Pages

Wednesday, March 24, 2010

அமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்!!!!


ஒரு துறையின் அமைச்சர் சொல்வதை அந்த துறையின் கடைநிலை ஊழியன் வரை கேட்காமல் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். அந்த அமைச்சர் சொல்வதை இவர்கள் மதிப்பதேயில்லை. அவரும் பாவம், எவ்வளவு முறை தான் மக்களிடம் சமாதானம் சொல்ல முடியும்? இப்போது சென்ற வாரம் கூட மக்கள் சந்தோஷப்படுவார்களே என்று மீண்டும் நம் காதில் தேன் பாய விட்டார். ஆனால் இந்த ஊழியர்களின் மெத்தனப்போக்கால் அமைச்சர் முதல் இந்த அரசுக்கே கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று எனக்கு மிகுந்த பயம் வருகிறது.

அந்த அமைச்சர் வேறுயாரும் அல்ல. நம் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு.ஆற்காடு வீராஸ்வாமி தான் அவர்கள். வயதில் எவ்வளவு மூத்தவர்? இவருக்கு இருக்கும் அரசியல் ஞானமும் (அடேங்கப்பா) நிர்வாக திறமையும் (அடங்கொக்காமக்கா) வெகு சிலருக்கே உண்டு (சொல்லிக்கிட்டாங்க). அப்படிப்பட்ட இவர் சொல்வதையே ஒரு அரசு ஊழியர் கேட்கா விட்டால்?

அப்படி அவர் என்ன தான் சொன்னாருன்னு கேக்குறிங்களா?

"தமிழகத்தில் எங்கும் இரண்டு மணிநேரத்துக்கு மேல் மின்சாரம் தடை படாது. அதுவும் பகல் நேரத்தில் மட்டும் தான் தடைபடும். சென்னையில் மின்வெட்டா? இல்லவே இல்லை; ஒன்றிரண்டு சிறு தவறுகளை ஊதிப்பெரிதாக்குவது கூடாது" என்று, அன்றொரு பேச்சு இன்றொரு பேச்சு என்றில்லாமல், பல வருடங்களாக ஒரே மாதிரி பேசிக்கொண்டிருக்கும் அவர் கூற்றை இந்த மின்ஊழியர்கள் மீறிவிட்டார்கள்.

இந்த பதிவை நான் ஆரம்பிக்கும் போதே மின்வெட்டு (மணி இரவு பத்து). அறிவித்தது போக தினமும் இரண்டு மணிநேரம் அதிகமாக இந்த ஊழியர்கள் மின்சார ஊழல் செய்தால் இந்த அரசுக்கு தானே கேட்ட பெயர்? யாரவது இந்த மின்ஊழியர்களின் அயோக்கியத்தனத்தை அரசுக்கு வெளிச்சமிட்டுக்காட்டுங்கப்பா..

நானும் ஆளுங்கட்சி சப்போர்ட்டு தான்....

No comments:

Post a Comment

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..