வேஷ்டிக்குள் அடங்கிய தமிழர் பண்பாடும் சில பகுத்தறிவு வேஷங்களும்....

Wednesday, July 16, 2014

செய்தித்தாள், டிவி, ஃபேஸ்புக், அட அவ்வளவு ஏன் சட்டசபை வரைக்குமே ஹாட் டாபிக் என்றால் அது சென்னையில் வேஷ்டி கட்டி வந்த ஒரு ஜட்ஜை கிரிக்கெட் கிளப்புக்குள் அனுமதிக்காத விவகாரம் தான்.. தமிழர் பண்பாடு, தனிமனித உரிமைன்னு ஆரம்பிச்சு ஆளாளுக்கு அவங்க கருத்தை அள்ளித் தெளிச்சிக்கிட்டுத் தான் இருக்காங்க.. என் பங்குக்கு நானும் சில கருத்துக்கள் சொல்லலாம்னு பாக்குறேன்.. 

முதலில் பொதுவான சில விசயங்களை சொல்லிவிடுகிறேன்.. ஸ்கூல், கல்லூரி, வேலை இடம், பப் என்று ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சில விதிமுறைகள், ட்ரெஸ் கோட் உண்டு.. அதைப் பின்பற்றாதவர்கள் அந்த இடத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை பொதுவாகவே.. நம்மில் எத்தனை பேர் நாம் விரும்பிய உடையில் அலுவலகத்திற்குப் போக முடியும்? எனக்கு மிகப்பிடித்த உடை என் கைலி தான்.. ஒரு விற்பனைப் பிரதிநிதியான நான், எனக்குப் பிடித்த உடை என்பதற்காக அதை அணிந்து கொண்டு என் டீலர் கடைகளுக்கு செல்ல முடியுமா? சென்றால், என்னை அவர் லோடு மேனோடு உட்கார வைத்துவிடுவார்... அட, முதலில் இந்த மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளை ஒரு நாள் சீருடை இல்லாமல் பள்ளிக்கு அனுப்பிப்பாருங்களேன் நிலவரம் புரியும்..

இதே போல் தான் அந்த கிளப்பும்.. அதற்கென்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றன.. அதைப் பின்பற்றித்தான் நடக்க முடியும்.. அந்த கிளப் என்றில்லை, சென்னையில் பல பப்புகளில் கூட வேஷ்டிக்கு கெட் அவுட் தான்.. சில ஏர்லைன்ஸ்களில் கூட வேஷ்டிக்கு அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அங்கெல்லாம் போய் நம் இன உணர்வை காட்ட வேண்டியது தானே? அட அவ்வளவு ஏன்? நம்ம ஊர் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு வேஷ்டி கட்டி வர அனுமதி இருக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்களேன்.. என்ன தான் ஆண்மையானது, கம்பீரமானது, சுத்தமானது என்றாலும் துரதிர்ஷ்டவசமாக ஃபார்மல் உடை என்பதற்கான வரையறையில் வேஷ்டி கிடையாது.. அதனால் தான் மேற்கத்திய பாணிக்கு தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கும் நிறுவனங்களும், அந்த நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளக்காசை உறிஞ்சும் பப்/கிளப் போன்ற சங்கதிகளிலும், அந்த நிறுவனங்களுக்கு அடிமைகளை அனுப்பும் மெட்ரிக் பள்ளிகளும், பொறியியல் கல்லூரிகளும் தங்கள் எல்லைக்குள் வேஷ்டியை அனுமதிப்பதில்லை.. சரி பொதுவான விசயங்கள் போதும், இப்போது மேட்டருக்கு வருகிறேன்..

வேஷ்டி கட்டிய அந்த நீதிபதியை உள்ளே அனுமதிக்கவில்லை என்றதும் எப்படி நம்மால் அது தமிழ் பண்பாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பொங்க முடிகிறது? வேஷ்டியில் தான் தமிழ் கலாச்சாரமே அடங்கி இருக்கிறதா? ஒரு காமெடியில் விவேக் அந்த ஊர் நாட்டாமையை பார்த்துச்சொல்வார், “டேய் 10% டிஸ்கவுண்ட்ல எடுத்த கோ-ஆப்டெக்ஸ் துண்டுல எப்படிடா 18 பட்டிய பேக் பண்ணுனீங்க?” என்று.. அது போலத் தான் இருக்கிறது இதுவும்.. தமிழன் பண்பாடு என்று சொல்லிக்கொள்ள நம்மிடம் என்ன தான் மிஞ்சி இருக்கிறது? ஒழுங்கான தமிழ் பேசுகிறோமா? நம் பாரம்பரிய உணவுகளை சாப்பிடுகிறோமா? தமிழ் மாதங்களை பின்பற்றுகிறோமா? அட தமிழின் மெய் எழுத்துக்களை எத்தனை பேர் வரிசையாக சொல்வீர்கள்? அவ்வளவு ஏங்க, தமிழர் பண்பாட்டை காக்கத் துடிக்கும் நம்மில் எத்தனை பேர் தமிழ் வழியில் நம் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம்? இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணமகன் கூட வேஷ்டி கட்டுவதில்லை.. அவரின் நண்பர்கள் மட்டும் ஸ்டைலுக்காக வேஷ்டி கட்டி 4 ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்கிறார்கள்.. இது தான் வேஷ்டிக்கு நாம் கொடுக்கும் மரியாதை.. அல்லது ஒரு சிலர் அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், கைலிக்கு பதிலாக வேஷ்டியை அணிந்து கொள்கிறோம்.. இதைத் தவிர வேஷ்டிக்கும் நமக்கும் என்ன பெரிய தொடர்பு இருக்கிறது? 

நம் வீட்டிற்குள்ளேயே, நம் அன்றாட வாழ்விலேயே வேஷ்டியை மறந்து விட்டு, தமிழர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தே இழந்து விட்டு, இன்று எங்கோ ஒரு இடத்தில் எவனோ ஒருவன் வேஷ்டியை அனுமதிக்கவில்லை என்றதும் பொங்குகிறோம்.. நல்லா இருக்கு நம்ம தமிழ்ப்பற்று.. முதலில் தமிழர் கலாச்சாரத்தை வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் ஆரம்பிப்போம்.. மக்களிடம் வேஷ்டிக்கு ஆதரவு இருந்தால் எவனாலும் அதை மறுக்கவோ, தடுக்கவோ முடியாது.. இன்றும் கேரளத்தில் ’வேஷ்டிக்கு அனுமதி இல்லை’ என்று எவனும் சொல்ல முடியாது.. அங்கே மக்களிடம் நம்மை விட அதிகமாகவே வேஷ்டி பயன்படுத்தப்படுகிறது.. அங்கு எவனாவது வேஷ்டிக்கு மறுப்பு சொன்னால் நடப்பதே வேறு... நாமும் வேஷ்டியை பரவலாக அணிந்தால் எவன் அதை தடுக்க முடியும்? அவன் தடுக்க காரணமே நாம் தானே? வேஷ்டி கட்டிய ஆட்களை ஒருவன் உள்ளே அனுமதிக்கவில்லையா, யாரும் அங்கே போக வேண்டாம்.. அவன் என்ன நம்மை புறக்கணிப்பது? நாம் அவனை புறக்கணிப்போம்.. அதை விடுத்து வேஷ்டியில் தான் தமிழர் பண்பாடே இருக்கிறது என்பது போல் புலம்பிக்கொண்டே இருப்பதால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை..

இன்னொரு முக்கிய விசயம், அது போன்ற கிளப்புகள், ஒரு பாமர தமிழனுக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாத விசயம்.. அங்கு வேஷ்டியை அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் ஒரு சாதாரண தமிழனுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.. எத்தனை வேஷ்டி கட்டிய சாதாரண தமிழன் அங்கு போகப்போகிறான்? சும்மா இது தமிழர் பண்பாட்டை குழைக்கும் சதின்னுல்லாம் செண்டிமெண்ட்டாக யாரோ பேசுவதை பலரும் சீரியசாக எடுத்துக்கொள்வது தான் வேதனை.. நம் கலாச்சாரத்தையே கேள்வி கேட்கும் அளவிற்கு பெரிய விசயமாகப் படவில்லை இது எனக்கு..

இதாவது பரவாயில்லை, செண்டிமெண்ட்டாக சிலர் அணுகுவதால் வரும் பிரச்சனை இது.. தமிழர்கள் தான் செண்டிமெண்டிற்கு எளிதாக மடங்கிவிடுவோமே? ஆனால் செண்டிமெண்டையும் தாண்டி இதில் இன்னொரு முக்கிய விசயம் இருக்கிறது. அது தான் பகுத்தறிவாளர்கள் எடுத்திருக்கும் தனிமனித சுதந்திரம் என்னும் நேக்கான ஒரு அஸ்திரம்.. அதாவது வேஷ்டி கட்டி வருவது என்பது தனி மனித சுதந்திரமாம் அதில் இன்னொருவர் தலையிடுவது அநாகரிகமாம்.. ரொம்ப சரி தான்.. தனிமனித சுதந்திரம் தான்.. ஆனால் பொது இடங்களில் தனிமனித சுதந்திரத்திற்கு என்ன வேலை? வீட்டை தாண்டி, வெளியில் வந்தவுடன், அதாவது தனி மனிதனாக நாம் இருக்கும் இடத்தை தாண்டி, சமூகம் என்னும் வட்டத்திற்குள் நுழையும் போது அந்த சமூகம் சரி என்று அங்கீகரித்திருக்கும் விசயத்திற்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும்.. இதைத்தான் நான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொன்னேன், ஸ்கூல், வேலை இடம், போன்றவற்றில் அதற்கான வரையறைகளுக்குட்பட்டுத் தான் இருக்க வேண்டும் என.. வீட்டில் ஒரு பெண் எப்போதும் நைட்டியுடன் தான் இருக்கிறாள்.. ஒரு திருமண விசேஷத்திற்கும் அவள் நைட்டியுடன் போகலாமா? அது அவள் தனி மனித சுதந்திரம் தான் என்றாலும், திருமண நிகழ்ச்சிக்கு அப்படி செல்ல முடியாதே? ஆனால் தனிமனித சுதந்திரம் என்று இது போன்ற விசயங்களை, தங்களைத் தாங்களே பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்றே தெரியாமல் நாமளும் ஆதரித்துக்கொண்டிருக்கிறோம்..

சரி இதை எப்படி பகுத்தறிவாளர்கள் அஸ்திரமாக பயன்படுத்துவார்கள் என்று சொல்லவா? நாளையே ஏதாவது ஒரு கோயிலில் ஒருவன் லுங்கியுடன் தான் நுழைவேன் என்பான்; அல்லது சட்டை அணியாமல் வரச்சொல்லும் கோயிலில் சட்டை போட்டுத்தான் வருவேன் என்று அடம்பிடிப்பான்.. கோயிலுக்குள் அவர்களை விடமாட்டார்கள்.. உடனே நம்ம பகுத்தறிவாளர்கள் இந்த வேஷ்டி மேட்டரையும், கோயில் மேட்டரையும் 'தனிமனித உரிமை’ என்னும் புள்ளியில் இணைப்பார்கள்.. இன்று வேஷ்டிக்காக குரல் கொடுக்கும் நீங்கள் நாளை கோயிலிலும் இஷ்டத்திற்கு ஆடை உடுத்திக்கொண்டு வரலாம் என்பதை ஆதரிப்பீர்களா? ரோட்டில் அம்மணமாகத் திரிவது கூட தனிமனித உரிமை தான்.. அதையும் ஆதரிப்போமா? அந்தந்த இடத்திற்கு என்று இருக்கும், பின்பற்றப்படும் சட்டதிட்டங்களை பின்பற்றுவது தான் சிறந்தது.. அதையே செண்டிமெண்ட்டாகவும், எதற்கெடுத்தாலும் தனிமனித சுதந்திரம் கோசம் போடுவதும் உண்மையான பலனையோ தீர்வையோ கொடுக்காது.. எப்படி ஒரு அலுவலகத்திற்கு முழுக்கை சட்டை போட்டு, அதை இன் பண்ணி, ஷூ போட்டு வருவது அதன் ரூல்ஸோ அதே போலத்தான் ஒரு சில பப்/கிளப் போன்ற இடங்களில் அவர்கள் சொல்லும் ட்ரெஸ் கோடும் அவசியம்.. அதை ரொம்ப எமோசனலாக எடுத்துக்கொள்வது சரி என்று படவில்லை எனக்கு.. மீண்டும் சொல்கிறேன், ஒரு சமூகம் என்றும், பொது இடம் என்றும் வரும்போது தனிமனித உரிமை அந்த சமூகத்தின் கட்டுப்பாடுகளை அனுசரித்து தான் இருக்க வேண்டும்... இல்லையென்றால் வன்கொடுமை செய்பவனும், கொலை செய்பவனும், ரோட்டில் அம்மணமாகத் திரிபவனும் கூட தனி மனித உரிமை கோஷம் போட ஆரம்பித்துவிடுவார்கள்.. அதற்கும் நம்ம பகுத்தறிவு குரூப் சப்போர்ட் பண்ணும்.. நீங்கள் வேஷ்டி மேட்டருக்கு கொடுத்த ஆதரவை தனி மனித உரிமை என்னும் categoryயின் கீழ் இது போன்ற சங்கதிகளுக்கும் கொடுக்க வேண்டியிருக்கும்..

இன்னும் சில so called சாதி மறுப்பு பகுத்தறிவு மக்கள் வேஷ்டியை உள்ளே அனுமதிக்காததை, ”இப்போது புரிகிறதா புறக்கணிப்பின் வலி?” என்று எள்ளி நகையாடுகிறார்கள்.. அதாவது தாழ்த்தப்பட்டவர்களை அன்று புறக்கணித்தவர்கள், இன்று அந்த கிளப்புக்குள் நுழைய முடியாமல் அந்த புறக்கணிப்பின் வலியை உணர்கிறார்களாம்.. சரி, அந்த புறக்கணிப்பின் வலி அவர்களுக்கு தெரிவது இருக்கட்டும்.. உங்களுக்குத் (சாதி மறுப்பு பகுத்தறிவு மக்கள்) தான் அந்த வலி நன்றாகத் தெரியுமே? பின் ஏன் இன்னொருவன் புறக்கணிக்கப்படும் போது இவ்வளவு சந்தோசமாக ஒரு சேடிஸ சுகம் காண வேண்டும்? ஏனென்றால் உங்களின் சாதி மறுப்பு எண்ணம் எப்போதுமே எல்லோருமே கீழ் நிலையிலேயே இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறது?.. அப்போது தானே உங்களால் சாதி மறுப்பு அரசியல் செய்து புரட்சியும், பகுத்தறிவும் பேச முடியும்?.. அதனால் தான் கீழிருப்பவனை முன்னேறவே விடாமலும், முன்னேறிய ஒருவனை திட்டிக்கொண்டும், அவன் கீழே விழும் போது குதித்து கும்மாளம் இடுவதுமாக இருக்கிறீர்கள்.. வேஷ்டியை காரணம் காட்டி ஒரு ஜட்ஜ்ஜை உள்ளே விடாததற்கும், ஜாதியைக் காரணம் காட்டி உங்களை புறக்கணித்ததற்கும் என்னய்யா சம்பந்தம்? இளவரசன் மேட்டர் மாதிரி, உங்கள் அரிப்புக்கு இந்த வேஷ்டி மேட்டரையும் பயன்படுத்திக்கொண்டீர்கள்.. பாவம் விபரம் புரியாத மக்களும், நீங்கள் அவர்களைத் தான் கேவலமாக, மட்டமாக, குத்திக்காட்டுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு கொடி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் அவர்களுக்கு தெரியாது எந்த பிரச்சனைக்கும் உங்களிடம் தீர்வு இருக்காது என்று..

நாட்டில் மதவாதியும் ஜாதியவாதியும் முற்றிலும் ஒழிந்து போவதை இந்த so called பகுத்தறிவுக் கூட்டம் என்றுமே விரும்பியதில்லை.. இரண்டு குரூப்புக்குள் சண்டைகளை மூட்டி விட்டு பிழைப்பை நடத்துவதே இவர்கள் தானே? ஒரு காலத்தில் சிண்டு முடியும் வேலையை பார்ப்பான் செய்தான் என்று கூறும் இவர்கள் தான் இன்று அந்த வேலையை கணக்கச்சிதமாகப் பார்க்கிறார்கள்.. இது போன்ற குரூப்புகளின் கையில் இந்த வேஷ்டி மேட்டரில் பலரும் சிக்கிக்கொண்டது தான் வேதனை.. இந்த பகுத்தறிவு கும்பல் அமைதியாக இருந்தாலே நாட்டில் கலவரமோ பிரச்சனைகளோ வராது.. ஆனால் அமைதியாக இருக்க மாட்டார்கள்..

வேஷ்டி மேட்டரில் என் கருத்து இது தான்.. வேஷ்டியை காரணம் காட்டி ஒருவன் நம்மை உள்ளே விடவில்லை என்றால், “போடா வெண்ண” என்று சொல்லி அவனை புறக்கணிப்போம்.. அவனிடம் போய் உரிமை, எருமை, கலாச்சாரம் எல்லாம் பேசுவது வேஸ்ட்.. இன்னொரு விசயம், ஒரு இடத்திற்கு என்று இருக்கும் விதிமுறைகளை நாமும் பின்பற்ற வேண்டும்.. பின்பற்றப் பிடிக்கவில்லை என்றால் அங்கு போகாமல் இருப்பதே சிறந்தது.. இது தமிழர்களின் பண்பாட்டை கேவலப்படுத்துகிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

ரெண்டாவது விசயம், தங்களைத்தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக்கொள்ளும் ஆட்கள் எந்த விசயத்திற்கு ஆதரவு தந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.. நாளை அதை வைத்தே அவர்கள் உங்களுக்கு ரிவிட் அடிப்பார்கள்.. ஜாக்கிரதை.. 

33 comments

  1. Replies
    1. ஹலோ பாஸ் அப்ப நீங்க ஒதுக்க வேண்டியது அப்படிப்பேசும் வடக்கத்தியனையும் பிராமணரையும் தானே தவிர கடவுளை அல்ல.. பகுத்தறிவு என்னும் பெயரில் பிரித்தாளும் வேலையை தான் பகுத்தறிவாளிகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.. இன்றைய தேதியில் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்னும் பகுத்தறிவுவாதியை விட, இரண்டு குரூப்புக்கள் ஜாதி, மத துவேசத்தை கொம்பு சீவி விடுவதே இவர்களின் வேலை.. இந்த விழிப்புணர்வும் உங்களுக்கு வந்தால் தேவலை

      Delete
  2. அந்த ஜட்ஜ் என்னணே ஆனார்?

    ReplyDelete
    Replies
    1. அவர் பாட்டுக்க அவர் வேலைய பாக்க போயிட்டார்..

      Delete
  3. நம்முடைய சமுதாயம் வழிகாட்டியாக வாழ்தல் என்ற நிலையைக் கடந்து தீர்வு மட்டுமே சொல்லுதல் என்ற நிலையைநோக்கி நகர்ந்துவிட்டது. இதில் அனைவரும் அடக்கம். ஆரம்பகாலத்தில் அலட்சியமாக விடப்பட்ட ஒவ்வொன்றையும் இன்று நிதானமாக தூசிதட்டி கலாச்சாரம் கலாச்சாரம் என்று கத்திக் கொண்டுள்ளோம். அன்றைய தினத்தில் கல்வியில் ஆரம்பித்து ஒவ்வொரு வேலையிலும் வேஷ்டியைத்தான் அணிந்து கொண்டிருந்தோம் மேற்கத்திக் கலாச்சாரம் உள்ளே நுழைய நுழைய அரைக்கால் முழுக்கால் சவுகரியமாக இருக்கிறது என்று அதை அணியத் தொடங்கி வேஷ்டிக்கு வந்தனம் சொல்லிவிட்டோம். இன்றைய தினத்தில் நிதானமாக யோசித்துப் பார்த்த கலாச்சாரக் காவலர்கள் வேஷ்டி கொஞ்சம் கெத்தாக இருக்கிறது என்று தூசிதட்டி அணிய ஆரம்பித்துள்ளார்கள். அவன் இது என்னுடைய ட்ரெஸ்கோட் இல்லை என்று வெளியே அனுப்பிவிட்டான். காலம் காலமாக வந்த கலாச்சாரத்தை கொஞ்சம்கொஞ்சமாக கைவிட்டுவிட்டு ஒருநாளில் ஓரிரவில் மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றால் கடவுளே நினைத்தாலும் முடியாது. வேஷ்டி தான் காலச்சாரம் என்று நினைக்கும் ஒவ்வொரு தமிழனும் முதலில் வேஷ்டி கட்டத் தொடங்கட்டும் அந்த கலாச்சாரத்தை தன் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும்.

    இன்னொன்று இதில் நேரிடையாக பாதிக்கப்பட்டது மேல்தட்டு வர்க்கம், அல்லது அதையும் தாண்டிய நீதி கூறும் அதிகார வர்க்கம். இத்தனை நாள் இப்படி ஒரு பிரச்சனை தமிழகத்தில் இல்லையா என்றால் ஏறக்குறைய கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றைக்கு பாதிக்கப்படுவது அதிகாரவர்க்கம் என்பதால் பரவலாக அறியப்பட்டுள்ளது, போராட்டம் நடக்கிறது. நம்மைப்போல குப்பனுக்கோ சுப்பனுக்கோ நடந்திருந்தால் அது நம்மை மட்டும் அசிங்கபடுத்திய சம்பவம் அவ்வளவே. மேல்தட்டு என்பதால் (மேல்தட்டு என்ன ஜாதியாய் இருந்தாலும்) தமிழனை அவமானபடுத்தும் சம்பவமாகிவிட்டது. வேஷ்டி ஒரு அடையாளம் தான். அடையாளம் என்றால் பாரம்பரிய அடையாளம். அது தொடர்ந்து பயன்பாட்டில் இருக்க வேண்டிய ஒன்று. நம்முடைய சூழலியல் சார்ந்த ஒன்று. கதர் பருத்தியால் ஆன ஒன்று. அது பரவலாக்கப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை மாற்றத்தை விரும்புபவர்கள் தன்னில் இருந்து ஆரம்பிக்கட்டும் அவ்வளவே.

    ReplyDelete
    Replies
    1. யோவ் அடிக்கடி நீரும் ஒரு பார்ப்பன அடிமை, ஆரிய அடிவருடின்னு நிரூபிச்சுக்கிட்டே வாரிரு.. எனக்கு என்னமோ இது சரியா படல.. முதுகுல நல்லா எண்ணெய் தடவிட்டு வாங்க.. அப்பத்தான் இங்க எல்லார்ட்டயும் வாங்க வசதியா இருக்கும்..

      Delete
  4. உங்க போஸ்ட் எல்லாமே ஒரு நாள் லீவ் போட்டு படிக்கிற அளவுல இருக்கு.. இரவு படிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுறீங்களா, இல்ல வையுறீங்களா?

      Delete
    2. ரெண்டும் இல்ல.. ரொம்ப நீளமா இருக்குன்னு சொன்னேன்.. மேலே தம்பி பின்னூட்டத்தின் அளவை பார்த்தபின் உங்க பதிவின் நீளம் இப்போ கம்மியா தெரியுது.. ;-)

      Delete
  5. So, rule is a rule and they wont relax it no matter who that is? Is that SO? What if the invitee was former CM, M Karunanidhi? You think they would have denied admission for him too if he were wearing dhoti?

    ANSWER me, please! I need to see your "rationale" here!

    ReplyDelete
    Replies
    1. They might allow him, who knows? But if I were in their position, I will never allow anybody against the rule..

      Delete
  6. நல்ல அலசல், தமிழன், தமிழ் கலாச்சாரம் அவமானப்படுத்துமிடத்திலெல்லாம் பொங்க மாட்டேங்குறோம். இதுப்போல பைசா பெறாத விசயத்துக்கு கும்பல் கூடி கும்மியடிக்குறோம். உங்க நிலைப்பாடு கரெக்ட்தான் தம்பி!

    ReplyDelete
  7. எல்லாம் சரி, இந்த கிளப், கிளப்ன்றாங்களே அது தமிழர் பண்பாட்டு, கலாச்சாரம், தமிழன் மரபில் வந்ததா!?

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கு எந்த வகையிலும் சேதாரம் வராமலும் இருக்க வேண்டும், தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும், அதன் கலாச்சாரத்திற்கும் பெரிய தொண்டு ஆற்றியதாகவும் இருக்க வேண்டும்.. அதற்கு இவர்களுக்கு லட்டு மாதிரி கிடைத்த பெரிய வாய்ப்பு தான் வேஷ்டி மேட்டர்.. நம்ம சீனு கொடுத்திருக்கும் பின்னூட்டம் மிகச்சரி..
      //எல்லாம் சரி, இந்த கிளப், கிளப்ன்றாங்களே அது தமிழர் பண்பாட்டு, கலாச்சாரம், தமிழன் மரபில் வந்ததா!?// ஹலோ எதுவா இருந்தாலும் நாங்க வேஷ்டி கட்டிட்டு தான் போவோம்.. நீச்சல் குளத்தில் கூட வேஷ்டியோடு தான் குதிப்போம்.. ஏன்னா நாங்கெல்லாம் தமிழன்.. எங்க உடம்புல தமிழ் ரத்தம் ஒடுது..

      ஹ்ம், நம் பெருமையை நிலைநாட்டும் பல விசயங்களில் கோட்டை விட்டுவிட்டு ஒரு வேஷ்டியை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறோம்..

      Delete
  8. //.. பகுத்தறிவு என்னும் பெயரில் பிரித்தாளும் வேலையை தான் பகுத்தறிவாளிகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.//
    அடப்பாவி, பகுத்தறிவுன்னா என்னென்னு பொருள் புரியாத நீயெல்லாம் பகுத்தறிவு பற்றி கருத்து தெறிவிக்க வந்துட்டீயா. இப்ப மதம் என்ற பெயரில் ஊர் உலகத்துல நடக்கிற சண்ட ச்ச்சரவுகள பார்க்கவில்லையா அல்லது பார்க்க விருப்பமில்லையா. இந்திய சமுதாயத்தில் சாதிவாரியா பிரித்து சூழ்ச்சி செய்து ஆள்வதுதான் ஒற்றுமையா? உன் ஓட்ட வாய் பொத்திகிட்டு வீட்டுல வேலை இருந்தார் பாரத்துத் செய்யி போல.

    ReplyDelete
    Replies
    1. பதிவர், ஊர் உலகம் புரியாமல் எழுதி இருப்பதாக தவறாக நினைத்து பின்னூட்டி இருந்தேன்.
      முந்தைய இடுகைகளை படித்து, திட்டமிட்டே மனித நேயத்துக்கான போராட்டங்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வது புரிந்ததால், வெளியேறுகிறேன்.

      Delete
    2. ஆமா நீங்க ரெண்டு பேரும் அப்படியே மனித இனத்தின் காவல் தெய்வங்கள்... போங்கய்யா.. உங்களை போன்ற pessimistகளும் sadistகளும் தான் இன்றைய மனித குலத்திற்கு முதல் முட்டுக்கட்டை.. இன்னமும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய விசயங்களைச் சொல்லி கூவிக்கொண்டு உங்கள் பகுத்தறிவு வேஷத்தை தொடர எண்ணுகிறீர்கள்.. வாழ்த்துக்கள் :-)

      Delete
  9. பதிவு ரொம்பவே அபந்தம்.

    ReplyDelete
  10. என்னுடைய கருத்தும் தங்களுடைய கருத்துடன் ஒத்துப்போகின்றது! கிளப் என்பது தமிழக கலாச்சாரமா? தமிழ் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு ஒன்றில் வேட்டி புறக்கணிக்கப் பட்டால் கொந்தளிக்க வேண்டியதுதான். அல்லது ஒரு கல்லூரிக்கு இன்று யாராவது வேட்டி கட்டிப் போக முடியுமா? அப்படி போய் தடுத்து இருந்தால் போராடி இருக்கலாம்! இது போன்ற கேளிக்கை விடுதிகளில் நிகழ்ந்த ஒரு புறக்கணிப்பை பெரிதாக எடுத்துக் கொண்டு போராடுவது வெட்டியாகத்தான் எனக்குத் தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆம், இது தான் நிதர்சனம் சார்.. என்னமோ மொத்த தமிழனின் கலாச்சாரமும் அந்த 8கஜம் வேஷ்டியில் தான் மடித்து இருப்பதாக பொங்குகிறார்கள்.. பொங்க வேண்டிய விசய்ங்கள் எவ்வளவோ இருக்கும் போது இதெல்லாம் ஒரு மேட்டரா என்று கேட்டால் நம்மை வில்லன் போல் பார்ப்பார்கள்..

      Delete
  11. dress code என்பது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அல்லது அந்தசங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே. அங்கே செல்லும் மற்றவர்களை அந்த விதி கட்டுப்படுத்தாது.

    ReplyDelete
    Replies
    1. இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.. அது எந்த மாதிரி இடம் என்பதைப் பொறுத்தும் உண்டு.. ஒரு பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ நீங்கள் சொல்வது பொருந்தலாம்.. பொது மக்கள் கூடும் பப், திருமண மண்டபம், கிளப் போன்றவைகளுக்கு பொருந்தாது.. அங்கு பணிபுரிபவரை விட, வருபவர்களின் டிரெஸ் கோட் தான் மிக முக்கியம்.. ஸ்விமிங் பூலில் வேலை செய்பவருக்கு மட்டும் தான் ட்ரெஸ் கோட் உண்டா? நாம் ஜீன்ஸ் பேண்டுடன் அதில் குதித்து விளையாடலாமா?

      Delete
  12. தளிர் சுரேஷ் கருத்துதான் என்னுடைய கருத்தும், வேட்டி கட்டி போனால் அனுமதிக்கவில்லை என்றால் அந்த இடத்தை நாம் புறக்கணிப்போம். அதை விட்டு கலாச்சாரம், கழிசடை என்று வீண் பேச்சு பேசிக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை.. ஆனால் புறக்கணித்தால் விளம்பரம் கிடைக்காதே? சவுண்ட் விட்டால் தானே கிடைக்கும்?

      Delete
  13. இது இரு கோடுகள் மாதிரி. வேஷ்டிக் கோடு மவுலிவாக்கத்தை மறைக்கிறது. இது தான் உண்மை. வேஷ்டி கட்டிச் சென்றால் செல் போன் கடையில், White Goods கடையில் கூட விலை சொல்ல மாட்டார்கள். இது எனது அனுபவம். = திரு Ram Kumar இன் பதிவு அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். = எந்த இடத்தில் எது ஒழுங்கோ அதை கடைப் பிடிக்க வேண்டும் - சில இடங்களில் செருப்புடன் உள்செல்லலாம், சில இடங்களில் வெளியே போட வேண்டும், அது மாதிரி தான். = தண்ணீர், சாலை வசதி இவைகளில் கருத்து, சீர்திருத்தம் பற்றி செயலாற்றினால் நல்லது, அதை விட்டு விட்டு வீணாகப் பேசித் திரிகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்.. வேஷ்டி மேட்டர் நல்லா பிக்-அப் ஆயிருச்சி.. அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் கொஞ்ச நாளைக்கு

      Delete
  14. //அவனிடம் போய் உரிமை, எருமை, கலாச்சாரம் எல்லாம் பேசுவது வேஸ்ட்.. // இதை நான் ஆதரிக்கிறேன்.. எந்த தமிழனும் வெளிநாட்டுக்கு போகும் போது பிளைட்டில் வேஷ்டி கட்டிட்டு போறதில்ல (அங்க தடை எதுவுமே இல்ல.. ஆனாலும் போறதில்ல)..

    என் பாரம்பரிய உடைன்னு சொல்லிக்கிட்டு எவனாவது வேட்டி கட்டிக்கிட்டு ட்ரெக்கிங் போவானா? அந்தந்த இடத்துக்கு அப்படி அப்படி தான் போகணும்னு இருக்கிறத பாலோ பண்றதுல என்ன கஷ்டம்..

    எழுதறது என்னவோ தமிழ் தமிழ் னு தான்.. ஆனா திங்கறது பீட்சாவும் பர்கரும்.. இவனுக பேச்ச ஆதரிக்க நாலு பேர் கொடி வேற பிடிச்சிடறாங்க..

    ReplyDelete
    Replies
    1. அடப்பாவமே, பாஸ் இந்த கட்டுரை எழுதும் போது ரொம்ப பயந்தேன், நம்மள நம்ம நண்பர்கள் உட்பட எல்லாரும் கழுவி ஊத்தப்போறாங்கன்னு.. ஆனா எல்லார் மனசுக்குள்ளயும் இந்த ஆதங்கம், கோபம் இருக்குன்னு இப்பத்தான் தெரியுது.. மொத்த வாழ்க்கை முறையையும் மாத்திட்டு இப்ப தமிழ், தமிழன்னு ஒரு வேஷ்டிய பிடிச்சு தொங்கிட்டு இருக்கோம்..

      Delete
  15. நீங்கள் சொன்னது:இதே போல் தான் அந்த கிளப்பும்.. அதற்கென்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றன..
    நான் சொல்வது:அது போல்தான் தமிழ்நாடும் அதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. இங்கு கிளப் ஆரம்பித்து தமிழனை அவமதிக்கும் செயலைசெய்யலாமா? நீங்கள் நேற்று பேண்ட் போட ஆரம்பித்து அதற்குள் இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்குவது ஏன்.
    பள்ளிக் கூடம், தொழிற்சாலை, ஆகியவற்றில் சீருடை தான் ஆடை என்பதால் அதை உதாரணம் காட்டுவது.....
    நீங்கள் சொன்னது:சில ஏர்லைன்ஸ்களில் கூட வேஷ்டிக்கு அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அங்கெல்லாம் போய் நம் இன உணர்வை காட்ட வேண்டியது தானே?
    நான் சொல்வது:குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் காட்டுவோம் இதிலிருந்தாவது ஆரம்பிக்கட்டும்.
    நீங்கள் சொன்னது: வேஷ்டி கட்டிய அந்த நீதிபதியை உள்ளே அனுமதிக்கவில்லை என்றதும் எப்படி நம்மால் அது தமிழ் பண்பாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பொங்க முடிகிறது?
    நான் சொல்வது:இதுக்குக் கூட பொங்கலைன்னா எதுக்குத்தான் பொங்கப் போறீங்களோ? என்ன்ன கையைப் பிடிச்சு இழுத்தாங்கன்னு கீ போர்ட் தட்டிகிட்டு இருங்க
    நீங்கள் சொன்னது:தமிழன் பண்பாடு என்று சொல்லிக்கொள்ள நம்மிடம் என்ன தான் மிஞ்சி இருக்கிறது? ஒழுங்கான தமிழ் பேசுகிறோமா? நம் பாரம்பரிய உணவுகளை சாப்பிடுகிறோமா? தமிழ் மாதங்களை பின்பற்றுகிறோமா? அட தமிழின் மெய் எழுத்துக்களை எத்தனை பேர் வரிசையாக சொல்வீர்கள்? அவ்வளவு ஏங்க, தமிழர் பண்பாட்டை காக்கத் துடிக்கும் நம்மில் எத்தனை பேர் தமிழ் வழியில் நம் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம்?
    நான் சொல்வது:வேட்டியிலாவது தமிழர் பாரம்பரியத்தை காப்பாற்றுவோம். ஏனென்னில் அது உங்களது தந்தை கட்டியது உங்களது தாத்தா பாட்டன் கட்டியது நேற்று பேண்ட் போட ஆரம்பிச்ச அடிமைகள் குறைந்த பட்சம் வேடிக்கையாவது பாருங்கள் பொங்குகிறவனை மட்டம் தட்டாதீர்கள். அப்புறம் பின்னாளில் பொங்குவதற்கு ஆள் இல்லாமல் போய்விடும்.
    கூட்டத்தில் நமது நண்பர் அடிவாங்கினால் முதலில் அடி கொடுப்பவனை அறைந்து விலக்கிவிட்டு பின்னர்தான் டீட்டெய்ல் கேட்க வேண்டும் என்ற பாலபாடம் கூட தெரியவில்லையா?
    நீங்கள் சொன்னது:இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணமகன் கூட வேஷ்டி கட்டுவதில்லை.
    நான் சொல்வது:வாதத்திற்கு வலுச்சேர்க்க பொய்யை அவிழ்த்து விடக்கூடாது பட்டுச்சேலை பட்டு வேஷ்டி என்பது 99 சதவீத கல்யாணங்களில் பார்க்கலாம்.எனக்குத் தெரிந்து கடந்த நூறு வருடங்களாக வேட்டி சேலை என்பது மணமக்களுக்கான ஆடையாகத்தான் உள்ளது. ஆனால் கல்யாணத்திற்கு வருகின்ற சில நாதாரிகள்தான் இப்பொழுதெல்லாம் அரை நிர்வாணத்தில் வருகிறார்கள் (டவுசர்பார்ட்டி)
    நீங்கள் சொன்னது:நம் வீட்டிற்குள்ளேயே, நம் அன்றாட வாழ்விலேயே வேஷ்டியை மறந்து விட்டு, தமிழர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தே இழந்து விட்டு, இன்று எங்கோ ஒரு இடத்தில் எவனோ ஒருவன் வேஷ்டியை அனுமதிக்கவில்லை என்றதும் பொங்குகிறோம்.. நல்லா இருக்கு நம்ம தமிழ்ப்பற்று.. முதலில் தமிழர் கலாச்சாரத்தை வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் ஆரம்பிப்போம்..
    நான் சொல்வது:சேம் சைடில் கோல் போடுகிறீர்கள். என்ன சொல்கிறீர்கள் என்பதில் ஒரு தெளிவு இல்லை.
    நீங்கள் சொன்னது:கேரளத்தில் நம்மை விட அதிகமாகவே வேஷ்டி பயன்படுத்தப்படுகிறது.. அங்கு எவனாவது வேஷ்டிக்கு மறுப்பு சொன்னால் நடப்பதே வேறு... நாமும் வேஷ்டியை பரவலாக அணிந்தால் எவன் அதை தடுக்க முடியும்?
    நான் சொல்வது:இதுவும் அஃதே. அணிவது இருக்கட்டும் முதலில் அவமரியாதை செய்தவனுக்கு பாடம் புகட்டினால் தன்னால் அணிவதற்கு ஆசை வரும்.
    நீங்கள் சொன்னது:இன்னொரு முக்கிய விசயம், அது போன்ற கிளப்புகள், ஒரு பாமர தமிழனுக்கு சுத்தமாக சம்பந்தமே இல்லாத விசயம்.. அங்கு வேஷ்டியை அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் ஒரு சாதாரண தமிழனுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை..
    நான் சொல்வது:சபாஷ் !என்ன நடந்தென்றே தெரியாமல் இவ்வளவு பெரிய கட்டுரையா? . வேட்டி கட்டிய தமிழன் கிளப் மீட்டிங்கிற்கோ அல்லது வேடிக்கைபார்க்கவோ செல்லவில்லை.சகநீதிபதியின் புத்தக வெளியீட்டுவிழாவிற்கு (பொது நிகழ்ச்சி) அழைப்பின் பேரில்.சென்றவரை சிங்காரித்து மூக்கறுத்த கதை.ஒரு வேட்டி கட்டிய தமிழனை ஒருவன் அவமதித்தால் முதலில் அவனை அடித்தால்தான் அவமரியாதையை நிறுத்துவான். இந்தியாவின் பாரளுமன்றத்தில்.மற்றும் தமிழக சட்டமன்றத்தில் அனுமதிக்கப்படும் வேட்டி ஒரு கிளப்பில் அதுவும் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படவில்லை என்றால் அதற்கு உங்களைப் போன்றோர்தான் காரணம்.வேட்டி என்ன அவ்வளவு கேவலமான உடையா? அல்லது தமிழனுக்கு தோல்தடித்து விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. கடைசி வரைக்கும் பொங்குங்க பாஸ்.. நான் அல்ரெடி சொன்ன மாதிரி 8முழ வேஷ்டில மொத்த தமிழ்நாட்டோட மானம், மரியாதை, கலாச்சாரம் எல்லாம் பேக் பண்ணியிருக்கு... வாழ்த்துக்கள் :)

      Delete
    2. மொத்த இந்தியாவின் மானம் மரியாதை சுதந்திர தினத்தன்று சட்டையில் குத்தப் படும் கையகல காகிதத்தில் இருப்பதாக உணருபவன்,அதை ஒருவன் மிதித்தால் எனக்கெல்லாம் கோபம் வரும்.ஆக மானம் மரியாதை என்பது அளவிலோ அல்லது எண்ணிக்கையிலோ இல்லை.. ஆனாலும் தமிழனின் மானம் மரியாதை எட்டு முழ (பெரியதாக)வேட்டியில் இருப்பதும் உங்களுக்குக் கூட பெருமைதானே?.

      Delete
  16. majority of us are middle class, using bike or public transport.. then hw to use veshti? will it be comfortable? only car users can think abt it.. bt my habit is taking veshti in my bag, when goin tmpls.. aftr a bath @ tmpl i change to veshti. Inside tmpl veshti is more comfertable than pants..

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One