எனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..

Tuesday, December 28, 2010

முதலிரவு அன்று
'அழுப்பாக இருந்தால் தூங்கு'
என்று என் முகம் பார்த்தே
அகம் கண்ட என் கணவரை
அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு..

காலையில் எனக்கு முன்பே
விழித்து இருந்தாலும்
நான் எழுப்பி விடும் வரை
காத்திருப்பதும்..

கால் விரல்களில்
இறுக்கமாக மாட்டிக்கொண்ட
மிஞ்சியை (மெட்டி) பற்களாலேயே
கடித்து எடுக்கும் போதும்..

என் கர்ப்ப காலத்தில்
என்னைவிடவும்
என்னையும் குழந்தையையும்
பேணி கவனித்துக்கொண்ட போதும்..

விடுமுறை நாட்களில் கூட
வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல்
சோம்பேறியாக இருக்கும் போதும்..

வேலைக்கு செல்லும் சமயத்தில்
சாமி கும்பிட மறந்தாலும்
என் நெற்றியில் முத்தமிட
மறக்காத போதும்..

செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும்
அரசியல்வாதிகளை
அசிங்கமாக திட்டும்போதும்..

என் வீட்டில் இருந்து
யார் வந்தாலும் அவர்களிடம்
பேச கூச்சப்படும் போதும்;
ஆனால் அவர்களிடமும்
மறக்காமல் என்னை கிண்டல்
செய்யும் போதும்..

என் பிறந்தநாளையும்
எங்கள் திருமண நாளையும்
மறந்து என்னிடம்
மன்னிப்பு கேட்கும் போதும்..

மெகா சீரியல் அன்று கிரிக்கெட் இருந்தால்
ஹைலைட்சிலேயே
திருப்தி பட்டுக்கொள்ளும் போதும்..

நினைத்துக்கொள்வேன், "நல்ல வேலை
அந்த கணேஷை கழட்டி விட்டேன்
இந்த நல்ல கணவன் கிடைத்தான்.."

No comments:

Post a Comment

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One