சாரு நிவேதிதாவும் அவரின் ஒப்பீடுகளும்..

Sunday, November 7, 2010

பெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்து விடலாம் என்பது பெரியாரின் நம்பிக்கை. இதை பாஷன் ஆக்கியது முத்தமிழ் அறிஞர். ஆன்மிகத்திற்கு இவர்கள் என்றால், கலைத்துறைக்கு ஒரு சாரு நிவேதிதா.

ரோட்டில் செல்லும் ஒரு அழகான பெண்ணை பார்த்து நீங்கள் சைட் அடித்து ரசிக்கும் போது, ஒரு அதிகப்பிரசங்கி, அந்த பெண்ணின் உடைகளை களைந்து, 'இவர் முலைகளைப்பார், ஒன்று பெரியதாக உள்ளது, ஒன்று சிறிதாக உள்ளது..' 'இவள் (யாரோ ஒரு வெளிநாட்டுக்காரியின் பெயரைக்கூறி) அவளை காப்பி அடித்து உள்ளே சிலிக்கான் பேட் வைத்திருக்கிறாள்'.. 'இவளுடைய அம்மா ஒரு தேவடியாள்'.. என்கிற தொனியில் வக்கிரமாக கேவலமாக பேசினால் உங்களுக்கு என்ன மனநிலை இருக்குமோ, அதே மன நிலை தான் இந்த சாரு நிவேதிதா என்பவரின் எந்திரன் படத்தைப்பற்றிய கட்டுரையை வாசிக்கும் போது எனக்கு இருந்தது..

படத்தின் இசை வெறும் சத்தமாக மட்டும் உள்ளதாம். படத்தின் லோகேசன் கேவலமாக இருக்கிறதாம். இப்படி எல்லாம் கூறி, ஏதேதோ கேள்வியே படாத சில வேற்று மொழிப்படங்களை ஒப்பிட்டுப்பேசுகிறார். எனக்கு இரண்டு வருடங்களாக இவருடைய வலைத்தளம் மட்டுமே பழக்கம், சமீபமாக ஆனந்த விகடன். இவர் வலை தளங்களில் எந்த தமிழ் படத்தையும் பாராட்டி நான் கண்டதே இல்லை. ஆனால் நமக்கு என்னவென்றே தெரியாத வேற்று மொழிப்படங்களை சிலாகித்துப்பேசுவார். இசையிலும் அப்படியே. ஏன் இப்படி என்று புரியவில்லை. இவர் ஆனந்த விகடனில் எழுதும் பத்தியிலும் 'அந்த நாட்டில் அப்படி உள்ளது, இந்த நாட்டில் இப்படி உள்ளது, என்றெல்லாம் மற்ற நாடுகளை பெருமையாக பேசிவிட்டு, கடைசியில் இந்தியாவை அசிங்கப்படுத்துவார். மாநிலங்களைப்பற்றி பேசும் போது தமிழகத்தை மட்டம் தட்டுவார். தான் சார்ந்துள்ள மாநிலத்தையும் நாட்டையும் மக்களையும் மிக தாழ்வாக நினைக்கிறார் இவர்.

என் சந்தேகம் எல்லாம், இவருக்கு பிற நாடுகளும், பிற மொழிப்படங்களும், வேற்று நாட்டவரின் இசை மட்டுமே பிடிக்கும் போது இவர் ஏன் தமிழ் படங்களுக்கும், இசை அமைப்பாளர்களுக்கும் விமர்சனம் எழுத வேண்டும்? அதுவும் இவர் அங்காடி தெரு, தசாவதாரம், குருதிப்புனல், எந்திரன் போன்ற பலரையும் கவர்ந்த தமிழ் படங்களை தான் குப்பை என்று எழுதுவர். இந்தப்படங்களில் எல்லாம் குறையே இல்லை என்று சொல்ல முடியாது. நான் முன்பு சொன்ன உதாரணம் போல, ஒரு பெண்ணை சைட் அடிக்கும் போது அவளின் தலைமுடி கொஞ்சம் கலைந்திருப்பது நமக்கு சிறு குறையாக தெரியலாம். ஆனால் இவரோ, அந்த பெண்ணை, நான் முன்பு சொன்ன உதாரணத்தை போல கூறு போடுகிறார். படம் என்பது 2, 3 மணி நேரம் கவலைகளை மறந்து சந்தோசமாக இருப்பதற்காக தான் நாம் பயன் படுத்துகிறோம். அதில் சில நல்ல கருத்துகள் இருந்தாலும் ஏற்றுகொள்கிறோம், நமக்கு சரி என்று பட்டால். ஆனால் குறை கண்டு பிடிக்கா விட்டால் தனக்கு கிறுக்கு பிடிக்கும் என்பதற்காகவே படம் பார்த்தால் இவரைப்போல் தான் எழுத வேண்டும்.

எனக்கு இருக்கும் சந்தேகம் இவருக்கு எந்த தமிழ் படமுமே பிடிக்காதா? சில மாதங்களுக்கு முன்பு சிவாஜியின் நடிப்பை செயற்கையின் உச்சம் என்று கூறிய இவர், இப்போது அவரின் நடிப்பை, மற்றவ்ரகளைப்போல மர்லான் பிராண்டோவோடு ஒப்பிடுகிறார். ஒரு வேளை தென் அமெரிக்காவில் இப்படி தான் மாற்றி மாற்றி பேசுவார்கள் போல.

'ரஜினி என்ற 61 வயது (71 வயது தோற்றம் கொண்ட) முதியவர், 37 வயது மாமியுடன் டூயட் பாடுகிறாராம்'. இது இந்த எழுத்தாளருக்கு வக்கிரமாக இருக்கிறதாம். வயதுக்கு ஏற்ற கதைகளில் நடிக்க வேண்டுமாம். அய்யா சாரு நிவேதிதா அவர்களே, உங்களை யாரும் வயதுக்கு தகுந்த மாதிரி பேசு, எழுது என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நீங்கள், கூட தான், கல்லூரிப்பெண்களை கவர, ஒரு இளைஞன் போல் நடித்து, ஜாக்கி ஜட்டி எல்லாம் அணிந்து சென்றதாக பெருமையுடன் கூறினீர்களே, அப்போது எங்கே போனது உங்கள் வயது? ஒரு நடிகன் எப்படி நடிக்கிறான் என்று பாருங்கள், அவன் வயதைப்பற்றி உங்களுக்கு என்ன? நான் நினைக்கிரீன் உங்களுக்கு ரஜினி மீது பொறாமை, இந்த வயதிலும் கதாநாயகனாக பெண்களோடு டூயட் பாடுகிறார் என்று. இந்தப்படம் 3000 பிரிண்ட் போடப்பட்டதில் இருந்து இவ்வளவு பெரிய வெற்றி அடைந்தது வரை உங்களுக்கு வயிற்றெரிச்சல் தான்.

ரகுமான் ஹிந்தியில் இசை அமைத்தால் உங்களுக்கு பிடிக்கும், அதே தமிழில் பிடிக்காது. இங்கு ஒரு நல்ல விஷயம் நடந்தாலுமே உங்களுக்கு அதில் உள்ள சிறு தவறு மட்டுமே தெரியும். நல்லவைகள் எல்லாம் உங்களுக்கு தூரமாகவே இருக்க வேண்டும். நீங்கள் ஒரு pessimist சாரு.

எனக்கும் உங்கள் எழுத்துக்களை படிக்கும் போது வக்கிரமாக உள்ளது. உங்கள் எழுத்துக்களை பிடித்து உங்களையும் மதித்து கடிதம் போடுபவர்களை (நீங்கள் தான் உங்களுக்கே அப்படி கடிதம் எழுதுவதாக ஒரு பேச்சும் உள்ளது) நீங்கள் எவ்வளவு வக்கிரமாக திட்டுகிறீர்கள்? இதில் இருக்கும் வக்கிரத்தை ஒப்பிட்டால் ரஜினி டூயட் பாடுவது ஒன்றுமே இல்லை.

எனக்கு இன்னொரு மிகப்பெரிய சந்தேகம், நீங்கள் ஏன் பெயரே வாயில் நுழையாத எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் மேற்கோள் காட்டுகிறீர்கள்? அப்படி என்றால் இத்தனை நாட்களாக எங்களுக்கு தெரிந்த எழுத்தாளர்களும் சினிமாக்காரர்களும் அறிவு கெட்டவர்களா? இல்லை அவர்களை வாசித்த ரசித்த எங்களுக்கு மூளை இல்லையா? ரஜினி ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார் 'ரசிகர்களை முட்டாள்னு நெனைக்குறவன் ஒரு முட்டாள்' என்று. நீங்களும் அப்படி ஒரு முட்டாள் தான். உங்களை வாசிப்பவர்களையும் மற்ற மக்களையும் கூட, உங்களை விட கீழானவர்களாக முட்டாள்களாக நினைக்கிறீர்கள்.

அதே நேரத்தில் உங்களை இந்தியாவில் (அப்படி சொன்னால் கோபம் வருமே, உங்களை இந்தியா என்ற குப்பை நாட்டிற்குள் அடைத்து விட்டதாக..), சாரி, உலகிலேயே மிகப்பெரிய எழுத்தாளராக நினைத்துக்கொண்டு காலம் தள்ளுகிறீர்கள். நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும். நீங்கள் கூறும் பெயர் தெரியாத எழுத்தாளர்களை பற்றியும், இன்னும் பிறவும், நீங்கள் கூறுவதை விட விக்கிபீடியாவிலும் கூகிளிலும் அதிகமாக உள்ளன.

ஒரு படைப்பாளி படைக்க வேண்டும், இப்படி பிற படைப்பை குறை கூறியே பொழுதை ஒப்பேற்ற கூடாது. முதலில் நீங்கள் உங்கள் எழுத்தை ஒழுங்காக கவனியுங்கள்.

குறிப்பு:
உங்களை சுப்பிரமணிய சாமியுடன் ஒப்பிட்டு எழுதியது உங்களுக்கு அவ்வளவு கோபத்தை உண்டு பண்ணுகிறதோ? அவரை விட நீங்கள் ஒரு மிகப்பெரிய கோமாளி. அவர் பல வெளி நாடுகளின் (வெளி நாடு என்றால் உங்களுக்கு பிடிக்குமே) பல்கலைகழகங்களில் உரை ஆற்றயுள்ளார். கேரளாவில் முதன்மையான ஒரு நிர்வாகவியல் கல்லூரியை நடத்துகிறார். நீங்கள் என்ன செய்து விட்டர்கள்? அவர் அரசியல் பேச்சை விடவும் சிறு பிள்ளைத்தனமாக உள்ளது உங்களை நீங்களே உலகின் சிறந்த எழுத்தாளராக கொண்டாடுவது.

21 comments

  1. நண்பா அவரை எல்லாம் என் மதிச்சு ஒரு பதிவை வீண் அடிக்கறீங்க??

    ReplyDelete
  2. கடுப்பா இருக்கு நண்பா.. 'உலகத்துலேயே நான் வெளிவிடும் காற்றில் மட்டும் தான் சந்தனம் மனம் வீசிது, உங்களுக்கு எல்லாம் நாறுது' என்கிற தொனியில் தான் அந்த ஆள் எல்லாம் எழுதுகிறார்..

    ReplyDelete
  3. // பெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்து விடலாம் என்பது பெரியாரின் நம்பிக்கை. இதை பாஷன் ஆக்கியது முத்தமிழ் அறிஞர். ஆன்மிகத்திற்கு இவர்கள் என்றால், கலைத்துறைக்கு ஒரு சாரு நிவேதிதா.
    //

    சிறப்பான ஓப்பிடு.... உலகமகா பொறுக்கியாக இருந்து கொண்டு, ஊரை மேய்பவர்களுக்குத்தான் தமிழ் நாட்டில் மதிப்பு, மரியாதை எல்லாம்.

    ReplyDelete
  4. இந்த மாதிரி எதிர் வினை புரிவதால்தான் அவர்கள் பிரபலம் ஆகின்றனர். கண்டுக்காம விடுங்க.. ஆள் அடையாளம் தெரியாம போய்டுவாங்க

    ReplyDelete
  5. //எனக்கு இரண்டுவருடங்களாக இவருடைய வலைத்தளம் மட்டுமேபழக்கம்,//

    ஒரு கிறுக்கனை,கிறுக்கன் என்று புரிந்துகொள்ள இரண்டு வருடங்களா தேவைப்படும்?

    ReplyDelete
  6. இன்டெர் நெட்டில் விக்கிபிடியா, ஒரு கம்ப்யூட்டர் இவைகள் இல்லையெனில் இந்த சாரு வெறும் நசுங்கிய பெப்சி டப்பா தான். இந்த ஆளை பற்றி எவரும் எழுதாமல் இருங்களேன். பயித்தியம் பத்தும் சொல்லும். அதை பற்றி நமக்கேன் கவலை. விடுங்கள்.

    ReplyDelete
  7. சரி இனிமேல் அந்த ஆளைப்பற்றி எழுதப்போவது இல்லை...

    ReplyDelete
  8. // பெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்து விடலாம் என்பது பெரியாரின் நம்பிக்கை. இதை பாஷன் ஆக்கியது முத்தமிழ் அறிஞர். ஆன்மிகத்திற்கு இவர்கள் என்றால், கலைத்துறைக்கு ஒரு சாரு நிவேதிதா.
    //

    இந்த வரிகளுக்காக, இதைப் படைத்த உங்கள் சிந்தனைக்கு என் பாராட்டுக்கள்!

    உண்மை, உண்மை அப்பட்டமான உண்மை!

    ReplyDelete
  9. அசோக், முந்தி எல்லாருமே உலகம் தட்டையானது என்று நம்பினார்கள்.
    பிறகு, ஒருவர் தான் அது உருண்டை என்று சொன்னார். அவரைக் கொலை செய்யவும் முயன்றார்கள்...........

    நான் என்ன சொல்ல வாறன் என்று விளங்குதா............... ? :)

    ReplyDelete
  10. கஜேந்திரன் அவர்களே, சொல்ல வேண்டியதை பிறரை தூற்றாமல் மட்டம் தட்டாமல் சொல்ல வேண்டும்.. நான் மேலே குறிப்பிட்ட அந்த மூன்று பேரும் மட்டம் தட்டுவதையே தொழிலாக கொண்டவர்கள்..

    ReplyDelete
  11. Helooooo periyaar pathi pesa yaarukume arugathai illai.. Avarum Ambedker m illena innaiki inda Saadhi Hindu makkal ella keezh saadhi hindu kalaiyum konnu irupanunga.

    ReplyDelete
  12. ராமு சார் ராமு சார்.. நீங்க பெரிய அறிவாளியா இருக்கலாம். பெரியார் லாம் முட்டாளா இருக்கலாம். ஆனால் கொஞ்சம் யோசிச்சி பாருங்க, இந்த ஹிந்து மதத்துல சொல்ற வர்ணாச்ரமம் சரியானதா ?.. எந்த விதத்துல ஒருத்தன untouchable நு சொல்ல வரீங்க ? பெரியார் நு ஒருத்தர் அம்பேத்கர் நு ஒருத்தர் இல்லேனா, இந்த வீனா போன ஐயர் பசங்க இந்நேரத்துக்கு கொன்னு இருப்பானுங்க எல்லா கீழ் சாதி ஹிந்து மக்களையும். நீங்க நம்பிக்கை வைங்க தும்பிக்கை வைங்க. யாரு வேணாம் நு சொன்னது. ஆனா மத்தவன ஏன் மிதிகறீங்க. அதுதான் பெரியார் கேட்டார். நீங்க சரியாய் படிக்கலான போய் சரியாய் படிச்சிட்டு வந்து ப்ளாக் போடுங்க Sirrr.

    ReplyDelete
  13. How do you say to gain fame Periyar criticised or attacked the belief of the majority people? He fought for the betterment and development of majority people. Even his opponents never said he is doing anything to get fame.But I feel by quoting Periyar you want to be in the lime light.

    ReplyDelete
  14. அட மூடர்களே..... முதலில் பெரியாரையும்,சாருவையும் முழுமையாக படித்துவிட்டு. அப்றோம் அவர்களை பற்றி எழுதுங்கள்.
    ஒருவரை முழமையாக எப்படி தெரிந்து கொள்ளாமல் இப்படி எழுத முடிகிறது உங்களால்.
    சாரு நாற்பது வருடங்களாக எழுதுகிறார். இன்டெர்நெட் விக்கிபீடியா லாம் கடந்த சில வருடங்களில்தான் வளர்ந்துள்ளது.
    ௧௯௮௦ பிரெஞ்சு எழுத்தாளார் ழார் பத்தாயி, இத்தாலியா இயக்குனர் பசொலின் பற்றியிலாம் எழுதிவிட்டார்....
    அதுவும் இந்திரன் போன்ற தமிழ் படத்தில் மட்டும்தான் ஒரு எந்திர மனிதன் கொசுவிடமில்லாம் பேசுவான்....அட கொடுமையே கொடுமையே.
    இதில் ஹாலிவுட்காரர்கள் இந்த படத்தை பாரடினார்கள் என்று வேறு சொல்லிகொள்கிறார்கள்.... காரித்துப்பி இருப்பார்கள் கேனபயல்கள் இப்படிலாம் படம் எடுகிறார்கள் என்று..... இதை ஒருவர் தவறு என்று சொன்னால உங்களுக்கு கோவம் பொத்து கொண்டுவருகிறது ...
    இதை எதிர்த்து எழுதினால் அவருக்கு புகழும் கிடைக்காது ஒரு மயிரும் கிடைக்காது.. நாலு மொட்ட கடிதம் தா வரும் ....

    ReplyDelete

  15. // பெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்து விடலாம் என்பது பெரியாரின் நம்பிக்கை. இதை பாஷன் ஆக்கியது முத்தமிழ் அறிஞர். ஆன்மிகத்திற்கு இவர்கள் என்றால், கலைத்துறைக்கு ஒரு சாரு நிவேதிதா.//

    பகவான் கீதையிலே சொல்லுவார், "போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும், போகட்டும் கண்ணனுக்கே". இந்தியாவில், இதிகாசம் காலம் தொட்டே, இந்து மதத்தை போற்றி பெரியோர்களும் ஞானிகளும் வாழ்ந்த நேரத்தில், கடவுள் நம்பிக்கையற்ற, துவேஷிகளுமான ஹிரண்யகசிபுகளும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உளறுவதல் இந்து மதம் அழியப்போவதில்லை. புறந்தள்ளுங்கள் இவர்கள் உளறலை.

    ரஜினி என்றால் பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை கவரக்கூடிய, பெரும்பான்மை மக்களால் நேசிக்கபடும் மனிதன். ஜப்பான் நாடே அவரை நேசிக்கறது , ஜப்பானில், நம் தமிழ் மொழிக்கு ஒரு விசிடிங் கார்டு கொடுத்த கலை வித்தகர். அவர் ஒரு ஞானி, அவர் ஒரு இமயம். நீங்கள் குறிப்பிட்ட "சாநி" எழுத்தாளர் ரஜினியியை பார்த்து பொறமைதான் படமுடியும். இவர் உளறி கொட்டினாலும் ரஜினி புகழை மறைககொவோ, மறுக்கொவோ முடியாப்போவதிலை. சேவல் நினைதுகொள்ளுமாம், நான் கூவினால்தான் பொழுதே விடியும் என்று. "சாநி" யின் அரைவேக்கட்டுதனமான சினிமா விமரிசனத்தால் யாரும் பாதிக்கபடபோவதில்லை. பலகோடி பணம் கொட்டி, படம் எடுப்பவர்கள் மக்களை மகிழ்விக்க சில கமர்சியல் சேர்ப்பதுண்டு, தவறில்லையே. அவர்களும் பிசினஸ் நம்பிதானே படம் செய்கிறார்கள். அவ்வப்போது நீங்கள் குறிப்பிட்ட நல்ல படங்களும் வரும், நம் வாழ்க்கை ஒட்டியே, கலாச்சாரம் ஒட்டியே வரத்தான் செய்யும். லூசுத்தனமா, வெஸ்டேர்ன் கல்சர் படங்களோடு ஒப்பிடுவது அது அவரது குறைப்பாடு உள்ள மனோநிலையே.

    "சாநி" ரசிகர் யாரோ சொன்னார், அவர் நாற்பது ஆண்டுகளாக எழுதிவருகிறார் என, இவ்வளு ஆண்டு எழுதி. எழுத்தில் முதிர்ச்சி இல்லையே. பண்பாடு இல்லையே.

    ராம் சார், சரியான சாட்டையடி அந்த அரைகுறை எழுத்தாளனுக்கு!


    ReplyDelete
  16. சரியான வார்த்தைகள் திரு.RamKumar G Krish :-) நன்றி..

    ReplyDelete
  17. பெரியார் பற்றி நீங்கள் குறிப்பிடுவது தவறு. அவர் கடவுள் இல்ல என்று கூறியதற்கு காரணமே பலர் கடவுளின் பெயரை சொல்லி சில சிறுபான்மை மக்களை அடிமைபடுதுவதை தடுக்க தான். கடவுள்ள நம்பிக்கை தவறு இல்லை ஆனால் கடவுள் பெயரை சொல்லி பிறரை துன்புறுத்துவது தான் தவறு. கடவுளை நம்பலாம் ஆனால் மூடநம்பிக்கை தான் தவறு. பெரியாரும் அம்பேத்காரும் தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள்.

    சாறு நிவேதிதா எந்திரன் விமர்சனம் படிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. ரஜினி என்ற மாபெரும் நடிகனின் உழைப்புக்கும், ஷங்கரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி தான் எந்திரன். ஹாலிவுட் படங்களின் பெயரை சொல்லி நம் இந்திய படங்களை மட்டம் தட்டுவது பக்கத்துக்கு வீட்டு அம்மாவுடன் ஒப்பிட்டு நமது அம்மாவை இழிவுபடுத்துவதற்கு சமம்.ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவது இல்லை அதுபோல தான் ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் ரஜினி என்ற ஸ்டார் அழிவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. //கடவுள்ள நம்பிக்கை தவறு இல்லை ஆனால் கடவுள் பெயரை சொல்லி பிறரை துன்புறுத்துவது தான் தவறு. கடவுளை நம்பலாம் ஆனால் மூடநம்பிக்கை தான் தவறு.// இதுவும் பெரியார் சொன்னதா? பெரியாரின் பெண்ணியம் மூட நம்பிக்கை ஒழிப்பெல்லாம் நல்ல விசயங்கள்.. கடவுள் மறுப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. //கடவுளின் பெயரை சொல்லி சில சிறுபான்மை மக்களை அடிமைபடுதுவதை// இன்று எல்லாமே தலைகீழாக நடக்கிறதே?
      மற்றபடி சாரு நிவேதிதா சில சமயம் மேதாவி மாதிரி பேசி வாங்கிக்கட்டிக்கொள்வது உண்டு..

      Delete
    2. //கடவுள்ள நம்பிக்கை தவறு இல்லை ஆனால் கடவுள் பெயரை சொல்லி பிறரை துன்புறுத்துவது தான் தவறு. கடவுளை நம்பலாம் ஆனால் மூடநம்பிக்கை தான் தவறு.//
      இது பெரியார் சொன்னது அல்ல என்னுடைய சொந்த கருத்து.

      இன்றும் சாதியின் பெயரை சொல்லி தாழ்த்தப்பட்டவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். தர்மபுரியில் தலித்துகளின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்தது அதற்கு எடுத்துக்காட்டு.

      Delete
  18. நான் பல பதிவர்களின் வலைத்தளத்தை பார்வையிடும்பொழுது இந்த சாரு என்பவரின் பெயரை அடிக்கடி பார்த்ததாக நியாபகம்.எனக்கு முற்போக்கு எனும் பெயரில்,சொந்த நாட்டையோ,பாரம்பரியத்தையோ,கலையையோ கிண்டல் செய்பவர்களை துளியளவும் பிடிக்காது என்பதால்,இந்த பதிவரின் பதிவுகளை வாசிக்க முயலும் முயற்சியை கைவிட்டு விட்டேன்.நீங்கள் குறிப்பிட்டவரைப்போல் இன்னும் பலர் இருக்கின்றனர்.அவர்களைப்பொறுத்தவரை இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லாம் துயரத்தில் பிறந்தவர்கள்.தமிழன் என்றால் படு கேவலமானவர்கள்.தமிழ் சினிமா என்றால் ஒரு இழிகலை.சில ஆங்கில சினிமாக்களில் நடக்கும் வன்மமான காட்சிகளான ஓரினச்சேர்க்கை,தாயின்முன் சுய இன்பம் காண்பது,தந்தையுடன் குடித்துவிட்டு தூங்குவது,பதின்ம வயதில் கேர்ள்ப்ரண்டை வீட்டுக்குள் அழைத்துவந்து பெற்றோரிடம் அறிமுகப்படுத்திவிட்டு ஜல்சா செய்வது,பெண்களை கொடூரமாக கொலை செய்யும் கொலைகாரன்,மனைவி கணவன் முன்னே அடுத்தவனுக்கு லிப்கிஸ் தருவது,போன்ற பண்பாட்டு காட்சிகளே அவர்களைத்திருப்தி படுத்தும்.நமது ஆட்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள்.இவர்கள் தான் முற்போக்கான கருத்துகளுடன் பிறந்த இந்நூற்றாண்டு பெரியார்கள் எனுமளவுக்கு எழுத்தில் கிழித்துக்கொண்டிருப்பார்கள்.இதில் அவர்களுக்கு வேண்டிய டைரக்டர்கள்,தயாரிப்பாளர்கள் படமெனில் அப்படியே பாராட்டிவிட்டு போனால் போகிறது என குறை என்ற பெயரில் ஒப்புக்குச்சாப்பான் என்று கூறிவிட்டு செல்வார்கள்.கேடுகெட்டவர்கள்.இவர்களைப்போல பச்சோந்தி மனிதர்களிடம் வாய்த்த எழுத்தாற்றல் என்பது வீழலுக்கு இறைத்த நீர் போன்றது தான்.இவர்களை சாணியை முக்கி பிய்ந்த செருப்பால் அடித்தால் கூட என்னை மிரட்டினார்கள்.நான் பயப்படுவானா?அப்படி இப்படி என்று எழுதிவிட்டு சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கிறது என்பார்கள்.

    அடுத்து மேலே ஒரு நண்பர் சாதியின் பெயரைக்கூறி தலீத்துகள் தாக்கப்படுவதைப்பற்றியும் ஆதிக்க சாதியினரையும் குறிப்பிட்டிருந்தார்.அந்த தர்ம்புரியில் ஏற்பட்ட கலவரத்திற்கான மூலகாரணங்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் அழைத்து நேர்காணல் நடத்தியது போலிருந்தது அவரது கூற்று.சாதிப்பிரச்சினையை தூண்டுபவர்கள் இவரைப்பலானவர்கள் தான்.அந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்ததும் அவரைக்காண ஓடிவந்த அவரது மகளைத்தடுத்த உறவினர்களைத்தாக்கினர் எதிர் சாதியினர்.ஒரு குடும்ப விஷயத்தை அரசியல் லாபத்திற்காக அதே தலித் மக்களுக்காக பாடுபடுவதைப்போல காட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் தூண்டுதலினால் ஏற்பட்டது அந்த கலவரம்.இரு பக்கமும் சேதாரம் என்றாலும்,மீடியாக்கள் தலித் பிரச்சினை என்று உருவாக்கிய பிம்பத்தினாலும் அங்கே ஆதிக்கசாதியினர் அராஜகம் செய்தனர் என்று செய்தி மாறிவிட்டது.ஆதிக்க சாதியினர் அட்டூழியம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சிறுபாண்மையினரும் திருப்பித்தாக்கவில்லை என்று கூறுவது வியக்கத்தக்க வைக்கிறது.

    இதேபோல் சென்னை சட்ட கல்லூரியில் நடந்த மோதலிலும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தமிழ்நாட்டின் பிரமுகர் ஒருவர் தூண்டுதல் இருக்கிறது என்பதையும் மறக்கவேண்டாம்.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One