கருணாநிதியை ஆதரிப்பவர்களின் லட்சணம்...

Wednesday, March 23, 2011

தேர்தல் வந்தாலும் வந்தது, ஆளாளுக்கு கருத்துக்கணிப்பு, கட்சி ஆதரவு, மத, இன, ஜாதிச் சாயம் பூசுவது, கொடியைத்தூக்கிக் கொண்டு அலைவது என்று கிளம்பிவிட்டார்கள்.. பெரியார், secularism, என்று பேசுபவர்கள் தி.மு.க வையும், ஸ்பெக்ட்ரம், குடும்ப அரசியல் என்று குற்றம் சாட்டுவோர் அ.தி.மு.க. வையும் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நம் மக்களுக்கு எப்போதுமே ஒரே விதமான விஷயங்கள் போர் அடித்து விடும்.. அதனால் தான், ஒரு ஆட்சி நல்லா இருந்தாலும் சரி, நல்லா இல்லாவிட்டாலும் சரி, இந்த ஆட்சி நல்ல ஆட்சியா இல்லையா என்பது புரியாவிட்டாலும் சரி, அதைத் தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த 5 வருடத்துக்கு இன்னொருவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவார்கள். அந்த அளவுக்குப் புதுமை விரும்பிகள்!

2001ன் அ.தி.மு.க ஆட்சியையும், 2006 தி.மு.க ஆட்சியையும் அப்படிச் சொல்லலாம். வென்றவர்களுக்கே நாம் எப்படி வென்றோம் என்று புரிபடவில்லை. ஆனால் ஆட்சியின் கடைசி வருடத்தில் இருவரும் ஒரு சில தவறுகளை செய்தது நிதர்சனம். என்னதான் மக்களின் மனம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறினாலும், ஒரு சிலர் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக இந்த இரு கட்சிகளையும் ஆதரித்துக்கொண்டு தான் வருகிறார்கள்..

தி.மு.க வை அப்படி யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்று பார்ப்போம். அ.தி.மு.க தான் தெரியுமே நமக்கு.. பார்ப்பனர்களும், தேவர் சமுதாயத்தில் பலரும்.. சரி மேட்டருக்கு வருவோம்..

இந்தக் கட்சியின் (தி.மு.க) ஆதரவாளர்கள் என்று நினைத்தவுடன் மனதிற்குள் வரும் முதல் பிரிவினர் அரசு ஊழியர்கள். கருணாநிதியைப் போல் அரசு ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் எவரும் இல்லை. வகை தொகை இல்லாமல் எல்லாருக்கும் அடிப்படை சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு என்று இவர் செய்வது ஏராளம். ஓட்டுச் சாவடியிலும் ஓட்டு எண்ணிக்கையிலும் இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இவர் ஆசிரியர்களுக்கு அளித்துள்ள சலுகைகள் கொஞ்ச நஞ்சமா?

சென்னை போன்ற பெருநகரங்களில் விலைவாசி ஏற்றத்திற்கு இப்போது சில நாட்களாக கணினித்துறையைக் குற்றம் சுமத்தி வருகிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் 20000, 30000 என்று சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் அரசு ஊழியர்கள் தான். எந்த அரசு ஊழியர் குடியிருப்புக்கு அருகிலாவது குடிசை இருக்கிறதா? இருக்காது.. அங்குள்ள விலைவாசி குடிசையில் இருப்பவனுக்குக் கட்டாது. சொந்த வீடு இல்லாத, 10 வருடம் அரசுத் துறையில் பணியாற்றும் ஒருவரை காண்பியுங்கள் பார்க்கலாம். ஒன்னாம் வகுப்புக்குப் பாடம் எடுக்கும், அனுபவமே இல்லாத ஆசிரியர் ஒருவருக்கு கிடைக்கும் சம்பளம் ரூ.21,000.. ஆனால் இதை விட "அதிகமாக வேண்டும்" என்று சில நாட்களுக்கு முன் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் என்றால் தான் ஓட்டுக்கு ஆசைப்பட்டு கலைஞர் கொடுத்துவிடிவாரே?! இந்த ஆட்சியிலே பெற்றால் தான் உண்டு. இல்லை என்றால் அடுத்த ஆட்சியில் ஒன்னும் கிடைக்காதே. அரசு நடத்துனர், ஓட்டுனர் முதல் எல்லாருக்கும் இதே தான். ஆனால் இப்போதும் எங்கள் ஊரில் படித்து முடித்துவிட்டு (அது SSLC யாக இருந்தாலும் சரி MBA வாக இருந்தாலும் சரி) ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸிலோ, பட்டாசு அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்பவரின் முதல் மாத சம்பளம் 3,000ல் இருந்து 4000 க்குள் தான்.. தனியாரில் ஒருவன் எங்கள் ஊரில் 10000ரூ சம்பாதித்தால் அது பெரிய விசயம்.. ஆனால் அரசு இவ்வளவு இருந்தும் இந்த அரசு ஊழியர்கள் "இன்னும் இன்னும்" என்று திருப்திப் படாமல் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தால் சாதாரண மக்களுக்கு அவர்கள் மேல் கோபம் வரத்தான் செய்யும்.


இந்த அரசு ஊழியர்கள் எல்லாம் எதற்கு அ.தி.மு.க வை எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை. "வேலையை ஒழுங்காக செய்" என்று கூறுவதாலா? தேவைக்கு அதிகமாக அரசு வேலைக்கு ஆட்களை எடுக்காததாலா? "இருப்பவர்கள் ஒழுங்காக வேலை செய்தாலே போதும். பலரை தேர்ந்தெடுத்து அதிகமான சோம்பேரிகளை நாட்டில் உருவாக்க வேண்டாம்" என்று அந்தம்மா நினைப்பதாலா?

தி.மு.க.விற்கு அரசு ஊழியர்களுக்குப் பிறகு அதிக செலவாக்குள்ளது கிறிஸ்தவர்களிடம். கருணாநிதி இவர்களுக்கு அப்படி என்ன தான் செய்தார்? ஹிந்து மதத்தைப்போல் தங்களின் மதத்தை அவர் அசிங்கப்படுத்தாமல் இருக்கிறாரே, அதுவே அவர் இவர்களுக்குச் செய்யும் உதவி தான். ஆனால் அந்தம்மா கட்டாய மத மாற்றத்தடைச் சட்டம் கொண்டு வந்து வெளிநாட்டில் இருந்து கோடி கோடியாக பணத்தை இறைத்து மக்களை மூளைசலவை செய்வதை நிறுத்தியது. அது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. யாருடைய தொழில் நஷ்டமடையும், எந்த குடும்பத்தில் பணக்கஷ்டம் வரும், யாருக்காவது தீராத நோய் வருமா?, எந்த வீட்டில் இழவு விழும் என்று காத்துக்கொண்டிருந்து அவர்கள் துன்பப்படும் நேரத்தில் அவர்களை மதம் மாற்றுவது எவ்வளவு குரூரமானது? இவர்கள் திருச்சபையில் 'இத்தனை பேரை மதம் மாற்றினேன்' என்று பெயர் எடுப்பதற்காக மற்றவர்களின் இயலாமையை பயன்படுத்துவது என்ன ஞாயம்? ஆனால் கருணாநிதியின் பகுத்தறிவுக்கு இதெல்லாம் மிகவும் சரியான செயல்கள். எனக்குத் தெரிந்த சிலர், கருணாநிதி ஹிந்து மதத்தை அசிங்கப்படுத்தும் போது அவ்வளவு ஆனந்தப்படுவார்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நான் மனதிற்குள் சொல்லிக்கொள்வது "பாபர் மசூதியை இடித்ததால் சந்தோசப் பட்ட சில முட்டாள் ஹிந்துக்களுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை". இவர்களும் அரசு ஊழியர்களைப் போல எந்த ஒரு ஞாயமான செயலுக்காகவும் கருணாநிதியை ஆதரிப்பதில்லை.

அடுத்து வருபவர்கள் போலி ஜாதி மறுப்பாளார்கள். எப்படி ஹிந்து மதத்துவேசம் secularism எனப்படுகிறதோ, அதே போல பார்ப்பனர் துவேசம் ஜாதி மறுப்பு என்று கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த போலி ஜாதி மறுப்பாளர்கள் எப்போது பார்த்தாலும் "பாப்பான் பாப்பான்" என்று கத்திக்கொண்டே இருப்பார்கள். அன்று அவர்களுக்கு  மலச்சிக்கல் என்றால் அதற்கும், ஆரிய திராவிட கதையை உருவாக்கி அந்தக் காலத்தில் இருந்தே இப்படித்தான் என்று கிளப்பிவிடுவார்கள். இதையே இவர்களின் தமிழினத் தலைவரும் செய்வதால் இவர்களுக்கு இவரை ரொம்பப் பிடித்து விட்டது. சரி அந்த பாப்பானுக்கு நிகராக முன்னேறுங்கள் என்றால் மாட்டார்கள்.. "பாப்பானையும் எங்களைப்போல் கீழே இறக்கு" என்று கத்துவார்கள்.

இப்படிப்பட்ட சுயநல வல்லுனர்களால் தான் இந்த ஆட்சியும் இந்தக் கட்சியும் நல்லவையாக கற்பிக்கப்பட்டு வருகின்றன.. பார்ப்பனர் என்றாலே அவன் அ.தி.மு.க விசுவாசி என்பதையும் மாற்றிக்கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த, நான் படித்த ஒரு ஆசிரியர். அவர் ஐயர், தீவிரமான கடவுள் பக்தர் போல் தன்னைக் காட்டிக்கொள்வார். ஜாதி வெறியும் அவருக்கும் உண்டு. ஆனால் அவர் தி.மு.க அனுதாபி. "என்ன சார், இந்த ஆளு உங்க ஜாதிய இப்படிப் போட்டு கிழிக்குறாரு, அவர்ப்போயி சப்போர்ட் பண்றீங்க?" என்றேன் ஒரு நாள். "போடா, சாமியும் ஜாதியுமா சோறு போடப்போகுது" என்று 'டக்' என்று சொன்னவர், சில நொடிகளில் சுதாரித்து "ஈஸ்வரா என்ன மன்னிச்சுரு" என்றார்.. எதற்க்கு இந்தப் பாவ மன்னிப்பு, கடவுளிடம் பம்மாத்து எல்லாம்?

இன்னொரு ஆசிரியர். அவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்த போது தீவிர தி.மு.க எதிர்ப்பாளர். "படிச்சவன், வெவரம் தெரிஞ்சவன் எவனும் தி.மு.க வுக்கு ஓட்டுப் போட மாட்டான். அந்தம்மா மாதிரி யாருக்குப்பா administration capacity இருக்கு? எல்லாத்தையும் ஓசில குடுத்து நாட்ட சீரழிச்சுட்டான்" என்பார்.. சென்ற வருடம் அவருக்கு கலைஞர் கையால் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கான அரசானை கொடுக்கப்பட்டது. நேற்று பேசும் போது சொல்கிறார், "கலைஞர் தொலைநோக்குப் பார்வையோட நெறய விசயம் பண்ணிருக்காருப்பா.." அப்படி என்னத்தை செய்து கிழித்தார் என்று தான் தெரியவில்லை..

பேசாமல் நம் முதல்வர் இலவச அரிசியும் மிக்ஸியும் கிரைண்டரும் கொடுப்பதற்குப் பதில், தினமும் காலையில் கொஞ்சம் இட்லியும் தொட்டுக்கொள்ள கெட்டிச்சட்னியும் கொடுத்தால் நானும் அவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்துவிடுவேன் போல...

8 comments

  1. சிவகாசி தம்பி,

    அப்படியா ஜெ கட்சியை ஆதரிக்கும் உங்களை போன்றவர்களின் லட்சணத்தை எழுதினால் நன்று...

    ReplyDelete
  2. @தமிழ் குரல்: எங்களைப் பற்றி நாங்களே எப்படி பெருமையாகப் பேசுவது? ஹி ஹி ஹி...

    ReplyDelete
  3. எல்லா blogs ஐயும் வாசிக்க என்னை அறிவுறுத்தும் நீங்கள், இதை வாசிக்க கூறாததன் காரணம் என்ன? வாய் கிழிய எழுதும் நீங்கள், அரசு ஊழியர்களை பற்றியும், ஆசிரியர்களின் மிதம்மிஞ்சிய வருமானத்தை (உங்களை பொறுத்தவரை) பற்றியும் என் தாயார் இடத்தில் கூற தயங்கியது ஏன்? நாம் ஒரு லட்சம் இன்று சம்பாதிக்கலாம், நம்மை ஏற்றி விட்ட ஏணியான ஆசிரியர் சம்பாதிப்பதோ வெறும் இருபதாயிரமாகதான் இருக்கும், எனினும் காலில் விழுந்து கும்பிட தாய்க்கு அடுத்து தகுதி உள்ள ஒரே ஆள் அந்த ஏழை ஆசிரியர் தான்.. மனிதனை பணத்தால் அளக்கும் சிலரின் நோய் உன்னையும் தொற்றியுள்ளத்ர்க்கு வருந்துகிறேன்.. என் நண்பன் மீது வைத்திருந்த மரியாதைக்கு சறுக்கல்கள் காண்கிறது என்பதை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை..


    எனினும் ஒரு சாதாரண வாசகனாக, எனக்கு உன் ஆதங்கம் தெரிகிறது.. அதிமுக ஐ ஆதரிப்பவர்களின் லட்சணத்தை ஏன் எழுத மனம் கொடுக்கவில்லையோ!!! எழுதும் போது ஒரு சாறாக எழுதுறோம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் எழுதும் தங்கள் அழகு இங்கு குறைவு..

    ReplyDelete
  4. ஓட்டுச் சாவடியிலும் ஓட்டு எண்ணிக்கையிலும் இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இவர் ஆசிரியர்களுக்கு அளித்துள்ள சலுகைகள் கொஞ்ச நஞ்சமா? /////// இந்த குற்றச்சாட்டில் எதாச்சும் உண்மை உண்டா??? ஆசிரியர்கள் ஒரு கட்சிக்காக கள்ள ஓட்டு போடவும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்யவும் உள்ளார்கள் என்கிறாயா? ஆசிரியர் பணியின் சேவையை உணர்ந்தால் மட்டுமே அதை ஆற்ற முடியும், இல்லை எனில் உன்னையும் என்னையும் போல கூலிக்கு மாரடிக்க வேண்டியது தான்...

    ReplyDelete
  5. ஆசிரியப்பணியை குறிப்பிட்டு சொல்ல இயலாது. பொதுவாகவே அரசு ஊழியர்களுக்கு அள்ளிக்கொடுப்பதில் கலைஞரை மிஞ்ச முடியாது. சில மாதங்களுக்கு முன் நடந்து போக்குவரத்துதுறை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதே இதற்கு சாட்சி.

    ReplyDelete
  6. Ammaku Jingcha.. arokara.. ammaku arokara samiye saranappa.. ammaku jingcha

    ReplyDelete
  7. நீங்க தான் மலிவு (விலை) உணவகத்தின் மூல கர்த்தாவா? நீங்க சொன்னபடியே ஆரம்பிச்சுட்டாங்க.என்ன அடுத்த தேர்தல்ல ADMK ஒரு ஓட்டு நிச்சயம். என்ன எலெக்ஷன் நடக்குமா , நடந்தாலும் நீங்க ஓட்டுப் போட முடியுமாங்கிறது தான் பெரிய டவுட்டு.

    ReplyDelete
  8. //தினமும் காலையில் கொஞ்சம் இட்லியும் தொட்டுக்கொள்ள கெட்டிச்சட்னியும் கொடுத்தால் நானும் அவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்துவிடுவேன் போல//
    unga vaaikku sakkarai podanum. ammaa unavakam aarambichutaanga

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One