சா.நி.யின் விமர்சனம் ஒரு சாணி....

Monday, April 5, 2010

அங்காடி தெரு படம் முதலில் பார்த்த பொது ஒரு மெல்லிய கணம் மனதை ஆட்கொண்டது. இரண்டாம் முறை பார்த்தது முதல் ஒரு இனம் புரியாத சோகம் மனதை அறுக்கின்றது. இந்த சூழ்நிலையில் தான் நமது சாருநிவேதிதாவின் (சுருக்கமாக சா.நி.) விமர்சனம் அந்த படத்திற்கு எப்படி இருக்கிறது என்ற ஆர்வத்தில் பார்த்தேன். அவர் தான் இந்த மாதிரி நல்ல படங்கள் வந்தால் நல்லவராக இருக்க மாட்டரே! ('அவர் எந்த படத்துக்கு தான் ஒழுங்கா விமர்சனம் எழுதுனார்?' என்று மட்டும் கேட்காதீர்கள்).

சரி, விமர்சனம் என்றால் மூடிக்கொண்டு அதை மட்டும் எழுத வேண்டும். அதை விட்டுவிட்டு 'வசந்த பாலனிடம் நான் ஹீரோ வாய்ப்பு கேட்டேன்", "அவர் என் நண்பர்", "என் புத்தக வெளியீட்டிற்கு வந்தார்", என்றெல்லாம் சப்பை கட்டு கட்டிவிட்டு விமர்சனத்தை ஆரம்பிக்கிறார்!! எதற்கு இந்த நடிப்பு? நான் ஒரு யோக்கியன், மனதில் பட்டதை மறைக்க தெரியாது என்று ஒரு பில்ட்டப் வேறு.. ஒரு வேலை வசந்த பாலன் தன் அடுத்த படத்தில் இவரை ஹீரோவாக போடுவார் என்ற நப்பாசையிலா? அவர் பிட்டு படம் எடுக்க மாட்டரே? சொல்ல முடியாது, இவர் நட்பை துண்டிக்காவிட்டால் அவர் பிட்டு படமும் எடுத்துவிடுவார். அங்காடி தெரு படம் வக்கிரமாக இருக்கிறதாம். இவர் தன் கதையில் விவரித்த ஓரின உறவை விட இந்த உலகில் எதுவும் வக்கிரமில்லை. அதை படித்த பின் இரண்டு நாட்களுக்கு என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை. சரி அவரின் 'உலகத்தரமான' (கமலை போல் இவருக்கும் ஒரு பேராசை உண்டு, உலகத்தரம் தனக்கு மட்டுமே உரியது என்று. மற்றவை எல்லாம் டம்மி பீசு என்பார்) விமர்சனத்தை அலசுவோம்.

தன் குழந்தை ஊனமாக பிறந்ததற்காக ஒரு தாய் சந்தோஷப்படும் காட்சி இவருக்கு ஆபாசமாக இருக்கிறதாம். அந்த வசனகர்த்தாவின் வக்கிரபுத்தியை இந்த காட்சி வெளிப்படுத்துகிறதாம் (ஜெயமோகன் என்ன செஞ்சா உங்களுக்கு பிடிக்கும் சா.நி.?). ஊனமுற்றவர்களை வாழ தகுதி இல்லாதவர்களாக சா.நி. பார்ப்பதால் தான் அப்படி பிறந்த ஒரு குழந்தையை இவர் மனது ஏற்கவில்லை. குப்பைத்தொட்டியில் போடும் எவ்வளவோ பெற்றோர்களுக்கு மத்தியில் அந்த தாய் எவ்வளவோ மேல்.

அடுத்ததாக அந்த தொழிலாளர்கள் சாப்பிடும் இடத்தை காட்டும் போது இவருக்கு மலக்குவியல் ஞாபகம் வந்ததாம். அந்த இடத்தை பார்த்த உடன் இவருக்கு குமட்டிக்கொண்டு வந்ததாம். வாழ்வில் என்றாவது சோற்றிற்கு கஷ்டப்பட்டிருந்தால் இவருக்கு பசியின் கொடுமையும் சோற்றின் அருமையும் தெரிந்திருக்கும். ஓசியில் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் சாப்பிடும் இவருக்கு என்ன கஷ்டம் தெரியும்? ('நான் டெல்லியில் பட்ட கஷ்டம் யாருக்கு தெரியும்?' என்று இதற்கொரு ஒப்பாரி பதிவு போடுவார் என்று எதிர் பார்க்கிறேன்) .

படம் முழுவதும் கெட்டவைகளே நடக்கிறதாம். ரயில் விபத்து, சாலை விபத்து, இன்னும் பலவாம். கதையே அது தானே? வாழ்க்கையில் நல்லவையே நடக்காத மக்களின் அன்றாட வயிற்றுப்பிழைப்பு தானே படம்? தோல்வி அடைந்தவனுக்கு வாழ்கையே இருக்க கூடாதா? அதை படமாக எடுக்க கூடாதா? எல்லோரும் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று உத்தமர்களே வாழும் இந்த உலகிற்கு வக்காலத்து வாங்குகிறார் நம் சா.நி. இந்த படத்தில்வரும் சூப்பர்வைசர் பாத்திரமும் பூ படத்தில் வரும் போர்மேன் பாத்திரமும் ஒரு துளி தான். எங்கள் ஊரில் பட்டாசு ஆலைகளில் போர்மேன்கள் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியாதவை. அவன் நினைத்தால் தான் யாரும் அந்த தொழிற்சாலையில் வேலை செய்ய முடியும். அதற்கு அவன் ஆணிடம் இருந்து பணமாகவும், பெண்ணிடம் இருந்து சதையாகவும் கூலி பெறுவான். (இன்றும் என் அப்பா தன் வாரக்கூலியில் ஒரு பகுதியை போர்மேனுக்கு தான் லஞ்சம் கொடுக்கிறார்). சும்மா இரவு மட்டும் பப்பிலும் பைவ் ஸ்டார் ஓட்டல்களிலும் பொழுதை ஒப்பேற்றும் இவருக்கு இதைப்பற்றி என்ன தெரியும்? எந்த பெண்கள் கல்லூரியில் எந்த பிகர் ப்ரீயா இருக்கும் என்று வேண்டுமானால் தெரியும்.

அதுவும் கதாநாயகியை சாலையில் சிலர் கற்பழிக்க துரத்துவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்று சாடுகிறார். அய்யா, 'நான் தான் சாமி என்று ஆசரமம் நடத்துபவனே அடுத்தவன் பொண்டாட்டிய விட்டு வைக்க மாற்றான், இதுல நடுராத்திரி தண்ணி அடிச்சுட்டு ரோட்ல சுத்துறவன அப்படி காட்டுறது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையா? முதலில், 'அடுத்தவனுக்கு அறிவே இல்லை', 'எனக்கு தான் எல்லாம் தெரியும்', 'நான் தான் யோக்கியன்', 'உலக சினிமாவின் தத்துப்பிள்ளை, என்றெல்லாம் நினைப்பதை இவர் நிறுத்த வேண்டும். இது தான் இவரின் பாசிசம். வேண்டுமானால் நீங்கள் ஒரு உலகத்தரத்தில் தமிழ் படம் எடுங்கள், நாங்கள் பார்க்கிறோம்.

நான் நினைக்கிறேன், சா.நி. தனக்கு வயதாகி விட்டதை எண்ணி மிகவும் கலங்குகிறார். அதனாலேயே தனக்கு ஒவ்வாத சில விஷயங்களை பிடிப்பதாக காட்டிக்கொண்டு 'நானும் யூத்து தான்' என்று டமாரம் அடிக்கிறார். என்று ஒரு வயதானவன் தன்னைத்தானே இளைஞன் என்று சொல்கிறானோ அப்போது தான் அவனுக்கு வயதாக தொடங்குகிறது. உங்களை மற்றவர்கள் 'யூத்து' என்று சொல்லும் படி நடக்க முயலுங்கள் சா.நி. முதலில் உங்களை Jack of all trade ஆக காட்டுவதை நிறுத்துங்கள்; ஏனென்றால் உங்கள் தவறு வெட்ட வெளிச்சம் ஆகிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இயக்குனர்கள் தான் இப்போது உருப்படியாக படம் எடுக்கிறார்கள். அவர்களையும் இந்த மாதிரி அசிங்கமான விமர்சனங்களால் கேவலப்படுத்துகிறார்.

இவர் ஏன் வேட்டைக்காரன், அசல், வில்லு போன்ற படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை? பசங்க, நான் கடவுள், அங்காடி தெரு போன்ற அருமையான படங்களுக்கு மட்டும் தான் இவரிடம் இருந்து விமர்சனம் வரும்; அதுவும் அந்த படங்களை குறை தான் சொல்லுவார். (பசங்க படத்தின் விமர்சனத்தில் கூட ஒரு சில இடங்களில் குறை கூறியிருப்பார்). இந்த மாதிரி படங்களை மட்டும் விமர்சனம் செய்யும் போது தானே இவருக்கும் 'மேதாவி' என்ற பட்டம் கிடைக்கும்? அதிலும் இந்த படங்களை வைது, கிழித்து, கேவலப்படுத்தும் போது தானே 'ச்சே, சாரு ரைட்டா தான்டா சொல்லுறாரு' என்று நாலு பேரை தன் பக்கம் சிங்கி தட்ட வைக்க முடியும்? இவ்வளவு நாட்களாக இவரின் வலைதளத்தை படித்ததற்காக வெட்கப்படுகிறேன்.

பின் குறிப்பு:
இவரை நம்பி ஜெயமோகனை ஒரு மோசமான எழுத்தாளராக இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறேன் (அவர் வசங்களை ரசித்த எனக்கு அவர் எழுத்தை படிக்க தோன்றவில்லை). எல்லா வற்றிற்கும் காரணம் சா.நி. தான். அவரை ஒரு அயோக்கியனாகவே சித்தரித்து விட்டார். சா.நி.யும் சினிமா வாய்ப்பிற்கு தானே இப்படி பல் இழித்து காத்திருக்கிறார், முன் எச்சரிக்கையாக வசந்தபாலனை நண்பர் என்கிறார்? எக்கேடும் கேட்டுப்போங்கள் சா.நி. ஆனால் சந்தனத்தை முகர்ந்து கூட பார்க்காமல் பீ என்று சொல்லவதை மட்டும் இன்றோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.

வசந்தபாலனிடம் எனக்கும் ஒரு வருத்தம் உண்டு. அவர் வெயில், அங்காடி தெரு இரண்டு படங்களிலும் நாடார் சாதியை தாக்குவது போல் வசனமோ, காட்சியோ இடம் பெற்றிருக்கிறது. அது ஏன்? சொந்த ஊரில் அவருக்கு ஏதும் அந்த சாதியினால் கஷ்டமா? யாரவது விருதுநகர்காரங்க சொல்லுங்கப்பா. ஆனால் கலைப்படைப்பு என்று பார்க்கும் போது இரண்டுமே பொக்கிஷமான படங்கள் தான்.

7 comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அங்காடி தெரு - அடித்தட்டு மக்களின் பிம்பம்
    http://sabaritamil.blogspot.com/2010/04/blog-post_04.html

    ReplyDelete
  3. :-) அது எப்புடிங்க . . நமக்குப் புடிச்ச ஒண்ண மத்தவங்க புடிக்கலேன்னு சொல்லிட்டா நாம பொங்கி எழுந்துர்ரோம். . ? அடுத்தவங்களுக்கு மாற்றுக் கருத்தே இருக்கக்கூடாதா? நீங்க நினைக்குறது மட்டும் தான் சரியா? அவரு எழுதுறது புடிக்கலேன்னா படிக்காம இருக்க வேண்டியது தான? படிக்கவும் படிச்சிட்டு, அது மனசுக்கு புடிக்காம அத திட்டிகினு வேற இருக்குற பொளப்புக்கு உங்க வேலைய நீங்க பார்க்கலாமே? :-) . . கொரங்கு புண்ண சொறிஞ்சிக்கினே இருக்குமாம் . .அந்த மாதிரி . . :-) இதுல பெர்சனல் அட்டாக் வேற . .என்னமோ நீங்க அவரு கூடயே சுத்திகினு இருந்த மாதிரியும், அவரப் பத்தி எல்லாமும் தெரிஞ்ச மாதிரியும். . நம்ம கருத்த நாம சொல்ர மாதிரியே அடுத்தவங்களுக்கும் உரிம இருக்குன்றது உங்களுக்குப் புரியாது . . :-)

    ReplyDelete
  4. சாநிக்கு படம் புடிக்கலையா இல்லை ஜெயமோகனோட வசனம் புடிக்கலையா தெரியலையே! வேற யாராவது அந்த படத்துக்கு வசனம் எழுதியிருந்தா ”ஸ்லம்டாக் மில்லியனருக்கு” சமமான தமிழ்படம்னு புகழ்திருக்க கூடும்!

    ReplyDelete
  5. சிவ‌காசிகார‌ரே,
    அவ‌ர் நேரிடையாக‌ சாதியை காட்ட‌வில்லை, பார்வையாள‌ர்க‌ள்
    ச‌ர‌வ‌ணா குழும‌த்தை க‌ற்ப‌னை செய்வ‌த‌ற்கு அவ‌ர் பொருப்பில்லை.
    திருப்பூர் தொழிலாளிக‌ள் என்றால் ஒரு சாதி நினைவுக்குவ‌ருவ‌து
    த‌விர்க்க‌ முடியாத‌து. தீப்பொட்டி என்ற‌தும் உங்க‌ள் ஊர் வ‌ருவ‌து போல‌.

    ஒன்றை ம‌ட்டும் எல்லோரும் வ‌ச‌தியாய் (அறிந்தும்..அறியாம‌லும்)
    ம‌ற‌ந்து/ம‌றைத்து விட்டோம். அவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌டும் ஊழிய‌ன் ஏன்
    ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, ராஜீவ் திட்ட‌த்தில‌ 200 நாள் வேலை,கூலி,
    விவ‌சாய‌ வேலைக்கு ஆள் கிடைக்காம‌ல் (கூலி தெரிய‌வில்லை)த‌விக்க‌,
    இங்கு ஏன் இவ்வ‌ள‌வு துன்ப‌ப்ப‌டுகிறார்க‌ள்? முந்தைய‌ அர‌பு நாடுக‌ள் போல்
    முத‌லாளியிட‌ம் அவ‌ர்க‌ள‌து பாஸ்போர்ட் இல்லை. எப்போது வேண்டுமானாலும்
    நின்று கொள்ளும் உரிமை இருக்கிர‌து. ஆந்திரா சுர‌ங்க‌ வேலை மாதிரி கொத்த‌டிமை
    முறை இல்லை. பிற‌கு ஏன் தொழிலாளி அங்கேயே `வச‌ந்த‌பால‌னின்`க‌டை சிப்ப‌ந்திக‌ள்
    இவ்வ‌ள‌வு இம்சைக‌ளை தாங்கும் `ஏசுவாய்` அவ‌ர்க‌ள‌து முத‌லாளிக‌ளின் பாவ‌ மூட்டைக‌ளை
    சும‌ந்து கொண்டிருக்கிரார்க‌ள்.
    விடை: அங்கே அவ‌ர்க‌ள‌து சொந்த‌ கிராம‌த்தில், நில‌மை இங்கிருப்ப‌தை விட‌ மிக‌...மிக‌
    மோச‌ம்...... மோச‌ம். அது த‌ன் நாம் பார்க்க‌ ம‌றுக்கும் நெஞ்சில் அறையும் நிஜ‌ம், ச‌த்திய‌ம்.
    அப்ப‌டியானால்... இந்த‌ அர‌சும், நிர்வாகிக‌ளும் சொல்லுவ‌து, ஒலி.. ஒளி ப‌ர‌ப்புவ‌து பொய்யா?

    சிவ‌காசிகார‌ரே, ரோச‌முள்ள‌ எல்லா பிளாக்க‌ர்க‌ளும், இதை குறை கூறி ... கூவிய‌ அத்த‌னை
    எழுத்தாள‌ர்க‌ளும் அர‌சை கேளுங்க‌ள் ... ஏன்...ஏன் இப்ப‌டி அடிமைத‌ன‌ம் சொந்த‌ நாட்டிலேயே
    என்று. ப‌தில் வ‌ராது. ஏன்னெனில், அவ‌னுக்கு சேர‌ வேண்டிய‌ உரிமை, அர‌சிய‌ல்வாதிட‌ம்,
    த‌லை முத‌ல் கால் ந‌க‌ம் வ‌ரையான‌ எல்லா ம‌ட்ட‌ங்க‌ளிலும் த‌ரை த‌ட்டிகிட‌க்கிற‌து.
    த‌ட்டிக் கேட்க‌ ந‌ம்மில் (ம‌க்க‌ளாட்ச்சி) யார்? 5‍வ‌து ஸ்டேட் எனும் ப‌த்திரிக்கை எழுத்து
    த‌ர்ம‌ம் எங்கே ??

    ReplyDelete
  6. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One