மதராசப்பட்டினம்.......

Sunday, July 11, 2010



இந்தியாவிற்கு கிடைக்கும் சுதந்திரத்தால் பாதிக்கப்பட்டு பிரிந்த காதல் நெஞ்சங்கள் மீண்டும் உயிரால் இணைவதே இப்படம்...

கிரீடம், பொய் சொல்லப்போறோம் என்ற இரண்டு தரமான வித்தியாசமான ரீமேக் படங்களை தந்த விஜய்யின் (இது நீங்க நெனைக்குற அந்த ரீமேக் விஜய் இல்ல, தரம் வித்தியாசம் என்ற இரண்டு வார்த்தைகளை மீண்டும் கவனிக்கவும்) அழுத்தமான சொந்த சரக்கு. 'மனுஷன் ஏன்யா இவ்வளவு விஷயத்த வச்சுக்கிட்டு ரீமேக் படம் எடுத்தான்?' என்று என்னும் அளவிற்கு பிரித்து மேயந்துள்ளார்.. சுஜாதாவின் "ரத்தம் ஒரே நிறம்" நாவலின் சாயல் மிக குறைந்த அளவிலாவது தென் படுகிறது...

பலரும் சொல்வது போல் இது டைட்டானிக் போன்ற சாயலில் இருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட களத்தில் காதலை அழகாக சொல்லியிருக்கிறார்கள்..
படத்தின் பலமே காட்சி அமைப்பும், ஒளிப்பதிவும், கலை இயக்கமும் தான்.. சென்னை என்ற குப்பை மேட்டில் நான்கு மாதங்கள் இருந்த அனுபவத்தில் சில பல இடங்கள் தெரிந்த எனக்கே பழைய மதராசப்பட்டினத்தை பார்க்கும் போது அவ்வளவு ஏக்கமாக இருக்கிறது. இன்றைய கூவம் நதிக்கருகில் நின்று கொண்டு கதாநாயகி பழைய கூவத்தை நினைத்துப்பார்ப்பது "same feelings" என்று சொல்ல தோன்றியது..

படத்தைப்பற்றி விமர்சிக்கவோ குறை சொல்லவோ என்னிடம் எதுவும் இல்லை.. அப்படியே இருந்தாலும் சொல்லப்போவதில்லை.. நிறைகள் மட்டுமே..

*முதலில் சொல்ல வேண்டியது எமி ஜாக்சனை பற்றி.. பொண்ணு அழகுல மட்டும் இல்ல நடிப்புலயும் பிரிச்சு மேயிது.. ஒரு பேட்டியில் இயக்குனர் விஜய் சொல்லியிருந்தார், "தமன்னாவிற்கும் எமி ஜாக்ஸனுக்கும் என்னங்க வித்தியாசம்? ரெண்டுபேருக்குமே தமிழ் தெரியாது.. தமன்னாவே நடிக்கும் போது இந்த பொண்ணும் நடிக்கும்" என்று.. அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை.. நான் தான் எமி ஜாக்சன் சிவகாசி ரசிகர் மன்ற தலைவர்.

*முதல் பாதியில் ஆர்யா படகில் திக்கித்திணறி ஆங்கிலம் பேசும் போது, "மறந்துட்டியா?" என்று எமி கேட்கும் இடம், நச்.. அதே போல் அந்த குஸ்தி காட்சி அதில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் வசனம், "நானூறு வருசத்துக்கு அப்பறம் திரும்ப அடிக்குறோம்"..

*இரண்டாம் பாதி முழுவதும் அருமை. அதுவும் கடைசி முக்கால் மணி நேரம், பரபரப்பு மற்றும் பரிதவிப்பு..

*சுதந்திரம் கிடைக்கும் காட்சி, ரயில்வே நிலையத்தில் ஆர்யா எமியை பார்க்கும் காட்சி, கடைசி படகு காட்சி என்று தொண்டை அடைத்த தருணங்கள் பல (திரும்பவும் same feelings)..

*ஜி.வி.பிரகாஷ் குமார் அசத்தலாக இசை அமைத்துள்ளார்.. ஆருயிரே பாடல் எனக்கு பிடித்தது..

*யாரையோ விட்டுட்டேனோ? ம்ம்ம் ஆர்யா.. பரிதியாவே வாழ்ந்துருக்காருப்பா மனுஷன்.. அவர் உடல் நடிக்கும் முன்பே, வாய் வசனத்தை உச்சரிக்கும் முன்பே, கண்கள் பேசிவிடுகின்றன..

*குஸ்தியின் போது வெளியில் தெரியாமல் சந்தோசப்படும் இந்திய போலீஸ், நாயகனின் தங்கை "அதெல்லாம் வேண்டாமக்கா, எங்க வண்ணான் துறைய மீட்டுக்குடுங்க போதும்" என்னும் காட்சி, ஆர்யா எமியிடம் தாலி குடுக்கும் காட்சி, தமிழ் வார்த்தைகளை வீணாக்காமல் சேர்த்து வைப்பது போல் யாரிடமும் அளந்தே பேசும் அந்த பாட்டி, என்று அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்கு காதலையும் சில இடங்களில் தேசப்பற்றையும் ஓட விட்டிருக்கிறார்..

சென்னை நல்ல ஊர் இல்லை என்றாலும், நல்ல படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும் இந்த மதராசப்பட்டினம்..

4 comments

  1. gud thinking. really a nice movie. Ram are u in love with any one. Why u r always writing comments on love stories.

    ReplyDelete
  2. உங்களுக்கு தெரியாததா ராஜேஷ்? இது என்ன கேள்வி?

    ReplyDelete
  3. hi anna me dont knw.....u love anyone?

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One