விஸ்வநாதன் ஆனந்தா? யாரு அது?

Tuesday, August 24, 2010

இன்று அம்மா 'திருமதி செல்வம்' பார்த்துக்கொண்டிருந்த போது, கிடைத்த மிகப்பெரிய விளம்பர இடைவெளியில், மெதுவாக ஒவ்வொரு சானலாக மாற்றிக்கொண்டிருந்தேன். ஜெயா டிவி யில் யாரோ விஸ்வநாதன் ஆனந்த் என்பவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிப்பதில் தாமதம்; அவருடைய இந்தியக்குடியுரிமையில் சந்தேகம் என்கிற தோரணையில் செய்தி ஓடவிட்டார்கள்.

இதைப்பார்த்தவுடன் எனக்கு சில கேள்விகள் எழுந்தன..
*கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பதில் என்ன வரைமுறைகள் இருக்கின்றன?
*விஸ்வநாதன் ஆனந்த் எந்த நாட்டவராக இருந்தாலும் அவர் இந்தியாவிற்கு தானே ஆடினார்? ஒவ்வொரு கோப்பை வந்ததும் நீங்கள் தானே பல் இழித்து வாங்கிக்கொண்டீர்கள்?
*ஒரு வேலை அவர் வெளிநாட்டவராகவே இருந்தாலும் என்ன பிரச்சனை?

ஓ.. வெளி நாட்டவர் என்றால் இதை விட மிகப்பெரிய பட்டம் எதாவது கொடுக்கலாம் என்று யோசித்திருப்பார்கள் போல. நாம் தான் வெளிநாட்டவர்களை அவர்கள் என்ன செய்தாலும் உயர்வாகத்தானே பார்ப்போம்? அப்படி இல்லாமலா ஒரு ஊரையே விஷம் பாய்ச்சி கொன்ற வெளி நாட்டவனை அரசு மரியாதையோடு விமானம் ஏற்றி அனுப்பிவைத்திருப்போம்?

நல்ல வேலை இந்த விஸ்வநாதன் ஆனந்த் என்பவரின் பெயரை பார்த்தால் இவர் ஹிந்து என்பது போல் தெரிகிறது. இவர் மட்டும் வேறொரு மதத்தவராக இருந்திருந்தால், இந்நேரம் நமது முதல்வர் கொதித்து எழுந்திருப்பார், மைனாரிட்டி மக்களின் உணர்வை பாதுகாக்க.. நல்ல வேலை, அவர் கோபப்பட்டு கேள்வி பதில் வெளியிடும் அளவிற்கு எதுவும் நடந்து விடவில்லை.

ஒரு டவுட்:
"டாக்டர் பட்டம் குடுக்குற அளவுக்கு இந்த விஸ்வநாதன் ஆனந்த் யாரு? Dr.விஜய்யை விட பெரிய ஆளா?" - அப்பாவி தமிழன்..

No comments:

Post a Comment

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One