ஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...

Sunday, May 9, 2010



வழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. "விஜய்க்கு ஒரு பகிரங்க கடிதம்" என்று போட்டிருந்தது. படித்தவுடன் எனக்கு பயமாகி விட்டது. மனசுக்குள் ஒரு சின்ன டவுட், 'ஆனந்த விகடன்ல விஜய்யை பற்றி தப்பா எழுத மாட்டங்களே' என்று. இருந்தாலும் சுறா பார்த்த வெறியில் இருந்ததால் அவரை பற்றி யாராவது ஒரு வார்த்தை தப்பாக பேசினால் கூட எனக்கு சந்தோஷம் வருகிறது, கடந்த பத்து நாட்களாக. சுறா பார்த்து விமர்சனம் எழுத வேண்டிய கட்டாயத்தின் கொடுமையால் இந்த கடிதத்தை வரைந்திருப்பார்கள் என்று நினைத்து வியாழக்கிழமையே வாங்கினேன்.

வேக வேகமாக வீட்டுக்கு வந்து அந்த கட்டுரையை படித்தால், துத்தேறி, ஒன்றுமே இல்லை (பதிநஞ்சு ரூவா பாலா போச்சே!). தளபதி நீங்க அப்படி, உங்க நடிப்பு அப்படி, டான்ஸ் ல மைகேல் ஜாக்சனுக்கு அப்பறம் நீங்க தான், நீங்க தான் மாஸ் ஓபனிங் ஹீரோ (யாரை வெறுப்பேற்ற இந்த வாசகம்?), பலதரப்பட்ட கதைகளில் நடித்தவர்!!!!!!!!!!!!, என்று பலவாறாக புகழ்ந்து கடைசியில், 'நீங்க கொஞ்சூண்டு மாறணும், மத்தபடி எல்லாம் ஓகே' என்று எழுதி இருந்தார்கள். இதற்கு பேர் பகிரங்க கடிதமாம். அந்த கட்டுரையில் இருந்த மிக காமடியான விஷயம் என்னவென்றால், 'பலர் நினைப்பது போல நீங்கள் உங்கள் அப்பாவினால் முன்னேறவில்லை, சொந்த முயற்சியே அதற்கு காரணம்' என்பது தான். ஒரு விஜய் வெறியனே கூட இதை ஒத்துக்கொள்ள மாட்டான்.

அந்த கட்டுரையில் அவர் எதனால் இப்படி நடிக்கிறார், ஏன் மற்ற மொழி படங்களை காப்பி அடிக்கிறார், லூசுத்தனமாக ஏன் வசனம் பேசுகிறார், இந்த கட்டுரை இப்போது எழுத என்ன காரணம் என்று எதுவுமே சொல்லவில்லை; ஏதோ மேம்போக்காக 'இதை நான் வழிமொழிகிறேன்' என்கிற பாணியில் இருந்தது அந்த கட்டுரை.

இப்போது என்றில்லை, இவர்கள் எப்போதுமே விஜய் என்றால் அவருக்குரிய "zone of tolerance" அளவை கொஞ்சம் அதிகமாகத்தான் வைத்திருக்கிறார்கள். அவர் நடித்த சிறந்த படங்களுள்(!!!) ஒன்றான சிவகாசிக்கு அவர்கள் 41 மார்க் போட்டபோதே எனக்கு இவர்களின் விமர்சனம் மீதான நம்பிக்கை போய்விட்டது. ஒரு காலத்தில் ஆனந்த விகடன் விமர்சனத்தில் 40 மார்க் எடுப்பதே கஷ்டம், அப்படி 40 மார்க் மேல் எடுத்தால் அது ஒரு சிறந்த படமாக இருக்கும். இன்று அப்படியா? அதே போல் எவ்வளவு மோசமான படம் என்றாலும் இவர்கள் விஜய்யை மட்டும் குறை சொல்லவே மாட்டார்கள்.

இந்த வார சுறா விமர்சனத்தில் கூட அவன் மேல தப்பு இவன் மேல தப்பு இயக்குனர் சரியாக எடுக்கவில்லை, என்று எல்லாரையும் குற்றம் சொன்ன இவர்களால் 'விஜய் அறிவுக்கு இப்படிப்பட்ட கதைகளே நல்ல கதையாக தெரியுமா?' என்று கேட்க முடியவில்லை. இதே அஜித் படமாகவோ, ரஜினி படமாகவோ இருந்து விட்டால் அவ்வளவு தான். அதிலும் இவர்கள் ரஜினிக்கு வைத்திருக்கும் கான்ஸ்டன்ட் மார்க் 39. இதை தவிர இவர்கள் வேறு மார்க் போடவே மாட்டார்கள்.

விஜய் அப்படி என்ன செய்தார் என்று எனக்கு புரியவில்லை. அவர் ஒன்றும் நல்ல படங்களும் நடித்து தள்ளவில்லை. அவர் நடித்த நல்ல படங்களை எண்ண, ஒரு கை இல்லாதவனால் கூட முடியும். காதலுக்கு மரியாதையை, பூவே உனக்காக, லவ் டுடே, குஷி, கில்லி. இவ்வளவு தான். 'அதனால என்ன? எங்க தளபதி தான் நல்லா டான்ஸ் ஆடுராருல்ல?' என்கிறார்கள். நல்ல டான்ஸ் ஆடுனா டான்ஸ் மாஸ்டரா போக வேண்டியது தான? ஏன் இப்படி நடித்து, துதிபாடிகளாக பிற நடிகர்களையும் நடிக்க வைத்து எங்களை சாகடிக்க வேண்டும்?

'எனக்கு சவாலான வேடங்களில் நடிக்க ஆசை தான், ஆனால் தயாரிப்பாளர்கள் அதற்கு தயாரில்லை' என்று சில நாட்களுக்கு முன் நம் இளைய தளபதி தான் சொன்னார். உங்கள் மேல் நம்பிக்கை இல்லை அவர்களுக்கு நீங்கள் நன்றாக நடிப்பீர்கள் என்று, அதனால் தான் தயாரில்லை. இவர் தன் நடிப்பு திறமையை எந்த படத்தில் வெளிப்படுத்திஉள்ளார்? குஷி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மேனரிசம், கில்லியில் தரணியின் முழி, போக்கிரி தொடங்கி இன்று வரை மகேஷ் பாபு மற்றும் பிரபு தேவாவின் மேனரிசங்கள் - இவை தான் இவரின் நடிப்புலக பரிமாணங்கள்.

ஆனந்த விகடனும் நடுநிலை தவறிய பத்திரிகை ஆகிவிட்டது. அரசுக்கு சிங்கி அடிப்பதில் ஆரம்பித்து இப்போது இந்த 'பகிரங்க' கடிதம் வரை.

பின் குறிப்பு:

இந்த வார ஆனந்த விகடனில் என்னை தூக்கிவாரிப்போட்ட விஷயம் என்னவென்றால், மௌன ராகம் படத்தின் விமர்சனம். 43 மார்க் போட்டிருந்தார்கள். அதே விமர்சன குழு தான் இப்போதும் உள்ளதா, இல்லை விஜய் படத்திற்கு என்று தனி விமர்சனகுழுவா?




11 comments

  1. இதென்ன சின்னபுள்ள தனமா இருக்கு... ஆனந்தவிகடன இன்னமுமா வாங்கி படிச்சுட்டு இருக்கு... ஐயோ பாவம்... எப்போ திரு. பாலசுப்பிரமணியம் தன் புள்ள சீனிவாசன்ட்ட பொறுப்ப ஒப்படைச்சாரோ, அப்பவே ஆவி பாவி ஆச்சு... நான் அப்போ விட்டதுதான்...

    ReplyDelete
  2. boss dancea mattum vaichukittu polapa nadatha mudiyathu,athuku prabu deva oru eduthukaatu...unga blogku hit varanumnaa vijay thevapaduraaru....athupola avaruku masala padam theva paduthu avlothaan.

    ReplyDelete
  3. Arasiyalla idhelam saadharanamappa

    ReplyDelete
  4. நீங்க சொன்னது ரொம்ப சரி

    இதை நான் வழிமொழிகிறேன், முன்மொழிகிறேன், ஆமோதிக்கிறேன், ஒப்புகொல்கிறேன்

    இவனெல்லாம் நடிச்சு என்னத்த பு------- போறான்

    ReplyDelete
  5. Sugumarje வழிமொழிகிறேன். ஆனால் தண்டம் சந்தா கட்டி இன்னும் அந்த ஜு.வி. கட்டிக்கிட்டு மாரடிக்குறேன்.

    ReplyDelete
  6. "boss dancea mattum vaichukittu polapa nadatha mudiyathu,athuku prabu deva oru eduthukaatu...unga blogku hit varanumnaa vijay thevapaduraaru....athupola avaruku masala padam theva paduthu avlothaan.
    "ஏங்க பிரபு தேவா எவ்வளவு அருமையான நடிகர் தெரியுமா? மின்னல் ஒரு கோடி பாட்டு பாத்துருக்கீங்களா? அவ்வளோ ரியாக்சனை அருமையாக காட்டியிருப்பார்.. நீங்க பிரபு தேவாவை அவமான படுத்தாதீங்க.. ஒரு பிரபலமானவரின் தவறை சுட்டி காட்டினால் நாமும் பிரபலமாகலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா. நான் ஒன்னும் விஜய் செய்யாதத செஞ்சதா சொல்லலையே! முடிஞ்சா உங்க தளபதிய உருப்படியா ஒரு படம் நடிக்க சொல்லுங்க..

    ReplyDelete
  7. boss anandha vikatan sethu poi romba naal achu innuma padikiringa. aiyo pavam

    ReplyDelete
  8. dai nee moodikitu po unaku vijay pidikalana enna venumanalaum eluthuviya naya? dai appa moolama cinemavukkul vanthavarkal niraiyaper ethanai peral jeyikka mudinthathu? athu avar avardaiya thiramaiyai poruthuthan .. entaikume engal thalaivar thanda superstar . nee veena kuraithu karaithu savatha

    ReplyDelete
  9. Ennatha..neenga ajith fan adhanalah ippadi thalapathiya en vareengannah...

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One