நினைக்கிறேன்

      Delete
    4. //It is NO POLITE to GO ASK anybody, "Why did you change your religion?" Because it is none of anybody's business!// மதம் மாத்துறவனுக்கும் அதே தான்.. நீங்க மதம் மாறுறத பத்தியே தான் சொல்லிறீங்களே தவிர மாத்துறவன பத்தி, காசு பாக்குறவன பத்தி ஏன் பேச மாட்றீங்க? ஒப்பாரி நடக்குற வீட்ல தனக்கு எதுவும் ஆதாயம் கிடைக்காதான்னு அலையிறவன பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாதா? இல்ல செக்யூலர் ரத்தம் ஓடுவதால் மூடிக்கொண்டு இருக்கிறீர்களா? பதிவுலயே போட்டுட்டேன் ஏமாத்தி மதம் மாத்துறவன்னு.. சும்மா வீல் வீல்னு கத்திட்டு இருக்கீங்க? என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்.. யார்ட்ட எப்படி பேசணும்னு நீங்க சொல்லிக்கொடுக்க தேவையில்ல.. முடிஞ்ச இங்க கத்துற கத்த, ஏமாத்தி மதம் மாத்துறவன்ட்டயும் கொஞ்சம் கத்திப் பாருங்க..

      Delete
  8. இந்த பதிவுள,ராம்குமார் அண்ணன் சொல்லவர்ரது முதல்ல என்னனு தெளிவா படிச்சுப்பாருங்க.நீங்க சொல்ற மாதிரி ஆளுங்கள குறிச்சு எழுதல.ஒன்னுமே அறியாத,பாமரத்தனமான மக்கள் இருப்பாங்க.அவங்கள மூளைச்சலவை செய்யறதையே ஒரு தொழிலா வைச்சி ஒரு சில கும்பல் இயங்கிட்டு இருக்கு.அவங்க நோக்கம் எப்படினு பாத்திங்கனா,பணக்கஷ்டத்துலயோ,இல்ல சில குடும்ப கஷ்டம்,இல்லைனா ஜாதி சார்ந்த அவமானங்கள்ல இருக்கவங்கள குறிவச்சி,அவங்க கிட்ட என் மதத்திற்கு மாறுனா,உங்க எல்லாப்பிரச்சினையும் தீர்ந்திடும்னு சொல்லி நயவஞ்சகமா பேசி மதம் மாத்திடுவாங்க.அந்த மாதிரி நயவஞ்சகர்கள் பத்தின பதிவுதான் இது.ஒரு மதத்திற்கு எதிரான பதிவு இல்ல.

    ReplyDelete
    Replies
    1. அய்யா ராசா நீங்க குறிப்பிட்டிருக்குற பதிவுல தான் நானும் வருணும் மொத மொதல்ல டவுசர் கிழியுற அளவுக்கு சண்டை போட்டோம்.. திரும்ப அதை கிளறாதீங்க.. அவர் கருத்தில் அவர் ஸ்ட்ராங்கா இருப்பார்.. என் கருத்தில் நான் ஸ்ட்ராங்கா இருப்பேன்.. கடைசி வரை முடிவே இல்லாமல் இருவரும் அடித்துக்கொண்டு இருப்போம்.. அது வேண்டாம் என்று நானே அவருக்கு பதில் சொல்வதை குறைத்துக்கொண்டேன்.. நீங்க திரும்ப ஆரம்பிக்காதீங்க.. முடிஞ்சா அந்த பதிவோட கமெண்ட்ஸ்களையும் பாருங்க.. :)

      Delete
    2. எனக்கும் பொழுது போக வேண்டாமா ணா?அவர் எப்படி ஸ்ட்ராங்கோ அதே மாதிரி உறுதியா என்னோட கருத்தையும் பதுவு பண்ணனும்ல ணா!!

      Delete
    3. .... இதுக்கும் முதலில் சொன்ன உதாரணத்தையே சொல்கிறேன். தொல்காப்பியர் காலத் தமிழைத்தான் நாம் இன்றும் பேசுகிறோமா? அட அவ்வளவு ஏன், நம் தாத்தா பேசிய தமிழுக்கும் நாம் பேசும் தமிழுக்குமே எவ்வளவு மாறுதல்கள்? ////

      இந்த வரிகள் உங்கள் வாதம்/பக்கம் வலுவிழக்க செய்கிறது .:)கால மாற்றத்தால் மொழியில் நிகழும் இயல்பான மாற்றத்தையும் , அப்பாவி மக்களை ஏமாற்றி தந்திரமாய் அவர்களின் சிறுதெய்வ வழிபாட்டை மதிப்பிழக்க வைத்து அவர்களை இந்து மதம் என்ற ஒரே குடையிப் கீழ் கொண்டுவந்த அரசியலும் ஒன்றா ?!

      Delete
    4. ஏங்க!சேர நாடு,சோழ நாடு,பாண்டிய நாடு,மைசூர் சமஸ்தானம்,நிஜாம் சமஸ்தானம்,னு தனித்தனியா இருந்தத,இந்தியாவுக்குல ஒன்னாக்குன அரசியல் மட்டும் நீங்க ஏத்துப்பிங்க!!கடவுள் வழிபாட்டில் ஒன்றாக இருக்கும் மக்களை இந்து மதமா ஒன்னாக்குனா மட்டும் ஏத்துக்கமாட்டிங்களா?

      Delete
    5. அதாவது தமிழை நாமாகக் கொன்றால் தவறில்லை.. அப்படித் தானே Priyamudan Prabu?

      Delete
  9. அதுதான் இந்தியா ந்னு சேர்ந்து இருக்கோமே இந்து கத்துக்கோன்னு நேரடியா/மறைமுகமா தினிச்சா எதிர்க்க தானே செய்தோம் ?! இந்தியான்னு ஆனாலும் அவரவர் தனித்தன்மை இழக்க/விட்டுக்கொடுக்க தேவையில்லை என்று சொல்லித்தான் (அனுமதியோடு) இந்தியா உண்டாச்சு ,அதை மீறும் போது உடையும் (#ரஸ்யா) .ஆனால் இந்து மதம் என்பது ?
    ஒரே ஒரு கேள்வி ஒரு இந்து மாட்டுக்கறி சாப்பிடலாமா ?! நீங்க இல்லைன்னு தானே பதில் தர போகிறீங்க ?! (என் கணிப்பு .:) அப்படினா மாட்டுக்கறி சாப்பிடுபவன் இந்து இல்லை யா ?! அப்படி இல்லாமல் அவன் சாப்பிடுவதை நிறுத்தச்சொன்னால் அது அவன் தனித்தன்மை இழப்பு இல்லையா ?!

    இந்து மதம் என்ற பொதுப்பெயரால் மக்களின் குலதெய்வ வழிபாடு மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளப்பட வில்லையா ?! அது கலாச்சார/பண்பாட்டு இழப்புல வராதா?!

    ReplyDelete
    Replies
    1. சரிங்க!நீங்க சொன்னமாதிரியே வந்தாலும்,இந்து மதம்,ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களில் நசுக்கப்படவில்லை.இப்போ வன்னியர் என்ற ஜாதிலேயே ஒரு பிரிவினர் அவங்க வழக்கப்படியும்,இன்னோரு பிரிவினர் வேறு விதமாகவும் சடங்குகளை செஞ்சுதான் திருமணம் செய்றாங்க.நம்ம தமிழ்நாட்டுல இருக்குற இந்து மக்களின் திருமணத்திற்கும்,வட நாட்டிலுள்ள இந்துக்களின் திருமணத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கு.அந்தந்த மாநிலங்கள்,ஜாதிகள்னு ஒவ்வொன்னுலயும் ஒவ்வொரு முறைய பின்பற்றிதான் அவர்களின் வழிபாடு,சடங்கு சம்பிரதாயம்லாம் செய்றாங்க.இந்துக்கள் அனைவரும் இந்த சாமியத்தான் கும்பிடனும்,இந்த மாதிரிதான் சடங்கு செய்யனும்னு யாரும்,யாரையும் வற்புருத்துனதா நா கேள்வி பட்டதில்ல.

      அதே மாதிரி குர்ரான்,பைபிள்னு நீங்க எந்த புனித புத்தகத்துல பாத்தாலும் இறைச்சி உண்பது,மது அருந்துவது பாவம்னு தான் சொல்றாங்க.ஆனா,இறைச்சி சாப்பிட்டு சர்ச்க்கு போற எவ்ளோ பேற நானே பாத்துருக்கேன்.அதுக்குனு அவங்க கிறிஸ்டியனே இல்லைனு சொல்விங்களா?ஒவ்வொரு மதத்திலையும் பல கொள்கைகள் இருக்கு.

      ஒவ்வொரு மதமும் மனிதன நல்லவிதமான வாழ்க்கைய வாழ வழி வகுக்குது.ஆனா ஒரு சிலர்,அத தவறான முறையில பயன்படுத்திக்கிறாங்க.அதுக்காக ஒட்டுமொத்த மதத்தினரையும் குற்றம் சொல்லமுடியாது.

      நீங்க சொல்ற இன்னொரு விஷயம்,இந்து மதம் என்கிற பொதுப்பெயரால்,குலதெய்வ வழிபாடு அழிந்து வருகிறதுனு நீங்க சொல்றிங்க.அது இந்து மதத்தின் காரணமாக இல்லை.நகரமயமாக்கல் தான் காரணம்.தமிழ்நாட்டில் 90 சதிவீத கிராமங்களில் இன்னும் குலதெய்வ வழிபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது.விஷ்ணுவும் சிவனும் பவர்புல் கடவுளா இருந்தாலும்,ஐயனாரும்,கருப்புசாமிக்கும் மரியாதையோ சக்தியோ குறையவில்லை என்று எண்ணுபவர்கள் அதிகம் நம் தமிழ்நாட்டில்

      Delete
    2. விடுங்கள் மேக்னேஷ்.. இவர்கள் எல்லாம் practicalஆக இல்லாமல், இந்த so called பகுத்தறிவுவாதிகள் சொல்வதை தான் உண்மை என்று நம்புபவர்கள்.. அடுத்தவன் சிறு, குல தெய்வ வழிபாட்டை தடுக்கிறான் என்றே வைத்துக்கொள்வோமே? அதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள்? அவன் என்ன உங்கள் எஜமானனா? மாட்டுக்கறி தின்பவன் இந்து அல்ல என்று நீங்களாக நினைத்துக்கொண்டு பதில் கூறினால் அதற்கு யார் பொறுப்பு? குழுவாக இருக்கும் அனைத்திலும் வேறுபாடுகள் இருக்கும், அவை ஜாதி, மதம், திராவிடம், பகுத்தறிவு என எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.. அது அந்த குழுவில் இருப்பவர்களின் பிரச்சனை, அவர்களே தீர்த்துக்கொள்வார்கள்.. மூன்றாவது ஆள் வந்து பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் இல்ல..

      Delete
  10. தெளிவாத்தான் பேசுறீங்களா ?! மாற்றம் என்பது இயல்பானது . மொழியில் மாற்றம் என்பது அந்த அந்த கால/பயன்பாட்டுக்கு ஏற்ப்ப நிகழக்கூடியது இது இயல்பானது. மொக்கை போட்டால் பதில் சொல்லி வீணடிக்க என்னிடம் நேரம் இல்லை .

    மாற்று மதம் வந்தால் / மாறினால் பண்பாடு/கலாச்சாரம் காணாமல் போகும் என்று பதிவில் வாதிட்டதால் தான் நானும் "இந்து மதம் என்று சொல்லி பல வகை மக்களை ஒரே குடைக்கு அடைக்க முயன்றதிலும் பல பண்பாட்டு / கலச்சார இழப்பு நிகழ்ந்தது " என்று பதில் தந்தேன்

    மாட்டுக்றி பற்றி இந்து மதம் என்ன சொல்லுது ?! பதில் சொல்லலாமே ,?!

    மற்ற மதங்கள் போல் அல்ல இந்து மதம் என்பது , அதற்க்கு ஒரே புள்ளி என எதுவுன் கிடையாது . இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு ,அதே தான் இந்துவுக்கும் .

    பின்குறிப்பு : நான் எந்த நாத்திக/பகுத்தறிவு கூட்டத்திலுன் இல்லை .:)

    ReplyDelete
    Replies
    1. இந்து மதம் என்று ஒரே குடையின் கீழ் அடக்கியதில் என்ன கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது? இன்றும் ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர் காவல் தெய்வங்களுக்கும், மாரியம்மன் காளியம்மனுக்கும் பொங்கல் விழா நடந்து கொண்டு தான் இருக்கிறது.. ஒவ்வொரு சாதியும் தனக்கென்று இருக்கும் தனித்துவத்துடன் தான் திருமண வைபவங்களை நடத்திக்கொண்டு இருக்கிறது..
      சரி உங்கள் கூற்றுப்படி சில ஆண்டுகளுக்கு முன் கலாச்சார மாற்றங்கள் நடந்ததாகவே வைத்துக்கொள்வோம், மாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம்.. இது போன்ற மதத் திணிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது..

      //மொக்கை போட்டால் பதில் சொல்லி வீணடிக்க என்னிடம் நேரம் இல்லை// மொக்கை போட நீங்கள் என்ன என் கேர்ள் ஃப்ரெண்டா? உங்களை யாரும் இங்கு பத்திரிக்கை வைத்து அழைக்கவில்லை பாஸ்.. உங்க பிசி ஸ்கெட்யூலை கண்டினியூ பண்ணுங்க...

      Delete
  11. Ram, valakkam pola unga katturai attagasam. Romba Nalla Karuthu. avar avarku endru oru thanithanmai indu. adhil idiyooru erpadum boludhu than ella prasanaigalume..

    ReplyDelete
  12. Ram, valakkam pola unga katturai attagasam. Romba Nalla Karuthu. avar avarku endru oru thanithanmai indu. adhil idiyooru erpadum boludhu than ella prasanaigalume..

    ReplyDelete
  13. Valakam pola nalla than eluthirukinga..but enna than neenga ippadi eluthunaalum intha maathiri puriyama eluthuravanga katuraiya onu rendu over genius than eduthu aaraynthu ippadi comment poduvanga..ithu matha maatram alla..mana maatram..india.vla paamara makkal matum than manam marrurangala..business man.um software company vachirukavanum maarala..ada pongapa ungaluku enna sonnalum naan sonathu than correct.unu soluvinga.but unga thapu oru naal puriyumpothu ithe websitela ungq thavaruku thiruthama ory katuraiya ellutha than poringa sir....wait and see

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One